Monday, June 12, 2006

உஷ்ணமாகும் உலகம் - எப்படி குளிர்விக்கலாம்?

இங்கே அமெரிக்காவிலே ஒரு படம் 'AN INCONVENIENT TRUTH' முக்கியமான சில தியோட்டர்கள்ல ஓடிக்கிட்டிருக்கு! என்னா படம் இது அப்படின்னு கேட்கிறீங்களா, அதான் தலைப்பிலே சொன்னேன்னே அதை பத்தி தான் இந்த படம் எடுத்து சொல்லுது! அதாவது படத்தோட கதாநாயகன் 'Al Gore' ன்னு! இவரை பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க, இவரு அமெரிக்காவிலே ஜார்ஜ் புஷ் முதோ தடவையா போட்டியிட்டு ஜெயிச்சாருல்ல, அந்த போட்டியிலே ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்து நின்னு தோத்துப்போனவரு! அதுக்கு முன்னே அமெரிக்காவின் இணை குடியரசுத் தலைவரா இருந்தவரு! தோத்துப்போயி நம் ஊரு அரசியல்வாதிங்க மாதிரி கொடி புடிச்சு தர்ணா, மறியல், பாத யாத்திரை அப்படின்னெல்லாம் போகாம அவரு முன்னே ஆராய்ச்சி செய்துக்கிட்டிருந்த உலக உஷ்ணமாதலை தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய போய்ட்டாரு! அப்படி அவரு ஆராய்ச்சி செய்த உண்மைகளை உலகத்திலே எல்லா முக்கிய நாடுகளுக்கும் சென்று பகிர்ந்துக்கிட்டு, இன்னெக்கு உலகத்தோட தட்பவெப்ப நிலை அதிகமாயிகிட்டே போகுது, அதால, சில பாகங்கள்ல வர இருக்கும் இயற்கை சீற்றம், வறட்சி, தொடர்ச்சியாக வரக்கூடிய நோய்கள், அதனால மனித குலத்துக்கு ஏற்படும் அழிவுகளை பத்தி விலாவாரியா விளக்கி, இது எல்லாத்துக்கும் காரணம் நாம தான், இந்த வளர்ந்த புது உலகிலே நம்ம செஞ்ச வினையே நமக்கு எமனா வரப்போகுதுன்னு எடுத்து சொல்லி, அதை களையவும் , இந்த உலக உஷ்ணத்திலே இருக்கிற அரசியல் தன்மைகளையும் சொல்லி, ஒவ்வொரு நாட்டு குடிமகனும் என்ன செஞ்சா இந்த உலகத்தை குளிர்விக்கலாம்னு சொல்லி வர்றாரு! அப்படி அவரு எடுத்து சொன்ன அந்த உண்மைகளை அவர் மூலமே பேச வச்சு, எல்லாரும் சரியா புரிஞ்சிக்கிற மாதிரி வந்த சினிமா படம் தான் அது! நம்ம ஊர்ல வந்திருச்சான்னான்னு தெரியாது, அப்படி வந்தா கண்டிப்பா போய் பாருங்க! இதே அதோட டிரையிலர் கொஞ்சம் ஓட்டிப்பாருங்க!



உலக உஷ்ணத்தை தான் குளோபல் வார்மிங் ('Global Warming')ன்னு சொல்றது! இதை பத்தி தெக்கிட்டான் ஏற்கனவே கொஞ்சம் சொல்லி இருந்தாரு அவரு பதிவான '*குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா?' விலே. ஆனா உலகம் சூடாவறதும் குளிர்ந்துவிடுவதும் பல வருஷங்களா தொன்று தொட்டு நடக்கும் ஒரு நிகழ்ச்சி, இதிலே என்னா இருக்கு, இதெல்லாம் சும்மா வெட்டிக்கதைன்னு சொல்லி ஒதுக்கிற சில கும்பலுங்க உண்டு. அதுக்கு பதிலு சரியா சொல்லுறாரு அந்த 'Al Gore'! சரி இது எப்படி உஷ்ணமாகுதுன்னு தெரியாதவங்களுக்கு, எப்படின்னு கீழே பார்ப்போம்!

உலகப்பந்தை சுற்றி ஒரு வளையம் போல இருப்பது தான் காற்றுவெளி மண்டலம், அதாவது 'atmoshphere'ன்னு ஆங்கிலத்திலே சொல்லுவாங்க. இதிலே கொஞ்சம் போல இருக்கிர கரிஅமில வாயுவாலதான் நமக்கு ராத்திரியிலேயும் கொஞ்சம் வெப்பமா, மிதமா இருக்க வைக்குது. இந்த கரிஅமிலவாயு அதிகமாகிறதும் குறையிறதும் ஒரு நிகழ்ச்சி, ஆனா சராசரி அளவு இப்ப சில வருஷங்களா அதிகமாயிட்டு வருது! அது பூமியின் கடந்த பனிவயதின் போது 180 ppm (இந்த ppm ங்க்றது ஒரு அளவு) அதுவே கொஞ்சம் பனிபாறைகள் உருகி கடல் கலந்து, நம்ம வளர்ந்த உலகமாகுமுன் 280 ppm ஆகி போச்சு. இந்த 280 ppm அளவு நாம் சுகமா இருக்க, அதாவது அதிக வெப்பமும் இல்லாம, குளிரும் இல்லாம மிதமா இருக்க செய்ய, ஆனா நம்ம தொழிற்புரட்சி செஞ்சு, அதை 381 ppm க்கு உயர்த்திட்டோம்! அப்படி உயர்த்தினது உயர்ந்துக்கிட்டே தான் இருக்கேவொழிய குறைய மாட்டேங்கிது, அதுனால இந்த ஒரு 20 வருஷமா, இது வரை பார்க்காத வெய்யிலு மண்டையை பொளக்குது இப்ப! அதுவும் போன வருஷம் ஆந்திராவிலே ராமகுண்டத்திலே 50oC மேலே, இதுக்கெல்லாம் காரணம் இந்த கரிஅமில மற்றும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் தான்!

இதிலே ரொம்ப கஷ்டமான ஒன்னு என்னான்னா, துருவப்பிரதேஷத்திலே இருக்கிற ஐஸ்ங்க எல்லாம் கரையறது தான். அதாவது ஆர்டிக், அண்டார்டிக்ல இருக்கும் பனிபாறைகள் உருகுவது தான். இதுனால புண்ணியம் என்னான்னா, சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் பலவற்றை திருப்பி அனுப்பிச்சிடும் இந்த பனிபாறைகள், ஆனா கடல் தண்ணி அப்படியே கிரகிச்சு, உஷ்ணமாக்கிடும் அது தான் காரணம்! இந்த கரி அமில வாய்வுகளால் சூழப்பட்ட அந்த காற்று மண்டலம், அளவா கரிஅமில வாய்வு இருந்தா, நான் மேலே சொன்ன மாதிரி சூரியக்கதிர்களை திருப்பி அனுப்பிச்சிடும், ஜாஸ்தியான, அந்த ஒளிக்கதிர்களால பூமியின் பரப்பிலே அடக்கி உஷ்ணம் தான். இப்ப தெரியுதா எப்படி பூமி உஷ்ணமாகுதுன்னு!

நீங்க எல்லாம் படிச்சிருப்பீங்க, இந்த கரிஅமில வாயுவை நம்மை சுவாசத்திலே வெளிவிடுறோம் அதை தாவரங்கள் சுவாசிக்கதுன்னு, அப்புறம் என்னா அது சுவாசிச்சா எல்லாம் குறஞ்சிடாதான்னு! எல்லாம் சரிதான், வெறும் மனுஷன் விட்டா பரவாயில்லையே, நாம போட்டு எரிச்சு வெளியிடுறோமே, அதான் நமது வாகனங்கள், தொழிற்சாலைகள், மற்றும் வெளியேறும் கழிவு வாய்கள் தான் இந்த கரிஅமில வாயு காற்று மண்டலத்திலே கூடக் காரணம்! அது அதிகமாக அதிகமாக நமக்கு கண்டம் தான்! ஏன்னா எல்லாத்தையும் தாவரங்கள் உபயோகப் படுத்துவதில்லை!

இதுவரைக்கும் கண்டுபிடிச்ச கோள்கள் நட்சத்திரங்கள்ல நமக்கு கிடைச்சிருக்கும் வரப்பிரசாதமான இந்த காற்று மண்டலம் எந்த கோள்லயும் இல்லை! அது இருந்தா தான் எல்லா ஜீவராசிகளும் உயிர் வாழ முடியும்! ஆனா நாம அது என்னான்னு தெரியாம பாழ் பண்ணிக்கிட்டிருக்கோம்!

சரி இந்த உஷ்ணம் கோடையிலே தானே, அதுபாட்டுக்கு கழுதை வந்திட்டு போது, நான் ஏசி ரூம்ல உட்கார்ந்து காலம் தள்ளிட்டு போறேன்னு நீங்க சொன்னீங்கன்னா, உங்களுக்கு விவரம் பத்தலைன்னு அர்த்தம். இந்த உலக உஷ்ணம் எமகாதது! அது எப்படின்னு கேளுங்க! பூமியை இரண்டா பொளந்தீங்கன்னா, அதாவது பூமத்திய ரேகைக்கு வடக்காலதான் நிறைய நிலப்பரப்பு, தெக்காலே எல்லாம் வெறும் தண்ணி தான்! அதுனாலே தெக்கிலேருந்து வடக்கா உஷ்ண காத்து, அதாவது சூரியகதிர்ல கிரகிச்ச சூட்டை கடல் தண்ணி மேலால எடுத்துட்டு போய் வடக்கு துருவத்துப் பக்கம் போய் அங்கே குளிர்ந்து திரும்பி தெக்காலே வந்து சேர்ந்திடும்! இது தான் பருவங்கள் ஏற்படக்காரணம். பூகோளம் படிச்சி, தெரிஞ்சிருந்தீங்கண்ணா இது உங்களுக்குப்புரியம். நம்ம பூமத்திய ரேகையிலேருந்து வடக்காலே கொஞ்சம் தள்ளி இருக்கிறதாலே இந்த பருவ வெப்பம் சரியா வர்றதாலே தான், புயல், மழை எல்லாம். அது உலகத்திலே வெவ்வேறு பாகத்திலே அந்த மாதிரி பருவப்புயல் வரும், அமெரிக்காவிலே கல்ஃப்ன்னு சொல்ற கரீபியன் தீவுகள்ல இந்த புயல் உருவாகும், நம்ம ஊரு மாதிரியே! அதுவே வடக்கால ஆர்டிக் பக்கமோ, இல்ல தெக்கால அண்டார்டிக் பக்கமே குளிர்ந்த பகுதிங்கிறதாலே அங்கே இந்த புயல், மண்ணாங்கட்டி எதுவும் கிடையாது( அய், துளிசி இருக்கிற நியுசிலாந்து பக்கம் எல்லாம் புயல் எதுவும் கிடையாது, அவங்களுக்கு ஜாலி தான்!)

நான் சொன்ன இந்த காற்று மண்டல அழுத்தங்கள் அப்புறம் கடல் நீர் அழுத்தங்கள் எல்லாம் இதன் அடிப்படையிலே வர்றது தான், எப்பவும் வெதர் சானல் பாத்திட்டு வெள்ளை மேகங்களை மேப்க்கு மேலே ஒட்டி காமிப்பாங்களே, எளவு ஒன்னும் புரியாதில்லை! அது தான் இது, அதுக்கு ஆங்கிலத்திலே பேரு 'Current', கடல்ன்னா, 'sea current', காற்று மண்டலத்துக்கு 'air Current'. இதெல்லாம் உலக உஷ்ணம் ஒரே சீரா இருந்தா சரி, இந்த வெப்பம் அதிகமாயிகிட்டு இருக்கிறதாலே, இந்த அழுத்தங்கள் எல்லாம் தாறுமாறாகி, அதுனால வர்றது தான் அடிக்கடி இந்த புயல் வெள்ளம், மழை எல்லாம். போன வருஷம் அடிச்ச புயல், மழை பாம்பேயிலே 37 இன்ச்சுக்கு ஒரே நாள்ல மழை, அதே மாதிரி கேத்ரீனாங்கிற புயலாலே அமெரிக்காவே ஆட்டம் கண்டுடிச்சு! (இந்த புயலுக்கு எல்லாம் அழகா பொமபள பேரு வைப்பாங்க, ஏன் தெரியுமா அந்த காலத்திலே கப்பல்களை பெண்பால் கொண்டு அழைப்பாங்களாம், அதனால கடல் வர்ற புயலுக்கும் பொம்பளங்க பேரு! அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ஆம்பள பேரும் வைக்க ஆரம்பிச்சாட்டாங்க, நம்ம ஊர்லயும் இப்படி வச்சா ஜாலியா இருக்கும் இல்ல, 'கிழக்கே வங்கத்தில் குடி கொண்ட செல்வியின் சீற்றம் குறைந்தது'ன்னு ரேடியோல கேட்டா எப்படி இருக்கும்னு நினைச்சுப்பாருங்க! அப்புறம் பலவீனமான புயல், பலம் பொருந்திய புயலா மாறி, அதாவது அதை வகையா பிரிக்க category வச்சிருக்காங்க, கேட்டகிரி-1 ன்னா பலவீனம், கேட்டகிரி-5ன்னா பலம்!) அது தான் இப்ப எல்லாரும் இந்த குளோபல் வார்மிங் பத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க! (பிறகு, ஒரு குவிஸ், ஹரிக்கேன், சைக்குளோன், டைஃப்பூன், டோர்னோடோ, இது எல்லாம் என்னான்னு சரியா பதில் பின்னோட்டம் போடறவங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் காத்திருக்கு!)

இந்த தாறுமாறான அழுத்தங்கள்லால் வெறும் புயல்,மழை மட்டுமில்லை, உலகத்தின் சிலபாகங்கள்ல சொல்ல முடியா வறட்சி. ஒரு 200 வருஷத்துக்கு முன்னே இருந்த ஒரு பெரிய ஏரி, இந்த சூடான் நாட்டுக்கும் சேட்ங்கிற நாட்டுக்கும் இடையே உள்ள அந்த ஏரி இப்ப சுத்தமா காஞ்சி வெறும் களிமண்ணு கபாளங்களா இருக்கு! ஏன் நம்ம ஊர்லயே சில ஏரிகள், ஆறுகள், அந்த மாதிரி தான் ஆகி போச்சு. நம்ம சின்ன வயசிலே நீச்சலடிச்ச ஏரி, இப்ப கிரிகெட்டு மைதானமாகிப்போச்சு! இதுக்கெல்லாம் காரணம் நான் முன்ன சொன்ன கரி அமிலவாயு! இந்த மாதிரி வெப்பமான இந்த புயல் வறட்சி மட்டுமில்லை, ஏகப்பட்ட தொடர் நோய்கள், மலேரியா மாதிரி நோய்கள் வந்து எல்லாரும் சாக வேண்டியது தான்! இப்படி அந்த சினிமாவிலே நிறைய இடங்கள் ஒரு நூறு வருஷத்துக்கு முன்னேயும் , இப்பவும் உள்ள நிலமையையும் அழகா படம் புடிச்சி காட்றாங்க!

சரி இதுக்கு காரணம் என்னா? எல்லாம் நாம சுகமா வாழ கத்துக் கிட்டதாலே தான்! அதுவாது எல்லாமே மிஷனை நம்பி போயிட்டதாலே! அடிபைப்பு, ஆத்தங்கரையிலே துணி துவைக்கிறது அப்படின்னு அந்தகாலத்திலே நாம் கையிலே செஞ்ச காரியம் எல்லாம் இப்ப மெஷின்னு போய், அதுக்காக தேவைப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்றேன்னு, இந்த பூமியிலே கிடைச்ச கச்சா எண்ணெய், எரிவாயுவை கண்டமேனிக்கு எரிச்சு, கழிவு வெளியேற்றம் செஞ்சதாலே வந்த வினை தான். அதுவும் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள்,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்றவைகளால்! பத்தாததுக்கு இப்ப வளர்ந்து வரும் நம் இந்தியா, சைனா போன்ற நாடுகள் கண்ணா பின்னாவென்று எரிக்கும் சக்திகளால், நிலமை இன்னும் மோசமாகி, அடுத்த 50 வருஷத்திலே மொத்த தடபவெப்ப நிலையிலே 1oCலருந்து 2oC வரை ஏத்திவிட வாய்ப்பு இருக்கு! அப்புறம் தெரியும் நம்ம டப்பா எப்படி டான்ஸ் ஆடும்னு!

சரி இப்படி போய்கிட்டு இருக்கேன்னு சொல்லி உலக நாடுகள், ஐநா சபை சார்பா, எல்லாம் ஒன்னா சேர்ந்து. 1997ல், ஜப்பானில் உள்ள க்யோட்டாங்கிற இடத்திலே ஒன்னாக்கூடி ஒரு ஒப்பந்தம் போட்டாங்க, அதுக்கு பேரு 'Kyoto Accord'ன்னு. அந்த ஒப்பந்தப்படி 165 நாடுகள் கை எழுத்துப்போட்டு, இனி இந்த கரிஅமிலம் மற்றும் கிரீன்ஹவுஸ் கேஸ் எல்லாம் கம்மி பண்ணுவோம், அதாவது பிப்ரவரி 16, 2005லருந்து தொடக்கம். அப்படி கம்மி பண்ணாத நாடுங்க, கம்மி பண்ண நாடுங்கக்கிட்ட கப்பம் கட்டி அதை அவங்க கணக்கிலே ஏத்தி மொத்த கழிவு உலகத்திலே கம்மி ஆகிறமாதிரி பார்த்துக்கிட்டாங்க. இதுக்கு பேரு 'கிரிடிட்ஸ்' இதை ஆமோதித்து சட்டம் இயற்றினாங்க எல்லா நாட்டிலேயும், அதாவது 163 நாடுகள்ல, ஆனா அமெரிக்கா, உலக நாட்டாமை, நான் ஒன்னும் இதுக்கு ஒத்துக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க ஏன்னா, வளர்ந்து வரும் இந்தியா, சைனா, எங்களவிட கழிவை அதிகமா வெளியேத்தறப்ப, அவங்களுக்கு நீங்க சலுகை கொடுத்த தாலே இதை நாங்க ஒத்துக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க! என்னா சலுகைன்னா, இந்தியா, சைனாவுக்கு இது 2012க்கு மேலே தான் அமுலுக்கு வரும், ஏன்னா உலகளவில் பெரிய வளர்ச்சி அடைந்து ஒரு குறிப்பிடற கழிவு வெளியாக, இந்நாட்டிற்கு சில காலம் பிடிக்கும்ங்கிறதாலே இந்த சலுகை! அதையே காரணம் சொல்லி அமுல்படுத்தாத இன்னொரு நாடு ஆஸ்திரேலியா! இதிலெ கூத்து என்னான்னா, உலக கரிஅமில,கிரீன்ஹவுஸ் வாய்க்கள் கழிவு செய்வதில் அமெரிக்கா முன்னனி, அதாவது 30 சதவீதம், இந்த கரிமிலவாய்வை வெளிவிடுவது அவங்க தான், நாம வெறும் 0.7 சதவீதம் தான், இந்த கூத்தை எங்க போய் சொல்றது?

இந்த கழிவு வெளிப்படும் கட்டுபாட்டை கொண்டு வந்தால், அமெரிக்காவின் பல தொழில்கள் நசுக்கப்படும்னு பயந்து இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, இந்த குளோபல் வார்மிங் எல்லாம் ஒரு ஹம்பக்னு சொல்லித்திரியற கும்பல் ஒன்னு இங்கே இருக்கு! அதுக்கு பின்னாலே உள்ள விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள்னு ஏகப்பட்ட ஊழல் கொண்ட ஒரு பெரிய மாஃபியா இங்கே வேலை செஞ்சுக்கிட்டு இருக்கு. ஒரு தடவை நம்ம நாரயண் இந்த சிரியானா படத்தை பத்தி விமரிசனம் எழுதறப்ப, இப்ப நம்ம இந்தியாவிலே இந்த அமெரிக்க கார்ப்புரேட் நிறுவனங்கள் பண்ணும் ஊழல், அதாவது நம்ம நாட்டு பாலிசிகளை அவங்களுக்கு சாதகமா கொண்டு வர்றதுக்கு செய்யப்படும் லாபி போன்ற லஞ்சங்கள், நம்ம வழிவழியா கொண்டாடுற ஊழலை விட கொடுமையானது என்ற ஒரு காலமனிஸ்ட் எழுதின லிங்க் கொடுத்திருந்தாரு, வேணும்னா போய் பாருங்க அதை! இதோ சுட்டி! அதே போன்ற அரசியலில் சிலரின் லாபத்திற்காக, உண்மைகளை மாற்றி சொல்வதும், புரம்பாக பேசி திரிவதும் அமெரிக்க அரசியலில் சகஜம்! இதை தான் 'Al Gore' அந்த படத்தில் தோலுறித்து காண்பிக்கிறார்! இதற்காக ஒரு விழிப்புணர்வை கொண்டு வர இந்த பப்ளிக் ப்ராபகண்டாவை கையிலெடுத்து, இந்த சினிமாவை வெளி இட்டிருக்கிறார் (இதற்கு நேர் எதிரா, மைக்கல் கிரட்டன்ங்கிற ஒரு ஆளு இதெல்லாம் ஹம்பக்க்னு சொல்லிகிட்டு ஒரு நாவல், 'State of Fear'ன்னு எழுதி இருக்கிறார், எத்தனை பேரு படிச்சிருக்கீங்களோ எனக்குத் தெரியாது! இவரு சைன்ஸ்பிக்ஷன் படம் எடுக்கிர ஆளு, 'ஜுராஸிக் பார்க்'னு ஒரு படம் வந்திச்சில்ல, அது இவரு எழுதுனது தான்!)

ஆக இது போன்று இந்த உலக உஷ்ணமாவதின் பேரழிவை அழகாக படம் பிடித்து காட்டுகின்றனர். அது சரி, இதுக்கெல்லாம் காரணம் தொழிற்சாலை கூடங்கள், நமக்கு என்ன வந்திருக்கு, நாம என்ன செய்ய முடியும்னு 'ஆம்ஜனதா', ம்.. பொதுமக்களாகிய நீங்கள் கேட்பது புரிகிறது! முதல்ல அமெரிக்க வாழ்க்கை முறையை விடுத்து நம்ம ஊர் வாழ்க்கை முறை வாழ்ந்தாலே போதும், இதன் அழிவினை தடுத்துவிடலாம்! எப்படின்னா, வீட்ல, நீங்க வெளியே போகும் போது , லோக்கலா, நாடு முழுக்க, ஏன் உலகமுழுக்க, உங்களாலான உதவி பண்ணலாம்! எப்படின்னா,

வீட்ல சரியான பல்பு உபயோகிக்கிறதிலருந்து, உபயோகப்படாத நேரங்கள்ல எல்லா எலெக்ட்ரிக் அப்ளையன்ஸையும் பிளக்லருந்து எடுத்து வைக்கிறதிலருந்து, சரியா எல்லா பில்டர்ங்களையும் அது நேரம் வர்றப்ப மாத்திரதிலருந்து, இப்படி அடுக்கிக்கிட்டே போகலாம்! இதெல்லாம் செய்யுங்கன்னு, அமெரிக்க வாழ் மக்களுக்கு சொல்லி கொடுக்குது இந்த படத்திலே, அதை விவரமா படிச்சி தெரிஞ்சுக்கணும்னா, இதோ சுட்டி!

இது அமெரிக்காவுக்கு மட்டுமில்ல, நமக்கும் தான். இன்னும் 25,30 வருஷத்திலே, நம்ம வெளியேற்றும் கழிவு உலகத்தின் கழிவில் 70 சதவீதமாகிடும், ஏன்னா, இப்ப அந்த வேகத்திலே போய்கிட்டிருக்கோம்! அதுக்காக வளர்ச்சியே வேணாமுன்னு இல்லை, ஆனா விவேகமா, கட்டுபடுத்தும் வழிமுறைகளை கையாண்டு வந்தால் கண்டிப்பா கழிவு குறைய வாய்ப்பு உண்டு! அதுவும் இந்த க்யோட்டோ ஒப்பந்தம், நம்மலை 2012 வரைக்கும் ஒன்னும் பண்ணிக்காது! ஆக தொழில் வளர்ச்சி, எங்கெயோ போய்கிட்டிருக்கு! ஆக சக்திகளுக்கான வேறு வழிமுறைகளை கையாண்டால் உண்டு, அதாவது நான் கன்வென்ஷனல் எனர்ஜின்னு சொல்ற மற்ற வழிமுறைகள்! இதெல்லாம் செஞ்சா உண்டு, இல்லை அக்னி நட்சத்திரம் நம்மை பதம் பார்த்துடும்! முக்கியமா அமெரிக்காவை பார்த்து வாழ கத்துக்காம இருந்தா சரி!

இந்த படம் பார்த்துட்டு, சில உண்மைகள் நிறைய விளங்கினதாலே, ஏற்கனவே நியூஸ்ல படிச்சி அப்ப அப்ப தெரிஞ்சிக்கிட்டாலும், சும்மா தாக்கம் வந்து இந்த பதிவு போட்டேன்! நம்மலும் இப்படி படிப்பினை தரக்கூடிய படங்கள் ஏன் எடுக்கிறதில்லை! சும்மா காதல், அம்மா, தங்கச்சி அப்படின்னு திருப்பி திருப்பி உறவுகளையே சொல்லி எடுத்து படம் எடுத்துக்கிட்டிருக்கோம்! நான் ஏற்கனவே சொன்னமாதிரி வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அழகா கையாள தெரிஞ்ச நமக்கு, இன்னும் நம்மல நாமே தாண்ட முடியாம உலக ரீச்சுக்கு ஏன் போகல, இதை பத்தி அடுத்த பதிவிலே விவரமா பார்க்கலாம்!

33 comments:

said...

//நம்மலும் இப்படி படிப்பினை தரக்கூடிய படங்கள் ஏன் எடுக்கிறதில்லை! சும்மா காதல், அம்மா, தங்கச்சி அப்படின்னு திருப்பி திருப்பி உறவுகளையே சொல்லி எடுத்து படம் எடுத்துக்கிட்டிருக்கோம்!//

நாதர், தமிழ் திரைப்பட உலகிலும் அரசியலிலும் படித்தவர்கல் மிகக்குறைவு. இவர்கள் சென்டிமென்டிலிருந்து மாறுவது வெகு சிரமம். இந்த குடும்ப சென்டிமென்ட்கள் ந்ம்மூரில் நன்றாக விற்பனையாகும்

said...

நிறைய விவரங்களோட பதிவு போட்ருக்கீங்க. அவசியமான பதிவு. இப்படி எல்லாரும் கரடியா கத்திக்கிட்டிருந்தாலும் செவிடன் காதுல சங்கு ஊதுன மாதிரி 'முடி'யா போச்சுன்னு இருக்கற தலைவர்கள நெனச்சா கவலையா இருக்கு!

"இதெல்லாம் நம்மோட போவட்டும். நம்ம பிள்ளைங்க அவங்க காலத்துல கஷ்டப்படக்கூடாது. இதுக்காகவே பிள்ளைங்க பெத்துக்கக் கூடாதுன்னு" நெனச்ச காலம்லாம் உண்டு! :) நெனச்சதை செயல்படுத்தியிருக்கலாம் போலன்னும் அப்பப்ப தோணும். இப்ப ஒங்க பதிவு படிச்சதும் மறுபடியும் தோணிச்சு.

கூடிய சீக்கிரம் இதுக்குத் தீர்வு காணாட்டி வருங்கால சந்ததியினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.

நன்றி.

said...

வெளிகண்ட நாதர் அய்யா,
மிகவும் அருமையான பதிவு. மிகவும் தேவையான பதிவுங்கூட. Global Warming பற்றி நான் அறிந்திராத பல தகவல்களை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். மிக்க நன்றிகள்.

அன்புடன்
வெற்றி

said...

வணக்கம் வெளிகண்ட நாதர்!

சுற்று சூழல் விழிப்புணர்வு தேவையான ஒன்று ,உங்கள் பதிவு அதில் ஒரு முதல் படி!

//பிறகு, ஒரு குவிஸ், ஹரிக்கேன், சைக்குளோன், டைஃப்பூன், டோர்னோடோ, இது எல்லாம் என்னான்னு சரியா பதில் பின்னோட்டம் போடறவங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் காத்திருக்கு//

எல்லாமே சூறாவளி(சுழல்) காற்றின் வேறு வேறு பெயர் இது நாட்டுக்கு நாடு வேறுபடும் , ஆஸ்திரேலியாவில் வில்லி வில்லி என்று பெயர் உண்டு! நம்ம ஊரு லாந்தர் விளக்கிற்கு ஹரிக்கேன் என்று பெயர் வரக்காரணமே ஹரிக்கேன் காத்து அடிச்சாலும் அந்த விளக்கி அணையாமல் எரியும் என்பதால் தான்! அது சரி உங்களுக்கு ஹரியானா ஹரிக்கேன் என்றால் தெரியுமா :-))

//நம்ம ஊர்லயும் இப்படி வச்சா ஜாலியா இருக்கும் இல்ல, 'கிழக்கே வங்கத்தில் குடி கொண்ட செல்வியின் சீற்றம் குறைந்தது'ன்னு ரேடியோல கேட்ட எப்படி இருக்கும்னு நினைச்சுப்பாருங்க! //

அப்படி பெயர் வைப்பதற்கு என சர்வதேச வானிலையாளர்கள் சங்கம் கூடி முடிவு எடுக்கிறது ,அதில் ஒவ்வொரு நாடும் அவர்கள் பங்காக சில பெயர்களை பரிந்துரைக்க வேண்டும்.இதில் என்ன ஒன்று என்றால் நம் நாடு பரிந்துரைத்த பெயர் நமக்கே வரும் என வெல்லாம் சொல்ல முடியாது. சமிபத்தில் தமிழ் நாட்டில் மழைகாலத்தில் அடித்த புயலுக்கு பானு என்ற பெயர் கொடுக்கபட்டதாக கேள்விபட்டேன் ,தமிழ் ஊடகங்கள் இதை எல்லாம் பெரிதாக கண்டுகொள்வது இல்லை!

நீங்கள் சொன்ன பசுமை இல்ல வாயுக்களில் ஃப்ரியான் எனப்படும் குளொரோ புளோரோ கார்பன் வாயுவை பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்களே. இந்த வாயுவே ஒஸோன் படிவத்தில் ஓட்டை ஏற்படுத்த காரணம். பெரும்பாலும் வாயுக்கள் துருவங்களில் போய் அடர்த்தியாக சேரும் காரணம் துருவ பகுதிகளில் காந்த சக்தி ,மற்றும் மின்னூட்டம் அதிகம் எனவே வாயுக்கள் அங்கே ஈர்க்கபடும் ,இதனால் அங்கேயுள்ள ஒஸோனில் ஒட்டை விழுந்து புற ஊதாகதிர்களின் தாக்கம் அங்கே அதிகம் ஆகி பனி பாறைகள் உருகி கடல் மட்டம் மேலெ உயரும் அபயாம் உள்ளது!

க்யோட்ட புரோட்டோ காலினை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா இந்தியா மீது இன்னொரு பழி ஒன்றினை போட்டுள்ளது , இந்தியாவில் அதிகம் நெல் பயிரிடுவதால் , சகதி கலந்த நிலத்தில் இருந்து மீதேன் வாயு கிளம்பி ஓஸோனை அழிக்கிறது என்று. இது வடிகட்டிய அயோக்கியதனம். ஃப்ரியான் வாயு வளி மண்டலத்தில் அதிகம் வெளியேற்றும் நாடுகளில் அமெரிக்காவே முதலிடத்தில் இருக்கிறது.அதை சரிகட்ட இப்படி பழி போட்டது.

இதெற்கெல்லம் ஒரு தீர்வு இவற்றின் பயன் பாடுகளை குறைத்துக்கொள்வது ,அதிகம் வனங்களை அழிக்காமல் காப்பது ,மேலும் மரங்கள் நடுவது தான்!

said...

நாதரே,

அசத்தலான பதிவு! இன்னும் நிறைய விசயங்களுடன் "குளோபல் வார்மிங்" பற்றி இங்கு கொடுத்ததிற்கு நன்றி.

//இதற்கு நேர் எதிரா, மைக்கல் கிரட்டன்ங்கிற ஒரு ஆளு இதெல்லாம் ஹம்பக்க்னு சொல்லிகிட்டு ஒரு நாவல், 'State of Fear'ன்னு எழுதி இருக்கிறார்,//

அப்படியா? இனிமேதான் படிக்கணும், வெயிட் பண்ணிக் கிட்டு இருக்கேன் பழையெ புத்தகக் கடைக்கு வரதிற்கு ;-)) $1.

நேசி (அ) தெகா.

said...

ஒரு சிறிய பிழை திருத்தம் தமிழ் நாட்டில் அடித்த புயலுக்கு பெயர் பானு என தட்டச்சு செய்துவிட்டேன் அது பஃனு அரபிக் பெயர் அது ,பங்களாதேச வானிலை ஆய்வு மையம் சர்வதேச மையத்திற்கு சொன்னது,நமக்கு கிடைத்துவிட்டது!

said...

அவசியமான, பயனுல்ல தகவல்கள்.

நன்றி.

//வவ்வால் said...

இதெற்கெல்லம் ஒரு தீர்வு இவற்றின் பயன் பாடுகளை குறைத்துக்கொள்வது ,அதிகம் வனங்களை அழிக்காமல் காப்பது ,மேலும் மரங்கள் நடுவது தான்!//

அதாவது இதுக்கு தீர்வு, நம்ம கிட்ட தான் இருக்குனு சொல்லுங்க!

வாழ்க்கைய அதிக செயற்கை தனமா வாழாம, இயற்கையோடு எனஞ்சு வாழ கத்துக்கிட்டு, நம்ம சந்ததிக்கு சொல்லி கொடுத்தா அவங்க கொஞ்சம் அனுபவிச்சு வாழ முடியும்.

said...

சார்,

ஒரு பிரம்மாண்டமான பதிவு.

அருமையாக எளிமையா சொல்லியிருக்கீரிங்க..

மிக்க நன்றி.

said...

நல்லா விளக்கமா சொல்லி இருக்கீங்க.. இதே கான்சப்ட் தானே இந்த Day after Tomorrow படத்துலயும் வந்தது? அது நான் பார்த்தேன்.. கொஞ்சம் உறைக்கிராப்ல தான் சொல்லி இருந்தாங்க..

இந்தப் படமும் பார்த்துடுவோம்..

//வெயிட் பண்ணிக் கிட்டு இருக்கேன் பழையெ புத்தகக் கடைக்கு வரதிற்கு ;-)) $1.//
1$க்குக் கிடைக்குதா? அப்போ நானும் வாங்கிட்டு போறேன்..எங்க கிடைக்கும்னும் சொன்னா நல்லா இருக்கும் :)

said...

//நாதர், தமிழ் திரைப்பட உலகிலும் அரசியலிலும் படித்தவர்கல் மிகக்குறைவு.//சிவா, அப்படி பார்த்தா மணிரத்தனம் எம்பிஏ படிச்சவரு! ஏன் இப்ப படிச்ச ஆளுங்க நிறைய வர்றாங்க! நம்மல உடுங்க, இந்த அமெரிக்காவுக்குன்னு படம் எடுக்கிற நாகேழ் குனுக்கர் எல்லாம் திருப்பி காதல், கல்யாணத்தை தானே எடுக்கிறார். இதபத்தி விரிவா அடுத்த் பதிவு போடறேன், படிங்க!

said...

//கூடிய சீக்கிரம் இதுக்குத் தீர்வு காணாட்டி வருங்கால சந்ததியினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.// சுந்தர், இதை தான் அந்த படத்திலே சொல்றாங்க!

said...

வருகைக்கு நன்றி வெற்றி!

said...

வவ்வால், நீங்க விடை சரியா சொல்லலியே, நீங்க சொன்ன மாதிரி தான்

//எல்லாமே சூறாவளி(சுழல்) காற்றின் வேறு வேறு பெயர் // ஆனா அதன் velocity/speeedஐ கொண்டு அதனை பிரிக்கிறது, அப்புறம் இந்திய சமுத்திரம், பசுபிக் சமுத்திரத்திலே இதுக்கு ஹரிக்கேன், அட்லாண்டிக்லயும் தான், ஆனா, ஒன்னு கிளாக்குவைஸ் சுழற்சி, இன்னொன்னு ஆண்டி கிளாக் வைஸ் சுழற்சி. நம்ம ஊர்ல சைக்குளோன்னு சொல்றது! மத்ததெல்லாம் நீரில் உருவாகும் குறைந்த மண்டல காற்றழுத்தம், ஆனா டோர்னோடோ நிலத்தில் உருவாகும் சூறாவெளி! (பொற்காசு கொடுப்பது பத்தி பரிசீலிக்கப்படும்-;))

said...

நான் இன்னும் விளக்கமா பசுமை இல்ல வாயுக்களை எழுதலை, நீங்க விளக்கீட்டீங்க, இந்த கேஸ் (CFC-12)முதல்ல ரெஃப்ரிஜிரேஷனுக்கு உபயோகிச்சாங்க, இப்ப அதுக்கு பதிலா மாற்று கேஸ் உபயோகிக்கிறாங்க

//க்யோட்ட புரோட்டோ காலினை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா இந்தியா மீது இன்னொரு பழி ஒன்றினை போட்டுள்ளது , இந்தியாவில் அதிகம் நெல் பயிரிடுவதால் , சகதி கலந்த நிலத்தில் இருந்து மீதேன் வாயு கிளம்பி ஓஸோனை அழிக்கிறது என்று.// இது இந்தியான்னு இல்லை, அது அதிகமா, ஆர்டிக், சைபீரியாவிலயும் இருக்குங்கிறாங்க, பனி உருகிட்ட இதால இன்னும் பாதகம்னு சொல்றாங்க!

said...

தெக்கி, அதான் வீதி வீதியா கடை இருக்கே! ofcourse, hardbind விலை ஜாஸ்தி, ஆனா 'பேப்பர்பேக்' கம்மி! 1$க்குன்னா பக்கம் பக்கமா படிச்சது கையில வரும் பாத்துக்கங்க! காசுக்கேத்த் தோசை தான்!

said...

சரியா சொன்னீங்க நன்மனம்! இதுவரை நம்ம அமெரிக்கா காரன் மாதிரி வாழவில்லை, இனி அப்படி நம்மலும் வாழ நினச்சா, இயற்கையோட எங்க எனையறது, அது பிரிஞ்சுபோயி சுட்டெரிக்கும்!

said...

வாங்க சிவ பாலன்! நன்றி!

said...

அம்மா பொன்ஸ், இந்த 1$ கதைக்கு நான் ஏற்கனவே விளக்கம் கொடுத்திட்டேன், குறஞ்சது கொஞ்சம் கையில வச்சி படிக்கறாப்பலன்னா 4$ செலவு பண்ணனும், அதுவும் tax போட்டு அஞ்சு டாலராயிடும்!

said...

//மத்ததெல்லாம் நீரில் உருவாகும் குறைந்த மண்டல காற்றழுத்தம், ஆனா டோர்னோடோ நிலத்தில் உருவாகும் சூறாவெளி//

டொர்னடோ கடலின் மீதும் உருவாகும் அதற்கு WATERSPOUT என்று பெயர்.TORNAR - TO TURN in ஸ்பானிஷ்,டொர்னடா - சுழல் காற்று , எளிதாக சொன்னால் TWISTER ,இந்த பெயரில் ஒரு திரைப்படம் கூட உள்ளது டொர்னடோ பற்றி!

said...

மிக நல்ல பயனுள்ளபதிவு,இந்தப்படத்தின் சிடி கிடைக்குமா எனத்தேடவேண்டும்.
வருங்கால சந்ததிக்குநாம் தரப்போவது வசந்தங்களல்ல பிளாஸ்டிக்பூக்கள் தான்

said...

China is one more country which is screwing up the environment,veli kanda nathar.But if we restrain third world nations from developing their industries,citing environment as a reason that would certainly be double standards.USA is losing its status as a manufacturing nation and I hope this will reduce its pollution to a great extent.The only thing which is in the hands of common man is planting more trees.

said...

நல்ல பதிவு நாதரே.
//ஆனா அமெரிக்கா, உலக நாட்டாமை, நான் ஒன்னும் இதுக்கு ஒத்துக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க // நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு :-)

said...

நாதரே,

//1$க்குன்னா பக்கம் பக்கமா படிச்சது கையில வரும் பாத்துக்கங்க! காசுக்கேத்த் தோசை தான்!//

என்னொட அந்த $1 புத்தக வாங்கும் அனுகுமுறையும் Eco-friendlyயில் தான் விழுகிறது.

என்ன உங்களுக்கு ஆச்சரியம் எப்படி இந்த தெகா ஒரு டாலருக்கு வாங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிறேன் அப்படின்னு சொல்றனேன்னு பாக்குறீங்க, இல்லை. அப்புறம் எதுக்கு சார், இந்த யார்டு சேல், Antique ஸ்டோர் எல்லாம் இருக்கு.

நான் சொல்றது புச்சா அப்படி இருக்கும் சார், மைக்கலோட அத்தனை புத்தகமும் அப்படி வாங்கினதுதான். அவ்வளோதான் அவைகளுக்கு என் பார்வையில் மதிப்பு, நாவல்கள் தானே? ஓண்ணும் ரெபரன்ஸ் புத்தகங்கள் இல்லையே, ஷொல்ஃப்ல அடிக்கி வைக்க... பொன்ஸூ நோட் த பாயிண்ட் :-)

said...

வெளிகண்ட நாதர் சார்,

மிக மிக அருமையான பதிவு.

"க்லோபல் வார்மிங்" பற்றி பல ஜோக்குகளை படித்துள்ளேன், ஆனால் அதை பற்றிய தகவல்கள், ஆய்வுகள் இவ்வளவு தகவல்களை இப்போது தான் படித்தேன், மிகவும் அவசியமான ஆய்வுகட்டுரை. தோற்ற அனைவரும் (அரசியல்வாதிகள் உட்பட) இதுபோல் ஏதாவது ஒரு நற்செயலில் நேரத்தை செலவிட்டால் உலகிற்க்கு கோடி நன்மை.

said...

நல்ல பதிவு நாதரே.

//கிழக்கே வங்கத்தில் குடி கொண்ட "செல்வி"யின் சீற்றம் குறைந்தது//

இந்த பேர் தான் கிடைத்ததா....
தமிழ்நாட்ல போராட்டம் வெடிக்க போகுது.

said...

தெகா, வெகந, இதெல்லாம் ஒரு டாலருக்கு மேல எப்படியாவது வந்துடும்னா நான் ஊருக்கே போய் வாங்கிக்குவேன்..

பொதுவா 60,70 ரூபாய்க்கு சென்னைலயே கிடைக்குது.. படிச்சிட்டு திரும்பி 30- 40 ரூபாய்க்கு வித்திடலாம்.. அதுவே பெட்டர்னு தோணுது.. :)

said...

//வருங்கால சந்ததிக்குநாம் தரப்போவது வசந்தங்களல்ல பிளாஸ்டிக்பூக்கள் தான்//
வாருங்கள் சித்தன், அதுக்கு தான் கூடிய மட்டும் முயற்சி செய்வோம்னு!

said...

செல்வன், இனி வரும் நாட்களில் அதிகமா emission பண்ண போரது நாமும் சைனாவும் தான்! வெறும் மரங்கள் போதது, இந்த வாழ்க்கை முறைகளைய்ம் மாத்தனும்!

said...

தீர்ப்பை எங்க மாத்த்ப்போறாங்க, இந்த் க்யோட்டான்னு உலக நாடுகள் போனா, இவெங்க 'Asia-Pacific Partnership' இவெங்க் இன்னொரு ரூட்ல போறாங்க!

said...

சிவமுருகன், வருகைக்கு சந்தோஷம்!

said...

மனசு, நான் சும்மா தமாஷுக்கு எழுதுனேன்! இதில தமிழ்நாட்ல போராட்டமா-:)

said...

//வீட்ல சரியான பல்பு உபயோகிக்கிறதிலருந்து, உபயோகப்படாத நேரங்கள்ல எல்லா எலெக்ட்ரிக் அப்ளையன்ஸையும் பிளக்லருந்து எடுத்து வைக்கிறதிலருந்து, சரியா எல்லா பில்டர்ங்களையும் அது நேரம் வர்றப்ப மாத்திரதிலருந்து, இப்படி அடுக்கிக்கிட்டே போகலாம்! இதெல்லாம் செய்யுங்கன்னு, அமெரிக்க வாழ் மக்களுக்கு சொல்லி கொடுக்குது இந்த படத்திலே, அதை விவரமா படிச்சி தெரிஞ்சுக்கணும்னா, இதோ சுட்டி!
//

இதெல்லாம் நல்ல வழிமுறைகள் பாபா. சுட்டிக்கும் நன்றி. சுட்டியில சொல்லியிருக்கிறபடி நிறைய நாமே செய்யலாம். இதைப் பத்தி நிறைய படிச்சிருந்தாலும் பதிவாப் போடணும்ன்னு இதுவரைக்கும் தோணலை. நீங்க பதிவாப் போட்டு நல்ல செயல் செஞ்சிருக்கீங்க. நம்ம ஊருலயும் நாமே செய்யற மாதிரி நிறைய இருக்கு. அரசாங்கள் சட்டதிட்டம் போட்டு இதனை எதிர்கொள்ளணும்; மக்களும் தங்களால முடிஞ்ச அளவு இந்த வழிமுறைகளைப் பின்பற்றணும். அது தான் எல்லாருக்கும் நல்லது.

said...

மிகவும் நல்ல பதிவு.

அல்கோர் பாராட்டப்பட வேண்டியவர்.

இது போன்ற நல்ல தகவல்களை பலரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நண்பர்களிடம் வெட்டியாக சினிமா கதைகள் பேசுவதை விட, இது போன்ற விசயங்களை பேசி, விழிப்புணர்ச்சி கொண்டு வர வழி செய்ய வேண்டும்.