Wednesday, October 19, 2005

தெருவோர சிலுவக்கல்லு ஜோசியம்

அந்த காலத்திலே உலக இரட்சகர் மாணவர் மத்தியப் பள்ளியிலே படிக்கும் பொழுது, ஸ்கூல் வுட்டு வந்தவிடன் விளையாட்டிலே வெகுநேரம் காலம் கழிந்துவிடும், படிப்புனு பாத்தா, கொஞ்ச நேரம் புத்தகம் தூக்கறதுதான். அதவும் ஆத்துப் பாலத்திலே விளையாடிட்டு இருந்தா நேரம் எப்படி போவுதுனு தெரியாது. அந்த காலத்திலே பாலக்கரை போலீஸ் ஸ்டேசன் பின்னாடி இருந்த காலி மனையிலே ஆறுமுக குதிரை லாயம் தான் இருக்கும், அப்பறம் அத்க்கு பக்கத்திலே ஐயருங்க அக்ரஹாரம் இருந்தது. அப்பதான் அந்த அக்ரஹாரத்தையும், குதிரை லாயத்தையும் காலி பண்ணிட்டு ரத்னா லாட்ஜு கட்டவதற்காக, ஆத்து மணலை கொண்டு வந்து கொட்டி வச்சிருந்தாங்க. அந்த மணல்ல வீடுகட்டி விளயாடுவது ஒரு ஜாலி. அதெலயும் அந்த பககத்து வீட்டு சின்ன புள்ளய கழுத்து வரைக்கும் புதச்சி வச்சிட்டு அத அப்படியே விட்டு ஓடி வந்து அப்பறம் அந்த அக்கா புள்ளய தூக்கிட்டு வந்து கத்திட்டு போனதும், நான் எங்க அம்மாகிட்ட உதை வாங்கினதும் அது ஒரு தனிக்கதை. என்னடா, இவண் இப்படியே இருந்தா தரிசா போயிடுவானு என்னை சாயுங்காலம் வீட்டுல இருக்கவுடாமா இருக்க ஏற்பாடு பண்ணதுதான் சரசக்கா வீட்டு டுயூசன். அந்த சரசக்கா யாருங்கிறிங்களா, அவங்கதான் எங்க வசந்தாக்காவோட டீச்சர் டெரயினிங் எடுத்தவங்க, எங்க வீட்டல எங்களுக்கு இன்னெரு அக்கா மாதிரி. ஆனா டூயுசன்னு அவங்ககிட்ட போயிட்டா, படிக்கலனே, மயிரமட்டும் வுட்டுட்டு, உடம்புல்ல மத்த எல்லா எடத்தலேயும் எங்கவேணாலும் அடி விழும். அதுவும் எனக்கு விழுந்த அடி உங்க வீட்டு என் வீட்டு அடி இல்ல, அது என்ன அடின்னு சொல்ல முடியாது. அவங்களோட ஹஸ்பண்டும் சேர்ந்துக்குவாங்க. அவருக்கிட்ட அடி வாங்கறது அது ஒரு தனி அழகு. ஆகமொத்தம், அவங்க வீட்டுக்கு டூயூசன் போறதுனா, ஐயாவுக்கு சிம்ம சொப்பணம். அதுவும் எங்க ஞாயினா சைக்கிள்ல என்ன பின்னாடி உட்கார வச்சு ஓட்டிக்கிட்டு டுயூசனுக்கு கூட்டிட்டு போனாருனா, சைக்கிள்ல இருந்து கீழ குதிச்சு ஓடிடுவேன். அப்பறம் என்ன ஓடி கட்டி கூட்டிட்டுப் போயி விடுவாரு. சாயுங்காலம் ஸ்கூல்லருந்து வந்த வுடன கடைக்கு கூட்டிட்டு போறவரை ஜாலியாதான் இருக்கும். அங்கருந்து வரகநேரி சுப்பரமணி கோவில் வர வந்து, அதுக்கு பக்கத்திலே இருக்கற கிளப்புக்கடையிலே ரவா தோசை வாங்கி சாப்படற வர ந்ம்ம மூடு நல்லாத்தான் இருக்கும். சாப்பிட்டுடு, சரசக்கா வீட்டு சந்து முகனை திரும்பும் போது நம்ம அடி மனசல எழும்புற பயம் இருக்கே, அதுமாதிரி ஒரு உடம்பல உருவாகிற ஒரு ராசாயண கலவையை இதுவர அனுபவிச்சத்தில்ல. அதாவது, ஒவ்வொரு உணர்ச்சிக்கும் உண்டாகிற பாடி கெமிஸ்டிரி ஒரு யுனிக் எக்ஸ்பீரியன்ஸ்தான். அப்ப அந்தத் தெரு முகனையிலெ இருந்த சிலுவைக் கல்ல நான் பார்த்த நாள் முதல் எனக்குனு உண்டான ஒரு நம்பிக்கை தான் இந்த சிலுவக்கல்லு ஜோசியம். எப்படின்னு கேளுங்க சொல்லுறேன்.

ஆமா கொஞ்ச நாள் இந்த சைக்கிள்ள ட்யூசன் போறது போயி, அடி வாங்கறதுலேருந்து தப்பிக்க வேற வழியே இல்லனு ஆனதுக்கப்பறம், நானே டுயூசன் போக ஆரம்பிச்சட்டேன். அப்படி வீட்டிலே இருந்து டுயூசன் போகும் போதெல்லாம், அந்த தெருமுகனை சிலுவையை தொட்டு நெஞ்சிலே சிலுவை போட்டிட்டு, இன்னய பொழுது அடி வாங்கம போகனும்டா சாமின்னு வேண்டிட்டு போவேன். அப்படி போனாலும் சில நேரம் அடி வாங்குவேன், சில நேரம் நல்ல நேரமா போயிடும். இதை ஒரு வழக்கமா வச்சிக்கிட்டு இருந்தேன். ஒரு நாள், அந்த சிலுவையை தொட்டுக் கும்புட்ட்டு, இன்னக்கு டீச்சர் வீட்டல இருக்கக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டு சிலுவையை போட்டுக்கிட்டேன், என்ன ஆச்சிரியம் பாருங்க அன்னக்கி, அக்கா வீட்டல இல்ல, வீடு பூட்டி இருந்தது. ஆகையால், இன்று டியூசன் இல்லை. எவ்வளவு சந்தோசம் பாருங்க!. அப்பலே இருந்து, இந்த சிலுவை ஜோசியத்தை நம்ப ஆரம்பிச்சேன். அதுக்காக, நான் நினைச்சப்பல்லாம், சரசக்க்கா வீடு புட்டி வச்சிட முடியுமா? அதனாலே இந்த ஜோசியத்தை அடிக்கடி நினச்சிக்கிறதுல்ல. ஆக எனக்குள்ளேயே ஒரு ஜோசியக்காரன் உட்கார்ந்து கொண்டிருந்தான். அத கவனமா உபயோகிச்சு, எனக்குனு ஒரு ஆனந்தத்த உண்டாக்கிட்டேன். இது ஒரு அருமையான அனுபவம். சின்ன வயசில்ல இது போல உருவாகிற அனுபவங்களே ஒரு அலாதி தான்.

2 comments:

said...

உதயகுமார்,

சின்னவயது நினைவுகளை அழகா எழுதியிருக்கீங்க.

வாழ்த்துக்கள்.

said...

மிக்க நன்றி துளசி கோபால் அவர்களே!