Friday, March 23, 2007

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (மூன்றாம் பகுதி)

இந்த கல்யாணி நம்மலை விட மாட்டேங்கிது! சிலபேருக்கு கல்யாணின்னதும் பீர் ஞாபகம் தான் வரும்! அது நல்ல ப்ராண்ட் இல்லை! அப்ப இந்த கல்யாணி பீர் அடிக்க 5 கிமீனாலும் நடந்து போய் அடிச்சுட்டு வந்த காலங்களை மறக்க முடியலை, ம்.. அதெல்லாம் அறியா பருவம்! திரும்பி வருமா! சரி இந்த ராகங்கள் கதைக்கு வருவோம்! நோய் தீர்க்கும் குணாதிசியங்களை முதல் பகுதியிலே சொல்லிட்டேன். இருந்தாலும் இந்த ராகத்திலே அமைந்த திரைப்பட பாடல்கள் எக்கசக்கமா ஆகிபோனதாலே இந்த மூணாவது பகுதி வரைக்கும் வந்திடுச்சி! பரவாயில்லை இதோட கல்யாணிக்கு மங்களம் பாடியாச்சு. இனி இந்த ராகத்திலே வராது, வேற ராகத்துக்கு வண்டி போயிடும். சரி போன வாரம் ஒரு கேள்வி கேட்டேன் இல்லை, அதுக்கு பதிலு யாருமே பின்னோட்டத்தில போடலை! அப்ப நிறைய பேருக்கு இந்த சங்கீதம் ஞானமில்லையா, இல்லை அதை பத்தி என்னத்தை சொல்றதுன்னு விட்டுட்டீங்களா, இருந்தாலும் நானே சொல்றேன்!

நான் போனவாரம் கேட்ட கேள்வி சுருதி பேதத்திற்கும், கிரக பேதத்திற்கும் உள்ள வித்யாசம் என்ன என்பது. இந்த சொற்றொடர் சங்கீத கச்சேரிகள், திரைப்பட இசை அமைப்பாளர்கள் பேசிக்கிற ஒன்னு தான்! சில திறமைகள், கலை ஆர்வம் என்பது நமக்குள்ள தானாக பிறப்பதில்லை, அதை சின்ன வயசிலே கத்துக்ககூடிய சூழ்நிலை இல்லேன்னாலும், வளர்ந்து மனமுதிர்ச்சி அடைந்த பின், இன்னைக்கு இருக்கும் இந்த இணைய தொழில்நுட்பத்திலே அதை பத்தி என்னான்னு தெரிஞ்சிக்க செலவழிச்சாலே போதும் கத்துக்கிடலாம்! என்னா அதுக்குன்னு கொஞ்சம் காலவிரயம் செஞ்சா போதும்! நம்ம ஏன் அதை அப்படி செய்றதில்லைன்னு தெரியல்லை! ம்.. அதை விடுங்க, நம்ம அடிக்கும் தாரை தப்பட்டையைக் கூட அதன் சூட்சமங்கள் தெரிஞ்சிக்கவோமான்னா அதுவும் கிடையாது!அப்பறம் விடை எப்படி சொல்றது! சரி இப்ப விஷயத்துக்கு வருவோம்!

சுருதி என்பது சுவரங்களின் அடிப்பட்டை சப்தம், அதாவது நம்ம சொல்ற ஒவ்வொரு அடிப்படை சுவரத்தின் சப்த எழுப்பலை சுருதி என்பது! அப்படி அடிப்படையாக கொண்ட அந்த சப்த நாதங்களிலிருந்து பிறக்கும் இந்த சுவரங்களால் அமைக்கப்படும் ராகங்களை பாடி கொண்டிருக்கும் பொழுது, சுவரம் மாற்றாமல், சப்த அலைகளை மாற்றி வேறு ராகத்தின் சாயலை கொண்டு வருவதே சுருதி பேதம்! கிரக பேதம் என்பது பாடிக்கொண்டிருக்கும் ராகத்தையோ, இசைத்துக்கொண்டிருக்கும் ராகத்தையோ தொடர்ச்சியாக சுவரம் மாற்றி அடுத்த ராகத்தினை இசைத்து காட்டியோ செய்வது கிரக பேதம்!

இப்ப ஒரு வீடியோ கிளிப், இது சங்கராபரணம் என்ற தெலுங்கு படத்தில் வந்த ஒருகாட்சி, முதல்லை இதை பாருங்க!



என்ன பார்த்தாச்சா, பாட்டு முடிஞ்சு தெலுங்கு டைலாக் உங்களுக்கு புரியலைன்னா இதோ கீழே:

சாஸ்திரிகாரு:... சாரதா, நீ பாடின ராகம் என்ன அதில வந்த சுவரம் என்னா? சுத்தமான ஹிந்தோல ராகத்திலே ரிஷபம் எதுக்கு வந்தது? சொல்லு ஹிந்தோலத்துக்கு ஆரோகணம் என்னா?..

சாரதா:..சகமதநிச

சாஸ்திரிகாரு:..அவரோகணம்..

சாரதா:..சநிதமகச

சாஸ்திரிகாரு:..அப்பறம் ரிஷபமமெதுக்கு வந்துச்சு, சுவரசங்கரம் செய்றதுக்கு புத்தி இல்லையா?

பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை:..பரவாயில்லை, அது ஒன்னுமில்லை, புருஷபம் வந்த மாதிரி!!

சாஸ்திரிகாரு:.. என்னது புருஷபமா ரிஷபமா?

பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை:..ரிஷபமே அது ரிஷபமே எதோ குழப்பமாயிட்டேன், அதான்னே ரிஷபம் எப்படி ஹிந்தோலத்தில வரும், அது..சாருகேசியிலே வரும்..

சாஸ்திரிகாரு:.. சாரு?

பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை:..இல்லைங்க சாருகேசியிலை எப்படி வரும், காபி அது காபி ராகத்திலே வரும்!

சாஸ்திரிகாரு:.. நீ எந்திருச்சி வெளியிலே போ.. எந்திரி! ரிஷப பத்தின வார்த்தை என்னான்னு தெரியாம சங்கீதத்தை குறித்து பேசறதுக்கு என்ன யோக்கிதை இருக்கு! தெரிஞ்சா தெரிஞ்ச மாதிரி இருக்கணும் இல்லைன்னா வாயை மூடிக்கிட்டு உட்கார்ந்து இருக்கணும்..

பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை:..அதில்லைங்க...

சாஸ்திரிகாரு:..ம்...

மாப்பிள்ளை அம்மா:.. சம்பந்தம் பத்தி அப்பறம் சொல்லி அனுப்புறோம்.. (பையனைக் கூட்டிக்கொண்டு வெளியே செல்கிறார்..)

சாஸ்திரிகாரு:..அவசரம் ஏதுமில்லை..

ஆக மொத்த தெலுங்கு படம் கிளிப் போட்டாலும் டைலாக்கை தமிழ்லை உங்களுக்கு சொல்லியாச்சு!

இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி, சாரதா செஞ்சது சுவரபேதமா, கிரகபேதமா சொல்லுங்க பார்க்கலாம்?

ஒன்னும் புரியல்லைன்னா, பேசமா இந்த கல்யாணியின் நோய் தீர்க்கும் ராகங்கள் மூணாவது பகுதி பாட்காஸ்ட்டை கேளுங்க!



தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

தொடரின் பழைய ராகங்களின் நோய் தீர்க்கும் குணங்களை படிக்க:

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (முதல் பகுதி)

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (இரண்டாம் பகுதி)

Sunday, March 18, 2007

தமிழ் சினிமாவின் தலைசிறந்த பத்து வசனங்கள்!

எத்தனையோ படம் பார்க்கிறோம், ஆனா அத்தனை படங்கள்லயும் பேசும் எல்லா வசனங்களும் நம்ம மனசிலே நிக்கறதில்லை! ஆனா பாருங்க சில வசனங்கள் காலத்தால் அழியாத வசனங்களா நம்ம மனசிலே நிலைச்சு நிக்கும். அப்படிப் பட்ட தலைசிறந்த பத்து வசனங்கள் என்னான்னு பார்க்கலாமேன்னு தான் இந்த பதிவு.

10) "மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி" - இது பி எஸ் வீரப்பா பேசி நடிச்ச வசனம், மகாதேவி என்ற படத்தில்! மகாதேவியாக சாவித்திரி நடித்து, இந்த படம் எம்ஜிஆர் ஹீரோவாக நடித்தப்படம். இது ஒரு டிரேட் மார்க் வசனம். இந்த வசனம் பத்தி நினைக்கிறப்ப பிஎஸ் வீரப்பா உடனே நினைவில் வந்து நிறபது என்னவோ உணமை தான்!

9)"சபாஷ் சரியான போட்டி" - மறுபடியும் பிஎஸ் வீரப்பா பேசி நடிச்ச வசனம், வஞ்சிக்கோட்டை வாலிபன் என்ர படத்தில்! அந்த கால டான்ஸிங் சென்ஷேஷன்ஸ்னு சொல்லி புகழப்பட்ட வைஜெயந்தி மாலாவும், பத்மினியும் பரதநாட்டிய போட்டி நடனம் ஆடி கலக்குவாங்க! அப்ப பிஎஸ் வீரப்பா இந்த வசனத்தை சொல்லி உசுப்பேத்துவார். இந்த வசனம் நம்மகிட்ட நிலைச்ச ஒன்னு. இப்பயும் இரண்டு பெண்கள் எதாவது ஒரு விஷயத்திலே சண்டை போட்டு வாக்குவாதம் பண்ணிகிட்டு இருக்கிறப்ப, நம்ம எல்லாரும் இந்த வசனத்தை பிரயோகிச்சு உசுப்பேத்தி விடறது வழக்கம்! அதாவது ஆண்கள் விசலடிச்சு கொண்டாடும் இந்த தருணத்தில் உபயோகிக்கும் வசனம், எத்தனை காலமானாலும் மறக்க மாட்டாங்க!

8) "நெற்றி கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே!" - இது திருவிளையாடல் படத்தில் ஏபி என் நகாரஜன் பேசி நடிச்ச வசனம்! அதாவது மொழிப்புலமையிலே வரும் சண்டையிலே பரமசிவனுடன் சண்டை போடும் நக்கீரனாக நடிச்சி அசத்தி இருப்பார். இந்த வசனம் தான் 'நக்கீரன்'னு பத்திரிக்கை எல்லாம் பின்னாடி ஆரம்பிக்க ஏதுகோல இருந்தது! இது ஒரு மறக்க முடியாத வசனம்!

7)"நீ முந்திண்டா நோக்கு, நா முந்திண்டா நேக்கு" - இது 'வியட்நாம் வீடு' என்ற படத்திலே ப்ரிஸ்டிஜ் பத்மனாபனா நடிச்ச சிவாஜி கணேசன் பேசற வசனம்! அதாவது தன்னுடய பதவிகாலம் முடிஞ்சு ரிடெயர்மெண்ட் காலத்திலே தன்னை ஒதுக்கி வச்ச பிள்ளைகளை நினைச்சு, தனது மனைவியாக நடிச்ச பத்மினியிடம் பேசும் வசனம்! இந்த காட்சியை பார்த்து கண்ணை கசக்கும் பெண்களின்கூட்டம் அதிகமாக தியேட்டரில் அலை மோதியது ஒரு சரித்தரம்!

6)"பரட்டை பத்தவச்சிட்டியே பரட்டை"- இது நான் அடிக்கடி சிலாகிக்கும் பாரதிராஜாவின் முதல் படமான '16 வயதினிலே' யிலே வர்ற ஒரு வசனம்! தமிழ் சினிமாவையே புரட்டி போட்ட படம்! மக்கள் எதை வேணும்னாலும் மறந்திருக்கிலாம், ஆனா இந்த கவுண்டமனி பேசிற இந்த டைலாக்கை மக்கள் மறக்க மாட்டாங்க. இந்த படத்திலே இன்னொரு முக்கியமான டைலாக, கமல் பேசற "ஆத்தா ஆடு வளத்துச்சு, கோழி வளத்துச்சு, ஆனா நாயி வளக்கல்ல, என்னத்தானே வளத்துச்சு" ன்னு உருக்கமா பேசும் இந்த டைலாக் பாப்புலரா இருந்தாலும், "இது எப்படி இருக்கு"ன்னு வசனம் பேசின நம்ம தலைவர் ரஜினி இழுத்த கூட்டம் தான் அப்ப அதிகம்! இருந்தாலும் கவுண்டமணிங்கிற நகைச்சுவை சகாப்தம், செந்தில் கூட சேர்ந்து ஜோடி போட்ட இந்த மறக்கமுடியாத தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜோடிகள்ல ஒருத்தரை அடையாளம் காட்டி கொடுத்த இந்த வசனம் மக்கள் மனதை விட்ட அகலாத ஒன்னு!

5)"நீங்க நல்லவரா கெட்டவரா" - இது நாயகன் படத்திலே கடைசி காட்சியிலே கமலோட பேரன் அவருகிட்ட கேட்கும் கேள்வி! இது படத்திலே சின்னபையன் பெரியவர் நாயக்கரை பார்த்து கேட்டாலும் கடைசியிலே மக்கள் முன்னே தத்வார்த்த்மா, டைரக்டர் வைக்கும் கேள்வி! இந்த இரண்டு ஷேட்ஸ்லயும் வர்றக் கூடிய வில்லன் கலந்த கதநாயகன் ஆரம்பத்தை மணி தொடங்கி வச்சது இந்த படத்திலே தான்! அது இப்ப வந்த குரு படம் வரை தொடருது! ஆக இந்த வசனமும் மறக்க முடியாத ஒன்னு!

4) "கடவுளே.. கடவுளே" - இது மறக்க முடியாத ரஜினியின் நகைச்சுவை உணர்வான நடிப்பினை வெளிபடுத்திய படம், 'அண்ணாமலை'! இதுல ரஜினி குஷ்புவை பார்க்ககூடாத கோலத்திலே பார்த்திட்டு அதை பாம்பை பார்த்து நடுங்கும் கோலத்தோட இணைச்சு அடிக்கும் இந்த காமடி டைலாக் சும்மா கிளாஸ்!

3) "மன்னிப்பு, தமிழ்ல எனக்குப் புடிக்காத வார்த்தை!" - இது நம்ம விஜயகாந்து ரமணாவிலே ஊழல் பண்ணும் போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகளை சுளுக்க எடுக்க பேசி நடிச்ச வசனம், மறக்க முடியாத ஒன்னு! அவரு கண்ணு சிவக்க பக்கம் பக்கமா அறிவுரை வசனம் பேசி நடிச்ச பல படங்கள் இருந்தாலும் இந்த ஒரு சிம்பிள் வசனம் அனைவரையும் கவர்ந்த ஒன்னு! இதை மக்கள் அடிக்கடி பொதுவிலே தான் பேசும் போது சேர்த்துக்கிட்டு பேசன ஒன்னு! அவ்வளவு பாப்புலர்!

2) "மாப்பு..வச்சிட்டான்யா ஆப்பு" - இது காமடி டைலாக்ல ஒரு சிகரம்! அதாவது அப்ப வந்த அபூர்வ சகோதரர்கள்ல ஜனகராஜ் பேசிற ஒன் லைன் டைலாக், 'சார் நீங்க எங்கயோ போய்ட்டீங்க' அப்படின்னு சொல்லும் அந்த ஒன் லைன் டைலாக்ல தியேட்டரே அதிரும். அப்படி தியேட்டரை அதிரவச்ச இந்த டைலாக்கை, வடிவேலு பேசி நடிச்ச சந்திரமுகியை, யாரும் மறக்க முடியாது!

1) "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" - இது பஞ்ச் டைலாக்குகளின் சிகரம். அதாவது ரஜினி பாட்ஷாவிலே பேசி நடிச்ச இந்த பஞ்ச் டைலாக் தான் அடுத்தடுத்து வந்த படங்களில் வரும் பஞ்ச் டைலாக்குகளுக்கு எல்லாம் தாய் பஞ்ச் டைலாக்! அதாவது இது "Mother of all panch Dailogue"! இந்த வசனத்தோட வீரியம் எவ்வளவு சக்தி வாய்ந்ததுன்னு ரஜினி படத்திலே பேசி நடிச்சப்பக் கூட நினைச்சு பார்த்துருக்க மாட்டாரு! ஆனா இதன் மந்திர சக்தி அப்படியே எல்லாரையும் கட்டி போட வச்சது! இதை வச்சு, சோகம், காமடி அப்படின்னு ஏகப்பட்ட வர்சன்ஸ் மக்கள் மத்தியிலே வந்து பிரயோகம் பட்டது! ஆக இது மறக்கவே முடியாத ஏன் மறக்கக் கூடாத, ஏன் எத்தனை காலம் மறினாலும் மக்கள் மனதில் நினைத்து நிற்க கூடிய ஒரு தலைசிறந்த வசனம்!

Saturday, March 17, 2007

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (இரண்டாம் பகுதி)

ராகங்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வரும் இத்தொடரில் மறுபடியும் கல்யாணிராகத்தை பத்தி தொடர்ச்சியா வெளியிட்ட இந்த பாட்காஸ்ட்டை நீங்கள் அனைவரும் கேட்க வேண்டுமெனெ தான் இந்த பதிவு! இந்த பாட்காஸ்ட்டை கண்டிப்பா கேளுங்க! வெறுமன சினிமா பாட்டை மட்டும் கேட்காம, இந்த கல்யாணி ராகத்திலே அமைந்த அந்த தியாகராய்யர் கீர்த்தனை பாட்டு, அதை நம்ம கொத்ஸ்ஸும் கரெக்ட் பண்ணுனாரில்லே, அதையும் நீங்க கேட்கலாம்!

அப்பறம் இந்த கர்நாடக சங்கீதங்கள் நீங்கள் கேட்காவிட்டாலும, அந்த சர்ககிள்ல இரண்டு பதம், அடிக்கடி பேசிக்கிற ஒன்னு, அதாவது கிரகபேதம், சுருதிபேதம் ன்னு! அது உங்கள்ல எத்தனை பேருக்கு அது என்னான்னு விளக்கமா தெரியும்ங்கிறதை நீங்க வேணும்னா உங்க பின்னோட்டம் போட்டு சொல்லுங்களேன் பார்க்கலாம்! இல்லேன்னா, அதை பத்தி அடுத்த பதிவுல விளக்கமா எழுதிறேன்!

இந்த சுருதி பேதம்ங்கிற டைட்டிலோட தான் ரஜினியோட எண்ட்ரி அபூர்வராகங்கள்ல வரும், அதாவது அதை பேக்ரவுண்டல சொல்ற குரல் இப்படி சொல்லும், 'தாளமும் ராகமும் இணையபோகிறதே என்ற சந்தோஷம் அவனுக்கு, ஆனால் அது நடக்க வேண்டுமே'ன்னு சொல்லிட்டு இந்த 'சுருதி பேதம்' ங்கிற டைட்டில் வரும்! அதாவது கதையின் போக்கிற்கு வந்த சுருதிபேதம்! சும்மா வெட்டியா ஆன்னு வாய பொளந்துட்டு ஆடுற உருவங்களை மட்டும் வெறுமன சினிமா பார்த்து பொழுதை போக்கிறதை விட இப்படி எதாவது விஷ்ய ஞானம் ஏதும் தெரிஞ்சிக்கலாமில்லை! அப்ப சினிமாவை வெட்டியான பொழுது போக்குன்னு யாரும் சொல்ல மாட்டங்கல்ல, இதுன்னு இல்லை, எவ்வளவோ விஷயங்களை கத்துக்கினும்னா கத்திகிடலாம், என்ன புரிஞ்சதுதா! சரி இப்ப பாட்காஸ்ட்டை கேளுங்க!



தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!


தொடரின் பழைய ராகங்களின் நோய் தீர்க்கும் குணங்களை படிக்க:

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (முதல் பகுதி)

Sunday, March 11, 2007

மீண்டும் கோகிலா- இடுப்பை கிள்ளும் கமல்!

ரொம்ப நாளா இந்த ராகங்களின் பின்னே போய்ட்டதாலே மத்த எழுத நினைச்ச பதிவுகள் அப்படியே தங்கி போச்சு! அதிலே போன வாரம் பார்த்த ஓங்கி நடித்தவனை அடக்கி ஆண்டவரின் படம் பத்தி எழுதனும்னு நினைச்சேன், எதுன்னு தெரிஞ்சா மறுமொழி போடுங்க பார்க்கலாம், என்னோட கிசுகிசு பாணி சிலேடை உங்களுக்குப் புரியுதான்னு பார்ப்போம்! அப்படி எழுதனும்னு தோணுனதிலே முதல்ல இந்த மீண்டும் கோகிலா பத்தி கொஞ்சம் பார்ப்போம்! இந்த படம் ஆரம்பிச்சப்ப ஏகப்பட்ட அமர்க்களத்தோட இதிலே நம்ம ஜெமினி மாமா பொண்ணு ரேகா நடிக்கறதா இருந்தது. அப்ப கமலுக்கு வாணியோட கல்யாணமாயிருந்த நேரம்! அப்ப ரேகாவுக்கு கமலு மேலே கொஞ்சம் கிக்கு தான்! எங்க ஆம்புடையான் கையை வுட்டு போயிடுவானோன்னு வாணி மூக்கு சிந்துனதாலே, அந்த ஐடியா அப்படியே ட்ராப் ஆயி கடைசியிலே இந்த படத்துக்கு ரேகா பண்ண வேண்டிய ரோலை, அப்ப நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அப்ப வயசுக்கு மீறின வளர்ச்சியோட பார்க்க லட்சணமா இருந்த தீபாவும் ஏற்கனவே பாப்புலரா இருந்த கமல் ஸ்ரீதேவி ஜோடி அமர்க்களமா நடிச்சு 80களில் வெளி வந்தப்படம்.

மொத்தமா இது அக்ரஹாரத்து கதை,

'ஸ்ரீதேவி மாமி சமத்தா ஆக்கி போட்டுண்டு நல்ல வளைய வர்ற மாமி போங்கோ, அசித்திருப்பா. சட்டம் படிச்ச நம்மண்ணா கமலுக்கு சபலம் கொஞ்சூண்டு ஜாஸ்தி போங்கோ! அதினால குடும்பத்திலே வந்த குழப்பத்தை வச்சுண்டு ஒரே ஏக ரகளையா படம் போயிண்டிருக்கும் போங்கோ, நான் என்ன சொல்றது படம் கிடைச்சா வாங்கி போட்டு கொஞ்சம் பார்கிறேளா, நா சொல்றது உங்களு புரியும்! ஐயராத்து கதை சொல்றப்ப அவா மாதிரி பேசறது சகஜம் தானேண்ணா!

ஓகே வந்த விஷயத்துக்கு வருவோம். அப்ப நம்ம ராஜாவின் ஆரம்ப கால பருவம். ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம், புதுமைன்னு கொடுத்துண்டிருந்தார்,..ச்சீ பழக்க தோஷம், விடமாட்டேங்கிது! அப்படி இந்த படத்திலே போட்ட ஒரு அருமையான பாட்டு 'சின்னஞ்சிறு வயதில்' என்கிற பாட்டு. இதிலே அப்ப வித்தியாசக்குரல் வேணும்னு எஸ் பி சைலஜாவை வச்சு பாடவச்சார், கூட நம்ம தேன் மதுரகுரலுக்கு சொந்தக்காரான ஜேசுதாஸ் அவர்கள்,கேட்கணுமா, பின்னி எடுத்திருப்பாங்க. அதோட வீடியோ கிளிப்ஸ் இன்னக்கு உங்கள் சாய்ஸ்! கீழே பாருங்க!

இதிலே ரொம்ப முக்கியமான சமாச்சாரம் கமல் அடிக்கடி ஸ்ரீதேவி மாமி இடுப்பை கிள்றது தான்! அது தான் படத்தோட ஹைலைட். அந்த காலத்திலே நான் ரசிச்ச ஸ்ரீதேவி, பாவம் இடுப்பை வச்சுண்டு, நம்ம கமலண்ணாட்ட படதா பாடு பட்டிண்டிருப்பார்! எத்தனையோ கமல் ஸ்ரீதேவி ஜோடி போட்டு படங்கள் வந்திருந்தாலும், ஒரு சில படங்கள் மனசை விட்டு அகல்வதில்லை, அப்படி தான் இந்த படமும். அப்பறம் மூன்றாம் பிறை, ஆனா அந்த படத்தை பத்தி சொல்னும்னா, பதிவுக்கு 'பொன்மேனி உருகுதே' காத்துக்கிட்டிருக்கு! அது வேற விஷயம்!

இது ஒருவிதத்திலே கமலோட சொந்தபடம் மாதிரி, ஹாசன் பிரதர்ஸ் கதை இலாகா, கதை பண்ணியிருப்பாங்க! அப்பறம் உடைகள் 'வாணி கமலஹாசன்'ன்னு போட்டு வரும், இந்தம்மா அப்ப ஏபிஎன் எடுத்த 'மேல்நாட்டு மருமகள்'ல கமலோட ஜோடி போட்டு அப்பறம் கல்யானம் கட்டிண்டா! அப்பறம் சரிகாவை கமல் ஆராஞ்சதாலே விட்டுட்டு போயிட்டா, ஆனா பாருங்க, அவரு விட்டு போன டிப்பார்ட்மெண்ட், இந்த காஸ்ட்யூம்ஸ் தான், அப்பறம் கமல் சொந்த படங்களுக்கு சரிகா கமலஹாசன்னு போட்டு வரும், இப்ப யாரு அதை கவனிக்கிறாங்க, கெளதமியா??

இந்த பாட்டுல ஒரு வித்தியாச சங்கீத சப்தம், பாக்கு உரல்ல இடிக்கிறதை, காரி துப்புறமாதிரி வர்ற சப்தத்தை எல்லாம் கலவை செஞ்சு கேட்க சுகமா ஒரு ராகம் நம்ம ராஜா போட்டிருப்பார். கேட்டுக்கிட்டே இருக்கலாம். இது மாதிரி பாடல்கள் சுத்தமா நம்ம மறந்துட்டுமோன்னு படுது எனக்கு, நீங்க என்ன நினனைககிறேள்? அப்படி எதுவும் நினைக்கிலேன்னா நீங்க பொண்ணு பார்த்த படலத்தை ஞாபகபடுத்திண்டு சந்தோஷமாயிருங்கோ! சரி இப்ப ஒலியும் ஒலியும் பாருங்கோ! நான் சித்த போயிட்டு வந்துடுறேன்!

Saturday, March 10, 2007

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (முதல் பகுதி)

கல்யாணி ராகம் இருட்டிலிருக்கும் பயத்தை போக்கும் வல்லமை கொண்டது. ஒரு தாயின் அரவணைப்பிலே கிடைக்கும் சுகத்தினை பெறவும், மன தைரியத்தை அதிகரிக்க செய்யவும் இந்த ராகத்திற்கு குணமுண்டு. கல்யாணி என்றாலே மங்களம் என்று பொருள். எந்த ஒரு மங்களகரமான நிகழ்விற்கும் இந்த கல்யாணி தான் துணை நிற்பது. ஆகையால் கல்யாணி ராகத்தினை இசைத்திட்டால், திருமண சம்பந்தங்கள் கைகூடும் என்பது ஒரு ஐதீகம்! இந்த ராகத்தினால் உண்டாகும் பயன்களை பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எல்லாம் நமக்கு தெரிவிக்கின்றன். பயம் என்பது எத்தனை ரூபமெடுத்தாலும், அது ஏழ்மையின் பயமானாலும் சரி, காதலின் பயமானாலும் சரி, இல்லை பெரிய சக்திகளின் பயமானாலும் சரி, அல்லது ஆரோக்கிய வாழ்வற்ற பயமானாலும் சரி, ஏன் மரணபயமானாலும் சரி, இந்த ராகத்தில் அமைந்த இசையை கேட்டால் அத்தனை பயங்களும் நம்மை விட்டு அகன்றோடிவிடும் என்ற பெரிய நம்பிக்கையுண்டு!

இந்த ராகத்தினை பற்றி பேசும் பொழுது இதற்குப்பின்னே நடந்த சில சம்பங்கள் உடனடியாக மனைதில் விளையும்! அதாவது தியாகராஜய்யர், தஞ்சை அரசனின் புகழ்பாட மறுத்து கடவுள் துதியாக 'நிதி சால சுகம்மா ரமணி சந்நிதி சேவ சுகம்மா' என்ற கீர்த்தனையை இந்த கல்யாணி ராகத்திலே பாடிய சரித்திரமுண்டு! இந்த ராகத்திலே எழும் பாவம் உணர்ச்சி பூர்வமாக பாடப்படும் அத்தனை பாடல்களும், கீர்த்தனைகளும் ஒரு அழகான சப்த வடிவத்தை கொடுக்கும்! அதற்கும் மேலே இந்த ராகம் ஒரு பரிபூரண இல்லை சம்பூரண ராகம். ஆக ஏழு ஸ்வரங்களும் கைகோர்த்து ஜதியாடும்! இந்த ராகம் ஆர்ப்பாட்டமாகவும் இசைந்து கொடுக்கும், அதே சமயத்தில் அமைதியாகவும் ஸ்வரம் பாடும்.

இந்த கல்யாணி ராகத்தினால் தேவி துதிபாடிய சியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனையான, 'ஹிமத்ரிஸ்தே பகிமம்' என்பது அனைத்து சக்தியைய்ம் அன்னையிடமிருந்து பெற வழிகோணியதாம். அதே போல் இந்த ராகத்திலே, முத்து சாமி தீட்சதர் அவர்கள் படைத்த சொர்க்க ராக கீர்த்தனையான 'கமலாம்பாள் நவவர்ணம்' என்ற கீர்த்தனையை கொண்டு, கிரங்களின் இடமாற்றத்தால் உண்டாகும் துர்பாக்கியத்தை அகற்றி நல்வழிபிறக்க உதவ வழிசெய்யும் என்ற நம்பிக்கையுண்டு!

இப்படி பல குண நலன்களை கொண்ட இந்த ராகத்தால் அமைந்த சினிமா பாடல்கள் அநேகம். அதில் முக்கியமாக, காலத்தால் அழியாத பாடல்களை சொல்ல வேண்டுமென்றால் அம்பிகாபதி என்ற படத்தில் டிஎம்ஸ் பாடிய, 'சிந்தனை செய் மனமே' என்ற பாடலும், கேவி மகாதேவன் இசை அமைத்த "மன்னவன் வந்தானடி" என்ற திருவருட்செல்வர் படத்திலே வந்த பாடலையும் குறிப்பிட வேண்டும். அது மட்டுமல்ல இளையராஜா இந்த ராகத்திலே ஏகப்பட்ட பாடல்களை அள்ளி வழங்கி இருக்கிறார். இதை ஹிந்துஸ்தானி ராகத்தில் 'யமன்' என்றழைப்பார்கள், அதிலே அமைக்கப்பட்ட சில பழைய ஹிந்திபாடல்கள் மற்றும் பல பாடல்களை இந்த பாட்காஸ்ட்டில் கேளுங்கள்!

இதன் முதல் பாகமாக இந்த பாட்காஸ்ட்டை கேளுங்கள்!



The Healing Raagaas! - Kalyani (Part-1)

தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

தொடரின் பழைய ராகங்களின் நோய் தீர்க்கும் குணங்களை படிக்க:

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!

Saturday, March 03, 2007

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!

தொடர்ந்து இந்த ராகங்கள் குணப்படுத்தும் விஷேஷத்தை பார்க்கும் பொழூது, இந்த தடவை எடுத்துக்கிட்ட ராகம் ஷண்முகப்ரியா! இந்த ஷண்முகப்ரியா ராகம் கேட்பவர்களையும் பாடுபவர்களையும் அறிவுபூர்வமாக இணைக்கக்கூடிய ராகம்! அது மட்டுமில்லாமல், மனதிலே ஒரு தையரியத்தை உண்டாக்கி, உடல் முழுக்க ஒரு புதுவித சக்தியை ஏற்படுத்தக்கூடிய ராகம.


இந்த ராகம் இசை அமைப்பாளர்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு, அதிலே நிறைய பாடல்களை இசை அமைப்பாளர்கள் போட்டு இருக்காங்க! அதிலே எனக்கு ரொம்ப புடிச்சது, மீண்டும், பாரதிராஜா படமான 'புதியவார்ப்புகள்' படத்திலே வரும் ஒரு பாட்டு, இந்த படம் இப்ப பார்த்தப்பக்கூட, நான அந்த காலத்திலே எப்படி சிலாகிச்சு ரசிச்சேன்னோ, அதே ரசனையோட இதை இப்ப பார்த்தேன். என்னுடய ரசிப்பு தன்மை இன்னும் இருக்கா, இல்ல அது ராஜாக்களோடமேஜிக்கான்னு தெரியல்லை, இருந்தாலும் அதை பத்தி அப்பறமா எழுதுறேன்!

அப்பறம் இந்த ராகம் மைத்தியலாஜிக்கலா பார்த்தீங்கங்கன்னா, சிவண்டிக்கு சொந்தமான ராகம், அதாவது அவருடய் நெற்றிகண்ணிலிருந்து பிறந்த ராகம்னு சொல்வாங்க!

இந்த ராகத்திலே அமந்த மற்றொரு பாடல் இடம் பெற்ற பாரதிராஜா படம் 'வேதம் புதிது'! அதில் வரும் கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாட்டு. இந்த வேதம் புதிது படம் 87ல வந்தப்ப இதை ரொம்பவே கொண்டாடினாங்க, ஏன்னா, இதில வரும் ஷார்ப்பான வசங்கள், அதாவது பாலு உங்க பேரு அதுக்குப்பின்னாடி இருக்கும் தேவங்கிற பேற பத்து வருஷம் படிச்சு பட்டம் வாங்கினீங்களான்னு ஒரு சின்ன பிராமணப் பையன் கேட்கிற மாதிரி எல்லாம் வரும். அதாவது வழக்கமா வர்ற பாரதிராஜா படக்கதை ட்விஸ்ட் மாதிரி, தேவர் வீட்டு பையன் பிராமணப்பொண்ணை காதிலிக்கற மாதிரியும், அப்பறம் அவஙக இரண்டு பேரும் இறந்து போயி, அவன் காதலி தோப்பனாரும் செத்து போயி, அனாதையான பிராமணப்பையனை தேவர் எடுத்து வளர்த்து, இந்த சாதியங்கிறதை ஒழிக்கிற மாதிரி கதை போகும், அப்ப இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்திச்சு!


அது மாதிரி இந்த ராகத்திலே வந்த ஏகப்பட்ட பாடல்கள் இருக்கு, தெரிஞ்சுக்கணும்னா, கீழே பாட்காஸ்ட்டை கேளுங்க!



தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

இந்த பாட்காஸ்ட்டை கேட்கும் போதே, நான் எழுதின இரண்டு பழைய பதிவுகளை குறிப்பிட்டிருப்பேன். அதன் வீடியோ பதிவிற்கான சுட்டி!

ஷ்ணமுகப்ரியா ராகத்தில் வந்த பாடலின் ஒரு பதிவு!

அதே ராகத்தில் வந்த இன்னொரு பாடலின் பதிவு!

தொடரின் பழைய ராகங்களின் நோய் தீர்க்கும் குணங்களை படிக்க:

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!