பொதுவா சினிமா, நாடகங்கள்ல எல்லாருக்குமே ஒரு ஈடுபாடு இருக்கும். ஆனா சிலபேருக்குத்தான், அதீத ஆர்வம் ஏற்பட்டு, அதில ஈடுபடனும்னு தோணும். அதிகமா எல்லாரும் விரும்பவது நடிக்கத்தான், அதற்குப்பறம் பாடுவதுல்ல ஆர்வம் வெளிப்படும். பிறகு தான் கதை எழுதறது, வசனம் எழுதறது எல்லாம். அப்படித்தான் நான் ரொம்ப சின்ன வயசிலிருந்தே, நடிக்க ஆர்வம் வந்தது, ஏன்னா, என்னுடய ஸ்கூல் நாடகங்கள் எல்லாம் என்னுடய அமல்ராஜ் வாத்தியார் எழுதறதுதான், அதில நடிக்க முடியுமே தவிர, நாங்களா கதை எல்லாம் எழுத முடியாது, பிறகு, இஞ்சினியரிங் காலேஜ் வந்தோன, நானே பெரும்பாலும் கதை எழுதி,இயக்கி,நடிச்சது தான். பெரும்பாலும் அந்த காலங்கள்ல வந்த சினிமாக்கள், அதாவது 70 கடைசியில், 80களுன் தொடக்கத்தில், எல்லாம் பார்த்திங்கன்னா, பெரும்பாலும், பாக்யராஜ், டி.ராஜேந்தர், மாதிரி ஆளுங்க அவங்களே கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி நடிப்பாங்க.அதுக்கு முன்ன எல்லாம் கதை ஒருத்தரதா இருக்கும், அதை திரைப்படமா செய்யறப்ப, திரைக்கதை இன்னொருத்தங்க எழுதுவாங்க!. பாலசந்தர், தன் படங்களுக்கு, கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி இயக்குவார். ஆனால், பாரதிராஜா, கதை எதுவும் எழுதமாட்டார், அவருடய முதல் படம் 'பதினாறு வயதினிலே' தவிர, மற்ற படங்கள் அத்தனைக்கும் திரைக்கதை தான் அவருடயது, கதை வேறொருத்தருதா இருக்கும். திரைக்கதை எழுதறது ஒரு தனிக்கலை. சில நல்ல கதைகள், நாவலா படிக்கிறப்ப, ரொம்ப நல்லா இருக்கும். ஆனா அதை படமா எடுக்கிறப்ப குட்டிச்சுவராக்கிருவாங்க, மிகப்பெரிய உதாரணங்க,'ப்ரியா', 'கரையெல்லாம் சென்பகப்பூ', சுஜாதாவோட கதை படிச்சவங்களுக்கு அது ரொம்ப நல்லாத்தெரியும். ஏன்னா, கதை எழுத்துல வரதுங்கிறது வேறே, சினிமாவா திரைக்கதை அமக்கிறதுங்கிறது வேறே! அதே மாதிரி நாவல்ல இருந்ததை விட, சிறப்பா சினிமா படங்கள் வந்த கதையும் இருக்கு. அதுல நம்ம மகேந்திரன் கெட்டிக்காரரு!
எப்பொழுதுமே திரைக்கதை அமக்கிறதோ, நாடகசீன்களை தொகுக்கிறதோ, கதையின் sequence லருந்து வேற மாதிரி அமைக்கனும். சினிமா திரைக்கதை அமைக்கிறதும், நாடகத்திரைக்கதை அமைக்கிறதும் வேற வேற ஸ்டைல்.

சினிமால விஷ்வலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வசனங்களை கம்மிப்பண்ணி கதையை தொகுக்கணும், ஆனா, நாடகங்களுக்கு வசனம் உயிர் மூச்சு. அதுனால, பாலசந்தர், அவர் ஆரம்பக்கட்டத்தில எடுத்த 'நீர்க்குமிழி', 'எதிர்நீச்சல்', 'பாமாவிஜயம்', 'இரு கோடுகள்', 'நூற்றுக்குநூறு' எல்லாம் வசனங்கள், உணர்ச்சிபிழம்புகளா வெளிகொண்டு வந்து, அந்த சினிமாக்கள் எல்லாமே நாடகத்தன்மையை ஒட்டி இருக்கும். ஆனா அதே பாலசந்தர், இரண்டாவது கட்டமா எடுத்த படங்கள், 'அபூர்வ ராகங்கள்', 'மூன்றுமுடிச்சு', 'அவள் ஒரு தொடர்கதை', 'அரங்கேற்றம்', 'நூல்வேலி', 'அவர்கள்', 'தப்புத்தாளங்கள்', 'நிழல் நிஜமாகிறது' இந்த படங்கலள் எல்லாம் வித்தியாசமான் கதை கருவைக் கொண்டு, வசனங்களை கம்மிப்பண்ணி, கதைகளை பலமுடிச்சுடுன் கொண்டுபோயி, கடைசியில விடைகளை ரசிகர்முன்ன கேள்விக்குறியா வைச்சு படம் எடுத்தது அவருடய தனி முத்திரை! அவரோட இருந்த அனந்தும், இதற்கு காரணம் என்பேன். அப்பயும் அவரு காட்சிகளை விஷ்வலா அதிகம் எடுத்திருக்கமாட்டார். நான் சொல்லறது 'Cinemotography' பத்தி இல்ல காட்சி அமைப்புகளை, ஏன்னா அவருடய அப்பத்த கேமராமேன், 'லோகநாதன்' கருப்பு வெள்ளையில எடுத்த நிறைய காட்சிகள் கண்ணுக்கு விருந்தா இருக்கும்.அப்ப நிறையப்பேர், 'ஈஸ்ட்மேன்' கலர்ல படம் எடுக்கத்தொடங்கனப்ப, அவர் தொடர்ந்து கருப்புவெள்ளயில எடுத்து வந்தார். இருந்தும் அத்தனையும் கிளாசிக்கல்லா இருக்கும். பிறகு அவரும் கலருக்கு மாறுனது காலத்தின் கட்டாயம். அந்த காலக்கட்டங்கள் எடுத்த நிறைய 'Classic Movies' எல்லாம் 'Black and White' தான். ஏன் பாரதிராஜா எடுத்த 'பதினாறு வயதினிலே'க் கூட கொஞ்சம் டெக்னிகலா தரம் தாழ்ந்த ஆர்வோ கலர் பிலிம்ல எடுத்தது தான். ஏன்னா கலர் பிலிம் தொழில்நுட்பத்தின் ஆரம்பக்கட்டம் , விலை ஜாஸ்த்தி!
பாரதிராஜா திரைக்கதை அமைக்கிறதுல கில்லாடி. அவர் ஆரம்பக்கட்ட சமயங்கள்ல எடுத்த நிறையப்படங்கள் கதை 'ஆர் செல்வராஜ்'ஜோடது. பாரதிராஜாப் படங்கள் முழுசா கிராமத்து வாசனை வீசக்காராணமே நம்ம செல்வராஜ்தான். ஆனா அவரா தனியாப் போயி படம் டைரக்ட் பண்ண ஆரம்பிச்சு ஏனோ சரியா சோடைப்போகல்ல. அவரு எடுத்த 'பொண்ணு ஊருக்குப் புதுசு' படம் எத்தன பேரு பார்த்திருப்பீங்கன்னு எனக்கு த்தெரியாது. அதில வர ஓரம் போ, ஓரம் போ, ருக்குமணி வண்டி வருது' ங்கிற பாட்டு ரொம்ப பேமஸ். அந்த பாட்லக் கூட சூசகமா நான் பாரதிராஜாவை முந்திக்காட்டுவேன்னு சொல்லியிருப்பாரு. வேணும்னா கேட்டுப்பாருங்க! .
0 comments:
Post a Comment