உலக உஷ்ணத்தை தான் குளோபல் வார்மிங் ('Global Warming')ன்னு சொல்றது! இதை பத்தி தெக்கிட்டான் ஏற்கனவே கொஞ்சம் சொல்லி இருந்தாரு அவரு பதிவான '*குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா?' விலே. ஆனா உலகம் சூடாவறதும் குளிர்ந்துவிடுவதும் பல வருஷங்களா தொன்று தொட்டு நடக்கும் ஒரு நிகழ்ச்சி, இதிலே என்னா இருக்கு, இதெல்லாம் சும்மா வெட்டிக்கதைன்னு சொல்லி ஒதுக்கிற சில கும்பலுங்க உண்டு. அதுக்கு பதிலு சரியா சொல்லுறாரு அந்த 'Al Gore'! சரி இது எப்படி உஷ்ணமாகுதுன்னு தெரியாதவங்களுக்கு, எப்படின்னு கீழே பார்ப்போம்!
உலகப்பந்தை சுற்றி ஒரு வளையம் போல இருப்பது தான் காற்றுவெளி மண்டலம், அதாவது 'atmoshphere'ன்னு ஆங்கிலத்திலே சொல்லுவாங்க. இதிலே கொஞ்சம் போல இருக்கிர கரிஅமில வாயுவாலதான் நமக்கு ராத்திரியிலேயும் கொஞ்சம் வெப்பமா, மிதமா இருக்க வைக்குது. இந்த கரிஅமிலவாயு அதிகமாகிறதும் குறையிறதும் ஒரு நிகழ்ச்சி, ஆனா சராசரி அளவு இப்ப சில வருஷங்களா அதிகமாயிட்டு வருது! அது பூமியின் கடந்த பனிவயதின் போது 180 ppm (இந்த ppm ங்க்றது ஒரு அளவு) அதுவே கொஞ்சம் பனிபாறைகள் உருகி கடல் கலந்து, நம்ம வளர்ந்த உலகமாகுமுன் 280 ppm ஆகி போச்சு. இந்த 280 ppm அளவு நாம் சுகமா இருக்க, அதாவது அதிக வெப்பமும் இல்லாம, குளிரும் இல்லாம மிதமா இருக்க செய்ய, ஆனா நம்ம தொழிற்புரட்சி செஞ்சு, அதை 381 ppm க்கு உயர்த்திட்டோம்! அப்படி உயர்த்தினது உயர்ந்துக்கிட்டே தான் இருக்கேவொழிய குறைய மாட்டேங்கிது, அதுனால இந்த ஒரு 20 வருஷமா, இது வரை பார்க்காத வெய்யிலு மண்டையை பொளக்குது இப்ப! அதுவும் போன வருஷம் ஆந்திராவிலே ராமகுண்டத்திலே 50oC மேலே, இதுக்கெல்லாம் காரணம் இந்த கரிஅமில மற்றும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் தான்!

இதிலே ரொம்ப கஷ்டமான ஒன்னு என்னான்னா, துருவப்பிரதேஷத்திலே இருக்கிற ஐஸ்ங்க எல்லாம் கரையறது தான். அதாவது ஆர்டிக், அண்டார்டிக்ல இருக்கும் பனிபாறைகள் உருகுவது தான். இதுனால புண்ணியம் என்னான்னா, சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் பலவற்றை திருப்பி அனுப்பிச்சிடும் இந்த பனிபாறைகள், ஆனா கடல் தண்ணி அப்படியே கிரகிச்சு, உஷ்ணமாக்கிடும் அது தான் காரணம்! இந்த கரி அமில வாய்வுகளால் சூழப்பட்ட அந்த காற்று மண்டலம், அளவா கரிஅமில வாய்வு இருந்தா, நான் மேலே சொன்ன மாதிரி சூரியக்கதிர்களை திருப்பி அனுப்பிச்சிடும், ஜாஸ்தியான, அந்த ஒளிக்கதிர்களால பூமியின் பரப்பிலே அடக்கி உஷ்ணம் தான். இப்ப தெரியுதா எப்படி பூமி உஷ்ணமாகுதுன்னு!
நீங்க எல்லாம் படிச்சிருப்பீங்க, இந்த கரிஅமில வாயுவை நம்மை சுவாசத்திலே வெளிவிடுறோம் அதை தாவரங்கள் சுவாசிக்கதுன்னு, அப்புறம் என்னா அது சுவாசிச்சா எல்லாம் குறஞ்சிடாதான்னு! எல்லாம் சரிதான், வெறும் மனுஷன் விட்டா பரவாயில்லையே, நாம போட்டு எரிச்சு வெளியிடுறோமே, அதான் நமது வாகனங்கள், தொழிற்சாலைகள், மற்றும் வெளியேறும் கழிவு வாய்கள் தான் இந்த கரிஅமில வாயு காற்று மண்டலத்திலே கூடக் காரணம்! அது அதிகமாக அதிகமாக நமக்கு கண்டம் தான்! ஏன்னா எல்லாத்தையும் தாவரங்கள் உபயோகப் படுத்துவதில்லை!

இதுவரைக்கும் கண்டுபிடிச்ச கோள்கள் நட்சத்திரங்கள்ல நமக்கு கிடைச்சிருக்கும் வரப்பிரசாதமான இந்த காற்று மண்டலம் எந்த கோள்லயும் இல்லை! அது இருந்தா தான் எல்லா ஜீவராசிகளும் உயிர் வாழ முடியும்! ஆனா நாம அது என்னான்னு தெரியாம பாழ் பண்ணிக்கிட்டிருக்கோம்!
சரி இந்த உஷ்ணம் கோடையிலே தானே, அதுபாட்டுக்கு கழுதை வந்திட்டு போது, நான் ஏசி ரூம்ல உட்கார்ந்து காலம் தள்ளிட்டு போறேன்னு நீங்க சொன்னீங்கன்னா, உங்களுக்கு விவரம் பத்தலைன்னு அர்த்தம். இந்த உலக உஷ்ணம் எமகாதது! அது எப்படின்னு கேளுங்க! பூமியை இரண்டா பொளந்தீங்கன்னா, அதாவது பூமத்திய ரேகைக்கு வடக்காலதான் நிறைய நிலப்பரப்பு, தெக்காலே எல்லாம் வெறும் தண்ணி தான்! அதுனாலே தெக்கிலேருந்து வடக்கா உஷ்ண காத்து, அதாவது சூரியகதிர்ல கிரகிச்ச சூட்டை கடல் தண்ணி மேலால எடுத்துட்டு போய் வடக்கு துருவத்துப் பக்கம் போய் அங்கே குளிர்ந்து திரும்பி தெக்காலே வந்து சேர்ந்திடும்! இது தான் பருவங்கள் ஏற்படக்காரணம். பூகோளம் படிச்சி, தெரிஞ்சிருந்தீங்கண்ணா இது உங்களுக்குப்புரியம். நம்ம பூமத்திய ரேகையிலேருந்து வடக்காலே கொஞ்சம் தள்ளி இருக்கிறதாலே இந்த பருவ வெப்பம் சரியா வர்றதாலே தான், புயல், மழை எல்லாம். அது உலகத்திலே வெவ்வேறு பாகத்திலே அந்த மாதிரி பருவப்புயல் வரும், அமெரிக்காவிலே கல்ஃப்ன்னு சொல்ற கரீபியன் தீவுகள்ல இந்த புயல் உருவாகும், நம்ம ஊரு மாதிரியே! அதுவே வடக்கால ஆர்டிக் பக்கமோ, இல்ல தெக்கால அண்டார்டிக் பக்கமே குளிர்ந்த பகுதிங்கிறதாலே அங்கே இந்த புயல், மண்ணாங்கட்டி எதுவும் கிடையாது( அய், துளிசி இருக்கிற நியுசிலாந்து பக்கம் எல்லாம் புயல் எதுவும் கிடையாது, அவங்களுக்கு ஜாலி தான்!)

நான் சொன்ன இந்த காற்று மண்டல அழுத்தங்கள் அப்புறம் கடல் நீர் அழுத்தங்கள் எல்லாம் இதன் அடிப்படையிலே வர்றது தான், எப்பவும் வெதர் சானல் பாத்திட்டு வெள்ளை மேகங்களை மேப்க்கு மேலே ஒட்டி காமிப்பாங்களே, எளவு ஒன்னும் புரியாதில்லை! அது தான் இது, அதுக்கு ஆங்கிலத்திலே பேரு 'Current', கடல்ன்னா, 'sea current', காற்று மண்டலத்துக்கு 'air Current'. இதெல்லாம் உலக உஷ்ணம் ஒரே சீரா இருந்தா சரி, இந்த வெப்பம் அதிகமாயிகிட்டு இருக்கிறதாலே, இந்த அழுத்தங்கள் எல்லாம் தாறுமாறாகி, அதுனால வர்றது தான் அடிக்கடி இந்த புயல் வெள்ளம், மழை எல்லாம். போன வருஷம் அடிச்ச புயல், மழை பாம்பேயிலே 37 இன்ச்சுக்கு ஒரே நாள்ல மழை, அதே மாதிரி கேத்ரீனாங்கிற புயலாலே அமெரிக்காவே ஆட்டம் கண்டுடிச்சு! (இந்த புயலுக்கு எல்லாம் அழகா பொமபள பேரு வைப்பாங்க, ஏன் தெரியுமா அந்த காலத்திலே கப்பல்களை பெண்பால் கொண்டு அழைப்பாங்களாம், அதனால கடல் வர்ற புயலுக்கும் பொம்பளங்க பேரு! அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ஆம்பள பேரும் வைக்க ஆரம்பிச்சாட்டாங்க, நம்ம ஊர்லயும் இப்படி வச்சா ஜாலியா இருக்கும் இல்ல, 'கிழக்கே வங்கத்தில் குடி கொண்ட செல்வியின் சீற்றம் குறைந்தது'ன்னு ரேடியோல கேட்டா எப்படி இருக்கும்னு நினைச்சுப்பாருங்க! அப்புறம் பலவீனமான புயல், பலம் பொருந்திய புயலா மாறி, அதாவது அதை வகையா பிரிக்க category வச்சிருக்காங்க, கேட்டகிரி-1 ன்னா பலவீனம், கேட்டகிரி-5ன்னா பலம்!) அது தான் இப்ப எல்லாரும் இந்த குளோபல் வார்மிங் பத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க! (பிறகு, ஒரு குவிஸ், ஹரிக்கேன், சைக்குளோன், டைஃப்பூன், டோர்னோடோ, இது எல்லாம் என்னான்னு சரியா பதில் பின்னோட்டம் போடறவங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் காத்திருக்கு!)
இந்த தாறுமாறான அழுத்தங்கள்லால் வெறும் புயல்,மழை மட்டுமில்லை, உலகத்தின் சிலபாகங்கள்ல சொல்ல முடியா வறட்சி. ஒரு 200 வருஷத்துக்கு முன்னே இருந்த ஒரு பெரிய ஏரி, இந்த சூடான் நாட்டுக்கும் சேட்ங்கிற நாட்டுக்கும் இடையே உள்ள அந்த ஏரி இப்ப சுத்தமா காஞ்சி வெறும் களிமண்ணு கபாளங்களா இருக்கு! ஏன் நம்ம ஊர்லயே சில ஏரிகள், ஆறுகள், அந்த மாதிரி தான் ஆகி போச்சு. நம்ம சின்ன வயசிலே நீச்சலடிச்ச ஏரி, இப்ப கிரிகெட்டு மைதானமாகிப்போச்சு! இதுக்கெல்லாம் காரணம் நான் முன்ன சொன்ன கரி அமிலவாயு! இந்த மாதிரி வெப்பமான இந்த புயல் வறட்சி மட்டுமில்லை, ஏகப்பட்ட தொடர் நோய்கள், மலேரியா மாதிரி நோய்கள் வந்து எல்லாரும் சாக வேண்டியது தான்! இப்படி அந்த சினிமாவிலே நிறைய இடங்கள் ஒரு நூறு வருஷத்துக்கு முன்னேயும் , இப்பவும் உள்ள நிலமையையும் அழகா படம் புடிச்சி காட்றாங்க!
சரி இதுக்கு காரணம் என்னா? எல்லாம் நாம சுகமா வாழ கத்துக் கிட்டதாலே தான்! அதுவாது எல்லாமே மிஷனை நம்பி போயிட்டதாலே! அடிபைப்பு, ஆத்தங்கரையிலே துணி துவைக்கிறது அப்படின்னு அந்தகாலத்திலே நாம் கையிலே செஞ்ச காரியம் எல்லாம் இப்ப மெஷின்னு போய், அதுக்காக தேவைப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்றேன்னு, இந்த பூமியிலே கிடைச்ச கச்சா எண்ணெய், எரிவாயுவை கண்டமேனிக்கு எரிச்சு, கழிவு வெளியேற்றம் செஞ்சதாலே வந்த வினை தான். அதுவும் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள்,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்றவைகளால்! பத்தாததுக்கு இப்ப வளர்ந்து வரும் நம் இந்தியா, சைனா போன்ற நாடுகள் கண்ணா பின்னாவென்று எரிக்கும் சக்திகளால், நிலமை இன்னும் மோசமாகி, அடுத்த 50 வருஷத்திலே மொத்த தடபவெப்ப நிலையிலே 1oCலருந்து 2oC வரை ஏத்திவிட வாய்ப்பு இருக்கு! அப்புறம் தெரியும் நம்ம டப்பா எப்படி டான்ஸ் ஆடும்னு!

சரி இப்படி போய்கிட்டு இருக்கேன்னு சொல்லி உலக நாடுகள், ஐநா சபை சார்பா, எல்லாம் ஒன்னா சேர்ந்து. 1997ல், ஜப்பானில் உள்ள க்யோட்டாங்கிற இடத்திலே ஒன்னாக்கூடி ஒரு ஒப்பந்தம் போட்டாங்க, அதுக்கு பேரு 'Kyoto Accord'ன்னு. அந்த ஒப்பந்தப்படி 165 நாடுகள் கை எழுத்துப்போட்டு, இனி இந்த கரிஅமிலம் மற்றும் கிரீன்ஹவுஸ் கேஸ் எல்லாம் கம்மி பண்ணுவோம், அதாவது பிப்ரவரி 16, 2005லருந்து தொடக்கம். அப்படி கம்மி பண்ணாத நாடுங்க, கம்மி பண்ண நாடுங்கக்கிட்ட கப்பம் கட்டி அதை அவங்க கணக்கிலே ஏத்தி மொத்த கழிவு உலகத்திலே கம்மி ஆகிறமாதிரி பார்த்துக்கிட்டாங்க. இதுக்கு பேரு 'கிரிடிட்ஸ்' இதை ஆமோதித்து சட்டம் இயற்றினாங்க எல்லா நாட்டிலேயும், அதாவது 163 நாடுகள்ல, ஆனா அமெரிக்கா, உலக நாட்டாமை, நான் ஒன்னும் இதுக்கு ஒத்துக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க ஏன்னா, வளர்ந்து வரும் இந்தியா, சைனா, எங்களவிட கழிவை அதிகமா வெளியேத்தறப்ப, அவங்களுக்கு நீங்க சலுகை கொடுத்த தாலே இதை நாங்க ஒத்துக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க! என்னா சலுகைன்னா, இந்தியா, சைனாவுக்கு இது 2012க்கு மேலே தான் அமுலுக்கு வரும், ஏன்னா உலகளவில் பெரிய வளர்ச்சி அடைந்து ஒரு குறிப்பிடற கழிவு வெளியாக, இந்நாட்டிற்கு சில காலம் பிடிக்கும்ங்கிறதாலே இந்த சலுகை! அதையே காரணம் சொல்லி அமுல்படுத்தாத இன்னொரு நாடு ஆஸ்திரேலியா! இதிலெ கூத்து என்னான்னா, உலக கரிஅமில,கிரீன்ஹவுஸ் வாய்க்கள் கழிவு செய்வதில் அமெரிக்கா முன்னனி, அதாவது 30 சதவீதம், இந்த கரிமிலவாய்வை வெளிவிடுவது அவங்க தான், நாம வெறும் 0.7 சதவீதம் தான், இந்த கூத்தை எங்க போய் சொல்றது?

இந்த கழிவு வெளிப்படும் கட்டுபாட்டை கொண்டு வந்தால், அமெரிக்காவின் பல தொழில்கள் நசுக்கப்படும்னு பயந்து இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, இந்த குளோபல் வார்மிங் எல்லாம் ஒரு ஹம்பக்னு சொல்லித்திரியற கும்பல் ஒன்னு இங்கே இருக்கு! அதுக்கு பின்னாலே உள்ள விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள்னு ஏகப்பட்ட ஊழல் கொண்ட ஒரு பெரிய மாஃபியா இங்கே வேலை செஞ்சுக்கிட்டு இருக்கு. ஒரு தடவை நம்ம நாரயண் இந்த சிரியானா படத்தை பத்தி விமரிசனம் எழுதறப்ப, இப்ப நம்ம இந்தியாவிலே இந்த அமெரிக்க கார்ப்புரேட் நிறுவனங்கள் பண்ணும் ஊழல், அதாவது நம்ம நாட்டு பாலிசிகளை அவங்களுக்கு சாதகமா கொண்டு வர்றதுக்கு செய்யப்படும் லாபி போன்ற லஞ்சங்கள், நம்ம வழிவழியா கொண்டாடுற ஊழலை விட கொடுமையானது என்ற ஒரு காலமனிஸ்ட் எழுதின லிங்க் கொடுத்திருந்தாரு, வேணும்னா போய் பாருங்க அதை! இதோ சுட்டி! அதே போன்ற அரசியலில் சிலரின் லாபத்திற்காக, உண்மைகளை மாற்றி சொல்வதும், புரம்பாக பேசி திரிவதும் அமெரிக்க அரசியலில் சகஜம்! இதை தான் 'Al Gore' அந்த படத்தில் தோலுறித்து காண்பிக்கிறார்! இதற்காக ஒரு விழிப்புணர்வை கொண்டு வர இந்த பப்ளிக் ப்ராபகண்டாவை கையிலெடுத்து, இந்த சினிமாவை வெளி இட்டிருக்கிறார் (இதற்கு நேர் எதிரா, மைக்கல் கிரட்டன்ங்கிற ஒரு ஆளு இதெல்லாம் ஹம்பக்க்னு சொல்லிகிட்டு ஒரு நாவல், 'State of Fear'ன்னு எழுதி இருக்கிறார், எத்தனை பேரு படிச்சிருக்கீங்களோ எனக்குத் தெரியாது! இவரு சைன்ஸ்பிக்ஷன் படம் எடுக்கிர ஆளு, 'ஜுராஸிக் பார்க்'னு ஒரு படம் வந்திச்சில்ல, அது இவரு எழுதுனது தான்!)
ஆக இது போன்று இந்த உலக உஷ்ணமாவதின் பேரழிவை அழகாக படம் பிடித்து காட்டுகின்றனர். அது சரி, இதுக்கெல்லாம் காரணம் தொழிற்சாலை கூடங்கள், நமக்கு என்ன வந்திருக்கு, நாம என்ன செய்ய முடியும்னு 'ஆம்ஜனதா', ம்.. பொதுமக்களாகிய நீங்கள் கேட்பது புரிகிறது! முதல்ல அமெரிக்க வாழ்க்கை முறையை விடுத்து நம்ம ஊர் வாழ்க்கை முறை வாழ்ந்தாலே போதும், இதன் அழிவினை தடுத்துவிடலாம்! எப்படின்னா, வீட்ல, நீங்க வெளியே போகும் போது , லோக்கலா, நாடு முழுக்க, ஏன் உலகமுழுக்க, உங்களாலான உதவி பண்ணலாம்! எப்படின்னா,
வீட்ல சரியான பல்பு உபயோகிக்கிறதிலருந்து, உபயோகப்படாத நேரங்கள்ல எல்லா எலெக்ட்ரிக் அப்ளையன்ஸையும் பிளக்லருந்து எடுத்து வைக்கிறதிலருந்து, சரியா எல்லா பில்டர்ங்களையும் அது நேரம் வர்றப்ப மாத்திரதிலருந்து, இப்படி அடுக்கிக்கிட்டே போகலாம்! இதெல்லாம் செய்யுங்கன்னு, அமெரிக்க வாழ் மக்களுக்கு சொல்லி கொடுக்குது இந்த படத்திலே, அதை விவரமா படிச்சி தெரிஞ்சுக்கணும்னா, இதோ சுட்டி!
இது அமெரிக்காவுக்கு மட்டுமில்ல, நமக்கும் தான். இன்னும் 25,30 வருஷத்திலே, நம்ம வெளியேற்றும் கழிவு உலகத்தின் கழிவில் 70 சதவீதமாகிடும், ஏன்னா, இப்ப அந்த வேகத்திலே போய்கிட்டிருக்கோம்! அதுக்காக வளர்ச்சியே வேணாமுன்னு இல்லை, ஆனா விவேகமா, கட்டுபடுத்தும் வழிமுறைகளை கையாண்டு வந்தால் கண்டிப்பா கழிவு குறைய வாய்ப்பு உண்டு! அதுவும் இந்த க்யோட்டோ ஒப்பந்தம், நம்மலை 2012 வரைக்கும் ஒன்னும் பண்ணிக்காது! ஆக தொழில் வளர்ச்சி, எங்கெயோ போய்கிட்டிருக்கு! ஆக சக்திகளுக்கான வேறு வழிமுறைகளை கையாண்டால் உண்டு, அதாவது நான் கன்வென்ஷனல் எனர்ஜின்னு சொல்ற மற்ற வழிமுறைகள்! இதெல்லாம் செஞ்சா உண்டு, இல்லை அக்னி நட்சத்திரம் நம்மை பதம் பார்த்துடும்! முக்கியமா அமெரிக்காவை பார்த்து வாழ கத்துக்காம இருந்தா சரி!
இந்த படம் பார்த்துட்டு, சில உண்மைகள் நிறைய விளங்கினதாலே, ஏற்கனவே நியூஸ்ல படிச்சி அப்ப அப்ப தெரிஞ்சிக்கிட்டாலும், சும்மா தாக்கம் வந்து இந்த பதிவு போட்டேன்! நம்மலும் இப்படி படிப்பினை தரக்கூடிய படங்கள் ஏன் எடுக்கிறதில்லை! சும்மா காதல், அம்மா, தங்கச்சி அப்படின்னு திருப்பி திருப்பி உறவுகளையே சொல்லி எடுத்து படம் எடுத்துக்கிட்டிருக்கோம்! நான் ஏற்கனவே சொன்னமாதிரி வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அழகா கையாள தெரிஞ்ச நமக்கு, இன்னும் நம்மல நாமே தாண்ட முடியாம உலக ரீச்சுக்கு ஏன் போகல, இதை பத்தி அடுத்த பதிவிலே விவரமா பார்க்கலாம்!