Saturday, December 15, 2007

வாங்கோண்ணா.. வாங்கோண்ணா..!

வணக்கம் என் இனிய தமிழ் மக்களே! இதோ புத்தாண்டு வர தயாராகிவிட்டது! இந்த புது வருஷத்துக்கு நீங்க எங்கேயும் போகப்பேறீங்களா, இல்லை வீட்டிலே உட்கார்ந்து டிவி பார்த்துட்டு பொழுதை கழிக்க போறீங்களா! நமக்கு கொஞ்சம் வெளியூரு பயணம் இருக்கு, அதனாலே உங்களை பார்க்க முடியுமோ என்னமோன்னு தான் இப்ப இந்த பதிவு! அதாவது அந்த காலத்து ராஜா பாட்டுக்கு இருந்த மொவுஸ்ஸே வேறே! அதாவது அவரு ம்யூசிக் போட ஆரம்பிச்ச முத ரொண்டொரு வருசத்திலே வந்த பத்ரகாளிங்கிற படம் நீங்க எத்தனை பேரு பார்த்திருப்பீங்கன்னு எனக்குத் தெரியாது! அப்ப என்ன தான் நல்ல இனிமையான பாடல்களை அப்ப கொடுத்தாலும் அவரு டப்பாங்குத்து பாட்டு தான் போடத் தெரியும்னு சொல்லிக்கிட்டிருந்த காலம் அது! அதை ஊர்ஜிதம் பண்ற மாதிரி இந்த மாதிரி பாடல்கள் வந்துக்கிட்டு இருந்தது! ஏன்னா, அவரு தன்னை இண்டெஸ்ட்ரியுலே ஸ்டெடி பண்ணிக்கிறத்துக்கு இந்த மாதிரி பாட்டுக்கள் தேவை படத்தான் செஞ்சுச்சு, அதானாலே அவரும் இப்படி பாட்டு போட்டுக்கிட்டே இருந்தாரு!

ஆனா ஒரு Irony பாருங்க, இந்த படத்திலே அவரு போட்ட அத்தனை பாடல்களும் அருமையா இருந்து படம் நல்லா ஓடினாலும், இந்த படம் ஓடினதுக்கு பப்ளிசிட்டி என்னமோ இந்த படத்திலே நடிச்சிருந்த நடிகை ராணிச்சந்திரா, படம் பாதி எடுத்துக்கிட்டிருந்தப்பவே தூக்கு போட்டு செத்து போனதாலே, அந்தம்மாவுக்கு ஏற்பட்ட அனுதாப அலையாலே படம் என்னமோ ஓடிச்சின்னு சொல்லி மொத்த கிரடிட்டையும் ராஜாக்கிட்டே இருந்து புடிங்கிட்டாங்க! அந்த அம்மாவும் கொஞ்சம் நல்லா தான் நடிச்சிருந்தது! இல்லேன்னு சொல்றதிக்கில்லை!

ரொம்ப நாளளக்கப்பறம் அந்த படம் பார்க்க ஒரு சான்ஸ் கிடைச்சிது, அதான் அப்ப பட்டி தொட்டி எல்லாம் கிளப்பிக்கிட்டிருந்த வாங்கோண்ணா.. வாங்கோண்ணா.. பாட்டு கொஞ்ச்ம் நீங்க எல்லாம் ரிவைஸ் பண்ணிக்கிறதுக்காக இதோ அந்த பாட்டு!

சரி உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!, நம்ம மற்ற கிருத்தவ நண்பர்களுக்கு மெரி கிறிஸ்துமஸ்! வர்ட்டா!

Tuesday, December 04, 2007

வேட்டையாடு வேலைத்தேடு!

இப்ப தான் போன வாரம் டிசம்பர் மாச குளிர் ஆரம்பிச்சோன நம்ம கால்கரி மன்றத்திலே விழா நடத்தி முடிச்சோம், நம்ம ஊரு பக்கம் நடக்கிற டிசம்பர் சங்கீத விழா மாதிரின்னு வச்சுக்கங்க! அப்ப போட்ட ஒரு காமடி குறு நாடகம்! இதோ உங்கள் பார்வைக்கு கீழே! இந்த நாடகம் போடறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு! முக்கியமா நடிச்ச எல்லாருமே ஒன்னயிருந்து ரிகர்சல் பார்த்ததா சரித்திரமில்லை, கடைசி நாளு வரை எல்லாரும் ஏதாவது டைல்லாக்கஒ மறந்து சொதப்பிக்கிட்டே இருந்தோம். கடைசியிலே நாடகம் போட்ட அன்னைக்கு இந்த மைக்குங்ககளும் சரியா எடுக்காம சவுண்டு சிஸ்டம் எல்லாம் சொதப்பி ஏதோ போட்டு முடிச்சோம்! முக்கியமா என்னை சொல்லனும், ஒவ்வொர்ய் ரிகர்சல்லையும் டைலாக்கே வுட்டுட்டு வுட்டுட்டு சொதப்பிக்கிட்டே இருந்தேன். ஆனா நாடகம் போட்ட அன்னைக்கு எல்லாரும் சொன்னங்க, நான் கிளப்பிட்டேன்னு! நமக்கு இந்த மேடை கூட்டம்னு இருந்தா தான் களை கட்டும். என்னமோ போங்க! பதிவு போட நேரம் கிடைக்கலை,ஆனா டிராமாவை மட்டும் ஏத்திட்டியான்னு நீங்க எல்லாம் சத்தம் போடறது கேட்குது. கவலை படாதீங்க தொடர்ந்து மாசம் ஒன்னாவது எதையாவது எழுதி போடணும், இல்லை இந்த கூகுள் காரங்களுக்கும் சந்தேகம் வந்து என்னடா இவன் ப்ளாக் சைட் அப்படியே டார்மெண்டா இருக்கே, இது ஸ்பேம்மா இருக்குன்னு ப்திவு எழுதவுடாம பண்ணிட்டாங்க. அவங்க கையிலெ கால்லவுழுந்து கெஞ்சி கூத்தாடி நம்ம சைட்டை தொறக்க சொல்லி இந்த பதிவை போடறேன். ஆக தொடர்ந்து நீ எழுதுனா தான் உன்னை ஆட்டத்துக்கு சேத்துக்குவேன்னு சொல்லிட்டாங்க! அதனால அய்யா இனி உங்க கழுத்து அறுபட போகுது, சரி நம்ம நாடகத்தை பார்த்துட்டு எப்படின்னு சொல்லுங்க!

நம்ம தமிழ் நாட்டைவுட்டுட்டு வந்து கனடாவுல்ல இந்த மாதிரி நம்ம ஆளுங்க கூத்தடிச்சுக்கிறது சுகமா தான் இருக்கு! எனக்கும் 23 வருஷத்தக்கப்பறம் இந்த மாதிரி சின்ன தா மேடை ஏறுகிற வாய்ப்பு கிடைச்சது என்ன தான் சீரியலா எனை ஆண்ட் அரிதாரம்னு அந்த கால கதையை எழுதியிருந்தாலும், இவ்வளவு நாளைக்கப்பறம் அரிதாரம் பூசி (எங்க பூசினேன், சும்மா தொப்பியை மாட்டிக்கிட்டா அரிதாரம் பூசினது மாதிரி ஆயிடுமா?) நடிச்சதை நீங்க பார்க்க வேணாமா? சும்மா நாடகம் அந்த காலத்திலே நடிச்சேன், ஸ்டியோவிலே எல்லாரையும் பார்த்தேன் அந்த சர்க்கியூட்லேயே சுத்தினேன் எத்தனை பதிவு எழுதி போரடிச்சேன். இப்ப போட்ட இந்த "வேட்டையாடு வேலைத்தேடு" குறுநாடகத்தை பார்த்துட்டு உங்க கமென்ட்டை எழுதுங்க, வர்ட்டா!