Friday, October 27, 2006

நாளை உலகம் நமது கையிலா??

'நாளை உலகை ஆள வேண்டும், உழைக்கும் கரங்களே' அப்படின்னு எம்ஜிஆர் பாடி ஆடனது ஞாபகம் இருக்கா உங்களுக்கு, அது நடந்தேறும் காலம் நெருங்கிவிட்டதுன்னு சொல்லுவேன் இப்போ! போன வாரம் இந்த வியாபார உலகில் நடந்த ஒரு மிகப்பெரிய தன்னுடமையாக்கல்(Acquisition) என்னான்னு தெரியுமா, அதான் நம் நாட்ல இருக்கிற டாட்டா ஸ்டீல் கம்பெனி இங்கிலாந்து மற்றும் டச்சுக் கம்பெனியன கோரஸ்(Corus)என்ற இரும்புஆலை கம்பெனியை சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்ல வாங்கி தன்னுடமையாக்கிக்கிட்டது தான்! இதுல என்னா விஷேஷம்னு கேட்கிறீங்களா, இனிவரும் நாட்களில் நம்ம குப்பனும் சுப்பனும் உலகத்திலே பீறுநடைப் போடும் பெரிய பெரிய கம்பெனிகளை வாங்கிப்போட்டு பெரியாளாகப் போறாங்கங்கிறது தான், அது எப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம் வாங்க!

நீங்க வெறும் சாஃப்ட்வேர் எழுதியோ, இல்லா கூலிக்கு மாரடிச்சு மாசம் ஒன்னாம் தேதி ஆனா சம்பளம் வாங்கி பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்திர ஆசாமியா இருந்தீங்கன்ன்னா ஒரு மண்ணும் புரியாது. கொஞ்சம் வியாபரம், பங்கு சந்தைன்னு அலைஞ்சு திரிஞ்சிருந்தாலோ, இல்லை கடை கண்ணின்னு வியாபரம் செய்ற குடும்ப சூழ்நிலையிலே இருந்து வந்திருந்தாலோ, இல்லை உண்மையிலே திராவிடம், இந்து, பிராமணன், அப்படின்னு வெட்டி சண்டை தமிழ்மணத்திலே போடாமா, அப்புறம் ஆரஞ்சு ஜீஸ் எப்படி குடிக்கலாமுன்னு நகைச்சுவைப் பண்ணிக்கிட்டு திரியாம இப்படி சீரியஸா இந்த பிஸினஸ் விஷயங்கள்ல ஆர்வம் இருந்து தெரிஞ்சுக்கிறவங்களா இருந்தா இந்த Mergers and Acquisitions (M&A) பத்தி தெரிஞ்சிருக்கிற வாய்ப்புண்டு!

இந்த 'M&A' ங்கிறது நம்ம வெத்திலை பாக்கு கடை நடத்தி வர்றவங்களுக்குக்கூட தெரிஞ்ச ஒன்னு தான், அதாவது, 'அந்த மூணாவது கடை ஒன்னு வருது அதை எப்படியாவது வாங்கி போட்டுட்டா இன்னும் கொஞ்சம் பெரிசா வியாபரம் பண்ணலாமுன்னு' நம்மூர் சின்ன வியாபாரிங்கள்ல இருந்து பெரிய பெரிய கார்ப்ரேட் வரை சிந்திக்கிற மற்றும் செய்யக்கூடிய விஷயம் தான்! என்ன நம்மூரு வெத்திலைப்பாக்கு கடைவியாபரி மொத்தமா காசை சேர்த்து, இல்லை அங்கே இங்கே கடனை வாங்கி அந்த வர்ற கடையை வாங்கிப் போட்டுடுவாரு, ஆனா கார்ப்ரேட் உலகத்தில அதுவே 'Share Purchase'ன்ன்னு ஒன்னு போகும் இல்லை 'Asset Purchase'ன்னு போகும்! இங்கேயும் கம்பெனிங்க சொந்த காசு போட்டும் வாங்கும், இல்லை இதுக்குன்னு கடன் கொடுக்கிற பேங்க்குங்க உண்டு, அங்கிருந்தும் வாங்கும். சிலசமயம் அந்த பேங்குங்களே எல்லா வேலையும் செஞ்சு கொடுத்து இந்த தன்மயமாக்குதலை நடத்தி வைக்கும், அவங்க தான் இடை தரகர் வேலை பார்ப்பாங்க, அதனாலே அவங்களை 'intermediaries', 'business brokers', இல்லை 'investment bankers' ன்னு அழைப்பாங்க! இந்த M&A யோட நோக்கம் என்னான்னா, முதல்ல 'Economies of scale', அதாவது இணைக்கப்பட்ட கம்பெனிகள் பிரம்மாண்டமா செயல்படும் போது அவசியமில்லா, இல்லை டூப்ளிகேட்டா இருக்கக்கூடிய சில துறைகளை வெட்டி, கம்பெனி உற்பத்தி செலவுகளை குறைச்சி அதிகம் லாபம் ஈட்டுவது, சந்தையிலே தன்னுடய பொருட்களின் விற்பனை சதவீதத்தை பெருக்க, வரி வட்டிகளை குறைக்க, புதுசான இடங்கள்ல பொருளை வித்து அங்க தன்னுடய சந்தையை பிடிக்க, தன்னிடம் இல்லாத வாங்கப்படும் கம்பெனிகளின் வேறு திறன்களால் அதிகம் லாபம் ஈட்ட, அப்பறம் 'Vertical Integration' ன்னு சொல்லிட்டு இந்த கருப்பொருள்ல இருந்து உற்பத்தி, விற்பனை, சந்தைக்கு எடுத்து செல்லல் என்று அனைத்து துறைகளையும் உள்ளடக்குவது, மொத்தத்திலே 'Supply Chain Management'ன்னு சொல்லக்கூடிய அத்தனை துறைகளிலும், வாங்கும் கம்பெனியால் உள்ளடக்கி தனிபெரும் நிறுவனமாக திகழ்ந்து பெரும் லாபம் ஈட்டுவது தான்!

சரி இதிலே என்ன விஷேஷமுன்னு கேட்கிறீங்களா, இந்த மாதிரி கம்பனிங்களை வாங்கி தன்னுடமையாக்கி ஒரு பெரிய நிறுவனமாகிறது எல்லாம் கொஞ்ச காலத்துக்கு முன்னால நம்ம நாட்ல நினைச்சுப் பார்க்க முடியாது ஒன்னு. ரொம்ப காலமா வழி வழியா பெரிய வியாபர கம்பெனிகள் தலைமுறை தலைமுறையா குடும்பங்கம்பெனிகளா தான் இருந்து வந்தது, அதுவும் நமக்கு ஆரம்பத்திலே இருந்து தெரிஞ்ச டாட்டா, பிர்லா குடும்பங்கள் கட்டி காத்த பெரும் நிறுவனங்கள் தான்! அப்புறம் சாதரண மக்களுக்கும் பங்கு சந்தைன்னா என்னான்னு வழி காமிச்சு பெரி முதலாளியா உருவான திருபாய் அம்பானி ஆரம்பிச்ச அந்த மிகப்பெரிய ரிலெயன்ஸ் நிறுவனம் பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா நம்ம ஊர்ல இந்த மாதிரி பெரிசா வாங்கி ராஜ்யம் அமைக்கிறதுங்கிறது அவ்வளவா நடக்காத ஒன்னு, எல்லாமே இந்த ஊரு பக்கம் தான், அதாவது, இந்த பெரிய பெரிய M&A எல்லாம் அமெரிக்கா, ஐரோப்பிய நடுகள்ல இருக்கிற கம்பெனிகள்குள்ள நடக்கிற விஷயம் மட்டுமா இருந்த ஒன்னு! எப்பவாச்சும், நம்ம நாட்டுக்குள்ளேயே கம்பெனிகளை வாங்கி பெரிய வியாபர சாம்ராஜ்யம் அமையணும்னு, அங்கொன்னும் இங்கொன்னுமா நடந்துக்கிட்டிருந்துச்சு, ஆனா இப்ப நம்ம நாட்டை விட்டுட்டு உலகத்திலே இருக்கிற பெரிய பெரிய கம்பெனியை வளைச்சிபோட்டு நம்மலும் இன்னைக்கு பெரிய ஆளா வந்துக்கிட்டிருக்கோங்கறதுதான் அங்க விஷேஷமே!

இந்த Multi-National கம்பனிங்கங்கிறது உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச ஒன்னு, இதுவரைக்கும் நம்ம ஆளுங்க போய் அங்க உட்கார்ந்துக்கிட்டு நமக்கு படிஅளந்தா போதும்னுட்டு இருந்தோம், ஆனா இப்ப நம்ம அவங்க ஆளுங்களுக்கு படி அளக்கப்போறோம்! எப்படின்னு கேளுங்க! இந்த அயல் நாட்டு கம்பெனியை வாங்குறதுங்கிறது அவ்வளவு சுலபமான காரியம் இல்ல முன்னே எல்லாம், அதுவும் 1990க்கு முன்னே, ஏன்னா அந்நிய நாட்டு செலவானி அதுக்கு நமக்குத் தேவை. அது நம்மகிட்ட இல்ல, நம்ம கஜானா காலியாயிடுச்சின்னு, 90ல சந்திரசேகரு பிரதமாரா இருந்தப்ப நம்ம நாட்டு தங்கத்தை கொண்டி அடகு வச்ச கதை உங்கள்ல எத்தனை பேருக்கு தெரியும்னு எனக்குத் தெரியாது, ஆனா அதுக்கப்பறம் நரசிம்மராவு ஆட்சிக்கு வந்து நம்மலோட இப்பைய பிரதமர் நிதி அமைச்சரா இருந்தப்ப போட்டு வச்ச பாதை தான், இப்ப நம்ம நாட்ல அன்னிய செலவானி பொங்கி வழியுது! இப்ப கம்ப்யூட்டர் யுகம் வந்துட்டோன, சின்ன பசங்க நீங்க எல்லாம், இங்க வந்து போற நீங்க, சுலுவா நம்ம ஊர்ல எங்க வேணும்னாலும் மாத்தி, பச்சை டாலர் நோட்டை பச்சக்குன்னு பாக்கெட்ல சொருவிட்டு சும்மா ஜாலியா ஃபைளைட் புடிச்சு, இங்க வந்து கொண்டு வந்த காசை டேபிள் டான்ஸ், லேப் டான்ஸுன்னு வேட்டு விட்டுக்கிட்டு இருக்கீங்க! ஆனா அந்த 90ல பறந்து வந்த எங்களை கேளுங்க, இதை கொண்டு வர்றதுக்குள்ள நாங்க பட்ட சிரமம் என்னான்னு எங்களுக்குத் தெரியும்! அதுக்கு முன்னே அமெரிக்கா படிக்க வந்த நம்ம அண்ணமாருங்க வெறும் பத்து டாலர் எடுத்து வர்ற பட்ட பாடு இருக்கே, அப்படி கையிலே எந்த காசும் இல்லாம இங்க வந்து முன்னேறினவங்க கதை கேட்டுப்பாருங்க தெரியும்!

எதுக்கு சொல்றேன்னா, அப்ப இந்த கம்பெனிங்களும் அன்னியசெலவானியை தண்ணி மாதிரி இஷ்டம் போல போட்டு கரைச்சிட முடியாது அதுக்கு அப்ப இருந்த Foreign Exchange Regulation Act (FERA)சட்டம் அப்படி, நம்ம நாடல இருந்து அவ்வளவு சீக்கிரம் இந்த அன்னியச்செலவானியை(Foreign Exchange), அதான் நம்ம ரூவாயை டாலரை மாத்தி எதுவும் வாங்கிட முடியாது! 90ல ஆரம்பிச்ச இந்த மாற்றம், நம்ம சிதம்பரம், மன்மோகன், மிஸ்ரா மாதிரி ஆளுங்களால கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்தோம், அந்நியச்செலவானியும் பெருகுச்சு ( இந்த அந்நியச்செலவானி பெருகிறது எப்படின்னு தெரிஞ்சுக்குனும்னா, கொஞ்சம் ஏற்றுமதி, இறக்குமதி சாமாச்சாரங்கள் எல்லாம் தெரிஞ்சிருக்கினும், அதை பத்தி பதிவுகளை பொங்குதமிழில் படிக்குனும்னா நம்ம தமிழ் சசி எழுதுறதை அப்ப அப்ப பாருங்க) , இந்த சட்டத்தை ஒரு ஏழு வருஷத்துக்கு முன்னே Foreign Exchange Management Act (FEMA)வா மாத்தி இன்னும் சுலுவாக்கிட்டாங்க இப்ப, அதான் காசு இருந்த நம்ம கம்பெனிங்க எல்லாம் உலக கம்பெனிங்களை வாங்கி போட்டுடலாம்!

இப்ப அப்படி தான் சுமார் இந்த வருஷத்திலே இது வரைக்கும் 115 Acquisitions நடந்திருக்கு அதுவும் மொத்தம் 18 பில்லியன் டாலர்கள் மதிப்புல, அதே மாதிரி 8 பில்லியன் டாலர்கள் நம்ம நாட்க்கு முதலீடு செய்ய வந்திருக்கு! இந்த தன்னுடமையாக்கல்(Acquisition)இந்த வருஷம் 130க்கு மேலே போகும்னு சொல்றாங்க, அது என்னான்னு தெரிஞ்சுக்கும்னா இதோ சுட்டி. ஆக இனி வரும் நாட்கள்ல இது மாதிரி பெரிய பெரிய கம்பெனிகளை வளைச்சிப்போட்டு எல்லாம் நம்ம கையிலே வர வாய்ப்பிருக்கு! அதுக்கு இங்கே அமெரிக்கா, இங்கிலாந்தில் எதிர்ப்புகள் இருந்தாலும், காலத்தின் கட்டாயம்னு விட்டுத்தான் போகுனும்னும், அதுனால எல்லா நாடுகளுமே வளர்ச்சி அடையும்னு இங்க இருக்கிற பெரிய பெரிய பொருளாதார நிபுணர்கள் எல்லாம் சொல்றாங்க. முதல்ல கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பனிகள் தான் வாங்கி போட்டுக்கிட்டிருந்தாங்க, அதுன்னு இல்லாம இப்ப மத்த துறைகளில் உள்ள தொழில் நிறுவனங்களும் இந்த Acquisitionsல இறங்கிடுச்சிங்க.

அதுவும் இந்தியாவும் சைனாவும் இது மாதிரி போட்டி போட்டு கம்பெனிகளை வாங்கி தள்ள ஆரம்பிச்சிட்டாங்க! கொஞ்ச நாளைக்கு முன்னே சைனா நாட்டுக்காரன், அமெரிக்க எண்ணை கம்பனியான 'Unocal' என்கிற கம்பெனியை வாங்க வந்து, அது அரசியல் காரணங்களால முறியடிக்கப்பட்டது! இருந்தாலும் இது எத்தனை நாளைக்கு தடுக்க முடியும்னு தெரியாது! இதுக்கு என்ன காரணம்னா, இது போன்ற பெரிய கம்பெனிகள் அதாவது சக்தி (Energy), இரும்பு(Steel) போன்ற துறைகளில் கை ஒங்கி இருந்தா அது தன் வல்லரசு தன்மையை நிலை நிறுத்த வழின்னு உலக அரசியல் முட்டுகட்டைகள் நிறைய இருக்கு! ( இரும்பு உற்பத்தின்னு பார்த்த்கீங்கன்னா, உலக உற்பத்தியிலே 30% நம்ம கையிலே இருக்குத் தெரியுமா, நம்ம மித்தல் ஸ்டீல், டாட்டா ஸ்டீல் இரண்டும் சேர்ந்தே இது, ஆக எப்ப வேணும்னாலும் உலகத்தை மிரட்ட இது போதாதான்னு ஒரு கேள்வி எழத்தான் செய்யுது) ஆனா பொருளாதார வல்லமை முன்பு இது எல்லாம் எடுபடாது! அதுவும் இந்த அசுரத்தனமான இந்த பொருளாதார வளர்ச்சி முன்னே ஒன்னும் நிக்காது!

ஆனா வாங்கி போடறது பெருசில்ல, அதை சரியா ஆளுமை செஞ்சு இன்னும் பெரிய நிலைமைக்கு வரணும்ங்கிறது பெரிய குதிரைக்கொம்பு தான்! அதுவும் பல நாடுகளில் வியாபிச்சிருக்கிற இந்த ராஜாங்கத்துக்கு, அந்த அந்த நாட்டு கலாச்சாரம், அரசியில் ஆளுமை, அந்த நாடுகளில் வியாபாரம் செய்யும் திறமை எல்லாம் நம்ம நிறைய வளர்த்துக்கணும், அதே மாதிரி நம்ம அரசியல் வாதிங்களும் முழு கண்ணையும் திறக்கணும், நம்ம எப்படி உலகை ஆளா நாலா பக்கமும் படை எடுக்க துடிக்கிறமோ, அதே மாதிரி வெளி நாட்டு முதலீடுகளையும் வரவேற்கணும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியாவை வாங்கி பெரிசா ஆக்க முட்டு கட்டை போடக்கூடாது, அதே மாதிரி வால்-மார்ட் மாதிரி பெரிய ராட்சத தொழில் நிறுவனங்கள் இந்தியாவில தொழில் செய்ய அனுமதிக்கணும், அப்ப தான் நம்ம நாலா பக்கமும் போயி உலகை ஆளமுடியும்! சும்மா பம்மாத்து அரசியல் செஞ்சுக்கிட்டு முட்டுக்கட்டை போடாம இருந்தா போதும், நான் சும்மானாலும் விளையாட்டுக்கு சொல்லிக்கிட்டிருக்கிற மாதிரி ''Microsoft', 'General Motors', 'GE' எல்லாத்தையும் வளைச்சு போட்டுடுவோம், என்ன நான் சொல்லுறது?'ங்கிர பேச்சு உண்மையாகி 'நாளைய உலகம் நமது கையில்'ன்னு ஆகப்போகும் நாட்கள் அதிக தூரமில்லை!

Monday, October 23, 2006

மரணம் பற்றி சற்று யோசித்ததுண்டா??

என்னடா திடீர்னு இவன் இந்த கேள்வியை கேட்கிறானேன்னு நீங்க யோசிக்கலாம்! ஆனா உண்மையா தான் கேட்கிறேன், உங்கள்ல எத்தனைப்பேரு இந்த மரணம் பற்றி யோசிச்சதுண்டு! எல்லாருமே ஒரு நாள் சாவப்போறவங்க தான், ஆனா அதை சந்திக்கும் துணிச்சல் எத்தனைப்பேருக்கு உண்டு! எப்பவேனும்னாலும் நிகழலாம்! ஏன் இன்னைக்கு நல்லா இருக்கிற மனுஷன் நாளைக்கு திடீர்ன்னு தலையை சாச்சா, ம்.. உலகத்திலே எதுவும் நிரந்திரமானதில்லை! அதுவும் இந்த சாவின் புரிதல் பற்றி தெரிஞ்சிருக்கணும்னா, அது நீங்க வெறுமெனே நினைச்சா வர்றப்போறதில்லை! அதுக்குன்னு சில சந்தர்ப்பங்கள் வந்தா தான் அதைப் பத்தி உங்களுக்கு என்னான்னு தெரிய வாய்ப்பிருக்கு! அதுவும் ஏதாவது விபத்திலே சிக்கி மரணத்தின் பிடியிலே சிக்கி மீண்டு வர்றவங்களுக்கு இது நல்லாவே தெரியும்!

சும்மா தமாஷுக்குக்கூட சொல்லிட்டு திரியாதிங்க 'இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால்ன்னு', ஏதோ ஒரு படத்திலே விவேக் இது மாதிரி சொல்லிக்கிட்டு திரிவார்ன்னு கேள்வி பட்டேன். அது மாதிரி உண்மையிலே உங்களுக்கு நெருங்கியவங்களை பாடையிலே எடுத்துட்டுப்போயி இடுகாட்டிலே விராட்டி வச்சி அடுக்கி சிதை மூட்டி கொளுத்திட்டு, அடுத்த நாளு இதே பாலு ஊத்த போய் பாருங்க, அப்ப தெரியும் அது என்னா வலின்னு!அதுவும் வேண்டப்பட்டவங்களை உயிரோட பார்த்து ரொம்ப நாள் கழிச்சு திடீர்னு போய் தூங்கிக்கிட்டு இருக்கிறமாதிரி படுத்தருக்கும் சடலத்தை பார்த்தா, என்னவாகும், தாரை தாரையா கண்ணீர் வடிச்சாலும் அந்த உயிர் போகும் நேரத்திலே பக்கத்திலே கூட இல்லையேன்னு மனசு கிடந்து அடிச்சுக்கும்! அதுக்காக துக்கத்தை கண்ணிலே வச்சிக்கிட்டு எப்பவுமே அழுது புலம்பி 24 மணி நேரமும் ஒப்பாரி வக்க முடியுமா? கொஞ்சம் அழுது முடிச்சி அப்படியே சோகத்தை கப்பிக்கிட்டு வாய் பொத்தி யாரோடயும் பேசமா மணிக்கணக்கிலே மூளையிலே வேணா உட்கார்ந்து கிடக்கிலாம். அதுவும் எத்தனை நாளைக்கு பொணத்தை நடுவூட்டுல போட்டு வச்சிக்கிட்டு இருக்க முடியும்? இல்லை பொம்பளைங்க மாதிரி கூடி கூடி எத்தனை வாட்டி அழுதுக்கிட்டிருக்கத்தான் முடியும், ஆகற வேலையை பார்க்கணும்னு போகத்தான் தோணும்!

எல்லாமே உயிரோட இருக்கும் வரை தான்! உசுரு போன அடுத்த நிமிஷம் மண்ணோட மக்கி போர உடம்பு, இல்லை தீஞ்சு சாம்பலாயி, அதுக்கும் மேலே மிஞ்சி நிக்கிர ஒன்னு ரெண்டு எழும்பையும் மொத்தமா அடுக்கி வச்சி, பொட்டு வச்சி படையல் போட்டு அப்புறம் பாலை ஊத்திட்டு, சட்டியிலே எடுத்துட்டு போயி புண்ணியமா போகட்டும்னு பக்கத்திலே இருக்கிற ஆத்துல கரைச்ச பின்னாலே அது போற திசைத் தான் தெரியுமா? அப்புட்டுத்தான் மனுசன் வாழ்க்கை. அப்பறம் அவன் ஆசைப்பட்டதை துக்கம் கொணடாட நிதம் வாங்கி படைச்சு மத்தவங்க உண்டு கழிச்சு கருமாதி செஞ்சு முடிக்கும் வரை நெருங்கினவங்க சோகத்தை சுமப்பாங்க, அதுவும் கொஞ்சம் நாள்பட்டுச்சுன்னா 'எதோ வாழ்ந்தாரு, செத்தார்ன்னுட்டு, வருசம் ஒரு தடவை நினைச்சுப்பார்த்து, வேணும்னா தெவசம் கொடுத்து ஒரு இரண்டு தலைமுறை வரைக்கும் நெனச்சு பார்ப்பாங்க, அடுத்தாப்பல முப்பாட்டனாகின பின்ன, கொள்ளு பேரனுக்கு தாத்த அப்பன் பேரு ஞாபகம் வராது, பின்டம் புடிக்க பேரு கேட்டா தெரியாதுன்னு, எதோ காத்துல பேரை சொல்லி தர்பணம் பண்ணிட்டு போயிடுவாங்க, அதுக்குப்பறம் உன்னை நெனைக்க யாருமில்லை!

ஆனா அதுக்குள்ள நம்ம ஆடுர ஆட்டம் தான் என்ன, சொல்லி மாளாது! அதுக்கு தான் நான் கேட்ட முதல் கேள்வி, 'மரணம் பற்றி யோசிச்சதுண்டான்னு' அது பத்தி என்னான்னு கொஞ்சங்கூட யோசிக்காம, கடைசியிலே இதை பத்தி யோசிக்க நீங்க இருக்கப்போறதில்லை உயிரோட, அதானாலே சொல்றேன், கொஞ்சமாவது இடையிலே இதை நினச்சா, நம்ம நாமே தெரிஞ்சிக்கிட்டு, நம்ம பண்ற தப்பை மாத்திக்கிட்டு நமக்கு நாமே நேர்மையா இருந்துட்டு மண்ணுக்கு போகலாங்கிறது தான் நான் சொல்ல வர்றது!

எதுக்கு இந்த பதிவுன்னா என் தகப்பனார் இறந்து போய் காரியம் பண்ணிட்டு வந்து இன்னையோட பத்து நாள் ஆகுது! கொஞ்சம் சாவை பத்தி யோசிச்சாலே போதும், நம்மலை நாமே தடம் பிறழாம பாத்துக்குலாம். இருக்கிறவரை நமக்கு புண்ணியம் தேடுறோமோ இல்லையோ, நம்ம கூட இருக்கிறவங்க, அது யாரா இருந்தாலும் சரி, பொண்டாட்டியானுலும் சரி, புள்ளையானுலும் சரி, சுத்து பத்து சொந்தமானாலும் சரி, அறிஞ்சவன் தெரிஞ்சவனாலும் சரி, எல்லாரும் நம்மலால அவங்களுக்கு கெடுதல் வராம இருந்து செத்தாலே மோட்ச பிரயாணம் தான்! இதை பத்தி மதுரகவியாழ்வார் எழுதின வைகுந்தம் போக வைக்கும் பாசுரங்களை எழுதலாமுன்னு தோணுச்சு, அதான் கீழே எழுதியிருக்கேன் பாருங்க!

அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
அன்பன், தென்குரு கூர்நகர் நம்பிக்கு,
அன்ப னாய்மது ரகவி சொன்னசொல்
நம்பு வார்ப்பதி, வைகுந்தம் காண்மினே

Sunday, October 08, 2006

கருணாநிதியும் ராஜாத்தி அம்மாளும்! (தமிழ் காதல்!)

நேத்து 'இருவர்' படம் பார்த்தேன். 'இது உண்மைக் கதை அல்ல' என்ற டைட்டிலோட படம் ஆரம்பிக்கிது, ஆனா படத்தில் வரும் பல காட்சிகள் நடந்த உண்மை சம்பவங்களோட ஒட்டியே இருக்குது, அதிலேயும் நமக்கு தெரிந்தவரை, முக்கியமா எம்ஜிஆருக்கு, நடிக்க வர்ற புதுசுலே சைக்கிள் ஓட்ட தெரியாதுங்கிற உண்மையிலேருந்து, அண்ணா, எம்ஜிஆரை கட்சியிலே சேர்த்துக்கிறப்ப எழுந்த சர்ச்சை, அவரால கட்சிக்கு லாபம் உண்டா, இல்லை கட்சியாலே அவருக்கு லாபமாங்கிற சர்ச்சையிலேருந்து வெகுவா நிறைய சம்பவங்கள், படத்திலே வரும் காட்சிகளோட ஒத்து போயிருக்கு! இருந்தாலும் இது உண்மைக் கதை இல்லை என்ற ஆரம்பத்தோட படம் நகருது! இப்படி இந்த சம்பவங்கள் மட்டும், நமக்கு தெரிஞ்ச ஒன்னு, அதுவும் ஆணித்தரமா! தெரியாத சில சம்பங்களும், அப்படியே அரசல் புரசலா நம்ம காதுக்குப் பட்ட சில விஷயங்களயும் நச்சுன்னு படம் புடிச்சு சொல்லி இருக்கிறாரு நம்ம மணி!

எம்ஜிஆரின் முதல் மனைவி மேலே அளவு கடந்த பாசம், காதல், அன்பு அவர் வச்சிருந்தாருங்கிறது தெரிஞ்ச ஒன்னு, ஆனா பிறகு நடிக்க வந்த ஜெயலலிதா அம்மா, தன்னுடய முதல் மனைவியின் சாயல்ல இருந்தவங்களான்னு தெரியாது! எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நெருக்கமா இருந்தாங்ககிறது தெரிஞ்ச ஒன்னு, அவங்களை கல்யாணம் பண்ணிக்காம செல்வியாவே விட்டுட்டு போனதுக்கு, அப்ப அவரு ஆரம்பிச்ச புது கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்னு கொஞ்சம் அரசல் புரசலா தெரிஞ்ச ஒன்னு! அதுவும் அவரு கல்யாணம் பண்ணிக்கலேன்னு சில காலம் நடிக்காம, யாருக்கும் தெரியாம, அந்த நாடகள்ல ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்திலே காலம் கழிச்சதா செய்திகள் பத்திரிக்கையிலே படிச்ச ஒன்னு தான்! அதை அப்படியே சொல்லி இருந்தாலும் பச்சக்குன்னு ஜெயலலிதா கேரக்டரை ஆக்ஸிடண்டிலே மறைய வச்சி அப்படியே முழுங்கிட்டது, அதை பத்தி இன்னும் விரிவா திரைக்கதை அமைச்சிருந்தா, திருப்பி யாராவது வந்து தான் வீட்டிலே குண்டு போட்டுடலாமுன்னு விட்டுட்டாரோ என்னமோ தெரியலே, நம்ம மணி!

ஆரம்பக் காட்சிகள்ல நல்ல கவனம் செலுத்தி, ரொம்ப டீட்டைய்லா ஆராஞ்சி, எம்ஜிஆர் நடிக்க பட்ட கஷ்டங்களை விளக்கி இருந்தாலும், பின்னாடி வி என் ஜானகி அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்ட கதையை வேற மாதிரி புடிச்சி எம்ஜிஆர் மேலே பரிதாபம், பச்சாதாபம் வர்ற மாதிரி செஞ்சது கொஞ்சம் அதிகம் தான்! இந்த படத்திலே அவங்க வீட்டார் கவுதமியை அடிச்சி துன்புறுத்தி கஷ்டபடுத்தினதாலே அவர் வாழ்க்கை கொடுக்கிற மாதிரி காமிச்சிருந்தாலும், உண்மையிலே கதை வேறே! எங்க கடை பெரிசு சொல்ல கேட்டிருக்கேன்! ஜானகி அம்மா கல்யாணம் பண்ணிக்கிட்ட முத ஐயிரு புருஷனை அம்போன்னு விட்டுட்டு வந்தாங்கன்னும், எம்ஜிஆரு தான் வலுக்கட்டாயமா கூட்டி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு, நம்ம பெரிசு அப்ப கதை சொல்லும், இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல்லை!

ஆனா ஒன்னு சரியா புரிஞ்சிக்க முடிஞ்சது, அந்த காலத்திலே புதுசா வந்த சினிமாங்கிற விஞ்ஞான வளர்ச்சியை கொண்டு எப்படி அரசியல்ல முன்னேற முடியும்ங்கிற புது யுக்தியை வளர்த்தது எம்ஜிஆரும், கருணாநிதியும் தான்! அதுக்கு அப்ப பெரியார்க்கிட்ட இருந்து விலகி திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பிச்ச அண்ணாவின் ஆதரவு ஏகபோகமா இருந்தது கண்கூடா பார்த்த ஒன்னு! அதுவும் அடுக்கு மொழியில் மயக்கும் தமிழை நம்மிடையே கொண்டு வந்ததிலே, இவர்களோட பங்களிப்பு மிக முக்கியம்! அதுவும் இவங்க ரெண்டு பேரோட கேம்பிளான் பக்கவா இருந்தது ஆச்சிரியபடவைக்கிது! என்ன ஒரு திட்டமிட்ட வளர்ச்சி! உண்மையிலே பல கசப்பான சம்பங்கள் நடந்தாலும், எதிரிகளான நண்பர்களை காட்டி இருக்கும் விதம் ரொம்ப அருமை!

இதுலே முக்கியமா சொல்லுனும்னா, நம்ம கலைஞருக்கு அந்த காலத்திலே இருந்த வெறி, அதாவது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருக்கும் அனைவரும் ஆட்சியில் பங்களிப்பு ஏற்க வேண்டும், அவர்கள் முன்னேற்றத்துக்கு கல்வியிலேருந்து எல்லாத்துறைகளிலும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அன்று அவர் போராடிய அந்த கல்லக்குடி ரயில் நிறுத்தப் போரட்டத்தின் பலனை இன்னைக்கு நாம் எல்லாரும் கடல் கடந்து அனுபவிச்சிக்கிட்டிருக்கோம்! அவரு எத்தனயோ ஊழல்கள் செஞ்சு இருந்தாலும், இந்த அஸ்த்திவார உழைப்பை தமிழன் என்ற அனைவரும் மறக்க முடியாது, உண்மையிலே இதில் மட்டும் திராவிடர்களை முன்னேற்றிய கழகம் தான்! (அதுக்குன்னு, எம்ஜிஆர் செய்த நல்ல காரியங்களையும் நான் மறக்கவில்லை! அவரும் என்னை பொறுத்த மட்டில், இந்த கடல் கடந்த முன்னேற்றத்துக்கு வித்திட்டவர் தான்! )

கடைசியா சொல்ல வந்த விஷயம் என்னான்னா, படத்திலே காமிச்சிருக்கிற ராஜாத்தி அம்மாள் கதை, செந்தாமரை, மணிமேகலைன்னு மாதிக்கிட்டாலும், ராஜாத்தி அம்மாளும், கணிமொழியும் தான் கண்ணு முன்னாடி வந்து நிக்கிறாங்க! அதுவும் மதுரையிலே இருந்த தமிழ் டீச்சரா, கவிதைக்கு மயங்கி வந்த ராஜாத்தி அம்மாள் கதைபத்தி படத்தின் காட்சிகள் பத்தி நான் கேள்வி பட்டதில்லை, இது உண்மையான்னு தெரிஞ்சவங்க எழுதுங்களேன்! கருணாநிதியின் இன்பகேளிக்கைகள் பற்றி அதிகமான செய்திகள் வேறமாதிரி வந்தாலும் (ஏன் நான் எஸ் எஸ் ஆர் சம்சாரம், விஜயகுமாரியையும் தான் சேர்த்துதான் சொல்றேன்!) இந்த படத்திலே காமிச்சிருக்கிறது ஒரு அழகான கவிதை! இதுக்காகவே கருணாநிதிக்கு வயசு கம்மி ஆகி, திரும்ப இளமை அடைந்து ராஜாத்தி அம்மாவோட அழகு தமிழ் காதல் கவிதை படிச்சா எப்படி இருக்கும்னு தோணுது, அதுவும் வைரமுத்து துணையில்லாம! உண்மையிலே வைரமுத்து அனுபவிச்ச எழுதின ஒன்னுன்னு நினைக்கிறேன், அதுவும் பச்சையப்பாவிலே, அவரோட பொன்மணிக்கு அந்த காலத்தில எழுதி கொடுத்த ஒன்னா இருக்கும்னு நினைக்கிறேன்! அவ்வளவு காதல் உண்மை இருக்கு!

'உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்!
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்!
எண்ணூரு ஆண்டுகளாய் இதயத்தில் கணக்குதடி!'

மேற்கொண்டு, பார்த்து, கேட்டு மகிழ உங்களுக்கு தேண்கிண்ணம் படைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!