நான் எழுதனும்னு நினைச்ச இந்த பாரதிராஜாவின் ஐந்து நட்சத்திரங்களை, எனை ஆண்ட அரிதார சிறப்பு பகுதியிலே அதிகமா சொல்ல முடியாம போயிடுச்சு, வேறே ஒலி கலப்பு பண்ணி புதுசா குடுக்கலாமுன்னு நேரம் செலவழிச்சதாலே முழுசும் எழுத முடியல்லை, அதான்! இப்ப விஷயத்துக்கு வர்றேன்! முத அஞ்சு படங்கள் எல்லோரையும் கவுத்து போட்டது, ஒவ்வொன்னும் பத்தியும் நினச்சு பார்க்கும் போது, அப்படியே நான் ஒரு பதினைஞ்சு வருஷம் கம்மியான மாதிரி! அதாவது நான் வாலிபத்தின் தொடக்கத்தில இருந்த நேரம்! பாரதிராஜாவும் எங்களுக்கே வேண்டிய காதல் கதைகளை தமிழ் நாட்டு மணம் கமிழ சொல்லி, அங்கங்க ஐதீகம், கிராமபஞ்சாயத்து, அப்படின்னு சொல்லி வந்த படங்கள். என்னா ஒரு குறைன்னா, நம்ம பிரகாஷ் சொன்ன மாதிரி கிராமத்து தேவதைகள் எல்லாருமே பவுடர் பூசின சுந்திரிகள்! அதான் கதாநாயகிகளை மட்டும் கொஞ்சம் இயற்கையா காமிச்சிருந்தாருன்னா நல்லா இருக்கும்! ஆனா அப்படி காமிச்சா கதைக்கு நல்லா இருக்கலாம், யாரு அவங்களை பார்க்கிறது-:) சரி அந்த ஐந்து படங்களையும் பார்ப்போம்!
16 வயதினிலே: நான் எற்கனவே சொன்ன மாதிரி, இது முதப்படம், கிராம மணம் கமிழ வந்தப்படம். அப்ப கமல்,ரஜினி எல்லாம் லீட் ஆக்டருங்க கிடையாது, சட்டையை வேட்டியை கழட்டிப்போட்டுட்டு கோமணத்தோட நடிக்க யாரும் முன் வராத காலம்! அதுவும் வாய் நிறைய பொகையிலையே மென்னுக்கிட்டு! ஸ்ரீதேவியை பத்தி நிறைய சொல்லிட்டேன், இந்தபடம் வந்தப்ப நான் எஸ் எஸ் எல் சி படிச்சி முடிச்சி ஷேஷஷாயி இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்த நேரம்! மலேசியா வாசுதேவன் குரல் எனக்கு கப்புன்னு புடிச்சிருந்தது, அது வரைக்கும் இந்த உச்சாயிலேயே பாடி அலுப்பு அடைய வச்சிருந்த டிஎம்ஸ் க்கு சமமா பளீர்னு பாடிய பாடகர், புதுசா வந்திருந்த நேரம்! எனக்கு அவரை குரலை கேட்டமாத்திரத்திலே புடிச்சிப்போச்சு!
17 comments:
உதயகுமார்,
நல்ல அனுபவிச்சு எழுதி இருக்கீங்க. நீங்க சொன்ன வசனங்கள் எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை.
அதுலேயும் சில படங்கள் நான் பார்க்கலை. போன முறைதான் நிழல்கள் ( பொன்மாலைப்பொழுது) பாட்டுக்காக வாங்கி வந்தேன்.
சார்
நல்ல பதிவு.
அருமையா சொல்லியிருக்கீர்கள்.
என்னை பொருத்தவரையில் 16 வயதினிலே தான் பாரதிராஜாவின்
"Master Piece"
மிக்க நன்றி!
வணக்கம் வெளிகண்ட நாதர்!
அது என்ன திரைப்படம் பற்றி எழுதும் போது மட்டும் உங்கள் எழுத்துல ஒரு துள்ளல் தென்படுது! கனவுலகத்தில் நுழைய ஆசைப்பட்டதால இன்றும் திரையுலகம் மேல இருக்க காதலா? நீங்க சொல்ற படம் எல்லாம் வந்தக்காலத்துல இந்த மேதை(தன்னடக்கதோட தான் இதை சொல்கிறேன்,என்னை நானெ சொல்லிகலைனா வேற யார் சொல்வா ஹி.. ஹி.. ஹி) பிறக்கவே இல்லை இல்லைனா உங்களுக்கு போட்டியா வந்து இருப்பேன் :-))
வழக்கம் போல நல்லா இருக்கு இந்த பதிவும்!
வெளிகண்ட நாதர்,
உங்களின் அனுபவங்களை ஒலி வடிவிலும், எழுத்துருவிலும் அருமையாகத் தந்துள்ளீர்கள்.
நீங்கள் குறிப்பிட்ட 5 படங்களில் ஒன்று மட்டும்தான் பார்த்தேன். நிறம் மாறாத பூக்கள் படம் சில வருடங்களின் முன் பார்த்தேன். நீங்கள் சொல்வது போல் அதில் வரும் பாடல்கள் ஜென்சி அவர்களின் குரலில் மிகவும் இனிமையாக உள்ளது. ஆயிரம் மலர்களே , இரு பறவைகள் இந்த இரு பாடல்களும் மிகவும் இனிமை.
நன்றி.
அன்புடன்
வெற்றி
நல்ல அனுபவிச்சு எழுதி இருக்கீங்க. // உண்மை தான் துளசி, அந்த காலத்தில் அனுபவிச்சது மறக்க முடியாத ஒன்னு! இந்த அஞ்சு படத்தையும் பாருங்க நான் சொல்றது புரியும்! அந்த காலத்திலே சினமான்னு ஜாஸ்தி சுத்தினவன். இந்த பாரதிராஜா வந்த புதுசுல அவ்ரு டைரக்ஷன், படங்கள்னா பைத்தியமா அலைஞ்சவன். இன்னைக்கும் பாட்ட்டு காட்சிகள் எப்படி எடுத்தாங்க அப்படின்னு அலசி இருக்கேன்! இதை பத்தி ஒரு தடவை இந்த பாடல் காட்சிகள் எடுப்பதையும் பின்னாடி அதை எடிட் செஞ்சு எப்படி அழகா விஷுவல் தந்தாருங்கறதையும் ஜஸ்ட் எழுத்திலே இல்லே வீடியே வச்சு விளக்குறேன் பாருங்க அப்ப புரியும் உங்களுக்கு!
வழக்கம் போல முதல் ஆஜர் நீங்க, நன்றி!
பிலிம் நியூஸ் ஆனந்தன்,ரோஜா முத்தையா மாதிரி அபூர்வ தகவல்கள் தருகிறீர்கள் நாதர்.சிவப்பு ரோஜாக்கள் வந்தப்ப நான் சின்ன பையன்.ஆனா அப்பவே பரபரப்பா பேசுவாங்க.பாரதிராஜா சிவப்புரோஜாக்கள் பாணியில் டிக்,டிக்,டிக் எடுத்தார்.நல்லா ஓடுச்சு.கேப்டன் மகள் கவுத்து விட்டுடுச்சு.
என்னை பொருத்தவரையில் 16 வயதினிலே தான் பாரதிராஜாவின்
"Master Piece"// சிவபாலன், இது முதப்படம், ஒரு ட்ரெண்ட் செட்டர், இன்னைக்கு இருக்கிற சேரன் வரை பாரதிராஜாவின் trait தான்! அதை யாராலும் மறுக்க முடியாது!
//அது என்ன திரைப்படம் பற்றி எழுதும் போது மட்டும் உங்கள் எழுத்துல ஒரு துள்ளல் தென்படுது!// வவ்வால் அது உண்மை தான்! அந்த காலத்திலே கனவுலகம் போகனும் தலைகீழா எல்லாத்தையும் புடிச்சிக்கிட்டு நின்னது என்னவோ உண்மை! ஆனா அதில நுழைஞ்சா, பெரிய ஆளாகிறவரை கவுருதை பார்க்க கூடாது! அதினால வரும் அவமானங்கள் அதிகம். அந்த காலகட்டங்கள் நான் நேரில் கண்ட உண்மை. இதெல்லாம் விடுட்டு ஒரு நாள் தூரப்போயி உட்கார்ந்து யோசிச்சப்ப, நம்ம படிச்ச படிப்பு என்னா, நம்ம போவேண்டியெது எங்கெயோன்னு யோசிச்சு பட் அதை அப்படி தூர போட்டுட்டு ஓடியாந்திட்டேன். என்னோட அரிதாரம் தொடர்ந்து வந்து படிங்க, இன்னும் நான் சொல்ல வேண்டியது எவ்வளவோ இருக்கு-:)
பிறக்கவே இல்லை இல்லைனா உங்களுக்கு போட்டியா வந்து இருப்பேன் :-)) //அத்னால என்ன இப்ப வாங்க பார்த்துடுவோம்-:)
வெற்றி, என்னுடய தீவிர ரசிகர் ஆயிட்டீங்க போல-:) டிவிடி கிடைச்சா எல்லா படத்தையும் பாருங்க! நான் சொன்னது புரியும்!
நானும் பாரதிராஜவின் ரசிகன்.
ஆரம்பக்கால பாரதிராஜா படங்கள் பற்றிய அட்டகாசமான பதிவு. நிறம் மாறத பூக்கள் தவிர மற்ற நான்கு படங்க்ளையும் பார்த்துவிட்டேன். பாரதிராஜவின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் "முதல் மரியாதை". இந்த படத்தில் வரும் சிவாஜி கேரக்டர் எனது தந்தையைப் போன்ற ஒரு soft கிராமத்து மனிதர் கேரக்டர். இறந்துபோன என் தந்தயைப்பற்றி எண்ணும்போதெல்லாம் DVD-யில் பார்க்கும் படம். கிட்டத்தட்ட ஒரு 25 தடவைக்குமேல் பார்த்த படம்.
செல்வன், அந்த 70 கடைசி, 80 களில் வந்த பெரும்பாலும் படங்களை வெறும் படங்கள் என்று பார்த்த மட்டிலே இருந்ததில்லை, அபொழுது வந்த திரைப்படங்களின் அத்தனை நியூஸையும், பட எடுத்த டெக்னிக் எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டிருந்தோம்!
அதை எடிட் செஞ்சு எப்படி அழகா விஷுவல் தந்தாருங்கறதையும் ஜஸ்ட் எழுத்திலே இல்லே வீடியோ வச்சு விளக்குறேன் பாருங்க...//
இப்படி நிறைய ட்ரெய்லரா உட்டா எப்படி?
16, வார்ப்புகள், பூக்கள், ரயில், ரோஜாக்கள் - இது என் ranking..
இப்படி நிறைய ட்ரெய்லரா உட்டா எப்படி?// தருமி சார், ட்ரெய்லர் நல்லா இருக்கும், நீங்க நம்பிக்கையோட பார்க்கலாம்!
உங்க ரேங்கிங் தான் என்னோடதும். இருந்தும், எதையும் கம்மின்னு சொல்ல முடியாது!. இது மாதிரி அவரோட அடுத்த் கட்ட அஞ்சிலே டாப் 'நிழ்ல்கள்', அப்புறம், மோசமா எடுத்து பேரை கெடுத்துக்கிட்ட படம், 'வாலிபமே வா வா', ஞாபகம் இருக்கா??
podbazaar பார்த்தேன்.. இந்தப் பதிவின் ஒலிவடிவமும் அதில் இருக்கோ? சரி, "என்னை ஆண்ட அரிதாரம்" என்ற podbazaar பக்கத்தில் போய்ப் பார்த்தா உங்க குரல் பதிவு 4 இருக்கு.. Subscribe-க்கு கீழே iTunes click பண்ணிட்டா அந்த நாலுமே நம்ம iTunes-ல சேமிக்கப்படுமா? அப்புறம் உங்க புதிய podcast-கள் எது வந்தாலும் தானிறங்கியா நம்ம iTunes-இல் வந்துடுமா? நமக்கு இந்த ஐப்பாடு எல்லாம் புதுசா இருக்கா.. அதான் இந்தப் பாடா இருக்கு :-)
ஆமாம், நீங்க Subscribe பண்ணிட்ட புதுசா வர எதுவும் உங்க iTunes-ல சேமிச்சிக்கலாம். அதாவது 'எனை ஆண்ட அரிதாரதம்' என்ற புரோகிராமுக்கு நீங்க Subscribe பண்ணனும்! பழசை தனி தனியா தான் தரவிறக்கனும்! அப்பறம் இந்த பதிவிலே போட்ட ஒலிப்பதிவை experimentala போட்டு Podbazaarல ஆரம்பிச்சேன், இரண்டும் ஒன்னு தான்! ஏற்கனவே நம்ம ரசிகர் ஒரு 25 பேரு Subscribe பண்ணி இருக்காங்க-:) நீங்க 26வது! வாழ்த்துக்கள்-:)
ஆகா அருமை.
சூப்பர் பாடல்கள். ராஜாக்களின் சங்கமத்தில் எத்தனை இனிமை.
அவரின் ஆஸ்தான ஊரான முட்டத்தில் எடுத்த படங்கள் பற்றி ஏதாவது???
Post a Comment