Friday, October 21, 2005

சேட்டையும் வாலுத்தனமும் என் முதல் மூலதனம்

நம்ம எல்லாருமே சின்ன பிள்ளையிலே சேட்டை வாலுத்தனம் பண்ணிகிட்டு இருந்துருப்போம், அதுவும் ஒரு சில வயசுவரைக்கும். அதிலயும் இது ரொம்ப பேருக்கு ஜாஸ்தியாவே இருக்கும், அந்த மாதிரி தான் எனக்கும். ஒரு இடத்தில்லே நிக்கமாட்டேன். தெருவில விளயாடப் போன ஊரு வம்பயே இழுத்துக்கிட்டு வருவேன். என்னை விட சின்ன பிள்ளங்கண்னா, அவங்களை எதாவது வம்புகிழுத்து அடிச்சிட்டு வந்தவிடுவது, இல்ல கீழ தள்ளிவிட்டு வந்துவிடுவது, துணிகாய வச்சிருந்தாலோ, இல்ல வடகம் காயவச்சிருந்தாலோ இழுத்து போட்டுவிடுவது, சின்ன குழந்தங்களை மண்ணில புதச்சிவிட்டுட்டு வந்து விடுவது, மரம் ஏறி கீழேவிழுவது, அந்த வயசுக்கு உண்டான அத்தனை குறும்புத் தனங்களையும் பண்ணிகிட்டுத் தான் இருந்தேன். அதுனாலேயே எல்லாரும் என்னை அறுந்த வாலு, குரங்குன்னு திட்டிக்கிட்டு இருப்பாங்க. தெருவுகாரங்கன்னு இல்லாம, சொந்தக் காரங்க வீட்டுக்குப்போனாலும் இந்த கதைதான். அதல வேடிக்கை என்னான்னா, நான் எங்க மாமா வீட்டுக்குப்போறப்பல்லாம், எனக்கும் எங்கத் தாத்தாவுக்கும் தான் எப்போதுமே போர்களம், அவரு வச்சிருந்த அத்தனை சாமனையும் இழுத்துப் போட்டு உடச்சிடுவேன். அப்பறம் என்ன அடி உதை வாங்க வேண்டியதுதான். விடாம நானும் ஏதாவது கோட்டி பண்ணிகிட்டே தான் இருப்பேன். என் தாத்தாவும் "எங்கேயோ மரத்தில இருக்க வேண்டியது, என் மவ வயத்தில வந்து பொறங்திருக்குன்னு" பொலம்பிக் கிட்டே தான் இருப்பார். இதில இன்னும் வேடிக்கை என்னான, தீபாவளி வந்தா தன் மகங்களுக்கு பொறந்த பேரன்களுக்குன்னு வாங்கி வச்சிருக்கிற வெடி, பட்டாஸ்ங்களை எடுத்து வெடிச்சிடுவேன், அப்பறம் அவர் அய்யோ பொய்யோன்னு கத்திகிட்டு எங்க அம்மா, சித்திங்ககிட்ட கம்ப்ளைன் பண்ணுவார், அவர்களும் எனக்கு சப்போர்ட்டா, ஏன் மக வயித்து பேரன், பேத்தி எடுத்து வெடிச்சாதான் என்ன குறஞ்சுபோகும், எப்பவுமே மூத்த மகன் பேரனுக்குத்தான் கொடுக்குனுமோ? என்று கேட்டு அவரை அடக்கி விடுவார்கள். அப்பறம் நமுக்கும் கொஞ்சம் அடி உதை விழும், கண்டுக்காமே போயிடுவேன். பிறகு ஒரு நாள் சாயுங்காலம் எங்க மாமா வீட்டுக்கு எங்க அம்மாவோட போயிருந்தப்ப, மாட்டுக்குப் போடற வக்கபோற ஒரு ரூம்ல கட்டிப் போட்டு வச்சிருந்தாங்க (அப்ப மாட்டுத் தொழுவமல்லாம் வீட்டுக்குள்ளயே இருக்கும், எங்க தாத்தா இருந்த வரை அதெல்லாம் கவனிச்சிக்கிட்டு இருந்தார், அப்புறம் எல்லாம் போயேபோச்சு, எல்லாரும் வேலைத் தேடி பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப்பு, துப்பாக்கித் தொழிற்சாலை, சிம்சன் மீட்டர் கம்பனின்னு ஒன்னு போயிட்டாங்க, இல்ல, கடை கண்ணின்னு வச்சு பொழக்க ஆரம்பிச்சாட்டாங்க, யாரும் இந்த தோட்டம், துரவு, மாடு இதல்லாம் வச்சு பொழச்சதெல்லாம் போச்சு, இந்த கிராமத்துலருந்து குடிபெயர்ந்து, நகர வாழ்க்கை ஆரம்பிச்சோன, அதாவது 40, 50 கிளில், டவுண்களில் வாழ்க்கை அமச்சிகிட்டவங்கள்ள, அந்த பழசுங்கதான் அதெ அப்படியே மெயிட்டன் பண்ணிகிட்டு இருந்துச்சுங்க) கொஞ்ச தூரம் தள்ளி எங்க அத்தை ஸ்டவுல சோறு வடிச்சுக்கிட்டு இருந்தாங்க. அப்பத்தான் நம்ம குறும்பு புத்தி ஒன்னு வேலை செஞ்சிச்சு, பக்கத்தில இருந்த விளக்குமாத்துலருந்து குச்சியை உருவி, அப்படியே ஸ்டவ்வுள காமிச்சு பத்த வச்சு, கொளுத்தி பக்கத்தில இருந்த வக்கப்போருல போட்டுட்டேன். அப்பறம் என்ன, வக்கப்போறு பத்திக்கிட்டு எரிய ஆரம்பிச்சுடுச்சு, நல்லவேளை, வீடே பத்தி எரியறத்துக்கு முன்னே தண்ணியை ஊத்தி அணைச்சிட்டாங்க. அப்பறம் நமக்கு நல்ல பூசைதான். இப்படியே நம்ம வாழ்க்கை போயிட்டுருந்து, ஸ்கூலயேயும் இதே குறும்புத்தனம் தான். ஆன என்ன ஒரு கன்சோலேசன்ன நமக்கு கொஞ்சம் படிப்பு வரும், மத்தவங்க எல்லாம் சுமார் ரகம், என் வயசுல்ல உல்ல என் சொந்தகாரப்பயங்களோட நம்ம கொஞ்சம் உசத்தி தான். அதுக்காக நம்ம பண்ற குறும்பெல்லாம் கண்டுக்காம விட்டற முடியுமா என்ன, அதனால நான் வாங்கத அடி கொஞ்ச நஞ்சமில்ல.

ஆமா சின்ன பிள்ளைகள் குறும்பு பன்றது இயல்புதானே இதல என்ன விஷேசங்கிறிங்களா, அதான், இந்த மாதிரி சூப்பர் ஆக்டிவா சின்ன புள்ளகல்ல இருந்தவங்க இந்த ஒரு விஷேச குணத்தினால நல்ல படியா வாழ்க்கையிலே முன்னேறி இருந்திருக்காங்க, இல்ல ஒன்னுமில்லாம வெறும்பயலாவும் போயிருக்காங்க, ஆணா 90 சதவீதம் மேல நல்ல நிலமைக்கு வந்தவங்காதான் உண்டு, இதல்ல எனக்கு தெரிஞ்ச எக்ஸாம்பிள் நிறைய இருக்கு, ஏன் நானே ஒரு நல்ல உதாரணம். இப்படி குறும்பு பண்ற குழந்தைங்களை ஏண்டா இவங்க இப்படி இருக்குது, நமக்கு கஷ்டாமே இருக்கென்னு நினக்காதீங்க, இதல்ல முக்கியமா அவங்களை கையிட் பண்ணி அவங்க கிட்ட இருக்கிற இந்த குறும்பு தனங்களை பாஸிட்டுவாக்கி, கொண்டு வந்தோமுன்னா, அவங்க பிரிலியன்டா நல்ல முறையில வாழ்க்கையில வெற்றி காண வாய்ப்பு இருக்கு. இந்த ஒரு கேரக்டர்ஸோட இருக்கிற தனித்துவமே தனி. இப்படி குறும்பா சேட்டை பண்ணி திரிஞ்ச என்னை, எப்பவுமே திட்டி தீத்த என் தெரு அக்காங்க, நான் வளர்ந்து, என்னுடய அடலசன்ட் வயசுலே என்னப் பார்த்து ஆச்சிரியப்பட்டதும் உண்டு. அதபத்தி விரிவா அப்பறம் சொல்றேன். இப்பவும், இந்த வயசலேயும் இத நெனச்சி பார்க்கும் பொழுது, நாம எப்படி இருந்தோம், நம்ம இப்படி ஆயிட்டோமுனுதான் தோணுது.

2 comments:

said...

குறும்பை ரசித்தேன். தீபாவளி வாழ்த்துக்கள்.

said...

\\எப்படி இருந்தோம், நம்ம இப்படி ஆயிட்டோமுனுதான் தோணுது.\\
Vivek sollrathuthan nalla irukum Ka Ka Ka (thatha nalla kariutha kakam)