
முதல்ல இந்த world trade center பத்தி கொஞ்சம் சொல்லி ஆகணும்! இந்த 'உலக வர்த்தக மையம்'னு ரொம்ப பிரசித்து பெற்ற வானுயர்ந்த கட்டடம். நம்ம மெட்ராஸ்ல எப்படி 'LIC கட்டடம்' அந்த காலத்திலே படத்துக்கு படம் உயர்ந்த கட்டிடம்னு எப்படி காட்டினாங்களோ ('பட்டிகாடா பட்டணமா'ங்கிற படத்திலே நம்ம சிவாஜிக்கு இதை எல்லாம் காட்டி, ஏன் சாந்தி தியேட்டரையும் காட்டி வில்லன்ங்க உதைப்பாங்களே, அப்புறம், இவரு, 'ஏண்டா எனக்கா சாந்தி தியோட்டர் காமிக்கிறே' திரும்ப இவரு உதைக்க ரொம்ப தமாஷா இருக்குமுல்ல, அதைத்தான் சொன்னேன்!, ஏன் இப்பவும் அதவுட்டா பெரிய கட்டடம்னு சொல்லிக்க எதாவது இருக்கா என்ன இப்ப நம்ம சிங்காரச் சென்னையிலே!), அது மாதிரி இது அமெரிக்காவிலே இருக்கிற நியூயார்க் என்ற மாநகரில் ரொம்ப உயர்ந்த மாடிக் கட்டிடம்ன்னு சொல்லி ஊருக்கு வர டூரிஸ்ட்டை மேலே கூட்டி போயி காப்பி வாங்கி கொடுக்குறது ரொம்ப பிரபலம், அதாவது அந்த காலத்திலே நியூயார்க்ல கட்டின உயரமான கட்டிடம் 'எம்பெயர் ஸ்டேட் பிள்டிங்'ன்னு ஒன்னு, அதுக்கப்பறம் 1970கள்ல கட்டின ஒன்னு தான் இந்த 'WTC'ன்னு சொல்லப்படும் வோர்ல்ட் டிரேட் சென்டர்! நம்ம தீவீரவாதி தம்பிமாருங்க பிளேன்ன ஓட்டிக்கிட்டு போயி இடிச்சது என்னமோ அந்த இரண்டு உயர்ந்த கோபுரம் மாதிரி இருந்த அந்த இரண்டு டவர்களை தான், ஆனா, இந்த வோர்ல்ட் ட்ரேட் சென்டர்ன்னு சொல்லக்கூடிய இந்த கட்டிடம் இருந்த பகுதியிலே உள்ள அந்த காம்பெளக்ஸிலே இருந்த பிள்டிங்குங்க, அதாவது டவருங்க, மொத்தம் ஏழு. இடிச்சது என்னமோ இரண்டு தான், ஆனா அழிஞ்சது அத்தனையும்! மிச்சம் சொச்சம் இருந்த எல்லா பிள்டிங்கையும் அப்பறம் இடிச்சு தள்ளிட்டு, இப்ப அங்கே நினைவு மண்டபமா 'Freedom Tower' ன்னு ஒரு உயர்ந்த கட்டிடம் கட்ட எல்லா ஏற்பாடுகளும் நடந்துக்கிட்டிருக்கு!

அது மாதிரி, இப்ப நியூயார்க்கு சுத்தி பார்க்க வர்றவங்க, இந்த இடிஞ்சுப் போன காலி மைதானத்தை சுத்தி பார்த்துட்டு, நினைவிடமா, ஒரு சின்ன பூவை வாங்கி அங்கே வச்சிட்டு வர்றது வழக்கம் இப்ப. நான் கூட போன தடவை போயிருந்தப்ப, அந்த இடத்தை சுத்தி பார்த்துட்டு வந்தேன்! இந்த 'Freedom Tower' கட்டி முடிக்க இன்னும் நாலு அஞ்சு வருஷமாகும், 2011ல திறக்கிறதா உத்தேசம்! ஏன் இந்த டவர்ங்களை பிளேனை வச்சு இடிச்சாங்கங்கிறது உங்களுக்கு எல்லாம் தெரியும். அதிகமா, இதை பத்தி நிறைய டிவிங்கள்ல வந்ததாலே, முதல்ல பார்த்த அந்த இங்கிலீஷ் படம், அந்த இடிச்ச கதை இல்லை, ஆனா, கட்டிடம் இடிஞ்ச அன்னிக்கு, அந்த கட்டிடத்தில தீப்பிடிச்சதாலே, அதிலே மாட்டிக்கிட்டவங்களை காப்பாத்திரேன்னு போன தீயணைப்பு படையில் இருந்த இரண்டு பேரு, அந்த இடிபாடுகளுக்கிடையே மாட்டிகிடுவாங்க, அவங்க மாட்டிக்கிட்டவங்களை எப்படி உயிரோட மீட்கிராங்ககிரதும், அது இடிபாட்டு குவியல்கள்ல அவங்க எப்படி சிக்கிக்கிட்டு மரண அவஸ்தை பட்டு மீள்றாங்க, அவங்க குடும்பாத்தாரார் எப்படி உணர்ச்சிய மயமாவாங்க, அப்புறம் அவங்க பொளச்சி வரும் வரை துடி துடிச்சு போறாங்ககிறதை அழகா ஒரு இரண்டு மணி நேரத்துக்கு படம் புடிச்சு காட்டி இருக்காங்க, போயி பாருங்க நல்லா இருக்கும்!

அடுத்து ஹிந்திப்படம், 'Yun Hota To Kya Hota'ன்னு, இதிலே நாலு கிளைக் கதைங்க! படம் ஆரம்பிக்கிறப்ப ஒன்னும் தெரியாது! அதாவது புதுசா கல்யாணம் பண்ண ஜோடி, கல்யாணம் ஆயி முதராத்திரி முடிஞ்சு(ரொம்ப சுவாரசியமா எடுத்திருக்காங்க-:)), புருஷங்காரன், வேலைக்கு போகணும்னு உடனே அமெரிக்கா புறப்பட்டு போயிடறான், பொண்டாட்டியை அப்பறம் கூட்டுக்கிறதா! ஆனா இங்கே மாமியார், நாத்தனார் தொல்லை! இன்னொன்னு ஷேர் புரோக்கர் இரண்டு பேரு, சூழ்நிலை நிர்பந்தத் தாலே, ஒரு போலீஸ்காரனை சுட்டுக் கொண்ணுட்டு, மாட்டிக்ககூடாதுன்னு அமெரிக்கா போயிடறாங்க! போறதுக்கு முன்னே, அவன் காதலி செஞ்ச துரோகம் அப்படியே வாட்டிக்கிட்டிருக்க, அதையே நினைக்கிச்சுக்கிட்டிருக்கான்! அடுத்தது, அமெரிக்காவிலே கலை நிகழ்ச்சி நடத்துறேங்கிற பேர்ல ஆளை கடத்திர ஒரு குஜாராத்தி புரோக்கர்! அவனுக்கு 20 வருஷத்துக்கு முன்னே பழக்கமான அவன் காதலி பொண்ணை அமெரிக்கா கூட்டிக்கிட்டு போக காதலி வற்புறுத்த, அந்த பொண்ணை கூட்டிக்கிட்டு போறான்! அடுத்து அமெரிக்கா யுனிவர்சிட்டியில இடம் கிடைச்சு படிக்க வசதியில்லாத இளைஞன், தன் காதலி உதவியினாலே அமெரிக்கா போக ஆயுத்தமாகிறான்! இந்த நாலு பேரும் துரதர்ஷ்டவசமா ஏற்படும் ஒரு நிகழ்ச்சிக்காக ஒன்னாக்கூடி ஒரே நேரத்திலெ எப்படி மாண்டு போறாங்ககிறது தான் கதை!

இந்த ஷேர் புரோக்கர் முன்னாடியே அமெரிக்கா போயி World Trade Centerல இருக்கிர அவனுடய நண்பன் ஆபிஸிலே இருக்கிறான். மித்த எல்லாரும் ஒரே விமானத்திலே இந்தியாவிலே இருந்து புறப்பட்டு முதல்ல பாஸ்டன் வந்து சேர்றங்க! அடுத்த நாள் எல்லாரும் லாஸ் ஏஞ்சலஸ் போகணும்! ராத்திரி பூரா ஏர்போட்டிலே காலம் கழிச்சிட்டு அடுத்த நாள் காலையிலே போற லாஸ் ஏஞ்சலஸ் பிளைட்டை புடிப்பாங்க! இதிலே அந்த புதுசா கல்யாணம் கட்டிக்கிட்ட ஜோடியில, அந்த வொய்ஃப்பு விமான போர்டிங் பாஸ்ஸை தொலைச்சிட்டு, அந்த பிளைட்டை புடிக்காம உட்டுடறாங்க! மத்தவங்க எல்லாம் அந்த பிளைட்ல போறாங்க, கடைசியிலே அந்த பிளைட் தான் செப்டம்பர் 11ல திவிரவாதிகளால கடத்தப்பட்ட பிளைட், அது World Trade Centerல போய் மோதி, அப்படி மோதறப்ப, அந்த ஷேர் புரோக்கரும் அந்த பில்டிங்கல ஒரு ஆபிஸிலே இருக்க போயி எல்லாரும் அம்பேல்! நல்ல வேளையா அந்த புதுசா கல்யாணம் பண்ணின அம்மனி அதிர்ஷ்டவசமா, அந்த பிளைட்ல போகாதததலே பொளச்சிடறாங்க, இப்படி போகுது கதை!
சர்தான், செப்டம்பர் 11 நெருங்குது இதோ, அந்த நேரத்திலே இந்த இரண்டு படங்களும் அப்ப நடந்த அந்த தாக்குதலை பின்னணியா வச்சு வந்திருக்கு! அதுவும் நம்ம ஆளுங்களும் உலகத்திலே நடக்கும் நிகழ்ச்சிகளை கொண்டு கதை களம் அமைச்சு படம் எடுத்திருக்காங்க, பரவாயில்லை, பாராட்டக்கூடிய முயற்சி. பொதுவா, நம்ம ஊரு பக்கத்திலே நடக்கும் கதை, அதுவும் மதுரை கதை மாதிரி காதல், திமிரு, எல்லாம் தாண்டி இண்டெர்நேஷனல் லெவல்ல கதை யோசிச்சு எடுத்தா, 'அட நல்லாதான் இருக்குன்னு' போட வைக்குது! பரவாயில்லை இந்த மாதிரி கதை கரு பின்னி எடுத்தா நம்ம முன்னேற்றமடைஞ்ச மாதிரி தான். ஆனா டெக்னிகலா, கதை சொல்லும் உத்தி, சம்பங்களின் தத்ரூப பின்னணி எல்லாம் வச்சு இந்த ஹோலிவுட் தரத்துக்கு படங்கள் எப்ப வரப்போகுதோ, தெரியல்லை! பொறுத்திருந்து பார்ப்போம்!
2 comments:
தகவல்களுக்கு நன்றி.
'வெட்டேயாடூ விலயாடூ' பாத்தாச்சா?
ஒரு விமர்சனம் போட்டுத் தாக்குங்க...
அன்புடன்,
பெத்தராயுடு.
தமிழில் கமல்தான் நளதமயந்தியில் வெளிநாட்டை கதைக்களமாக வைத்து எடுத்திருக்கிறார். மற்றபடங்கள் நம் கதையை வெளிநாட்டில் எடுப்பதாகவே இருந்து வந்திருக்கிறது.
Post a Comment