நிழல்கள், இது என் வாழ்க்கையிலே மறக்க முடியாத படம், இந்த படத்தை பத்தி நாள் கணக்கா பேசிக்கிட்டு இருந்திருக்கோம் அப்ப, இது என்னோட இஞ்சினிரியங் காலேஜ் மூணாவது வருஷம் படிச்சப்ப அப்ப தீபாவளிக்கு ரிலீஸ் ஆச்சு, அப்ப பாரதிராஜா மேலே ஒரு கிறுக்கா இருந்த நேரம், ஏன்னா முத அஞ்சாறு படங்கள்ல அவரு செஞ்சு காமிச்ச வித்தைகள்ல மயங்கி போய் அவரு படம்னா முத நாள் தியேட்டர்ல போய் உட்கார்ந்துடுவேன்! அப்ப தான் பாலசந்தோரோட வறுமையின் நிறம் சிகப்பும் வந்தது, இரண்டுமே வேலையில்லா திண்டாட்டத்தை கருவா வச்சு வந்தது தான் ஆனா வ.நி.சி ஜனங்களுக்கு இந்த படத்தை விட பிடிச்சிருந்திச்சு, காரணம் ஏன்னா அதிலே கொஞ்சம் எல்லாருக்கும் தெரிஞ்ச கமல், ஸ்ரீதேவி நடிச்சிருந்தது தான், எஸ் வி சேகர், திலீப்புன்னு புதுசா ஆள போட்டு எடுத்திருந்தாலும் தெரிஞ்ச முகங்கங்கள்ங்கிறதாலே தியேட்டர்ங்கள்ல கூட்டம் அலை மோதிச்சு, ஆனா நிழல்கள் அவ்வளவா போகல்ல! ஆனா பாட்டுகள் எல்லாம் மக்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, இதிலே தான் வைரமுத்து அறிமுகம்! 'இது ஒரு பொன்மாலை பொழுது' பாட்டை இப்பையும் கேட்டா, உண்மையிலே கஞ்சா அடிச்சிட்டு எல்லாத்தை மறந்திட்டு வேற உலகத்தை நினைச்சு மருகிறவன் மாதிரி தான் உங்களுக்கு தோணும், அது வைரமுத்தோட வரிகளுக்கும் இளையராஜாவோட ம்யூசிக் கம்போசிசனுக்கும் கிடைச்ச வெற்றி! ஆனா பார்த்தீங்கன்னா இந்த படம் டெக்னிக்கல்லா ஒரு பிரில்லியெண்ட்! இந்த படத்தை சென்னைத் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு படம் எடுக்கறதுன்னா எப்படி எடுக்கணும்னு அத்தனை டிப்பார்ட்மெண்ட்லேயும் போட்டு காமிப்பாங்கன்னு என்னோட ஃபிரண்டு சொல்ல கேட்டுருக்கேன்! நம்ம ஃபிரண்டு படிச்ச நேரத்திலே தான் சுஹாசினியும் படிச்சாங்க, அந்த காலகட்டத்திலே அளப்பரை பண்ணிக்கிட்ட திரிஞ்ச அம்மணி அவங்க! அதை பத்தி வேறெ ஒரு வாட்டி அப்பறமா எழுதுறேன்! இந்த படத்தை அக்குவேறே ஆறு வேறே அலசி ஆராஞ்சி திரும்ப திரும்ப பார்த்து சிலாகிச்சிருக்கோம்!
முதல்ல அந்த டைட்டில் சீக்குவன்ஸ், அதாவது இளம் பட்டதாரிகள் பட்டம் வாங்கிட்டு அப்படியே கிராஜிவேஷன் சர்டிபிகேட்டை எடுத்துக்கிட்டு கடற்கரையிலே ஒடறமாதிரி காட்சி வரும், அதுக்கு நம்ம ராஜா பேக்ரவுண்டு ம்யூசிக் பட்டையை கிளப்பும், அப்ப ராஜா பாரதிராஜா படத்துக்குன்னா துள்ளலோட ம்யூசிக் போட்ட நேரம், வெறும் பாட்டுகள் தான் அதிகமா வெகுஜனங்களுக்கு பிடிச்சி தெரிஞ்சிருக்கும் ஆனா இந்த பேக்ரவுண்ட் ம்யூசிக் யாராவது இப்படிதான்னு சொல்லிக்கேட்டா உங்களுக்கு திருப்பிக் கேட்கப் பிடிக்கும்!
இன்னும் சில உப குறிப்புக்கள். மடை திறந்து பாடல் எஸ்.பி.பி பாடியது படத்தில் இளையராஜா பாடுவது போல் ஒரு காட்சி வரும்.
இந்தப் படம் மணிவண்ணன் கதையில் முதன்முதலாக பாரதிராஜா பண்ணியது. இப்படத்தின் தோல்வியால் ஒரு வெற்றி குடுப்பேன்னு சபதம் செய்து மணிவண்ணன் தயார் செய்த கதை "அலைகள் ஓய்வதில்லை" (குருதட்சணை??)
and indha you tube vidoes eppdi add panradhunnu enaku sonnengana konjam use ful a irukum.. en email id gkpstar@yahoo.com..or en blogil adhai comment a ga podavum..ungala padhiluku kathirukum
//மடை திறந்து பாடல் எஸ்.பி.பி பாடியது படத்தில் இளையராஜா பாடுவது போல் ஒரு காட்சி வரும்//வாங்க பிரபா, அதான் இளைய இளையராஜாவை பத்தி சொல்லி இருக்கேனே!
//இந்தப் படம் மணிவண்ணன் கதையில் முதன்முதலாக பாரதிராஜா பண்ணியது. இப்படத்தின் தோல்வியால் ஒரு வெற்றி குடுப்பேன்னு சபதம் செய்து மணிவண்ணன் தயார் செய்த கதை "அலைகள் ஓய்வதில்லை" (குருதட்சணை??)// ஆமா ஆமா, அப்ப மணிவண்ணன்கிட்டே இருந்த வெறியை கிட்டே இருந்து பார்த்தவன், நான் ஏற்கனவே எனை ஆண்ட அரிதாரத்திலே சொன்ன மாதிரி, மணிவண்ணன் எங்க சீனியரோட தோஸ்த், எங்க மெஸ்ல நிறைய நாளு எங்களோட சேர்ந்து சாப்பிட்டிருக்காரு!
//மடை திறந்து பாடல் எஸ்.பி.பி பாடியது படத்தில் இளையராஜா பாடுவது போல் ஒரு காட்சி வரும்//வாங்க பிரபா, அதான் இளைய இளையராஜாவை பத்தி சொல்லி இருக்கேனே!
//இந்தப் படம் மணிவண்ணன் கதையில் முதன்முதலாக பாரதிராஜா பண்ணியது. இப்படத்தின் தோல்வியால் ஒரு வெற்றி குடுப்பேன்னு சபதம் செய்து மணிவண்ணன் தயார் செய்த கதை "அலைகள் ஓய்வதில்லை" (குருதட்சணை??)// ஆமா ஆமா, அப்ப மணிவண்ணன்கிட்டே இருந்த வெறியை கிட்டே இருந்து பார்த்தவன், நான் ஏற்கனவே எனை ஆண்ட அரிதாரத்திலே சொன்ன மாதிரி, மணிவண்ணன் எங்க சீனியரோட தோஸ்த், எங்க மெஸ்ல நிறைய நாளு எங்களோட சேர்ந்து சாப்பிட்டிருக்காரு!
வருகைக்கு நன்றி கார்த்திக்! அப்பப்ப நம்ம ப்ளாக் பக்கம் வந்து போய்ட்டு இருங்க!
இந்த யூ ட்யூப்ல போடறது ஈஸி, முதல்ல உங்களுக்கு ஒரு அக்கவுண்டை கிரியேட் பண்ணுங்க அங்க, அப்பறம் உங்க வீடியோவை அப்லோட் பண்ணுங்க, அளவு 10 நிமிஷத்துக்குள்ள ஓடும் துண்டுப்படம், அப்பறம் ஃபைல் சைஸ் 100 MBக்கு மேலே போகக்கூடாது! பிறகு அதிலே embedded code கிடைக்கும், அதை கட் பண்ணி உங்க ப்ளாக்ல பேஸ்ட் பண்ணுங்க அவ்வளவு தான்!
ம்ம்...ம்.. அணு அணுவா ரசிக்கிறதுன்னு சொல்லுவாங்களே.. அது மாதிரி இது ஃப்ரேம் ஃப்ரேமா ரசிக்கிறதா? நல்ல ரசிகருக்கு இன்னொரு ரசிகனின் 'நேயர் விருப்பம்' - பா.ராஜாவையும், மணி ரத்தினத்தையும் ஒப்பிட்டு ஒரு பதிவு எழுதுங்களேன்.நான் அப்படி ஒன்று எழுத நெடுநாள் நினைப்பில் நாட்கள் செல்கின்றன. நானென்ன எழுத...நீங்கள் எழுதினால் நல்லா இருக்கும்.
கார்த்திக், எங்கிட்ட நிறைய வீடியோ கலெக்ஷன் இருக்கு! பிறகு கொஞ்சம் வீடியோ எடிட்டிங் மென்பொருள் வேணும், 'Virtualdub'ஐ முயற்சி பண்ணி பாருங்க, அது free! இணையத்திலே நிறைய தமிழ் படங்கள் கிடைக்கும்!
//அணு அணுவா ரசிக்கிறதுன்னு சொல்லுவாங்களே.. அது மாதிரி இது ஃப்ரேம் ஃப்ரேமா ரசிக்கிறதா? // வாங்க தருமி, அதே அதே அப்ப நான் ரசிச்சு இதையே முழு நேரமும் யோசிச்சுக்கிட்டிருந்த கால கட்டம். அப்ப நான் ரசிச்சு சிலாகிச்சதிலே ஒரு பத்து சதவீதத்தை தான் பதிவா எழுதி இருக்கேன்,ரசிச்சதை எழுதணும்னா தொடரா தான் எழுதணும். அப்பறம் ரொம்ப நாளாவே நீங்க கேட்ட அந்த மணி, பாரதியை பத்தி ஒரு க்ம்பேரிடிவ் ஸ்டடி அப்பறமும் எழுதிறேன். அதிலேபாருங்க மேம்போக்கா எழுத விரும்பலை, கொஞ்சம் எல்லா படத்திலேயும் ஃபூட்டேஜ்களை கொஞ்சம் கிளியரா அப்ஸர்வ் பண்ணி,மொத்தத்திலே கொஞ்சம் உழைக்கணும், சீக்கிரம் எழுதுறேன்!
கடந்த ஜனவரியிலேயே இந்த பதிவை படித்து விட்டாலும் கூட, இன்று தான் "மடை திறந்து " பாடலின் ஒலி வடிவத்தை கூகிளில் தேடிய போது உங்களின் போட்கேஸ்டிங் ஒலிபரப்பை முழுமமயாக தரவிறக்கம் செய்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக்க நன்றி வெளிகண்டநாதர் சார். கலக்கலா இருக்கு சார்
எங்கே நீண்ட நாட்களாக காணோம் அஞ்ஞாத வாசமா? பழைய பதிவென்றாலும் இப்போது தான் பார்க்கிறேன், அருமையாக இருக்கிறது. நான் சில பழைய படங்களைப்பார்க்கும் போது அட அந்த காலத்தில் இவர் கூட இப்படிலாம் எடுத்திருக்கிறாரே என ஆச்சரியப்படுவேன் ,அப்படி பட்ட ஒரு படம் தான் நிழல்கள் நான் பெரும்பாலும் நினைத்தது போலவே நீங்களும் ரசித்து எழுதியுள்ளீர்கள், அதுவும் அந்த சந்திர சேகர் , ராஜாவின் பிரதி போல வருவது.
மடை திறந்து பாடலை உங்களது போட்கேஸ்டிங்கிலிருந்து "cut" செய்து தனி mp3 கோப்பாக்கி,இது வரை 100 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். நண்பர்களுக்கும் மின்னஞ்சலில் அனுப்பியாகிவ்ட்டது. (உங்ளது போட்கேஸ்டிங் லின்கும் தான்) மீண்டும் நன்றி
நி௯ழல்கள் - ஒரு அற்புதமான படம் தான், அருமையாக எழுதியுள்ளீர்கள், நீங்கள் எழுதியிருப்பது போல் இறுதி கட்ட காட்சி சரியான சொதப்பல், நிழல்கள் ரவிக்கும் ரோகினிக்கும் காதல் மலரும் காட்சி மிகவும் சுவாரசியமானது, வழக்கமாக தவறாக புரிந்து கொண்டு பிறகு நல்லவன் என்றதும் அவன் மீது காதல் மலர்வதும் தமிழ் சினிமாவில் காதல் மலரும் காரணிகள் ஆகும், மௌன ராகம் கார்த்திக் ரேவதி காதல் கூட இந்த வகையை சேர்ந்தது தான், ராஜ பார்வை படத்தில் மின் தூக்கியில் கண் தெரியாத கமலை அரை குறை ஆடை அணிந்திருந்த மாதவி தவறாக தன்னை தான் நோக்குகிறான் என்று நினைத்து கூச்சலிட ஒரு கூட்டம் கமலை அடிக்க கமல் கண்ணிலிருந்து கீழே விழுந்த கண்ணாடியை தேடுவதற்கும் மின் தூக்கி மூடுவதற்கும் சரியாக இருக்கும், மின் தூக்கியின் வெ௯ளியே இருந்து இதை கவனித்து விட அங்கு மலர்கிறது அழகிய கவிதை அல்லது காதல், இதே வகையை சேர்ந்தது தான் நிழல்களின் காதலும், அழகிய கவிதை - நாகூர் இஸ்மாயில்
25 comments:
உபயோகமாக இருந்தது ;-)
இன்னும் சில உப குறிப்புக்கள். மடை திறந்து பாடல் எஸ்.பி.பி பாடியது படத்தில் இளையராஜா பாடுவது போல் ஒரு காட்சி வரும்.
இந்தப் படம் மணிவண்ணன் கதையில் முதன்முதலாக பாரதிராஜா பண்ணியது. இப்படத்தின் தோல்வியால் ஒரு வெற்றி குடுப்பேன்னு சபதம் செய்து மணிவண்ணன் தயார் செய்த கதை "அலைகள் ஓய்வதில்லை" (குருதட்சணை??)
hi sir eppadi irukeenga...romba nala achu unga blog pakkm vandhu..
nalla eludhi irukeenga ,..nilalgal enakum romba pidicha padam..but manivannanoda kadhainu ippo than theriyum..
valthukal
and indha you tube vidoes eppdi add panradhunnu enaku sonnengana konjam use ful a irukum.. en email id gkpstar@yahoo.com..or en blogil adhai comment a ga podavum..ungala padhiluku kathirukum
karthick
//மடை திறந்து பாடல் எஸ்.பி.பி பாடியது படத்தில் இளையராஜா பாடுவது போல் ஒரு காட்சி வரும்//வாங்க பிரபா, அதான் இளைய இளையராஜாவை பத்தி சொல்லி இருக்கேனே!
//இந்தப் படம் மணிவண்ணன் கதையில் முதன்முதலாக பாரதிராஜா பண்ணியது. இப்படத்தின் தோல்வியால் ஒரு வெற்றி குடுப்பேன்னு சபதம் செய்து மணிவண்ணன் தயார் செய்த கதை "அலைகள் ஓய்வதில்லை" (குருதட்சணை??)// ஆமா ஆமா, அப்ப மணிவண்ணன்கிட்டே இருந்த வெறியை கிட்டே இருந்து பார்த்தவன், நான் ஏற்கனவே எனை ஆண்ட அரிதாரத்திலே சொன்ன மாதிரி, மணிவண்ணன் எங்க சீனியரோட தோஸ்த், எங்க மெஸ்ல நிறைய நாளு எங்களோட சேர்ந்து சாப்பிட்டிருக்காரு!
//மடை திறந்து பாடல் எஸ்.பி.பி பாடியது படத்தில் இளையராஜா பாடுவது போல் ஒரு காட்சி வரும்//வாங்க பிரபா, அதான் இளைய இளையராஜாவை பத்தி சொல்லி இருக்கேனே!
//இந்தப் படம் மணிவண்ணன் கதையில் முதன்முதலாக பாரதிராஜா பண்ணியது. இப்படத்தின் தோல்வியால் ஒரு வெற்றி குடுப்பேன்னு சபதம் செய்து மணிவண்ணன் தயார் செய்த கதை "அலைகள் ஓய்வதில்லை" (குருதட்சணை??)// ஆமா ஆமா, அப்ப மணிவண்ணன்கிட்டே இருந்த வெறியை கிட்டே இருந்து பார்த்தவன், நான் ஏற்கனவே எனை ஆண்ட அரிதாரத்திலே சொன்ன மாதிரி, மணிவண்ணன் எங்க சீனியரோட தோஸ்த், எங்க மெஸ்ல நிறைய நாளு எங்களோட சேர்ந்து சாப்பிட்டிருக்காரு!
நல்லதொரு நினைவுகூர்தல்...நன்றி
வருகைக்கு நன்றி கார்த்திக்! அப்பப்ப நம்ம ப்ளாக் பக்கம் வந்து போய்ட்டு இருங்க!
இந்த யூ ட்யூப்ல போடறது ஈஸி, முதல்ல உங்களுக்கு ஒரு அக்கவுண்டை கிரியேட் பண்ணுங்க அங்க, அப்பறம் உங்க வீடியோவை அப்லோட் பண்ணுங்க, அளவு 10 நிமிஷத்துக்குள்ள ஓடும் துண்டுப்படம், அப்பறம் ஃபைல் சைஸ் 100 MBக்கு மேலே போகக்கூடாது! பிறகு அதிலே embedded code கிடைக்கும், அதை கட் பண்ணி உங்க ப்ளாக்ல பேஸ்ட் பண்ணுங்க அவ்வளவு தான்!
வருகைக்கு நன்றி முகில்!
நல்லா எழுதி இருக்கீங்க. இந்த படத்தோட பாடல்களை எப்ப கேட்டாலும் இனிமைதான்...
அது சரி அந்த சுகாசினி matter எப்ப எழுதப்போறீங்க, ஆவலோட எதிர் பார்க்கிறோம்:-)
வருகைக்கு நன்றி திருமாவளவன்!
//அது சரி அந்த சுகாசினி matter எப்ப எழுதப்போறீங்க, ஆவலோட எதிர் பார்க்கிறோம்:-)//ரொம்ப ஆவலா இருக்கிங்கீங்க சீக்கிரமே பதிவு போட்டுடுவோம்-;)
இந்த படத்தின் பாடல்கள் இன்றும் கிறங்கடிக்கும்.
என்ன சொல்றதுன்னே தெரியலை .... அருமையா எழுதியிருக்கீங்க ....
//இந்த படத்தின் பாடல்கள் இன்றும் கிறங்கடிக்கும// வருகைக்கு நன்றி குமார், இப்பன்னு இல்லை எப்பவுமே!
வாங்க ஊசி! உங்களுக்கு பிடிச்ச படமா இது? அப்படின்னா நீங்க ரசிச்ச காட்சியை பத்தி சொல்லுங்களேன்!
adhu ok sir aana enkite endha videos m illai..how did u get the nilagal filsm videos??
ம்ம்...ம்..
அணு அணுவா ரசிக்கிறதுன்னு சொல்லுவாங்களே.. அது மாதிரி இது ஃப்ரேம் ஃப்ரேமா ரசிக்கிறதா? நல்ல ரசிகருக்கு இன்னொரு ரசிகனின் 'நேயர் விருப்பம்' - பா.ராஜாவையும், மணி ரத்தினத்தையும் ஒப்பிட்டு ஒரு பதிவு எழுதுங்களேன்.நான் அப்படி ஒன்று எழுத நெடுநாள் நினைப்பில் நாட்கள் செல்கின்றன. நானென்ன எழுத...நீங்கள் எழுதினால் நல்லா இருக்கும்.
கார்த்திக், எங்கிட்ட நிறைய வீடியோ கலெக்ஷன் இருக்கு! பிறகு கொஞ்சம் வீடியோ எடிட்டிங் மென்பொருள் வேணும், 'Virtualdub'ஐ முயற்சி பண்ணி பாருங்க, அது free! இணையத்திலே நிறைய தமிழ் படங்கள் கிடைக்கும்!
//அணு அணுவா ரசிக்கிறதுன்னு சொல்லுவாங்களே.. அது மாதிரி இது ஃப்ரேம் ஃப்ரேமா ரசிக்கிறதா? // வாங்க தருமி, அதே அதே அப்ப நான் ரசிச்சு இதையே முழு நேரமும் யோசிச்சுக்கிட்டிருந்த கால கட்டம். அப்ப நான் ரசிச்சு சிலாகிச்சதிலே ஒரு பத்து சதவீதத்தை தான் பதிவா எழுதி இருக்கேன்,ரசிச்சதை எழுதணும்னா தொடரா தான் எழுதணும். அப்பறம் ரொம்ப நாளாவே நீங்க கேட்ட அந்த மணி, பாரதியை பத்தி ஒரு க்ம்பேரிடிவ் ஸ்டடி அப்பறமும் எழுதிறேன். அதிலேபாருங்க மேம்போக்கா எழுத விரும்பலை, கொஞ்சம் எல்லா படத்திலேயும் ஃபூட்டேஜ்களை கொஞ்சம் கிளியரா அப்ஸர்வ் பண்ணி,மொத்தத்திலே கொஞ்சம் உழைக்கணும், சீக்கிரம் எழுதுறேன்!
கடந்த ஜனவரியிலேயே இந்த பதிவை படித்து விட்டாலும் கூட, இன்று தான் "மடை திறந்து " பாடலின் ஒலி வடிவத்தை கூகிளில் தேடிய போது உங்களின் போட்கேஸ்டிங் ஒலிபரப்பை முழுமமயாக தரவிறக்கம் செய்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக்க நன்றி வெளிகண்டநாதர் சார். கலக்கலா இருக்கு சார்
திரைப்பட ஆர்வலர்களுக்கு உதவிகரமாக இருக்கின்ற அளவுக்கு ரீல் பை ரீலாக விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள் ஸார்..
இளையராஜா-வைரமுத்து-பாரதிராஜா கூட்டணி என்பது தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைத்த பொற்காலம்..
மீண்டும் ஏங்க வைக்கும் பாடல்களை தந்த இந்தக் கூட்டணி மீண்டும் இணைய வேண்டும்.. தமிழுக்காக..
இவ்வளவு பொறுமையாக இவ்வளவு எழுதியிருக்கும் தங்களது கைகளுக்கு எனது அன்பு முத்தங்கள்..
வெ.நாதர்,
எங்கே நீண்ட நாட்களாக காணோம் அஞ்ஞாத வாசமா? பழைய பதிவென்றாலும் இப்போது தான் பார்க்கிறேன், அருமையாக இருக்கிறது. நான் சில பழைய படங்களைப்பார்க்கும் போது அட அந்த காலத்தில் இவர் கூட இப்படிலாம் எடுத்திருக்கிறாரே என ஆச்சரியப்படுவேன் ,அப்படி பட்ட ஒரு படம் தான் நிழல்கள் நான் பெரும்பாலும் நினைத்தது போலவே நீங்களும் ரசித்து எழுதியுள்ளீர்கள், அதுவும் அந்த சந்திர சேகர் , ராஜாவின் பிரதி போல வருவது.
உன் கால காட்டு சார்.
அடேங்கப்பா பின்னியிருக்க சாரு.
:)
உங்கள் ரசனையே ரசிக்க வைககிறது
அருமை அருமை
மடை திறந்து பாடலை உங்களது போட்கேஸ்டிங்கிலிருந்து "cut" செய்து தனி mp3 கோப்பாக்கி,இது வரை 100 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். நண்பர்களுக்கும் மின்னஞ்சலில் அனுப்பியாகிவ்ட்டது.
(உங்ளது போட்கேஸ்டிங் லின்கும் தான்) மீண்டும் நன்றி
நி௯ழல்கள் - ஒரு அற்புதமான படம் தான், அருமையாக எழுதியுள்ளீர்கள், நீங்கள் எழுதியிருப்பது போல் இறுதி கட்ட காட்சி சரியான சொதப்பல், நிழல்கள் ரவிக்கும் ரோகினிக்கும் காதல் மலரும் காட்சி மிகவும் சுவாரசியமானது, வழக்கமாக தவறாக புரிந்து கொண்டு பிறகு நல்லவன் என்றதும் அவன் மீது காதல் மலர்வதும் தமிழ் சினிமாவில் காதல் மலரும் காரணிகள் ஆகும், மௌன ராகம் கார்த்திக் ரேவதி காதல் கூட இந்த வகையை சேர்ந்தது தான், ராஜ பார்வை படத்தில் மின் தூக்கியில் கண் தெரியாத கமலை அரை குறை ஆடை அணிந்திருந்த மாதவி தவறாக தன்னை தான் நோக்குகிறான் என்று நினைத்து கூச்சலிட ஒரு கூட்டம் கமலை அடிக்க கமல் கண்ணிலிருந்து கீழே விழுந்த கண்ணாடியை தேடுவதற்கும் மின் தூக்கி மூடுவதற்கும் சரியாக இருக்கும், மின் தூக்கியின் வெ௯ளியே இருந்து இதை கவனித்து விட அங்கு மலர்கிறது அழகிய கவிதை அல்லது காதல், இதே வகையை சேர்ந்தது தான் நிழல்களின் காதலும், அழகிய கவிதை - நாகூர் இஸ்மாயில்
வெ.நா,
என்ன நீண்ட நாட்களாகக் காணவில்லை? அஞ்ஞாதவாசமோ?!
மீண்டும் உங்களைத் தமிழ்மணத்தில் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
மாதத்திற்கு ஒரு பதிவாவது எழுதுங்கள்.
Post a Comment