Thursday, April 20, 2006

எனை ஆண்ட அரிதாரம் - பதிமூன்றாம் பகுதி

என்ன திடீர்னு அரிதாரத் தொடரை நிறுத்திட்டீங்கன்னு நண்பர்கள்கிட்ட இருந்து கடிதம் வந்ததாலே, திரும்ப கொஞ்சம் அரிதாரம் பூசுவோமுன்னு தான் இந்த பாகம். நாங்க நாடகமே வாழ்க்கைன்னு காலேஜ்ல காலம் கழிச்சப்ப, சில வில்லத்தனமான காட்சிகளும் நடந்து அரங்கேறிச்சு! எப்படின்னு கேளுங்க. நாங்க மூணாவது வருஷம் படிச்சப்ப, அந்த வருஷம் எங்க காலேஜ்குள்ளேயே இருக்கும் அஞ்சு வருஷ ஜனங்களுக்குண்டான, அதாங்க 'Intera College Dramatic Competition' ஏதோ காரணங்களால நடத்தமுடியாம, அந்த வருஷம் சும்மா வெளிக் காலேஜ்ங்களுக்குத்தான் Competion க்கு நாடகம் எடுத்து போயி பரிசெல்லாம் வாங்கி வந்தோம். அப்ப எங்க குரூப்ல இல்லாத அம்பேத்கார் கோஷ்டி பையன், எங்க யியர் தான், தான் 'நடிக்க ஆர்வம இருக்கேன், நானும் உங்க நாடகத்திலே நடிக்கிறேன், ஏதாவது ரோல் கொடுங்கன்னு கேட்டு வந்தான்! அவன் பேரு வேணுகிருஷ்ணன். நானும் சரிடான்னு அவனுக்கு ஒரு டாக்டர் ரோல் கொடுத்து நடிக்க வச்சேன். நல்லாவும் நடிச்சான். சரி, அப்ப அப்ப இனி நாடகம் போடும் போதெல்லாம் உனக்கும் ரோலு கொடுக்கிறேன்னு சொல்லி அவனையும் வச்சிருந்தோம். என்ன எங்ககூட சரியா ஒட்ட மாட்டான், ஆனா நாடக ரிகர்சல் எல்லாம் சரியா வந்து ஒழுங்கா அமைதியா இருந்தான், ஆனா அவன் பண்ண போற வில்லங்கம் என்னான்னு எங்களுக்கு அப்ப தெரியாது!

அடுத்த வருஷம், நாங்க ஃபோர்த் யியர், அப்ப டிராமா கிளப்புக்கு செக்ரெக்டரி ஃபைனல் யியர்லருந்தும் ஜாயின்ட் செக்ரெக்டரி எங்க யியர்லருந்தும் போடனும். பொதுவா, இந்த கிளப் ஸ்டாப் அட்வைசர், முன்னாடியே தெரியும், யாரை போடனும்னு, நாமினேஷன பேசிஸ் தான். ஃபைனல் யியர்ல ரங்கசாமின்னு ஒருத்தரை செக்ரெட்ரியா போட்டார், அவரும் ஸ்கிட் எல்லாம் தமாஷா போட்டு பேரு வாங்கினவர். எங்க யியர்ல, ஸ்டாப் அட்வைசர் என்னைதான் அப்ரோச் பண்ணுனார், ஏன்னா நான் தான் பாப்புலர் அப்ப, ஆனா எங்கூட முத வருஷத்திலே இருந்தே நடிச்சுக்கிட்டு வர கதிரேஷன், அதான் எனக்கும் டூயட் வேணும்னு சண்டைபோட்டு டூயட் பாட்டு கேட்டு வாங்கி நடிச்சவன். கொஞ்சம் கதை, கவிதை எல்லாம் நல்லா எழுதுவான்! அப்புறம் அவனும் ரங்கசாமியும் தேனீ பக்கம், அதனால ரெண்டு பேரும் தோஸ்த், ரங்கசாமி செக்ரெக்டரி ஆனோன, ஜாயின்ட் செக்ரெக்டரிக்கு கதிரேஷனை நாமினேட்டு பண்ணி ரெக்மெண்ட் பண்ணினான் ஸ்டாப் அட்வைசர்கிட்ட, அவரும் என்ன கூப்பிட்டு என்னப்பா, உன்னை தான் ஜாயின்ட் செக்ரெக்டரியா போடலாமுன்னு பார்க்கிறேன், ஆனா செக்ரெடரி, வேற ஒருத்தரை சொல்றாரே, அப்படின்னு எங்கிட்ட கேட்டாரு. நானும், 'சார், ஃபைனல் இயர்ல நான் செக்ரெக்டரி ஆயிக்கிறேன், நிறைய நிகழ்ச்சிகள்லாம் நடத்தி ரொம்ப பெருஷா செய்யனும், செக்ரெட்ரியா இருந்தா தான் சுதந்திரமா நினைச்ச மாதிரி செய்யலாம், இந்த வருஷம் வேணும்னா, கதிரேஷனையே ஜாயின்ட் செக்ரெக்டரியா போட்டுடுங்க, ஆனாலும் நானே மன்றத்து வேலை எல்லாத்தையும் செய்றேன்' சொல்லிட்டேன்.

நாடக மன்றத்தை பொருத்தவரை, நான் முதவருஷத்திலேருந்தே, என் சீனியர் செக்ரெக்டரிங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். அதாவது நாடக மேடை அலங்காரம், அப்புறம் கஸ்ட்டா ஆர்டிஸ்ட்ங்களை, போட்டிக்கு நீதிபதிகளை, சின்னதா டான்ஸ் ஆட குட்டி பாப்பாங்க எல்லாம் கூட்டிட்டு வரது போறது எல்லா விஷயங்களும் எனக்கு அத்துபடி. இந்த புதுசான செக்ரெக்டரி ரங்கசாமியோ, இது வரை மன்ற வேலைகள் எதுவும் செஞ்சது கிடையாது, நம்ம கதிரேஷனும், அப்ப அப்ப வந்து வேலை செய்வான், ஆனா சரியான் டுபாக்கூர் ஆளு, திடீர்னு நடுவிலே எல்லாத்தையும் உட்டுபுட்டு ஓடி விடுவான், சரியா வேலை செய்யாம எங்க சீனியர்ஸ்கிட்ட திட்டு வாங்குவான், சில சமயம் எங்க சீனியர் செக்ரெக்டரி ஆறுமுகம் அவனை துரத்திவிட்டுவிடுவார். அதனால ரங்கசாமிக்கு நல்லா தெரியும் கதிரேஷனை வச்சு எந்த வேலையும் பண்ண முடியாது, தனக்கும் அவ்வளவு அனுபவம் பத்தாதுன்னு! அதனால என்னோட ஆதரவு வேணும்னு எப்பவும் அனுசரனையா, அதாவது என்னை எப்பவும் தூக்கி வச்சே நடத்தி வந்தாரு. இம்டீயட் சீனியர் இல்லயா, அப்ப அப்ப உள்ளுக்குள்ள புகஞ்சுக்கிட்டும் இருந்தாரு, 'என்ன இவனுக்கு காலேஜ்ல இவ்வளவு வாய்ஸான்னு" ஏன்னா, அதிக எஸ்டிமேட் கொடுத்து, பணம் சாங்ஷன் பண்றது எல்லாம் குதிரை கொம்பு எங்க காலேஜ் அபீஸ் சூப்ரெண்டென்ட் கிட்ட, ஆனா நம்ம மேல அவருக்கு எப்பவும் ஒரு தனிபாசம், அதனால நான் ரொம்ப ஈஸியா சாங்ஷன் வாங்கிட்டு வந்துடுவேன்!, அதையும் இரண்டு மூணு தடவை பார்த்தாரு இந்த புது செக்ரெக்டரி. வழக்கம் போல அந்த வருஷம் தொடங்கி சில நிகழ்ச்சிகள்ல நான் தான் எடுத்து எல்லா வேலையும் செஞ்சுக்கிட்டு இருந்தேன், அதிலேயே புது செக்ரெக்டரியும் நிறைய கத்துக்கிட்டார்.

அப்ப எந்த காலேஜ்க்கு எந்த டிராமா கொண்டு போகணும், அப்புறம் யாரு நாடக் போட்டியில கலந்துக்கனும் அப்படின்னு மொத்த டிஸிசன் பவரும் அப்ப நம்ம கையில தான். ஸ்டாப் அட்வைசரும் செக்ரெக்டரிக்கிட்ட என்கிட்ட கேட்டுக்க சொல்லுவாரு. அப்பதான் நம்ம கதிரேஷன் நமக்கு எதிரியானது! சரி நம்ம ஃபிரண்டு, நமக்கு என்ன இடைஞ்சலாவா இருக்க போறான்னு நினைச்சப்ப, தேவையில்லாம பாலிக்டிஸ் பண்ணுவான். நாடகம் நாங்க எழுதி வெளிகாலேஜ்க்கு எடுத்துட்டு போனாலும், அங்க டைரக்ஷன் யாருன்னு ரெஜிஸ்டர் பண்றப்ப அவன் பேரைதான் எழுதி அனுப்பிச்சிட்டான், அதுக்கு நம்ம செக்ரெக்டரியும் சப்போர்ட்டு! அதுவும் இல்லாம நாங்க போட்ட டிராமாவுக்கு, சிறந்த இயக்குனர்க்கான பரிசு அந்த Competitionல கிடைச்சது அதையும் அவன் வாங்கிகிட்டு போனதை பார்த்து எங்க குரூப் மொத்தமும் குமுறுச்சு! சரி பொறுத்துக்கங்கடான்னு எல்லாத்தையும் அடக்கிட்டு சமாளிச்சு வந்தேன். அப்ப தான் அந்த வருஷத்துக்கான 'Intera College Dramatic Competition' அறிவிச்சப்ப, நம்ம முருகவேள் எழுதிய நாடகம், பேரு 'தொலைவில்' ன்னு, அதை போடலாமுன்னு எங்க வருஷபசங்க நினைச்சு வச்சிருந்தப்ப, வந்தது இடி!

அந்த வருஷத்துகான் அந்த Competion க்கு நாடகம் கொடுக்க சொல்லி நோட்டீஸ் போட்டோம், எல்லா யியர்லருந்தும் நாடக 'Entry' வரும், அதில ஒன்னுக்கு மேலே 'Entry' வந்தா, பரீசலிச்சு நல்ல நாடகங்களை செலெக்ட் பண்றது பெரும்பாலும் என் வேலைதான். மத்த யியர்களுக்கு இப்படி, ஆனா எங்க யியர்ல, நான் தான் எப்பவும் எழுதுவேங்கிறதாலே யாரும்'Entry' கொடுக்கமாட்டாங்க, ஏன்னா எல்லாருக்குமே தெரியும் நான் எழுதி போடற நாடகங்களுக்கு எப்பவுமே அட்லீஸ்ட் ரெண்டு பரிசு கேரெண்டின்னு, அதனால எப்பவுமே யாரும் எனக்கு எதிரா, போட்டியா 'Entry' கொடுக்க மாட்டாங்க. அப்படியே கொடுக்க விருப்ப பட்ட எங்கிட்ட வந்து பேசுவாங்க, நானே அவங்க டிராமாவை எடுத்து அதில எதும் மாற்றம் செய்றதுன்னா செஞ்சு போடுவோம். அப்படிதான் முருகவேள் நாடகத்தை எடுத்து போடலாம்னு இருந்தோம்! அப்ப தான் போன வருஷ நம்ம நாடகத்திலே நடிச்சாரே டாக்டரா, அந்த அம்பேத்கார் கோஷ்டி, தனியா ஒரு நாடகம் எழுதி செக்ரெக்டரிகிட்ட கொடுத்திட்டான்! அதையும் நம்ம கதிரேஷனும் அந்த செக்ரெக்டரியும் செலக்ட் பண்ணிட்டாங்க, எங்கிட்ட கூட ஒரு வார்த்தை கேட்காம!
வந்ததே கோபம் எங்க குரூப்புக்கு!, எல்லாம் கதிரேஷனை புடி புடின்னு புடிச்சிட்டானுங்க! பிறகு சரி விடுங்கடான்னு, செக்ரெக்டரிக்கிட்ட பேசினேன், அவரும், நான் என்ன பண்றது உங்க 'Entry' வரதுக்கு முன்னே அவங்க கொடுத்திட்டாங்க, நானு அவ்வளவு தான்னும் செலெக்ட் பண்ணிட்டேன்னார். நான் சொன்னேன், 'நான் தான் மத்த வருஷ நாடகமெல்லாம் பரீசிலனை பண்ணிக்கிட்டிருக்கேன்னே,எப்படி என்ன கேட்காமா செஞ்சீங்கன்னு' ( அந்த டாகடர் எழுதி எங்கிட்ட கொண்டாந்து கொடுத்திருந்தா, அதை வகையா மாத்தி நல்லா எடுத்துட்டு போய் அரங்கேற்றம் பண்ணி இருப்பேன், ஆனா இது நம்ம கதிரேஷன் பாலிடிக்ஸ்ன்னு அப்புறம் தான் தெரிய வந்துச்சு!) அப்பறம் அவரு சமாதானமா, சரி வேணுமுன்னா உங்க நாடகத்தை கெளரவ அரேங்கற்றமா செய்யுங்க, ஆனா 'Competition'ல அவங்க நாடகம் வரட்டும்னுட்டாரு. நான் சொன்னேன் , இது எங்க யியருக்குள்ள பாலிடிக்ஸ் வளர தோதுவா போயிடும், அதனால நம்ம பரிசீலனை பண்றமாதிரி செஞ்சு, நாடகத்தை மாத்துவோமுன்னு சொன்னேன்! அந்த நாடகத்தை வேண்ணா அவங்க கெளரவ நாடகமா போடட்டும், நம்மலும் அதுக்கு ஒரு ஆறுதல் பரிசு எதும் கொடுத்திடுவோமுன்னு! அதுக்கு செக்ரெக்டரியும் முதநாள் ராத்திரி சரின்னார். நடுவில நம்ம கதிரேஷன் என்ன பாலிடிக்ஸ் பண்ணுனானோ தெரியல்லை, அடுத்த நாளு முடியாதுன்னுட்டாரு! போட்டிக்கு உங்க நாடகத்தை போட முடியாது அதை கெளரவ அரேங்கற்றம் பண்ணுங்கன்னு!

வருஷா வருஷம் நாடக போற எங்க குரூப் பசங்க அப்படியே இடிஞ்சு போயிட்டானுங்க, சரி இந்த நாடகத்தை நம்ம போட்டிக்கு போடவேணாம், ஆனா இது மாதிரி இந்த காலேஜ்ல இத்தனை வருஷத்தில போடலன்னு எல்லாரும் மூக்கிலயும் விரலை வைப்போமுன்னு பேசி,அதை எவ்வளவு 'Professional' போடமுடியுமோ, அவ்வளவு 'Professional' போட்டு கலக்கிட்டோம், அதுக்காக நாங்க எடுத்துகிட்ட சிரமங்கங்கள் எக்கசக்கம். எதுக்கு சொல்ல வரேன்னா, இந்த பாலிடிக்ஸ் எல்லா இடத்திலேயும் இருக்கிற ஒன்னு! மனுஷ ஜன்மங்கன்னு கூட்டம் எங்கெல்லாம் இருக்கோ, அங்கெல்லாம் இது இருக்கும், இது ஒரு அடிப்படை நியதி! அந்த நியதியலே, நான் எவ்வளவு ஈஸியா, அடுத்த வருஷம் செக்ரெக்டரி ஆயி நல்ல பெரிசா எதை எதையோ செய்யனும்னு கனவுக் கோட்டை கட்டி வச்சிருந்தோன்னோ அதில எல்லாம் இடி விழுந்த மாதிரி அந்த செக்ரெக்டரி ஆக நாம் பட்ட சிரமக்கதை இருக்கே, அது பெரியகதை, அதில என்ன வில்லங்கம் வந்தந்துன்னு அடுத்த பதிவிலே பார்க்கலாமா?

6 comments:

said...

அரிதாரம் கேட்ட மக்களே! யாரும் வந்து படிக்கலையா?

said...

This blog put me back to my college days.

I think it was in my 3rd year (1996), I staged a play based on Amaidipadai-Sathayaraj (Because I am from Coimbatore, so I am familiar with Coimbatore slang), it was well received but the Management got angry with me (because it had some adult substance. Unfortunate thing was, I did not write the play, but it was my friend) and they put stamp on my lab-practical exam.

On my final year, I did not attend the college day function. (To save my skin).

The very sad part is, my friend who wrote the play, died in an accident, two years ago.

said...

I am really sorry for your friend, Sivabalana!

said...

வெளிகண்ட நாதரே, இந்த போட்டோவில் நீங்க எங்கே இருக்கிங்க?

said...

சிவா, போட்டோ சும்மா, அதிலை போய் என்னை தேடிறீங்க! அது பதிவை கொஞ்சம் ஜோடனையா போடணும்னு போட்டது-:)

said...

அரிதாரம் படிச்சுட்டேன் சார். :-) கல்லூரிக் காலத்துல நல்லா அரசியல் அனுபவம் எல்லாம் கிடைச்சிருக்கு உங்களுக்கு. நானெல்லாம் இந்த அரசியல வேலைக்கு வந்த பின்னாடி தான் அனுபவிக்கத் தொடங்கினேன். :-)