Sunday, February 12, 2006

எனை ஆண்ட அரிதாரம்- எட்டாம் பகுதி

நடிப்புன்னு இறங்கனோன கால்லூரி நாடகங்கள் மட்டும் இல்லாம வெளியில கமர்சியலா நாடகம் போடறவங்க குரூப்லயும் நடிக்க ஆரம்பிச்சேன். எப்படி இவங்களோட தொடர்பு ஏற்பட்டுச்சினா, இந்த பரபரப்பா இருக்கிற எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள், கவிதை எழுதுறவங்கன்னு எல்லாரையும் கல்லூரி நாடக விழா எதாவது ஒன்னுக்கு தலைமை தாங்க அழச்சிகிட்டு வருவோம். அப்படித்தான் விமலா ரமணி, உஷா சுப்ரமணியம், ராஜேஷ், புஷ்பா தங்கதுரை, கவிஞர் புவியரசு, சுகி சிவம், அப்படின்னு நிறைய பிரபல்யங்களை கூட்டிகிட்டு வருவோம். அப்படி ஒரு தடவை கே.பாக்யராஜை எங்க காலேஜுக்கு கூட்டிகிட்டு வந்தப்ப எனக்கு சினிமால நடிக்க எங்க காலேஜ் பிரின்ஸ்பலே ரெக்மண்ட் பண்ணுனாருன்னா பாத்துக்கங்களே, நம்ம எப்படி இந்த 'field'ல வளைய வந்திருப்போமுன்னு. ஏன் புகழ் பெற்ற டைரக்டர் மற்றும் நடிகர் மணிவண்ணன்,அப்ப அவரு சினிமாவுக்கு வராத நேரம், எங்க சீனியர் ஆறுமுகத்துக்கு பக்கா தோஸ்த்து, அடிக்கடி எங்க ஹாஸ்டல்ல மெஸ்ல வந்து சீனியரோட சேர்ந்து சாப்பிட்டு போவாரு. பிறகு அவரு சினிமால்ல நுழைஞ்சோன, நான் சான்ஸ் கேட்டு அவருகிட்ட அலைஞ்சதை அடுத்த பதிவுகள்ள விவரமா எழுதறேன்.





பிறகு மன்மதலீலை நடிச்சவர், கமலஹாசன் பாவமன்னிப்பு ஒருத்தருக்கிட்ட கேட்பாரு தெரியுங்களா, அவருதான். அவர் பேரு எனக்கு சரியா ஞாபகம் வரமாட்டங்கிது, தெரிஞ்சா யாரவது சொல்லுங்க! அப்ப கோவை மெட்டல்ஸ்ல அவரு ஒர்க் பண்ணிக்கிட்டு இருந்தாருன்னு நினெக்கிறேன். அவரு அதுக்கப்பறம் ஏனோ நிறைய படங்கள் நடிக்கல்ல, அவரு அந்த படத்தில சொல்ற ஒரு டைலாக் அப்ப ரொம்ப பேமஸ், 'ஆமாண்டி இப்ப சொல்றேன், நம்ம வேஷ்டி, நம்ம அன்ட்ராயர் எடுத்துட்டு வா, போ!' அவரையும் நாடகப் போட்டிக்கு ஜட்ஜா கூப்பிடுட்டு வந்திருக்கோம். பக்கத்தில போட்டாவும் போட்டு இருக்கேன், அவரோட சீனுங்களையும் கொஞ்சம் பாருங்களேன். இப்ப கொஞ்சம் off track ல போயி இந்த மன்மதலீலை படம் பத்தி கொஞ்சம் பேசுவோமா?

இந்த படம் 1976ல வந்ததுன்னு நினைக்கிறேன்!, அப்ப நான் ஹை-ஸ்கூலு படிச்சிக்கிட்டு இருந்த நேரம், கிருக்கா சினிமாவையே தான் சுத்தி, சுத்தி! அப்ப எங்க தெருவில இருக்கறவங்களுக்கு நான் தான் பிலிம்நியூஸ் ஆனந்தன் மாதிரி! பொம்மை, பேசும்படம் பத்திரிக்கை எல்லாம் படிச்சிட்டு சினிமா பத்தின விஷயங்களை நிறைய தெரிஞ்சு வச்சிருப்பேன். இப்ப இந்த பத்திரிக்கை எல்லாம் வருதான்னு தெரியாது, ஆனா அப்பவே கலர்புல்லா, நல்லா படிக்க ஜாலியா இருக்கும். நிறைய பொம்மை பார்க்கலாம். ஆனா விலை கொஞ்சம் அதிகம். இதை படிக்க பக்கத்தில இருக்கிற சிகை அலங்கார கடைக்கு போவேன். முடி வெட்டறது என்னமோ இரண்டு மாசத்துக்கு ஒரு வாட்டின்னாலும், டெய்லி போய் சும்மா உட்கார்ந்து படிச்சிட்டு வருவேன். அப்ப சலூன் ஆளுங்கெல்லாம் நமக்கு தோஸ்த்து. அப்ப மலேசியா வாசுதேவன் குரல்ல சும்மா பாடி வெளுத்து வாங்குவேன், அவரு பாடன சிதம்பரம் ஜெயரமான் குரல்ல 'ஆனந்த தேன் சிந்து தாலாட்டுதே! அலை பாயுதே!' அப்படின்னு ஆரம்பிகிற பாடல், மணிப்பூர் மாமியார் ங்கிற படத்தில வற்ரது. படம் ரிலீஸே ஆகல்லை, ஆனா பாட்டெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டு. அதைப் பாடி அந்த சலூன்ல இருந்த பெரிசுங்களை எல்லாம் குஷிப்படுத்துவேன். அவங்களும் நம்ம அடிக்கடி வந்து போறதை கண்டுக்க மாட்டங்க, அப்படித்தான் சினிமா செய்திகள், புதுப்படங்கள் பூஜை போடற்துன்னு ஏகப்பட்டதை தெரிஞ்சு வச்சிகிட்டு இருப்பேன். அப்புறம் நம்ம தெருவில வந்து படம் வர ஒரு ஆறு மாசமுன்னமே இதை அங்க இருந்த சிமென்ட் சுவுத்தில சாக்பீஸ்ல விலாவாரியா நடிகர், நடிகை, வசனகர்த்தா, டைரக்டர் முதக்கொண்டு எழுதி வைப்பேன். இந்த எழுத்துக்கும் ரசிகர் கூட்டம் உண்டு. அதில்லயும் தெருவில இருந்த ஒரு மாமி சினிமா பைத்தியம், ஆதனால நம்ம மேல கொஞ்ச்ம் வாஞசை! விவரம் கேட்டு தெரிஞ்சுக்கும். நாங்க ரெண்டு பேரும் மணிகணக்கா சினிமா கதை அடிச்சிக்கிட்டு இருப்போம். மாமா சாய்ந்திரம் ஆபிஸ்ல இருந்து வந்து துரத்திற வர, இந்த கதைக்கிறது தான். மாமா அதிகமா ஒன்னும் நம்மல திட்டமாட்டார். ஏன்னா கொஞ்சம் நல்லா நான் படிப்பேன் வேறே! சரி அவங்க பசங்களுக்கும் படிப்பில நான் ஒத்தாசையா இருக்கிறதாலே விட்டுவிடுவார்.

இந்தப் படம் நான் ரொம்ப ரசிச்ச படங்கள்ல ஒன்னு, கமலஹாசனுக்கு ஜோடி அப்ப கிளப் டான்ஸ் ஆடற 'ஆலம்' னு ஒரு நடிகை, ஹீரோயின். அப்புறம் புதுசா இதுல ஏகப்பட்ட நடிகைங்க, ஜெயப்ரதால்லாம் நடிச்சு பேமஸ் ஆகறதுக்கு முன்னால இந்த படத்தில நடிச்சி தான் அப்புறம் 'நினைத்தாலே இனிக்கும்','47 நாட்கள்'னு பிறகு வந்த படத்தில நடிச்சதெல்லாம். இன்னொரு முக்கியமான அம்னி ஒய் விஜயா, ராங் நம்பர் ஒய் விஜயா ஆனாங்க! இப்ப நம்ம எஸ் ஜே சூர்யாவெல்லாம் செக்ஸ் படம் எடுத்து ஊரை கெடுக்கிறாருன்னு சும்மா சால்ஜாப்பு சொல்லிக்கிட்டு இருக்கோம். அப்பவே பாலசந்தர் இந்த மாதிரி கிளு கிளுப்பான படம் கொடுத்தவரு! அவரை பத்தி அப்புறமா அதிகமா இன்னொரு பதிவில பேசலாம். சரி விட்ட இடத்துக்கு போவோமா?

அப்படி பிரபலங்களை கூப்பிட்டு வந்து கொளரவிக்கும் போது, இந்த கோவை வானொலி நாடக நடிகர் சேகரையும் ஒரு ஃபங்க்ஷனுக்கு கூப்பிட்டுட்டு வந்தோம். அப்படி கூப்பிட்டு வந்தப்ப நம்ம நடிப்பை எல்லாம் பாத்து, அவரு ஒரு கமர்ஷியலா நாடகம் போட்டப்ப எனக்கு ஒரு ரோல் கொடுத்தார்.
அவரு ஒரு பேங்க் மேனேஜர், ஸைட்ல டிராமாவெல்லாம் போட்டு நடிச்சுக்கிட்டு இருந்தாரு. அப்படி நடிச்ச நாடகத்தில நமக்கு ஒரு வில்லன் ரோல். அதில ரஜினியோட அந்த கால பரட்டை, காளி அப்புறம் கதாநாயகனா நடிச்ச 'பைரவி'யோட தாக்கம் நம்ம கிட்ட நிறையவே இருந்ததால, அப்படியே நடிச்சு ரொம்ப கைத்தட்டல் எல்லாம் வாங்கின காலம். நம்ம அந்த நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் என் காலேஜ்ல.

அந்த நாடகம் அப்ப உள்ள ஸ்டைல், பக்கம் பக்கமா அவங்க வசனம் வச்சிகிட்டாங்க. எனக்கு பண்ணை மைனர் ரோலு, நம்மக்கூட வற்ர மாதிரி இன்னொரு கேரக்டர்ல, சீனிவாசன்னு பக்கா காமடியன். கமர்சியல் நாடகங்கள்ல நடிச்சி பேர் வாங்கினவர், என்ன எப்பவும் கொஞ்சம் மப்புலதான் இருப்பாரு. நாங்க இரண்டு பேரும் வற்ர சீனுங்க ரொம்ப கலக்கலா இருக்கும். அந்த நாடக டைரக்டர் லஷ்மி மில்ஸ்ல வேலை பாத்தவரு.நம்ம வானொலி நடிகருக்கு ஹீரோ ரோலு, அந்த டைரக்டரும் ஒரு பெரிய சப்போர்டிங் ரோல் எடுத்து கோயில் பூசாரி ரோலுன்னு நினைக்கிறேன். அப்பதான் முதன் முதலா நான் ஸ்திரி பார்ட்ல பொண்களோட நடிச்சது. அந்த நாடகத்து ஹீரோயின் கோவையில அப்ப பிரபலமா இருந்தது. கோவை சரளா எல்லாம் சினிமால்ல நடிக்க முன்னாடி, அப்பவே அந்த ஹீரோயினுக்கு தோஸ்த்து, எங்க டிராமா ரிகர்சல்ல பார்த்திருக்கேன். நம்மை வில்லானா போட்டது இல்லாம, இரெண்டு டிக்கட்டு கட்டை தூக்கி கொடுத்துட்டாரு அந்த சேகரு. நானும் எங்க பசங்க காலை கையை புடிச்சு ஒரு 40% கும்பல் அந்த நாடகத்துக்கு எங்க காலேஜ் கும்பலுதான். அதில அவரு பண்ண எக்னாமிக்ஸ் அவருக்கே எமனாவும்னு தெரியுமா என்ன அவருக்கு? அது என்னான்னு அடுத்த பதிவுல பார்க்கலாமா?

2 comments:

said...

என்னவோ போங்க.. இரா. மு காலத்துலேர்ந்தெல்லாம் (அதான் நான் பொறக்கறதுக்கு முன்னாடி :) )படம் பேரா சொல்றீங்க. மணிப்பூர் மாமியாரா? :))

மன்மத லீலை பத்தி கேள்விதான் பட்டிருக்கேன். பாத்ததில்லை.

பைரவி ஸ்டில்லுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!

said...

அப்ப நீங்க ரொம்ப இளசுங்களா! 'மணிப்பூர் மாமியார்' படம் பாட்டுக்கள் அந்த காலத்தில எல்பின்னு சொல்லுவாங்க, அப்படி ஒரு இசைத்தட்டுல வரும். அந்த இசைத்தட்டின் அட்டைப்படம் இப்பவும் என் கண்ணுமுன்னாடி நிக்குது. அதல ஒரு பெண்ணோட தொப்புள் மட்டும் பெரிசா focus பண்ணி, அதுல ஒரு சாவி தொங்கற மாதிரின்னு நினைக்கிறேன். பார்க்க நல்ல இருக்கும்.

இப்ப மன்மதலீலை கிளிப்பு பார்த்தீங்களா?