Showing posts with label வணிகம். Show all posts
Showing posts with label வணிகம். Show all posts

Friday, October 27, 2006

நாளை உலகம் நமது கையிலா??

'நாளை உலகை ஆள வேண்டும், உழைக்கும் கரங்களே' அப்படின்னு எம்ஜிஆர் பாடி ஆடனது ஞாபகம் இருக்கா உங்களுக்கு, அது நடந்தேறும் காலம் நெருங்கிவிட்டதுன்னு சொல்லுவேன் இப்போ! போன வாரம் இந்த வியாபார உலகில் நடந்த ஒரு மிகப்பெரிய தன்னுடமையாக்கல்(Acquisition) என்னான்னு தெரியுமா, அதான் நம் நாட்ல இருக்கிற டாட்டா ஸ்டீல் கம்பெனி இங்கிலாந்து மற்றும் டச்சுக் கம்பெனியன கோரஸ்(Corus)என்ற இரும்புஆலை கம்பெனியை சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்ல வாங்கி தன்னுடமையாக்கிக்கிட்டது தான்! இதுல என்னா விஷேஷம்னு கேட்கிறீங்களா, இனிவரும் நாட்களில் நம்ம குப்பனும் சுப்பனும் உலகத்திலே பீறுநடைப் போடும் பெரிய பெரிய கம்பெனிகளை வாங்கிப்போட்டு பெரியாளாகப் போறாங்கங்கிறது தான், அது எப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம் வாங்க!

நீங்க வெறும் சாஃப்ட்வேர் எழுதியோ, இல்லா கூலிக்கு மாரடிச்சு மாசம் ஒன்னாம் தேதி ஆனா சம்பளம் வாங்கி பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்திர ஆசாமியா இருந்தீங்கன்ன்னா ஒரு மண்ணும் புரியாது. கொஞ்சம் வியாபரம், பங்கு சந்தைன்னு அலைஞ்சு திரிஞ்சிருந்தாலோ, இல்லை கடை கண்ணின்னு வியாபரம் செய்ற குடும்ப சூழ்நிலையிலே இருந்து வந்திருந்தாலோ, இல்லை உண்மையிலே திராவிடம், இந்து, பிராமணன், அப்படின்னு வெட்டி சண்டை தமிழ்மணத்திலே போடாமா, அப்புறம் ஆரஞ்சு ஜீஸ் எப்படி குடிக்கலாமுன்னு நகைச்சுவைப் பண்ணிக்கிட்டு திரியாம இப்படி சீரியஸா இந்த பிஸினஸ் விஷயங்கள்ல ஆர்வம் இருந்து தெரிஞ்சுக்கிறவங்களா இருந்தா இந்த Mergers and Acquisitions (M&A) பத்தி தெரிஞ்சிருக்கிற வாய்ப்புண்டு!

இந்த 'M&A' ங்கிறது நம்ம வெத்திலை பாக்கு கடை நடத்தி வர்றவங்களுக்குக்கூட தெரிஞ்ச ஒன்னு தான், அதாவது, 'அந்த மூணாவது கடை ஒன்னு வருது அதை எப்படியாவது வாங்கி போட்டுட்டா இன்னும் கொஞ்சம் பெரிசா வியாபரம் பண்ணலாமுன்னு' நம்மூர் சின்ன வியாபாரிங்கள்ல இருந்து பெரிய பெரிய கார்ப்ரேட் வரை சிந்திக்கிற மற்றும் செய்யக்கூடிய விஷயம் தான்! என்ன நம்மூரு வெத்திலைப்பாக்கு கடைவியாபரி மொத்தமா காசை சேர்த்து, இல்லை அங்கே இங்கே கடனை வாங்கி அந்த வர்ற கடையை வாங்கிப் போட்டுடுவாரு, ஆனா கார்ப்ரேட் உலகத்தில அதுவே 'Share Purchase'ன்ன்னு ஒன்னு போகும் இல்லை 'Asset Purchase'ன்னு போகும்! இங்கேயும் கம்பெனிங்க சொந்த காசு போட்டும் வாங்கும், இல்லை இதுக்குன்னு கடன் கொடுக்கிற பேங்க்குங்க உண்டு, அங்கிருந்தும் வாங்கும். சிலசமயம் அந்த பேங்குங்களே எல்லா வேலையும் செஞ்சு கொடுத்து இந்த தன்மயமாக்குதலை நடத்தி வைக்கும், அவங்க தான் இடை தரகர் வேலை பார்ப்பாங்க, அதனாலே அவங்களை 'intermediaries', 'business brokers', இல்லை 'investment bankers' ன்னு அழைப்பாங்க! இந்த M&A யோட நோக்கம் என்னான்னா, முதல்ல 'Economies of scale', அதாவது இணைக்கப்பட்ட கம்பெனிகள் பிரம்மாண்டமா செயல்படும் போது அவசியமில்லா, இல்லை டூப்ளிகேட்டா இருக்கக்கூடிய சில துறைகளை வெட்டி, கம்பெனி உற்பத்தி செலவுகளை குறைச்சி அதிகம் லாபம் ஈட்டுவது, சந்தையிலே தன்னுடய பொருட்களின் விற்பனை சதவீதத்தை பெருக்க, வரி வட்டிகளை குறைக்க, புதுசான இடங்கள்ல பொருளை வித்து அங்க தன்னுடய சந்தையை பிடிக்க, தன்னிடம் இல்லாத வாங்கப்படும் கம்பெனிகளின் வேறு திறன்களால் அதிகம் லாபம் ஈட்ட, அப்பறம் 'Vertical Integration' ன்னு சொல்லிட்டு இந்த கருப்பொருள்ல இருந்து உற்பத்தி, விற்பனை, சந்தைக்கு எடுத்து செல்லல் என்று அனைத்து துறைகளையும் உள்ளடக்குவது, மொத்தத்திலே 'Supply Chain Management'ன்னு சொல்லக்கூடிய அத்தனை துறைகளிலும், வாங்கும் கம்பெனியால் உள்ளடக்கி தனிபெரும் நிறுவனமாக திகழ்ந்து பெரும் லாபம் ஈட்டுவது தான்!

சரி இதிலே என்ன விஷேஷமுன்னு கேட்கிறீங்களா, இந்த மாதிரி கம்பனிங்களை வாங்கி தன்னுடமையாக்கி ஒரு பெரிய நிறுவனமாகிறது எல்லாம் கொஞ்ச காலத்துக்கு முன்னால நம்ம நாட்ல நினைச்சுப் பார்க்க முடியாது ஒன்னு. ரொம்ப காலமா வழி வழியா பெரிய வியாபர கம்பெனிகள் தலைமுறை தலைமுறையா குடும்பங்கம்பெனிகளா தான் இருந்து வந்தது, அதுவும் நமக்கு ஆரம்பத்திலே இருந்து தெரிஞ்ச டாட்டா, பிர்லா குடும்பங்கள் கட்டி காத்த பெரும் நிறுவனங்கள் தான்! அப்புறம் சாதரண மக்களுக்கும் பங்கு சந்தைன்னா என்னான்னு வழி காமிச்சு பெரி முதலாளியா உருவான திருபாய் அம்பானி ஆரம்பிச்ச அந்த மிகப்பெரிய ரிலெயன்ஸ் நிறுவனம் பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா நம்ம ஊர்ல இந்த மாதிரி பெரிசா வாங்கி ராஜ்யம் அமைக்கிறதுங்கிறது அவ்வளவா நடக்காத ஒன்னு, எல்லாமே இந்த ஊரு பக்கம் தான், அதாவது, இந்த பெரிய பெரிய M&A எல்லாம் அமெரிக்கா, ஐரோப்பிய நடுகள்ல இருக்கிற கம்பெனிகள்குள்ள நடக்கிற விஷயம் மட்டுமா இருந்த ஒன்னு! எப்பவாச்சும், நம்ம நாட்டுக்குள்ளேயே கம்பெனிகளை வாங்கி பெரிய வியாபர சாம்ராஜ்யம் அமையணும்னு, அங்கொன்னும் இங்கொன்னுமா நடந்துக்கிட்டிருந்துச்சு, ஆனா இப்ப நம்ம நாட்டை விட்டுட்டு உலகத்திலே இருக்கிற பெரிய பெரிய கம்பெனியை வளைச்சிபோட்டு நம்மலும் இன்னைக்கு பெரிய ஆளா வந்துக்கிட்டிருக்கோங்கறதுதான் அங்க விஷேஷமே!

இந்த Multi-National கம்பனிங்கங்கிறது உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச ஒன்னு, இதுவரைக்கும் நம்ம ஆளுங்க போய் அங்க உட்கார்ந்துக்கிட்டு நமக்கு படிஅளந்தா போதும்னுட்டு இருந்தோம், ஆனா இப்ப நம்ம அவங்க ஆளுங்களுக்கு படி அளக்கப்போறோம்! எப்படின்னு கேளுங்க! இந்த அயல் நாட்டு கம்பெனியை வாங்குறதுங்கிறது அவ்வளவு சுலபமான காரியம் இல்ல முன்னே எல்லாம், அதுவும் 1990க்கு முன்னே, ஏன்னா அந்நிய நாட்டு செலவானி அதுக்கு நமக்குத் தேவை. அது நம்மகிட்ட இல்ல, நம்ம கஜானா காலியாயிடுச்சின்னு, 90ல சந்திரசேகரு பிரதமாரா இருந்தப்ப நம்ம நாட்டு தங்கத்தை கொண்டி அடகு வச்ச கதை உங்கள்ல எத்தனை பேருக்கு தெரியும்னு எனக்குத் தெரியாது, ஆனா அதுக்கப்பறம் நரசிம்மராவு ஆட்சிக்கு வந்து நம்மலோட இப்பைய பிரதமர் நிதி அமைச்சரா இருந்தப்ப போட்டு வச்ச பாதை தான், இப்ப நம்ம நாட்ல அன்னிய செலவானி பொங்கி வழியுது! இப்ப கம்ப்யூட்டர் யுகம் வந்துட்டோன, சின்ன பசங்க நீங்க எல்லாம், இங்க வந்து போற நீங்க, சுலுவா நம்ம ஊர்ல எங்க வேணும்னாலும் மாத்தி, பச்சை டாலர் நோட்டை பச்சக்குன்னு பாக்கெட்ல சொருவிட்டு சும்மா ஜாலியா ஃபைளைட் புடிச்சு, இங்க வந்து கொண்டு வந்த காசை டேபிள் டான்ஸ், லேப் டான்ஸுன்னு வேட்டு விட்டுக்கிட்டு இருக்கீங்க! ஆனா அந்த 90ல பறந்து வந்த எங்களை கேளுங்க, இதை கொண்டு வர்றதுக்குள்ள நாங்க பட்ட சிரமம் என்னான்னு எங்களுக்குத் தெரியும்! அதுக்கு முன்னே அமெரிக்கா படிக்க வந்த நம்ம அண்ணமாருங்க வெறும் பத்து டாலர் எடுத்து வர்ற பட்ட பாடு இருக்கே, அப்படி கையிலே எந்த காசும் இல்லாம இங்க வந்து முன்னேறினவங்க கதை கேட்டுப்பாருங்க தெரியும்!

எதுக்கு சொல்றேன்னா, அப்ப இந்த கம்பெனிங்களும் அன்னியசெலவானியை தண்ணி மாதிரி இஷ்டம் போல போட்டு கரைச்சிட முடியாது அதுக்கு அப்ப இருந்த Foreign Exchange Regulation Act (FERA)சட்டம் அப்படி, நம்ம நாடல இருந்து அவ்வளவு சீக்கிரம் இந்த அன்னியச்செலவானியை(Foreign Exchange), அதான் நம்ம ரூவாயை டாலரை மாத்தி எதுவும் வாங்கிட முடியாது! 90ல ஆரம்பிச்ச இந்த மாற்றம், நம்ம சிதம்பரம், மன்மோகன், மிஸ்ரா மாதிரி ஆளுங்களால கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்தோம், அந்நியச்செலவானியும் பெருகுச்சு ( இந்த அந்நியச்செலவானி பெருகிறது எப்படின்னு தெரிஞ்சுக்குனும்னா, கொஞ்சம் ஏற்றுமதி, இறக்குமதி சாமாச்சாரங்கள் எல்லாம் தெரிஞ்சிருக்கினும், அதை பத்தி பதிவுகளை பொங்குதமிழில் படிக்குனும்னா நம்ம தமிழ் சசி எழுதுறதை அப்ப அப்ப பாருங்க) , இந்த சட்டத்தை ஒரு ஏழு வருஷத்துக்கு முன்னே Foreign Exchange Management Act (FEMA)வா மாத்தி இன்னும் சுலுவாக்கிட்டாங்க இப்ப, அதான் காசு இருந்த நம்ம கம்பெனிங்க எல்லாம் உலக கம்பெனிங்களை வாங்கி போட்டுடலாம்!

இப்ப அப்படி தான் சுமார் இந்த வருஷத்திலே இது வரைக்கும் 115 Acquisitions நடந்திருக்கு அதுவும் மொத்தம் 18 பில்லியன் டாலர்கள் மதிப்புல, அதே மாதிரி 8 பில்லியன் டாலர்கள் நம்ம நாட்க்கு முதலீடு செய்ய வந்திருக்கு! இந்த தன்னுடமையாக்கல்(Acquisition)இந்த வருஷம் 130க்கு மேலே போகும்னு சொல்றாங்க, அது என்னான்னு தெரிஞ்சுக்கும்னா இதோ சுட்டி. ஆக இனி வரும் நாட்கள்ல இது மாதிரி பெரிய பெரிய கம்பெனிகளை வளைச்சிப்போட்டு எல்லாம் நம்ம கையிலே வர வாய்ப்பிருக்கு! அதுக்கு இங்கே அமெரிக்கா, இங்கிலாந்தில் எதிர்ப்புகள் இருந்தாலும், காலத்தின் கட்டாயம்னு விட்டுத்தான் போகுனும்னும், அதுனால எல்லா நாடுகளுமே வளர்ச்சி அடையும்னு இங்க இருக்கிற பெரிய பெரிய பொருளாதார நிபுணர்கள் எல்லாம் சொல்றாங்க. முதல்ல கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பனிகள் தான் வாங்கி போட்டுக்கிட்டிருந்தாங்க, அதுன்னு இல்லாம இப்ப மத்த துறைகளில் உள்ள தொழில் நிறுவனங்களும் இந்த Acquisitionsல இறங்கிடுச்சிங்க.

அதுவும் இந்தியாவும் சைனாவும் இது மாதிரி போட்டி போட்டு கம்பெனிகளை வாங்கி தள்ள ஆரம்பிச்சிட்டாங்க! கொஞ்ச நாளைக்கு முன்னே சைனா நாட்டுக்காரன், அமெரிக்க எண்ணை கம்பனியான 'Unocal' என்கிற கம்பெனியை வாங்க வந்து, அது அரசியல் காரணங்களால முறியடிக்கப்பட்டது! இருந்தாலும் இது எத்தனை நாளைக்கு தடுக்க முடியும்னு தெரியாது! இதுக்கு என்ன காரணம்னா, இது போன்ற பெரிய கம்பெனிகள் அதாவது சக்தி (Energy), இரும்பு(Steel) போன்ற துறைகளில் கை ஒங்கி இருந்தா அது தன் வல்லரசு தன்மையை நிலை நிறுத்த வழின்னு உலக அரசியல் முட்டுகட்டைகள் நிறைய இருக்கு! ( இரும்பு உற்பத்தின்னு பார்த்த்கீங்கன்னா, உலக உற்பத்தியிலே 30% நம்ம கையிலே இருக்குத் தெரியுமா, நம்ம மித்தல் ஸ்டீல், டாட்டா ஸ்டீல் இரண்டும் சேர்ந்தே இது, ஆக எப்ப வேணும்னாலும் உலகத்தை மிரட்ட இது போதாதான்னு ஒரு கேள்வி எழத்தான் செய்யுது) ஆனா பொருளாதார வல்லமை முன்பு இது எல்லாம் எடுபடாது! அதுவும் இந்த அசுரத்தனமான இந்த பொருளாதார வளர்ச்சி முன்னே ஒன்னும் நிக்காது!

ஆனா வாங்கி போடறது பெருசில்ல, அதை சரியா ஆளுமை செஞ்சு இன்னும் பெரிய நிலைமைக்கு வரணும்ங்கிறது பெரிய குதிரைக்கொம்பு தான்! அதுவும் பல நாடுகளில் வியாபிச்சிருக்கிற இந்த ராஜாங்கத்துக்கு, அந்த அந்த நாட்டு கலாச்சாரம், அரசியில் ஆளுமை, அந்த நாடுகளில் வியாபாரம் செய்யும் திறமை எல்லாம் நம்ம நிறைய வளர்த்துக்கணும், அதே மாதிரி நம்ம அரசியல் வாதிங்களும் முழு கண்ணையும் திறக்கணும், நம்ம எப்படி உலகை ஆளா நாலா பக்கமும் படை எடுக்க துடிக்கிறமோ, அதே மாதிரி வெளி நாட்டு முதலீடுகளையும் வரவேற்கணும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியாவை வாங்கி பெரிசா ஆக்க முட்டு கட்டை போடக்கூடாது, அதே மாதிரி வால்-மார்ட் மாதிரி பெரிய ராட்சத தொழில் நிறுவனங்கள் இந்தியாவில தொழில் செய்ய அனுமதிக்கணும், அப்ப தான் நம்ம நாலா பக்கமும் போயி உலகை ஆளமுடியும்! சும்மா பம்மாத்து அரசியல் செஞ்சுக்கிட்டு முட்டுக்கட்டை போடாம இருந்தா போதும், நான் சும்மானாலும் விளையாட்டுக்கு சொல்லிக்கிட்டிருக்கிற மாதிரி ''Microsoft', 'General Motors', 'GE' எல்லாத்தையும் வளைச்சு போட்டுடுவோம், என்ன நான் சொல்லுறது?'ங்கிர பேச்சு உண்மையாகி 'நாளைய உலகம் நமது கையில்'ன்னு ஆகப்போகும் நாட்கள் அதிக தூரமில்லை!

Monday, June 19, 2006

துளசி காட்டுல (மழை) காத்து!!

என்ன தலைப்பை பார்த்தோன என்னடா நம்ம செடியக்கா காட்ல மழைங்கிறதை அடிச்சிட்டு காத்துன்னு எழுதிருக்கே, என்னா அதுன்னு குழப்பமா இருக்கா! அவங்க காடல தான் எப்பவும் மழையாச்சே, எந்த குறச்சலும் இல்லியே! நான் பேசபோறது தமிழ்மண துளசி இல்லை! இது வேற துளசி, அதாவது 'துளசி தண்ட்டி'ன்னு ஒருத்தரு! இவரு யாருன்னு கேட்கிறீங்களா, ஒலகமகா பணக்காரர்கள் லிஸ்ட் போட்டு இந்த 'Forbes'ன்னு ஒரு அமெரிக்க பத்திரிக்கை வெளியிடுமே, அந்த பத்திரிக்கை, போன மே மாசம் இவரை ஏழாவது மனிதனா காமிச்சிருக்கு! அதாவது ஏழாவது இந்திய பணக்காரன்னா சொல்லி இருக்குங்காங்க! இவரு அறுநூறு கோடிக்கு அதிபதி! உலகத்திலே பெரிய பணக்காரர்கள்ல லிஸ்ட்ல உள்ள இந்தியர்கள் வருசையிலே இப்ப இவரும் ஒருத்தரு! முத பணக்காரரு, லட்சுமி மித்தல், இவரு ஐரோப்பாவிலே இரும்பு காய்ச்சு உருக்கியே, பல ஆயிரம் கோடிக்கு அதிபதி, அப்பறம் நம்ம ரிலெயன்ஸ் சகோதரர்கள், முகேஷ் பையாவும், அனில் பையாவும், பிறகு விப்ரோ அதிபர், ஆஸிம் பிரேம்ஜி, இவரு கம்ப்யூட்டர், மென்பொருள், உலக சேவை, எல்லாம் விக்கிறதுக்கு முன்னே சூரிய காந்தி எண்ணெய் வியாபரம் பண்ணிக்கிட்டிருந்தார்! இவங்களோட இப்ப துளசியும் சேர்ந்திட்டாரு! சரி யாரு இவரு, என்ன பண்ணுனாரு, பெரிய பணக்காரரானாருன்னு கேட்கிறீங்களா? அதை சொல்லத்தானே இந்த பதிவு, வாங்க கீழே பார்க்கலாம்!

இந்த துளசிக்கு போன செப்டம்பர்ல அடிச்ச காத்துதான் அது! அதாவது காற்றாலைகள் பண்ணி விக்கக்கூடிய இவரு கம்பெனி, சுஷ்லான் ('SuZlon Energy') நம்ம பங்கு சந்தையிலே போடு போடுன்னு போன வருஷம் போட்டதிலே, இந்தோ தம்மாத்தூண்டு தான் பங்குக்கு வச்சிருந்த ஷேர்ங்க கொஞ்சத்தை வித்ததாலே இவரு டாப்ல போயிட்டாரு! இவரு பண்ணது நான் ஏற்கனவே சொல்லிக்கிட்டிருந்து மாற்று சக்திக்கான உபகரணங்கள் பண்ணக்கூடியது , அதுவும் சரியான நேரத்திலே, இந்த சரியான வியாபாரம் பண்ண போயி இப்ப உலகத்தில உள்ள இந்திய பணக்காரர்கள்ல இவரு ஏழாவது மனிதன்! நீங்க பங்கு சந்தையிலே விட்டு புடிக்கிற ஆளா இருந்தா, அதுவும் இந்த கம்பெனியிலே ஷேர் வாங்கி இருந்திங்கன்னா, நீங்களும் கொஞ்சம் டாப்ல போயிருப்பீங்க! (இப்ப ஏக இறக்காமாமில்ல இருக்கு, காசை எதும் இந்த ஆட்டையிலே ஜூதாடி உட்ருந்தீங்கன்னா, சாரி, ஆனா இந்த கம்பெனி ஸ்டெடியா நிக்குதுன்னு கேள்வி, விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க!) இந்த கம்பெனி பேலென்ஸ் ஷீட் ரொம்ப நல்லாவே இருக்குது! இவரு கம்பெனி உலகத்திலே அஞ்சாவது இடம்! இந்த காற்றாலைகள் மின்சாரம் செய்யக்கூடிய, 'wind turbine generators' பண்ணக்கூடிய கம்பெனி!

நான் ஏற்கனவே மாற்றுசக்தி வேணும்கிறதை பத்தி பதிவு போட்டுருக்கேன், அப்புறம் இன்னைக்கு அதிகம் விலை விக்கக் கூடிய இந்த கச்சா எண்ணெய், எரிவாய், மற்றும் நிலக்கரி போன்ற விரைவில் அழிஞ்சுப்போக்கூடிய பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரசக்தியால, காசும் ஜாஸ்தியாகுது, சுற்றுப்புற சூழ்நிலையும் மாசுப்படுது! ஆனா இந்த காற்றலைகளால உறபத்தி பண்ணக்கூடிய மின்சாரம் மலிவானது, சுற்றுப்புற சுழல் மாசுப்படாது!! அதுவும் இப்ப வளர்ந்து வரும் இந்தியாவின் தேவைக்கு ஏற்ப இந்த வகையான மாற்று சக்தி ஒரு வரப்பிரசாதம்! அதுவும் இப்ப இந்த காற்றாலைகளால உற்பத்தி பண்ணக்கூடிய மின்சாரம் 4500 மெகாவாட் தான், அதுவும் இந்தியா பலவகைகளிலும் உற்பத்தி பண்ற மொத்த மின்சாரத்தில் வெறும் 3.4 சதவீதம் தான்! அதுவே பெருகி பன்மடங்காச்சினா இன்னும் நல்லா இருக்கும்!

சரி இந்த 'wind mills', காற்றாலைகள் என்ன தெரியுமா? ராட்சத அலகுகள் ('Blades') கொண்ட காத்தாடி ! நம்ம சின்ன வயசிலே பனை மட்டையை எடுத்து ஒரு குச்சியிலே கட்டி வேகமா ஓடிறப்ப சுத்திகிட்டே இருக்குமே! அது நம் ஓடும் பொழுது காற்றின் விசையாலே சுத்திறதை எத்தனை நாள் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பீங்க, சமயத்திலே, அதுக்கு வர்ணம் எல்லாம் பூசி ஒடறப்ப அழகு பார்த்திருப்பீங்க! அது இப்ப நம் வாழ தேவையான சக்தி கொடுக்குதுன்னா பார்த்துக்கங்களே! இந்த ராட்சத காற்றாலை பண்ணைகளை நீங்க திருநெல்வேலியிலிருந்து கன்னியாக்குமரி போறப்ப நிறைய பார்த்திருக்கலாம்! அது காலி மைதானத்திலே இந்த நூற்றுக்கணக்கான காற்றாலைகளை நிர்மானித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது! இது மாதிரி நல்ல காத்தடிக்கும் இடங்கள்ல இதை நிர்மானிச்சா, அந்த காத்தின் விசையால் ராட்சச காத்தாடிகள் சுழண்டு அந்த காத்தாடிகளோட இணைக்கப்பட்ட கியர்களும் சுழன்று வட்டமா சுத்துற விசையை கியர் மூலம் மாத்தி அதை ஒரு பெரிய செங்குத்தான தண்டின் ('vertical shaft')வழியா அந்த விசையை கடத்தி பிறகு அந்த செங்குத்து தண்டுடன் இணைக்கப்பட்ட இன்னொரு சுத்தும் தண்டின் வழியால் இணைக்கப்பட்ட ஜெனரேட்டர்களை இயக்கி மின்சாரம் எடுப்பதே இந்த காற்றாலை மின்சாரம்! இதுக்குன்னு நிலம் வாங்கி இதை நிர்மானிச்சு மின்சாரம் எடுக்க அரசாங்கமே செலவு செய்து! சில சமயம் தனியீட்டார்களின் முதலீடுகளாலும் இது நிர்மானிக்கப்படுகிறது! இது போன்று எடுக்கப்படும் மின்சார செலவு கம்மி, அப்புறம் நான் சொன்ன மாதிரி கழிவுகளால் உண்டாகும் மாசு எதுவும் ஏற்படுத்தவதில்லை!

இந்த காத்தாடி வந்து இன்னைக்கு வந்ததில்லை, இது ஒரு பழைய தொழில்நுட்பம்! அதாவது இதை 12ம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிச்சிட்டாங்க! அதிகமா இதன் உபயோகம் ஐரோப்பாவில் தான் முதல்ல இருந்தது, அதுவும் ஹாலந்து நாட்டில் மொத்த விவசாயமும் இந்த காற்றாலைகளால் இயங்கப்பட்ட கிணத்து தண்ணி எடுத்து இரைக்கும் கருவிகளால் செஞ்சாங்க, அதாவது நீர்பாசன வசதிகளில் இந்த காற்றாலைகள் ஒரு முக்கியமான அங்கம்! இதை இப்ப வர்ற சினிமாவிலே, ராட்சச காற்றாலை பின்னனியிலே காட்சிகள் அமைத்து பாட்டு சுட்டுட்டு வர்றாங்க அந்த நாட்லருந்து! அந்நியன் படத்திலே வர்ற பாட்டு 'குமாரி, என் காதல் குமாரி'ன்னு, அதில் நீங்க பார்த்திருக்கலாம்! அப்பறம் இந்த இரயில்வே நெட்வொர்க் அந்த காலத்திலே அதிகரிச்சோன, நீராவி இஞ்சின்களுக்கு அங்கங்க தண்ணி இரைச்சு ஊத்த இந்த காற்றாலைகளை பயன் படுத்தினாங்க! அமெரிக்காவில , 1930க்கு முன்னே மொத்த விவசாயமும் இந்த காற்றாலைகள் கொண்டு தான் செஞ்சாங்க! நிறைய அந்த பழைய கெளபாய் படங்கள் பார்க்கிறப்ப, அந்த பண்ணை தோட்ட வீடுகளை காமிக்கிறப்ப இந்த காற்றாலையை காமிப்பாங்க! (இப்பவும் எல்லா வீடுகள்லயும் 'scale down verson wind mills' அழகுக்காக வச்சிருப்பாங்க, அப்படி பெரிய ஆலை வச்சிருக்கிரவங்க பெரிய பண்ணைன்னு அர்த்தம்! அந்த காலத்திலே விவசாயம் மட்டுமில்லை மக்கா சோளம் அரைக்கவும் இந்த் காற்றாலை விசையை உபயோகப்படுத்தினாங்க!) ஆனா இந்த மலிவான மின்சாரம் கிடைச்சோன இந்த காத்தாடிகள் அப்படியே செத்து போச்சு! இப்ப எண்ணெய் விலை அதிகம்னோன பழியபடி தூசி தட்டி எடுத்து திருப்பி எப்படி இன்னும் சிறப்பா காற்றாலைகள் நிறுவலாம்னு ஆராய்ச்சியிலேயும் ஈடுபட்டிருக்காங்க!

சரி நம்ம துளசி கதைக்கு வருவோம்! இவரு நேரா இந்த காற்றாலை உபகரணங்கள் பண்ணும் தொழிலுக்கு வந்துடலை! முதல்ல இவரு குஜராத்திலே துணி நெய்யும் ஆலைகள் வச்சிருந்தாரு, எல்லம் பவர் லூம்ஸ், ஆனா சரியா மின்சாரம் கிடைக்காம, அப்ப அப்ப வெட்டு விழுந்த தாலே, தன்னுடய மில்லுக்கு இரண்டு காற்றாலை வாங்கி அதவச்சு மின்சாரம் உற்பத்தி பண்ணி துணி நெஞ்சாரு! கடைசியிலே இதோட மகிமை பார்த்து இதையே செய்யும் தொழிலா எடுத்துக்கிட்டு செஞ்சு இன்னைக்கு ஏழாவது மனிதன் ஆயிட்டாரு! அங்க கணக்கு எப்படின்னா,ஆளுக்கு ஒரு காத்தாடி வாங்கி ஓட்டி, அதில உற்பத்தி பண்ற மின்சாரத்த எலெக்ட்ரிசிட்டி போர்டுக்கே வித்துட்டா, பிறகு எப்ப எப்ப வெட்டு விழுதோ, அப்ப உங்களுக்கு மட்டும் வெட்டு இல்லை! இப்படி ஒரு திட்டம் வந்த தாலே, அங்கே இருக்கிற சின்ன சின்ன கம்பெனிங்க இந்த மாதிரி ஒன்னு இரண்டு காத்தலையை நிர்மானிச்சு எலெக்ட்ரிசிட்டி உற்பத்தி பண்ணி மின்சார வாரியத்துக்கு எக்ஸ்போர்ட் பண்ணிட்டு, வெட்டு விழுவறப்ப ஜாலி மின்சாரம் வாங்கிக்கிறாங்க, இது எப்படி இருக்கு?

அப்படி அந்த காற்றாலைகள் செய்ய போய் இன்னைக்கு இவரு கம்பெனி, 'SuZlon Energy' செஞ்சுக் கொடுத்த காற்றாலகளை வச்சி மின்சாரம் உற்பத்தி பண்ற வாடிக்கையாளர்கள் 300க்கும் மேலே! இவரு இந்தியா மட்டுமில்லமா, இந்த காற்றாலைகளை வெளி நாட்டுக்கும் ஏற்றுமதி செய்றார். இவருக்கு உறபத்தி பண்ணி தரக்கூடிய தொழிற்சாலைகள் இங்கே அமெரிக்காவிலே, மினசோட்டாவிலே இருக்கு! அப்பறம் சைனாவிலேயும் முதலீடு பண்ணி காற்றாலை அலகுகள் செய்யும் தொழிற்சாலை வச்சிருக்கிறாரு! பிறகு பெல்ஜியத்திலே இருக்கிற கம்பெனி ஒன்னையும் விலை கொடுத்து வாங்கிட்டாரு! அது இந்த விண்ட் டர்பைன் கியர் பாக்ஸ் பண்ற கம்பெனி! இப்படி தொழில அபிவிருத்தி பண்ணி பெரியாளாயி இன்னைக்கு ஏழாவது மனிதனாயிட்டாருன்னா, கேட்கறத்துக்கு அப்படியே ஜில்ல்லுன்னு இருக்கில்ல!

இதிலே விஷேஷம் என்னான்னா, இந்த காற்றாலை வாங்கி நிர்மானிச்சா வரி விலக்கு உண்டு! அதாவது இதை வாங்கி ஒரே வருஷத்திலே இந்த முதலீடுக்கான டிப்ரிசியேசன் 80 சதவீதம், அதால வர்ற வரி விலக்கு தான் இந்த காற்றாடிகளை ஈர்க்கும் சக்தி! உலக அழகி ஐஸ்வர்யா ராய்லருந்து , சச்சின் டெண்டூல்கர் வரை தாங்க சம்பாரிக்கிறதை இந்த மாதிரி காத்திலே பறக்கவிட்டு காசு பார்க்கிறாங்க! ஆக இந்த வழியா, ஆளுக்கு ஒரு காத்தாடி விட்டாலே போதும், நம்ம பாதி மின்சாரத்தேவை பூர்த்தியாயிடும், இதுக்கு எல்லா மாநிலமும் வரி சலுகை கொடுத்து ஊக்குவிச்சா, உங்க வீட்டு பின்னாடியே மின்சாரம் தயாரிச்சு , மின்வாரியத்துக்கு வித்துடலாம், பிறகு உங்களுக்கு மின் வெட்டு இல்லாம மின்சாரம் வரும்! அப்புறம் அக்னிநட்சத்திரத்திலே, கரெண்ட் இல்லாம, உஸ் புஸ்ன்னுட்டு இருக்க வேணாம் பாருங்க!

இப்ப தெரியுதா இவருக் காட்ல ஏன் மழை, இல்லே காத்துன்னு!

Tuesday, May 30, 2006

மருத்துவ உல்லாசப் பிரயாணத் தொழில் வளர வேண்டுமா?

நம் நாட்டில் எல்லா சேவைகளும் மலிவாக கிடைப்பதால், இந்த 'outsourcing' என்று சொல்கிறார்கிளே, அந்த தொழில்துறையில் நமது அசூர வளர்ச்சி, வெறும் கம்ப்யூட்டர் துறை என்றில்லாமல், எல்லா துறைகளிலும் பீறு நடைப் போட்டு வருகிறது. அப்படி முன்னேறிவரும் தொழில்துறையில் 'மெடிக்கல் டூரிஸம்' என்ற தொழிலானது, அதாவது மருத்து உல்லாசப் பிராயணத் தொழில் என்பது மிகவும் முன்னேறிவரும் ஒரு தொழில் துறை. ஆனால் இந்த தொழில்முறை வளர்ச்சி மிகுந்த சர்ச்சைக்குறிய ஒன்றாக இருக்கிறது நமது மருத்துவர்களிடையே! ஏனென்றால், நம் நாட்டு மக்களுக்கு பொது மருத்துவம் மூலம் சரியான சிகிச்சை முறைகள் கிடைக்காமல் இருக்கும் பச்சத்தில், இந்த மெடிக்கல் டூரிஸத்தை வளர்க்க அரசாங்கம் அளித்து வரும் ஆதரவுக்கு பெரிய போர் கொடி தூக்க ஆரம்பித்துள்ளார்கள்! ஆக இந்த மெடிக்கல் டூரிஸம்னா என்னா, அதில் உள்ள சர்ச்சைகள் என்னா இப்போ நடந்துக்கிட்டிருக்கு அப்படின்னு பார்ப்போமா கொஞ்சம்!

உல்லாசப் பிராயாணம்னா, நாலு இடங்களை சுத்தி காமிக்க இந்த வெளிநாட்டு டூரிஸ்ட்டுகளை கவர பிரயத்தனம் செஞ்சு ஏகப்பட்ட செலவளிச்சு, அதில வர வருமானத்தை பெருக்க நமது இந்திய அரசாங்கமும், தமிழ்நாடு அரசும் பலமுயற்சிகள் எடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே! ஆனா இந்த மருத்தவ உல்லாசம்ங்கிறது இப்ப கொஞ்சம் கொஞ்சமா சூடுபிடிக்குது!. அந்த காலத்திலேருந்து இந்த கேரளாவில் மிகவும் பாப்புலரா இருப்பது இந்த ஆயுர்வைத்திய மூலகை மருந்து மற்றும் மசாஜ் என்பது! அப்ப அப்ப நம்ம நடிகர் நடிகைங்களும் அந்த பக்கம் ஒரு எட்டு போய் பார்த்துட்டு ரொம்ப பளிச்னு உடம்பை தேத்திக்கிட்டு வருவாங்க! சமீபத்திலே அந்த மாதிரி சினேகா ஏதோ மலையாள மசாஜ் எடுக்க போய்ட்டு வந்ததாக் கேள்வி. விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க! அப்புறம் ரஜனிகாந்தும் இமயமலைக்கு வருஷத்துக்கொரு தடவை போய் வரமாதிரி, இந்த மலையாள மண்ணுக்கு போய்ட்டு வருவாரு இந்த மசாஜ் எல்லாம் எடுத்து தேத்திக்க! நான் சொல்லும் இந்த மருத்துவ உல்லாசங்கிறது இது இல்லை!

இந்த மெடிக்கல் டூரிஸம்னா, நோயாளிகள் சிகிச்சை மேற்கொள்வதற்காக வெளி நாடுகளுக்கு பிராயாணம் செய்து தங்கள் நோய்களை தீர்க்க செல்வது, இதை ஆங்கிலத்தில் 'elective medical procedures' என்றழைப்பார்கள்! ஏன் அவங்க நாட்ல இல்லாத வசதிகளா, நம்ம நாட்டுக்கு ஏன் வரணும், அப்படி என்ன நம்மக்கிட்ட இருக்கு, நம்ம என்ன அவங்களைவிட மருத்துவ வசதிகள் என்ன அப்படி இருக்குன்னு நீங்க கேட்கிறது புரியது! எல்லாத்துக்கும் காரணம் மலிவான சிகிச்சை முறைகள் தான்! அதாவது அவங்க நாட்டில செஞ்சுக்கிற மருத்துவ செலவுகள்ல பத்தில ஒரு பங்கு தான், நம்ம நாட்ல செஞ்சுக்கிட்டா! அதுவும் அமெரிக்காவில் மருத்துவ காப்பு என்பதும், அது இல்லாவிட்டால் சிகிச்சைக்குண்டான செலவுகள் ஏராளம்! காப்பு எடுத்தாலுமே, அந்த இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகள் இதுபோன்ற செலவுகள் கம்மியாக இருக்கும் நாடுகளுக்கு நோயாளிகளை அனுப்பி வைப்பார்கள். மேற்கொண்டு கனடா மாதிரி நாடுகள்ல அவங்க செஞ்சுக்கப்போற ஆப்ப்ரேஷன், மருத்துவத்துக்காக பல மாதங்கள் காத்துகிடக்கணும்! அது மிட்டுமில்ல, இங்கிலாந்து போன்ற நாடுகள்ல அவங்க நாட்டின் அரசாங்க மருத்து சேவைகளுக்கு காத்து கிடக்கணும், இல்லை பிரைவேட் மருத்துவர்கள் கிட்ட போகணும், அதற்குண்டான வசதிகள் இல்லாம போய்விடுவதால்! சில சமயம் பங்களாதேஷ் மாதிரி நாடுகள்ல நமது நாட்டில கிடைக்கிற அத்தனை மருத்துவமும் கிடைப்பதில்லை, அதனாலே நம் போன்ற மலிவான மருத்துவ வசதிகள் கிடைக்கும் நாடுகளுக்கு சென்று வருகின்றனர்!

இந்த மெடிக்கல் டூரிஸம் என்பது மிகவும் பழமையான ஒன்று! அந்த காலத்தில் ஐரோப்பாவில், கிரேக்க நாட்டுக்கு, அதன் புனித தன்மை கருதி, யாத்திரிகர்களும், நோயாளிகளும் மத்திய தரைக்கடல் நாடுகள்லிருந்து சென்றதாக வரலாறு கூறுகிறது! 18ம் நூற்றாண்டில் செல்வந்த சீமான்கள் ஜெர்மனியிலிருந்து எகிப்தில் உள்ள நைல் நதி வரை சென்று வந்ததாக சரித்திரம் கூறுகிறது. ஆனால் இப்போதைய இந்த செலவு குறைந்த விமான மார்க்கம், கண்டம் விட்டு கண்டம் செல்ல ஏதுவாய் இருப்பதால் செல்வந்தர்களன்றி தேவைப்படும் நோயாளிகள் நாடு விட்டு நாடு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்கின்றனர்! ஆக இந்த மருத்துவ உல்லாச பிராயணத் தொழில் க்யூபா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா என்று அனைத்து நாடுகளும் வளர்ந்து வருகிறது! தெற்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் 'மெடிக்கல் சபாரி விஸிட்' என்று இந்த உல்லாசத் தொழில் வளர்ச்சி, மூக்கு சீரமைப்பு, பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற மருத்துவத்தை முடித்துவிட்டு அப்படியே சிங்கம் யானை கொண்ட காடுகளையும் பார்த்துவிட்டு வர வழி செய்கிறது! எப்படி நம்ம ஊர் நடிகைகள் மூக்கு, இடுப்பை சரி செய்ய வெளி நாடுகள் சென்று சுற்றி பார்த்து விட்டு வருவதைப்போல!

ஆனால் இந்தியா மெடிக்கல் டூரிஸம் என்பதையும் தாண்டி மெடிக்கல் அவுட்சோர்ஸிங் என்ற வளர்ச்சிக்கு வந்துவிட்டது, அதுவும் அதிக சுமையாகிப்போன மேற்கு மருத்துவ வசதி தேவைக்கு துணையாக! எப்படி என்றால் நமது நாட்டின் மருத்துவ சட்டம் இது போன்ற வெளிநாட்டு நோயாளிகளை கவனிக்க அனுமதி அளிப்பதுமில்லாமல் அதற்கு நிதி சலுகைகளயும் 'export earnings' என்கிற முறையில் அளிக்கிறது! இந்த மெடிக்கல் டூரிஸம் என்ற தொழில் துறையானது ஆண்டிற்கு 100 கோடி டாலர்களை வருமானமாக ஈட்டி தருகிறது. இதன் வருமானம் இனி வரும் ஆண்டுகளில் 200 கோடி டாலர்களுக்கு மேல் வருமானம் தரக்கூடிய ஒன்று, அதுவும் வருடத்திற்கு 30 சதவீத வளர்ச்சி! நமது கல்வித்துறையானது வெறும் கம்புயூட்டர் இஞ்னியர்களையும், புரோகிரமர்களையும் மட்டும் ஆண்டுக்கு உற்பத்தி செய்வோதோடு நின்றுவிடாமல், 20,000 த்திலிருந்து 30,000 டாக்டர்களையும் நர்ஸ்களையும் உற்பத்தி செய்கிறது. எனவே இந்த அசுர வளர்ச்சி!

இந்த மருத்துவத்துறையில் நமது அப்பல்லோ மருத்துவமனை ஆண்டொண்டிற்கு 60000 வெளிநாட்டு நோயாளிகளுக்கு சிக்கைச்சை அளித்து வருகிறது! ஏற்கனவே இந்த மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ப்ஷன் எனும் சேவையை அமெரிக்க காப்பு நிறுவனங்களுக்கு செய்து வருவதுடன், பல அமெரிக்க மருத்துவமனைகளுடனும், மருந்து கம்பெனிகளுடனும் ஆய்வு முறை மருத்துவமும் செய்து வருகிறது! 1990ம் ஆண்டு ஏற்பட்ட தாராளமயமாக்கத்தின் பயனாக, புது புது மருத்துவ கருவிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, இன்று இந்தியா முழுவதும் 37 மருத்துவ மனைகளும் 7000 படுக்கையுடன் கூடிய வசதியோடு இயங்கி வருகிறது! அது மட்டுமின்றி வெளி நாடுகளான் குவைத், நைஜீரியா, இலங்கை போன்ற நாடுகளிலும் பங்குதாரர்களுடன் பெரிய மருத்துவமனைகள் நடத்தி வருகிறது! மேலை நாடுகளில் இருந்து வரும் நோயாளிகளுக்கு பேக்கேஜ் டீல் என்ற வகையில் விமான டிக்கட்டு முதல் கொண்டு தங்க இடம், மருத்துவசிகிச்சை, பிறகு சிகிச்சைக்குபின் உல்லாசம் ('Post operative Vocation') என அனைத்து சாரங்களும் அடங்கிய முழு செலவீன தொகையிலே இந்தியா வந்து சிகிச்சை பெற்று போக வழி செய்கிறது! காசு உள்ளவர்களுக்குத்தான் இங்கே மருத்துவம் என்ற விமரிசனங்களிலிருந்து மீள்வதற்காக சில இலவச சிகிச்சை அளித்து வருகிறது!

ஆனால், இந்த மருத்தவ உல்லாசத் தொழிலின் திடீர் வளர்ச்சிக்கு சில மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்! சமீபத்தில் பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னலில், டாக்டர் சமிரான் நந்தி, மற்றும் டாக்டர் அமித் சென்குப்தா போன்றோர், இந்த மருத்தவ உல்லாசத் தொழிலின் திடீர் வளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதி உள்ளனர். அதாவது இந்திய அரசாங்கம் இந்திய குடிமகன்களின் ஆரோக்கியத்தை விடுத்து வெளிநாட்டவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் சட்டதிட்டங்களை எதிர்க்க வேண்டும் எனக்கூறி உள்ளனர்! நம் குடிமகன்களில் வருடத்திற்கு 600000த்து மேல் குஷ்டரோக வியாதியாலும், 50 லட்சம் அதிகமானோர் வயிற்றுபோக்கு வியாதியாலும் மரணம் தழுவும் பொழுது, வெளிநாட்டவருக்கு அளிக்கும் சிகிச்சையும், அதற்கு பின் அவர்களை சுற்றி காண்பிக்கும் தாஜ்மஹால் போன்ற வியாபார திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் அரசாங்க சட்டத்திட்டங்கள் தேவையில்லை என எதிர்த்து வருகின்றனர்! பொது மக்களின் மருத்துவ செலவீனங்களுக்கு வழி செய்யாத மருத்துவ சட்டதிட்டங்கள், தனிபட்ட மருத்துவத்திற்கு ஆதரவளிக்கும் திட்டங்களின் போக்கினை எதிர்த்து அந்த அறிக்கையில் குரல் கொடுத்துள்ளனர்! மேற்கொண்டு இந்த மருத்தவ உல்லாசத் தொழில் வளர்ச்சிக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு சலுகை முறையில் அளிக்கும் இடங்களும், மற்ற சட்ட சலுகைகளும், பொது மருத்துவ வசதிகளுக்கு வழி வகுக்காததால், இந்த தொழிலில் வளர்ச்சியை எதிர்ப்பதாகக் கூறி உள்ளார்கள்! மேலும் அவ்வறிக்கையில், உலக சுகாதார நிறுவன அறிக்கையின் படி இந்தியாவில் வெறும் 4 டாக்டர்கள் மட்டுமே ஒவ்வொரு 10000 மக்களுக்கும் இருக்கின்றனர், ஆனால் வளர்ந்த நாடுகளான பிரிட்டன் போன்ற நாடுகளில் 18 டாக்டர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். மேற்கொண்டு, கிராமப்புற சுகாதார மருத்துவமனைகளின் நிலைமையும், ஏழை மக்களுக்கு கிடக்காத மருத்துவ சிகிச்சைகளும், அதற்காக அவர்கள் கொடுக்கும் விலைகள் அதிகம் எனக்கூறி , அரசாங்க சுகாதார சட்ட திட்டங்கள் மக்கள் நலனுக்கு சார்ந்தாக இல்லை என கடுமையாக சாடி உள்ளார்!

ஆனால், இந்த எதிர்ப்பு, இந்திய மருத்தவர்களிடையே பிளவினை உண்டுபண்ணி இருப்பது என்னவோ உண்மை! இந்த மருத்துவ உல்லாசப் பிரயாணத் தொழிலை ஆதரிக்கும் மருத்தவர்கள், இது நமக்கு உலக நாடுகளிலிருந்து கிடைத்திருக்கும் அங்கீகாரமே, இந்தியா போன்ற நாடுகளின் வளர்ந்த சுகாதார வசதிகளின் நிலை உலகத்தரத்துக்கு இணையாக இருப்பது நமக்கு பெருமையே! இத்தொழிலை நாம் முழுமனதுடன் ஆதரவுக் கொடுத்து வளர்க்க வேண்டுமெனக்கூறுகின்றனர்! டெல்லியில் உள்ள எஸ்கார்ட்ஸ் இதய சிகிச்சை மருத்துவமனையின் டாக்டர் நரேஷ் ட்ரெகான் கூறுகிறார், நாம் இத்தொழிலை, இங்கு வசிக்கும் மக்களின் சிகிச்சைக்கு பங்கம் விளைவிக்காமல் வெளிநாட்டவருக்கு சிகிச்சை செய்வதில் தவறில்லை என்றும், இது நாம் விண்வெளி பயணம் போவது போன்றது, இங்கு பஞ்சம், பட்டினி, இதனை ஏன் செய்கிறீர்கள் என கேட்கின்றனர், இருந்தும் நாம் ராக்கெட் விடுவதில்லையா, அது போன்று தான் இத்தொழிலும் என்கிறார்!

இது போன்ற எதிர்மறை சர்ச்சைகள் இருந்தாலும், இந்த தொழில் முன்னேற்றம் நமக்கு முன்னேற்றம் தரக்கூடியதே! அதிகமான மருத்துவர்கள் தங்கள் திறமைகளையும் அனுபவங்களையும் பெற்று அதை இந்திய மக்களுக்கு வழங்க வாய்ப்பிருக்கிறது! இந்திய சுகாதர நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி இந்த மருத்துவ உல்லாசப் பிரயாணத் தொழிலின் மூலம் வரும் வருமானம் சுகாதர வசதிகளையும், கிராமப்புற சேவைகளயும் அதிகம் உருவாக்கி கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் டாகடர் நந்தி, இத்தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானம் பொது சுகாதரத்திற்கு செலவிடப்படும் என்ற நம்பிக்கை இல்லை என்றும், இந்தியாவில் பணம் இருப்பவர்கள் தனியாரிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டு விடுவார்கள், அவதிப்படுவது ஏழைபாளைகளே என கருத்துத் தெரிவிக்கிறார்.

ஆக இந்த மருத்துவ உல்லாசப் பிரயாணத் தொழில் வளர வேண்டுமா என்பதை விஷயம் தெரிந்த அன்பர்கள் தங்கள் கருத்துக்களை பின்னோட்டமாகக் கூறுங்கள்!

Tuesday, April 25, 2006

காசேதான் கடவுளடா!

நான் டெல்லியிலே இருந்தப்ப, தருமி எழுதிய பதிவு மாதிரி'பிள்ளையாரும் பால் குடித்தார்…' மாதிரி ஒரு விஷயம் பத்து வருஷ முன்ன நடந்தது. அதை வெகுவா நம்புற ஜனங்கள் மட்டுமில்லாம, மெத்த படிச்ச நம்ம ஆளுங்களும், அறிவியல் தர்க்கம் பண்றவங்களும் 'capillary action' ன்னும், 'surface tension' னும் போட்டுவுட்டுகிட்டு அதை justify பண்ணிக்கிட்டு இருந்தை இப்ப நினைச்சிக்கிட்டாலும் சிரிப்பா தான் வருது! இந்த கதை டில்லின்னு இல்லாம லண்டன் வரை நம்மூரு பிள்ளையாரை வச்சி விளையாண்டது பத்தி சில பேரு ஆச்சிரியபடலாம். இதெப்படி மேலை நாட்ல இந்த கூத்து அப்படின்னு. ஆனா இந்த சாமி, கோவில் விஷயங்க இங்கே அமெரிக்காவிலே எப்படி ஒரு பெரிய வியாபாரமா வியாபிச்சு இருக்குங்கிறதை பத்தி ஒரு சின்ன பார்வை பார்க்கலாமேன்னு தான் இந்த பதிவு. அது எப்படி இங்கே உள்ள சர்ச்சுங்க எல்லாம் ஒரு பெரிய கார்ப்ரேட் வியாபாரத்தலமா இயங்கிக்கிட்டு இருக்குங்கிறதை, சுவராசியாமா நீங்க பார்க்கலாம். சாமி, கோயிலு, பூஜை, புணஸ்காரம்னு காசு புடுங்கும் கூட்டம் நம்ம ஊர்ல மட்டுமில்லை, இங்கேயும் தான், அதுவம் ஹார்வார்ட் பல்கலைகழகத்தில எம்பிஏ படிச்சிட்டு எவ்வளவு பெரிசா செஞ்சுக்கிட்டிருக்காங்க தெரியுமா?

நம்ம சினிமாக்கள்ல காமிக்கற மாதிரி மரத்துக்கு மஞ்சத்துணியை கட்டிவிட்டு காசு பார்க்கும் கும்பலுங்க நிறைய, அதே மாதிரி அங்கங்க திடீர் கோவில் முளைச்சு பூஜை, பாட்டுன்னு அமர்க்களம் படுத்துவாங்க. கவுண்டமணி ஒரு படத்தில, மஞ்சத்துணியை மரத்துக்கு மரம் கட்டிவிட்டு பிறகு ஸ்கூட்டர்லயும், காருலயுமா போயி உண்டியல்ல இருந்து கலெக்ஷன் பண்ணி வரதை காமிச்சி காமிடி பண்ணது ஞாபகம் இருக்கா! இங்கேயும் ஆக மொத்தத்தில அதே மாதிரி தான், ஆனா என்ன, எல்லாமே கார்ப்ரேட் பிஸினஸ் ஸ்டையில்ல நடக்கிற ஒன்னு, எப்படின்னு பாருங்க!

இந்த வில்லோ கிரீக் கம்யூனிட்டின்னு (Willow Creek Community) ஒரு இடம், இல்லினீயாஸ்(Illinois) மாகாணத்திலே, 'south Barington' ங்கிற ஊருல இருக்கிற அந்த சர்ச்சு, ஒரு ஷாப்பிங் மாலுக்கு இருக்கிற அத்தனை வசிகளோட, அதாவது 'food court' லருந்து 'basket ball court' வரை, அப்புறம் சின்ன சின்ன cafe, starbucks வோடது, பெரிய ராட்சஷ டிவி ஸ்கிரீண், அப்புறம் 4000 காருக்கு மேலே நிறுத்த உண்டான பார்க்கிங் ஸ்பேஸ், டிஸ்னிலேண்ட் தோத்துச்சு போங்க! ஆனா, நம்ம ஊரு மாதாக் கோவிலு மாதிரி கூறிய கோபுரங்களோட, இல்லை பெரிய சிலுவைகள், ஞானஒளியில சிவாஜி அடிக்கிற பெல்லு, அப்புறம் அந்த சர்ச்சுக்களுக்கே உரிய கலர் கலரா கண்ணாடி ஜன்னல்கள் இது எல்லாம் எங்கேப்பா இந்த சர்ச்சுலன்னு தேடினீங்கண்ணா, ஒன்னும் கிடைக்காது(இப்பவும் நிறைய பழமையான அந்த கோத்திக் கலைகளுடன் கூடிய புரதான யேசுகிறித்துவ ஆலயங்கள் நிறைய அமெரிக்காவில பார்க்கலாம், இருந்தாலும், நான் சொல்ற இந்த சர்ச்சுங்க கொஞ்சம் மார்டன், இது தான் இன்றய கார்ப்ரேட் அமெரிக்காவின் மத சின்னம்! அதுதான் பெருகி நிக்குது!)

மேலே சொன்ன சர்ச்சுகளில், இந்த கார்ப்ரேட் தீம் வெறும் உருவ வடிவங்கள், வசதிகள்ல மட்டும் இல்ல, அதனுடய நிர்வாகமும் கார்ப்ரேட் ஸ்டைல் தான். கோவிலின் தூதறிக்கையிலருந்து ('Mission statement') அதாவது, 'நாத்திகர் அனைவரையும் யேசு கிறித்துவன் வழி நடப்பவராக செய்வதே', அப்புறம் ஏழு வழி தந்திரம் மற்றும் பத்து முக்கிய கடவுள் நம்பிக்கை எண்ணங்கள் வரை எல்லாம் உண்டு. இதுக்குன்னு ஹார்வோர்ட் மற்றும் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் எம்பிஏ ('MBA') படித்த மாணவர்களை கொண்ட நிர்வாகம் மற்றும் இதற்கென கன்செல்டன்ஸி நிறுவனம்! இது மாதிரி கார்ப்ரேட் உலகத்திலருந்து கடன் வாங்கி வழிநடத்தபடும் செயல் முறைகள் தான் இன்னைக்கு இந்த மாதிரி சர்ச்சுகள் இயங்கும் ரகசியம்! ஆக இந்த கோவில்கலின் மூத்த மத தலைவர்கள் CEO, COO என அழைக்கப்படுகிறார்கள், பூஜைபண்ணும் பாதிரியார்கள், 'Service Directors' என அழைக்கப்படுகிறார்கள். பிறகு இது போன்ற குட்டி குட்டி கோவில்களில் பிரசங்கம் பண்ணுபவரை 'Pastor' என அழைப்பார்கள், அவர்கள் தான் இப்பொழுது 'Pastorpreneur' காக கருதப்பட்டு, நல்ல ச்ம்பாத்தியம் ஈட்டுகின்றனர். அப்படியே தங்களை அழைத்துக்கொள்ளவும் முற்படுகிறார்கள்.

1975ம் ஆண்டுக்குப்பிறகு, மக்கள் வெகுவாய் சர்ச்சுகளுகு வருவது குறைந்தது கண்டு, இதுக்கு காரணம் என்னவென்று, இந்த வில்லோ கிரீக் சர்ச்சின் நிறுவனர் அறிய முற்பட்டார். அதன்படி ஒரு இன்ஃபார்மல் சர்வே எடுத்து, அதற்கு தகுந்த மாதிரி மாற்றங்களை கொண்டு வந்தார். அதாவது முதலில் கிறித்துவ மத பிம்பங்களான சிலுவை மற்றும், அந்த கலர் கண்ணாடி ஜன்னல்கள் என்றிருந்த பிம்பங்களை உடைத்து, பூஜை, பிரசங்கங்களை நாடக இசை வடிவிலே பெரிய வீடியோ திரைகள் அமைத்து மக்களின் உண்மையான பிரச்சனைகளை எடுத்து பேசி தமது போதனைகளில் ஒரு புதுமை புகுத்தினார். அதாவது இழந்த வாடிக்கையாளர்களை மீட்கும் வியாபார தந்திரமாகவே இது ஆயிற்று!

அடுத்து 'user-friendliness' என்ற உபயோகிப்போர் நட்பு எனும் அடுத்த தொழில்நுட்பத்தை முழுவதுமாக கோவிலில் நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளிலும் ஊடுறவச் செய்தார்! மதம் காண வரும் புதியோருக்கு எல்லா வசதிகளும் ஒழுங்கு முறையில், அதாவது சரியாக் சீர் செய்யப்பட்ட புல்வெளி மேடைகள், கார்கள் ஒழுங்காக நிறுத்த உண்டான வசதி என்று ஓவ்வொரு கோவில் சேவையும்(கரசேவை முதற் கொண்டு) திறம்பட செய்து தந்த வரவேற்பு மக்களை பெரிதும் கவர்ந்தது! அது மட்டுமில்லை, இந்த கோவிலின் மீது ஈடுபாடு வரக் காரணம், சில தன்விருப்ப கூட்டத்தினராலும் (மோட்டர் சைக்கிள் ஓட்டுபதில் விருப்பம் உடைய கூட்டத்தினர், இல்லை தன் எடையை கண்காணிக்கும் கூட்டத்தினர் என்று)மற்றும் குடிகாரர்களை, செக்ஸ் அடிக்ட்களை திருத்தி ஆலோசனை வழங்கி பொது சேவை செய்வ தாலும், கார் இல்லோதருக்கு தானமாக வரும் கார்களை பழுதுநீக்கி இல்லாதோருக்கு வழங்கிய தாலும், அனைவருக்கும் ஒரு ஈடுபாடு வரத்தொடங்கியது. அதுவுமில்லாமல், சிறு குழந்தைகள் பராமரிப்பு, வாலிப வயதினருக்கென பிரத்தியோக ஆடிட்டோரியங்கள் என்று அனைத்து வசதியும் செய்து கொடுத்து இந்த 'user-friendliness' கொள்கையை கடைபிடித்து அடுத்த வியாபர தந்திரம்!

இது மட்டுமில்ல, நான் மேலே கூறியது போல், சில சர்ச்சு வளாகங்கள் பெரிய ஷாப்பிங் மால் போன்ற அத்தனை வசதிகள், பேங்கிலிருந்து, மருந்து கடைகளிருந்து, பள்ளிக்கூடங்கள் என அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு கார்ப்ரேட் உலகம்! கோவிலிலும் பூஜைகள் வயோதிகருக்கு தனி நேரம், இளைஞருக்கு தனி நேரம், கல்யாணமாகாதோர் என வெறும் புதன் ஞாயிறு கிழமைகள் மட்டுமில்லாது அனைத்து நாட்களிலும் கோவில் திறப்பாடு! இது போன்ற வசதிகளுடன் அமெரிக்கா முழுமையும் நிறைய சர்ச்சுகள் வர தொடங்கி உள்ளன. அவை எல்லாம் மக்களை கவர சில பூஜைகளில் பிரபலங்களையும், பெரிய விபத்துகளில் மாண்ட உறவினர்களையும் அழைத்து சிறப்பு பூஜைகள் செய்வது , மற்றும் டிவி போன்ற ஊடகத்துறையிலும் ஒளிபரப்பு செய்து அதிக பட்ச மக்களை அடைய வழி செய்து அனைத்து வியாபர தந்திரங்களையும் செய்கின்றன.

இந்த வியாபார யுக்தியில் வெற்றி பெற்ற சில கோவில்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 15% மேலாக செலவிட்டு தொழில்நுட்பங்களையும் புகுத்தி உள்ளன என்றால் ஆச்சிரியத்திற்கு இடமில்லை. பெரிய பெரிய வீடியோ புரெஜக்ஷன்கள், மற்றும் கம்ப்யூட்டர், இசைபதிவுக்கூடங்கள் என எல்லாமே ஒரு மாயாஜாலம் தான்! இவ்வளவு பெரிய வசதிகளோடு, அத்தனை வியாபார தந்திரங்களால் இயங்கும் இந்த கோவில்களின் ஆண்டு வருமானம் ஐந்து ஆறு கோடி டாலர்களுக்கு மேல், அதில் வேலை பார்க்கும் நபர்கள் ஐந்நூருக்கும் மேலே! இந்த கோவில் பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களை போல் Finance, HR என அத்தனை துறைகளும் உள்ளன!

இப்படி விஷ்வரூபமாக வளர்ந்தாலும் தொல்லை தான், மிகப்பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களை போல! தியானமோ அல்லது தொழ வரும் பக்தர்கள் அனைவரும் தனி தனியாக பிரத்தியோக கவனம் தங்கள் மீது பிரசங்கம் செய்யும் பாதிரியார்களைடமிருந்து வர வேண்டும் என வரும் எதிர்பார்ப்புகளை சமாளிக்க முடியாமல் போகிறது. ஏனென்றால், ஒரு பெரிய ஸ்டேடியம் போல 5000, இல்லை 6000 பேருக்கு இறை கூட்டம் நடத்தும் போது இது முடிவதில்லை. ஆகையால் சிறு சிறு கூட்டங்களாக பிரித்து இறைக்கூட்டம் நடத்தி வாடிக்கையாளர்கள் சிதறாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டி உள்ளது இந்த கோவில் நிறுவாகத்தினருக்கு! மற்றும் நான் ஏற்கனவே கூறியது போல் இறைகூட்டங்கள் வகைபடுத்த படுகின்றன, அதாவது ஞாயிற்று கிழமைகளில் பொதுவானவர்களுக்கும், புதன் கிழமைகளில் ஆழமாக இறையான்மையில் ஈடுபடுவர்களுக்கும், புதன்கிழமையில் புதியதாக சமயத்தில் நுழைந்தவர்களுக்கும் என வகை படுத்தி புது நிர்வாக யுக்தியுடன் நடத்தபடுகிறது! மேலும் ஆங்காங்கே கிளைகோவில்களை தோற்றுவித்து வழிபாடு சேவைகளை உண்டாக்குதல் ('a form of religious franchising') ஆக வியாபார தத்துவத்தில் அடங்கிய அத்தனை திட்டங்களும், தொலைநோக்கு பார்வைகளும், வழிமுறைகளும் பின்பற்ற பட்டு ('Strategic planning and strategic vision') நடத்தபட்டு வருகிறது!

இது மட்டுமல்ல, நான் கூறிய இந்த கோவில், இந்த கோவில் நிர்வாக முறையை திறம்பட நடத்திட ஒரு தனியே கன்செல்ட்டிங் ஆர்மே நடத்துகிறது. இதன் கீழ் பதியப்பட்ட கோவில் கள் பத்தாயிரத்துக்கு மேலே! மேற்கொண்டு சிறப்புக்கூட்டங்கள் நடத்தி, அதில் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டு, தலைமை பிரசங்கராக புகழ் பெற்ற அமெரிக்க வியாபார ஆசான் 'Jim Collins', மற்றும் 'Bill Clinton' போன்றோரை வைத்து, இந்த சிறப்பு கூட்டங்ளால் சம்பாரிக்கும் தொகை 2 கோடி டாலருக்கு மேல்! இக்கோவில்கள் வியாபார உலகத்தின் தந்திரங்களை கடைபிடிப்பதோடு, அதை திரும்ப அவ்வுலகுக்கே கற்றும் கொடுக்கின்றன(reversal businesses), எப்படி என்பதை வணிக மேதை 'Peter Drucker' கூறுகிறார், இக்கோவில்கள் எப்படி புதியதாய் வழிபட ஆரம்பிப்போரையும், volunteer களையும் ஊக்கபடுத்தி ஒரு நல்ல ஊழியனாக மாற்றுகின்றன, பிறகு திறம்பட்ட தொழிலாளராக மாற்றுகினறன. இந்த கொள்கை (Motivation factor) வியாபர உலகுக்கும் மிகத்தேவை என்கிறார்!

ஆக இம்மாதிரி கோவில்களும் தொழுகைகளும் முழுக்க முழுக்க வியாபாரமாகிவிட்டது இந்த மண்ணிலே! இது தொன்று தொட்டு அமெரிக்காவில் நடப்பது தான். அந்த காலத்தில் வந்து குடியேரியவர்கள் மதக்குருமார்களும், வியாபார கும்பல்களும் தான். அக்கால 'Methodist preachers', அதாவது 'Fransisco' போன்ற மதத் தலைவர்கள் வியாபர நுட்பங்களை ('Marketing Technics') கையாண்டு மதத்தை பரப்பினார்கள். அது இப்பொழுதும் தொடர்கிறது, எல்லாமே ஒரு வியாபாரமாய்! அவர்கள் கூரும் கூற்று கடவுள் 'உன்னை படைத்தான், உன்னுடய சிறந்த உன் தேவைகளை நீயே பூர்த்தி செய்து கொள்ள' ஆம் உண்மை தான், தன் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு, 20 லட்ச டாலர்களில் வீடும், 10 லட்ச டாலர்களில் பறக்கும் விமானம் வைத்துக் கொண்டு காசு பார்க்கும் இந்த பாதிரியார்கள் கடவுள் படைத்த மனிதர்கள்!

இத எதுக்கு பதிவு பண்ணேன்னா, நம்ம ஊர்லயும் இந்த professional அநியாம் நடக்கத்தான் செய்து, காஞ்சி மடம் முதக்கொண்டு, தினிகரன் கூட்டம்னும், அம்மா அமிர்தாமாயினினும், சாமி பிரேமதாசான்னும் மேல்மருவத்தூர்ன்னும் நடக்கிறது நடந்துகிட்டு தான் இருக்கு!. விவேக் போட்டு காமிக்கிற காமடிங்க, இப்படி ஸ்டைலா சம்பாரிக்கும் டெக்னிக் நம்ம ஊர்லயும் வந்தாலும் ஆச்சிரியபடறதுக்கில்லை. மேலை நாடா இருந்தா என்ன, கீழை நாடா இருந்தா என்ன, காசேதான் கடவுளடா!

Monday, March 27, 2006

சென்னை வந்தது ஜப்பான் - உதயமாகும் புதிய இந்தியா!

நான் ஏற்கனவே ஒரு பதிவு எழுதி இருந்தேன், 'உதயமாகும் புதிய இந்தியா- நாளை நமதே' என்று. இந்த பதிவிலே நான் நமது அசுர வளர்ச்சியின் தாக்கத்தை உலகம் எப்படி ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதிலும் 'Deming Prize' பற்றி நான் குறிப்பிட்டு இருந்தேன், அதன் சுட்டியையும் உங்களுக்கு சொல்லி இருந்தேன். ஆனால் இந்த வார ஆனந்த விகடனில் 'சென்னை வந்தது ஜப்பான்' என்ற தலைப்பில் வந்த கட்டுரையை படித்தீர்களா?. படிக்காதவர்களுக்கு இதோ அந்த பிரசுரம்.

சேரனின் வெற்றிக் கொடி கட்டு படத்தில் வரும் ஒரு மான்ட்டேஜ். அந்த காட்சியில் நம் நாடு முன்னேறிய நாடாக உருவெடுத்திருக்கும். வெள்ளைக்காரர்கள் எல்லாம் நம்மூர் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்வார்கள். நம் நாட்டு மக்கள் எல்லாம் துபாய் ஷேக் போல குகு படகுக் கார்களில் பவனி வருவார்கள். சேரனின் இந்தக் கனவு எந்த அளவுக்கு மெய்ப்படும், எவ்வளவு சீக்கிரம் மெய்ப்படும் என்பதெல்லாம் தெரியாது. ஆனால், சேரனின் கனவோடு மிகப் பொருந்திப் போகக்கூடிய காட்சி ஒன்றைக் கடந்த வாரம் சென்னை லூகாஸ் டி.வி.எஸ். தொழிற்சாலையில் பார்க்க முடிந்தது.

டொயோட்டோ கார் கம்பெனியில் ஆரம்பித்து ஜெ.டி.பி. கார்ப்பரேஷன், ரினாய் கார்ப்பரேஷன்... என ஜப்பான் நாட்டின் முன்னணி ஆட்டோ மொபைல் கம்பெனிகளின் முதலாளிகள், உயர் அதிகாரிகள் என இருபத்தைந்து பேர் சென்னை, பாடியில் இருக்கும் லூகாஸ் டி.வி.எஸ். தொழிற்சாலைக்கு வந்திருந்தார்கள். அவர்களை அங்கே இழுத்து வந்தது எது தெரியுமா? தரம்!

திரைப்படத் துறைக்கு எப்படி ஆஸ்கர் விருதோ, அப்படித்தான் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் துறைக்கு டெமிங் விருது (Deming Prize). இப்படிப்பட்ட மிகப் பெரிய விருதை ஜெயித்திருக்கும் லூகாஸ் டி.வி.எஸ். தயாரிக்கும் ஸ்டார்ட்டர் மோட்டார், டைனமோ, ஹெட் லாம்ப் ஆகிய உதிரிபாகங் களைத் தாங்கி ஓடாத காரோ, மோட்டார் சைக்கிளோ உலகத்திலேயே இல்லை என்கிற அளவுக்கு, உலகெங்கும் இந்த கம்பெனியின் தயாரிப்புகள் செல்கின்றன. இதுதான் ஜப்பானியர் களை இந்த கம்பெனி நோக்கி இழுத்ததா?

திரைப்படத் துறைக்கு எப்படி ஆஸ்கர் விருதோ, அப்படித்தான் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் துறைக்கு லூகாஸ் டி.வி.எஸ். கம்பெனியிடம் ஜப்பானியர்கள் பாடம் படிக்க வருகிறார்கள் என்றால், இந்த ஒரு காரணம் மட்டும் போதுமா? இதற்கும் மேல் வலுவான காரணம் வேண்டும் அல்லவா?

இந்தக் கேள்வியை, அந்த ஜப்பானியக் குழுவுக்குத் தலைமையேற்று வந்திருந்த ததாஷி ஒனிஷியிடம் கேட்டோம்.

சென்ட்ரல் ஜப்பான் பகுதியில் இருக்கும் டொயோட்டா குரூப் கம்பெனிகக்கும், அவற்றைச் சார்ந்த கம்பெனிகக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் கம்பெனிகள் அனைத்துக்கும் தரக்கட்டுப் பாடு என்பதுதான் தாரக மந்திரம். தரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படும் தொழிற் சாலைகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி... அதைத் தேடிச் சென்று பார்வையிடுவது மட்டுமல்ல, அதனிடமிருந்து பாடங்கள் படிப்பதும் எங்கள் வழக்கம். அந்த வகையில்தான் லூகாஸ் டி.வி.எஸ்.ஸுக்கு வந்திருக்கிறோம் என்றார் ததாஷி ஒனிஷி.

சரி, அப்படி என்ன அதிசயம் நடக்கிறது டி.வி.எஸ்.லூகாஸில்?

டோக்கியோவில் உள்ள ஆஸ்மோ கம்பெனியைச் சேர்ந்த சுட்டூமூ சுசுகி இதற்குப் பதில் சொன்னார். இன்று காலையில் லூகாஸ் டி.வி.எஸ். தொழிற் சாலையின் அனைத்துப் பிரிவுகக்கும் சென்று, இங்கே தயாரிக்கப்படும் பொருள்களைப் பார்த்தோம். பொருள் கள் மட்டுமல்ல, அவை இங்கே தயாராகும் முறைகூட உலகத் தரத்தோடு இருப்பதைக் கண்டோம்.

இங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள் எவருமே ஏதோ தொழிற்சாலைக்கு வந்தோம், அன்றைய வேலையை முடித்தோம், கிளம்பினோம் என்றில் லாமல், மனித உயிர்களோடு சம்பந்தப் பட்ட வாகனங்கக்கான உதிரிபாகங் களைத் தயாரிக்கிறோம் என்கிற உணர்வோடு, தங்கள் வேலையை பயபக்தியோடு செய்கிறார்கள். இத்தகைய தொரு தொழில் பக்தியை நாங்கள் வேறு எங்கும் கண்டதில்லை!

சுட்டூமூ சுசுகியைக் கவர்ந்த வேறு ஒரு அம்சமும் இந்த கம்பெனியில் இருக்கிறது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில்கூடத் தொழிலாளர்கள் இங்கே வந்து தாங்கள் வேலை செய்யும் மெஷின்களை சர்வீஸ் செய்கிறார்கள். உற்பத்தியாகும் பொருளின் தரத்துக்குப் பங்கம் விளைவிக்கும் விதத்தில் இயந்திரம் பழுதடைந்திருந்தால், அதைத் தாங்களே கண்டுபிடித்துச் சரி செய் கிறார்கள். தரக்குறைவான ஒரு பொருளைத் தான் தயாரிப்பது கம்பெனிக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் தனக்கே கேவலம் என்று ஒவ்வொரு தொழிலாளியும் இங்கே கருதுகிறார். இதுதான் இந்த கம்பெனிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய சொத்து! என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார் சுட்டூமூ சுசுகி.

இங்கே இருக்கும் தொழிலாளர்களின் வெற்றிக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமானது இங்கே இருக்கும் பயிற்சிக்கூடம். தான் சம்பந்தப்பட்ட துறை யில்தான் என்றில்லை, ஆர்வம் இருந்தால் மற்ற துறைகளைப் பற்றியும் இங்கே ஒரு தொழிலாளி யால் பயிற்சி பெற முடியும். கம்ப்யூட்டர், லேட்டஸ்ட் உபகரணங்கள், பயிற்சித் திட்டம், பயிற்சியாளர்கள் என எதற்கும் இங்கே பஞ்சம் இல்லை. தேவை ஏற்பட்டால் வெளிநாடுகக்கு அனுப்பிக்கூட தொழிலாளர்கக்குப் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

தொழிலாளர்கள் தொடர்ந்து சாதிக்கக் களம் அமைத்துக் கொடுத்தவர் இந்த கம்பெனியின் மேலாண் இயக்குநர் டி.கே.பாலாஜி. அவர் சொன்ன கருத்துக்களில் மறைந்திருக்கிறது இந்த கம்பெனியின் வெற்றி ரகசியம்.

ஜீரோ டிபெக்ட் & அதாவது, நூறு டைனமோவை விற்பனை செய்தால் அதில் ஒன்றுகூடப் பழுதானதாக இருந்துவிடக்கூடாது என்று நாம் சொல்கிறோம். ஆனால், ஜப்பானியர் களோ ஜீரோ டிபெக்ட்டையும் தாண்டி மேலே சென்றுவிட்டார்கள். அது எப்படி என்கிறீர்களா? நோயில்லாமல் இருப்பதே பூரண ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தமாகாது இல்லையா? அதே மாதிரி குறையில்லாமல் இருந்தால் மட்டும் போதாது... நாம் தயாரிக்கும் பொருள்கள் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும். அதுவும் முக்கியம்!

தரம்பற்றி பேச ஆரம்பித்தால் நேரம் காலம் போவது தெரியாமல் அந்த சப்ஜெக்டில் மூழ்கிவிடுகிறார் பாலாஜி. லூகாஸ்&டி.வி.எஸ். கம்பெனியின் மகத்தான வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கியக் காரணம்.

இதெ இதெத்தான் நான் சொல்ல வந்தேன் என் 'உதயமாகும் புதிய இந்தியாவிலே'

நாளை நமதே! ஜெய் ஹிந்த்!!

Monday, February 20, 2006

தேடினேன் வந்தது-கூகுளின் அசூர வளர்ச்சி!

கணனியை பயன்படுத்துறவங்க எல்லாரும் கூகுளை பயன் படுத்தாம இருக்கமாட்டங்க. எதை நீங்க இணயத்தில தேடனும்னு உட்கார்ந்தாலும், எல்லாரும் முதல்ல போற இடம் கூகுள் தான். அந்த கம்பனி எங்க ஆரம்பிச்சது தெரியுமா? காரு கேரேஜ்லதான். அதை ஆரம்பிச்சது இரண்டு இளைஞர்கள், 'லேரி பேஜ்' மற்றும் 'செர்கி பிரின்'. அவங்க பிஎச்டி படிக்கிறப்ப, அவங்க ஆராஞ்சு கண்டுபிடிச்ச 'தேடுபொறி' தான் இந்த கூகுளுக்கே மூலதனம். அவங்க படிச்சது கலிபோர்னியால இருக்கிற ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகம். அதுக்கப்பறம் வாய்மூலமா சொல்லப்பட்ட இந்த கூகுள் எல்லாரும் விரும்பி எந்த விஷயத்தையும் இணையத்தில தேட இலகுவா உண்டாக்கப்பட்ட கருவி.


இந்த கம்பனியோட சாராம்சம், விளம்பரங்கள் இருந்து வர வருமானம் தான். இன்னைக்கு அசூரத்தனமா வளர்ந்து 100 பில்லியன் டாலர்களை தொட்டு விட்டது. அதனுடய பங்கு இன்னைக்கு $475 வரைக்கும் உச்சாணியிலே போயுடுச்சி. வெறும் சாதாரணமா அதன் பங்கு, $85 ஆரம்பிச்சது IPO மூலியமா!இவ்வளவு அசுரத்தனமா வளர்ச்சி அடைஞ்ச இந்த கம்பனி, இது கொடுக்கிற அத்தனை வசதிகளும் நம் போன்ற சாதரண மக்களுக்கு இலவசமா கொடுக்குது. அதாவது சொற்பதங்களை வச்சு, எந்த ஒரு விஷயத்தை தேடிறதுல இருந்து, ஜிமெயில், மேப், அப்புறம் எங்க ப்ளாக் சைட் Analytics, ஒலியும் ஒளியும் பிம்பங்கள் சேகரிப்புன்னு எத்தனையோ! இதனுடய பரம தொழில் முறை எதிரிங்க 'yahoo' மற்றும் 'Microsoft' எப்பவேனாலும் இவங்களால ஆபத்து வர வாய்ப்பு உண்டு. ஆனா எதையும் பத்தி கவலைப்படாமா தொழில்நுட்ப முன்னேற்றத்தில கவனம் செலுத்தி புது புது வசதிகளை நம் போன்று இணையத்தை உபயோகபடுத்திறவங்களுக்கு செய்து கொடுத்துக்கிட்டே இருக்கு. இன்னும் நிறைய இலவசமா வசதிகளை செய்ய முனைப்புடன் இருக்காங்க, அது மாதிரி ஒரு 100 வசதிகள் அவங்க லிஸ்ட்ல இருக்கு, அதில ஒன்னு 'space Elevator', அதாவது பூமியிலருந்து நிலவுக்கு சாமான்களை எடுத்த செல்லும் வாகனம்!

இவ்வளவு பெரிய வளர்ச்சியை ஏழாண்டுகளுக்குள்ள அடைஞ்சிருக்கு. இதனுடய இந்த அசூரத்தனமான வளர்ச்சியை எந்த மீடியா கம்பனிங்களும் இது வரை காணல. எல்லாம் அந்த 30 வயசு தாண்டின இந்த இரு இளைஞர்களால. இருந்தும் கம்பனிக்கு பெரிசு ஒன்னு வேணும்னு, ஏன்னா என்னதான் புத்திசாலித்தனம் இருந்தாலும், அனுபவரீதியா வழி நடத்த ஒருத்தர் வேணும்னு, 'எரிக் ஸ்க்மிட்'னு 51 வயசுகாரர், 'Sun Micro System'த்தில வேலை செஞ்சவரு இந்த கம்பனி CEO வாக்கி ஆளுமை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இதில விஷேஷம் என்னான்னா, இந்த இரு இளைஞர்களும் எந்த பெரிய 'Business School' போயி படிக்கல்ல, ஆனா அவங்க படிச்ச பள்ளி படிப்பு, வியாபர உத்திகளை சின்ன புள்ளையிலருந்தே அவங்க கிட்ட வளர்ந்த 'Entrepreneurship' திறன் தான் இந்த இமாலய வளர்ச்சிக்கு பெரும் உதவினது.

இந்த குழந்தைத்தனமான ஆர்வம் தான், இவங்களோட இந்த வளர்ச்சிக்கு காரணம், இந்த பேஜ், மிச்சிகன் மாகாணத்தில் பிறந்தவர் இவரது தந்தை கணனி பேராசிரியர், தாயும் ஒரு கணனி ஆசிரியர். சிறு வயசிலே சிறு ரேடியா மற்றும் எலக்ட்ரானிக் உபகரண்களை கொண்டு விளையாட்டு களில் நாட்டம் செலுத்தியவர். இசையிலும் மிகுந்த ஆர்வமுடையவர், அஞ்சலி, அஞ்சலி பாட்டுக்குள் வரும் செக்ஸாபோன் தான் இவர் விரும்பி வாசிக்கும் இசைக்கருவி. ஆனால் பிரின், பிறப்பால் ஒரு ரஷ்யர், 1970களில் அமெரிக்காவிற்கு அவரது பெற்றோர்கள் குடி புகுந்தனர். சிறுவயதில் சர்க்கஸ் பள்ளியில் பயின்றவர். அதாவது சர்க்கஸ் தொடங்கும் போதோ முடியும் போதோ கடசியில நெட்கட்டி, பார் விளையாடுவாங்களே , அந்த விளையட்டு. அதை கற்றுக்கொண்டவர். பாருங்க சின்ன வயசில எப்படி விநோதமான பொழுது போக்குகள்ல எல்லாம் ஈடுபடறாங்கன்னு. நமக்கு சர்வமும் சினிமான்னு தான் பொழுது போகும்!

ஆக இந்த கூகுளின் அசகாய வளர்ச்சிக்கு பெரும் பங்கு இந்த இரட்டையர்கள் தான். இந்த கூகுள்ங்கிற பேர் வந்த மூலக்காரணம் தெரியுமா. அதாவது அவங்க கண்டு பிடிச்ச அந்த 'தேடுதல்' திறனுக்கு பேர் சூட்டினது முதல்ல 'Googol'. அதாவது, இந்த ஆங்கில பதம் குறிப்பது கணிதத்தில் வர நம்பர், அதாவது ஒன்றுக்கு பிறகு நூறு பூஜ்யங்களை கொண்ட நம்பர், ஆனால், அது சற்றே திரிந்து 'Google' ஆயுடுச்சி! இன்னொன்னு, இவங்க வியாபார உத்தியே தனி, அதாவது விளம்பரதாரர்கள்கிட்ட இருந்து தான் வருமானமே. ஆனா ஜாஸ்தி காசு கொடுத்தா, நம்ம விளம்பரம் அந்த 'தேடுதல்' பக்கத்தில முன்ன வரணும்ன்கிற கட்டாயம் கிடையாது. ஜனங்க எவ்வளவுக்கெவ்வளவு அதிகமா, உங்க விளம்பரங்களின் சுட்டியை தொட்டு, உங்க பக்கத்துக்கு வாரோங்களோ அதுக்கு தகுந்த மாதிரி காசு கொடுக்கணும், அதாவது நம் போன்ற மக்கள் எவ்வளவு விரும்பி அந்த விளம்பரத்துக்கு போறோம்ங்கிறதுதான் இங்கே முக்கியம். இதனால் விளம்பரதாரருக்கும் மகிழ்ச்சி, நம்மை போன்ற உபயோகாதாரருக்கும் மகிழ்ச்சி, கூகுளுக்கும் அதிக வருமானம். இது போன்ற புத்திசாலித்தனமான உத்திகள் நிறைய பின்பற்றரதுனால தான், இந்த அசகாய வளர்ச்சி! இவங்களோட இந்த புத்திசாலித்தனமான உத்திகள்ல சில சர்ச்சைக்குறியதுக்கூட, அதில முக்கியமா ஜிமெயில் வரும் மடல்களை ஸ்கேன் செஞ்சு, அதில வர பதங்களுக்கு ஏத்த மாதிரி விளம்பர சுட்டிகளை இணக்கிறது. இது ஒரு நல்ல வியாபார உத்திதான், ஆனா, ப்ரைவசிக்கு வேட்டு வைக்கறதால இதற்கு நிறைய எதிர்ப்பு!

இப்ப ஆங்கில மொழிய விட்டு உலகத்தில இருக்கிற அத்தனை மொழி தேடல் பொறிகளை ஆக்கிரமிக்க மும்மரமா இருக்காங்க இந்த கூகுள் நிறுவனத்தினர். அதானால, சீனா, இந்திய மொழிகள்லயும் மெதுவா நுழைஞ்சு ஆதிக்கம் படைக்க தயாராகிட்டாங்க! ஆக எதை தேடினாலும் இனி வந்து விடும். அதானல தான் இந்த பதிவே 'தேடினேன் வந்தது'

எனக்கு என்னமோ இந்த கூகுள் வளர்ச்சியை பத்தி எழுதனும்னு தோணுச்சி, ஏன்னா நம்மவங்கிட்ட இருக்கும் அசாத்திய திறமையில நம்மலால மென்பொருள் எழுத்தாளாரா உலகம் வியக்க நிக்க முடிஞ்சதே தவிர, இது போன்ற ஒரு தனித்துவமா பெரிய கம்பனி உருவாக்கி சாதனை படைக்க முடியல நம் ஊர் இளைஞர்களாலே! கொஞ்சமா கொஞ்சமா சராசரி வேலைகளை நம்மல மாதிரி நாட்டுக்கு அனுப்பி, நம்மக்கிட்ட இருக்குக்கூடிய இந்த மக்கள் கூட்டம்ங்கிற விலை மதிக்க முடியாத சொத்துக்களை கம்மியான விலையிலே உபயோகம் பண்ண சரியா தெரிஞ்சு வச்சிருக்காங்க இந்த அமெரிக்காவினர். அதனால தான் இங்கிருக்கிற அமெரிக்கர்கள், INNOVATION பத்தி எப்பவும் சிந்தனையோட இருக்கிறதால, அவங்காளால உலகை ஜெயிக்க முடியுது. இதை பத்தி அநேகமா நேரம் கிடைக்கிறப்ப பிறகு நிறைய எழுதலாமுன்னு இருக்கேன்.