Tuesday, December 19, 2006

ஹலோ, மைடியர் ராங் நம்பர்!

என்ன மன்மதலீலை படத்திலே வர்ற இந்த டைட்டில்ல போட்டிருக்கிற பாட்டை உங்களுக்குத் தெரியுமா? தெரியலைன்னா கவலைப்படாதீங்க! உங்களுக்கு ஒரு விஷேஷ வீடியோ கிளிப் கீழே காத்துக்கிட்டுருக்கு, அப்பறமா பார்த்துக்கலாம்! சரி இப்ப இது எதுக்கு இந்த பாட்டு கச்சேரி எல்லாம்னு கேட்கிறீங்களா! காரணம் இருக்கு. நேத்து மன்மதலீலை படம் பார்த்தேன், இந்த படம் வந்து சரியா முப்பது வருஷமாச்சின்னு நினைக்கிறேன். ஆனா இந்த மாதிரி பழையப்படங்களை பார்க்கிறப்ப சில காட்சிகள், வசனங்கள், பாட்டுகள் எல்லாம் அந்தந்த காலத்துக்குத்தான் பொருந்தி வரும் அதாவது, அந்த படங்கள் வந்த காலகட்டத்துக்கு தான் பொருந்தி வரும்! இரண்டு நாளைக்கு முன்னே பாமா விஜயம்னு ஒரு படம் பார்த்தேன்(சரி, இந்த படத்தை பத்தி சில முக்கிய விஷயங்கள் இருக்கு, அப்பறமா ஒரு பதிவு எழுதுறேன்) அதிலேயும் சில வசனங்கள் இருந்தது, ஆனா அது இந்த காலத்துக்கு பொருந்தி வராது, அது மாதிரி இந்த ராங் நம்பர் கதையை பத்தி சொல்லியாகணும், அதாவது இந்த தொழில்நுட்ப வளர்ச்சி, இந்த முப்பது ஆண்டுகள்ல நம்மலை எங்க கொண்டி விட்டிருக்குங்கிறதை கொஞ்சம் பார்க்கலாமா?

இந்த மன்மதலீலை படம் வந்தப்ப, இந்த ராங் நம்பரை வச்சு பாட்டு கதை வந்தது எல்லாம் நடைமுறையில இருந்ததை வச்சு தான், அதாவது முப்பது வருஷத்துக்கு முன்னே டெலிபோன் பத்து வாட்டி ஒரு நாளைக்கு பேசினீங்கன்னா, அதிலே அஞ்சு வாட்டி ராங் நம்பர் விழுக சான்ஸ் இருக்கு, ஏன்னா அப்ப நமக்கு கிடைச்ச டெலிபோன் சேவை அப்படி! முதல்ல இந்த டெலிபோன்ங்கிறது பெரிய விஷயம் அப்ப! முதல்ல இந்த வசதி எல்லார்கிட்டேயும் கிடையாது. இன்னைக்கு நம்ம சொல்றோமே மத்திய வர்க்கம்னு, அவங்ககிட்ட எல்லாம் இப்ப இது 'take it for granted'. அதுவும் சும்மா இப்ப இந்த தெரு முகனையிலே பழம் வெத்திலை பாக்கு வாங்க போய்ட்டு, அங்கிருந்துக்கிட்டு ரஸ்தாலி வாங்கறதா, இல்லா பூவம்பழம் வாங்கிறதான்னு ஆயிரத்துட்டு தடவை செல்லை அமுக்கி வீட்டுக்கு பேசிக்கிட்டு வெட்டியா இருக்கிற மாதிரி இல்லை அப்ப, ஏன்னா இந்த டெலிபோன் வச்சுக்கிறதுங்கிறது நினைச்சுக்கூட பார்க்க முடியாத ஒன்னு, அப்படி இருந்தாலும், அது வேலை செய்யாது, அப்படி செஞ்சாலும் அது ராங் நம்பரை கூப்பிடத்தான் உபயோகப்படும். ஆக இந்த பாட்டு எழுதி இப்படி ராங் நம்பரை கணக்குப்போடும் கதை அப்ப இந்த மன்மதலீலை படத்திலே வந்தது ஒன்னு ஆச்சிரியமில்லை!

ஏன் இதை சொல்ல வர்றேன்னா இந்த 'telecom sector' வளர்ச்சி பத்தி சும்மா ஒரு செய்தி ஒன்னை இப்ப சமீபத்திலே படிச்சப்ப, இந்த படத்திலே வந்த பாட்டை பார்த்துட்டு நினைச்சு பார்த்தப்ப பெரிய மலைப்பா இருந்திச்சு! இன்னைக்கு நீங்க நான் எல்லாம் இப்படி இணையத்திலே வெட்டி கதை அடிச்சி, பிளாக் எழுதி தள்ளிக்கிட்டிருக்கும்ல, இதுக்கு அடிப்படை தொழில் வளர்ச்சி எதுன்னா, இந்த தொடர்பு சாதனம்னு சொல்லுவேன், ஆமா இந்த ராங் நம்பர் நமக்கு ரைட் நம்பர் ஆனதாலே தான். இதன் வளர்ச்சி வரலாற்று பின்னனி பத்தி உங்களுக்கு தெரியலைன்னா, நான் போடற சினிமா கிளிப்பு மட்டும் பார்க்காதீங்க, இதையும் கொஞ்சம் படிச்சு தெரிஞ்சுக்கங்க! ஏன்னா இந்த ராங் நம்பர் விளையாட்டு நானும் சின்னபிள்ளையிலே நிறைய ஆடியிருக்கிறேன்! அதாவது என் ஃபிரண்டு ஒருத்தன் அப்ப எஸ் எஸ் எல் சி முடிச்சிட்டு ஒரு லாரி புக்கிங் ஆபிஸிலே வேலைசெஞ்சப்ப, இந்த சாய்ந்திர நேரத்திலே பொழுது போவலைன்னு அந்த புக்கிங் ஆபிஸிலே உட்கார்ந்து டெலிபோன் சுத்தி ராங் நம்பர்ல மாட்ற மாமிங்ககிட்ட கடலை போட்டுக்கிட்டு பொழுது போக்குவோம், இப்ப முன்னபின்ன தெரியாத மாமிங்ககிட்ட 'ச்சேட்டிங்' நீங்க பண்ணி காலம் கழிக்கிறீங்கள்ள, அதை நாங்க ஒரு முப்பது வருஷ த்துக்கு முன்னேயே பண்ணிருக்கோம் இந்த ராங் நம்பர் ரூட்ல! சரி இப்ப எதுக்கு அந்த கதை, நான் சொல்ல வந்த விஷயத்தை கீழே படிக்கலாம் வாங்க!

இந்த தொலை தொடர்பு சாதனம் நமக்கு 1850ம் ஆண்டே, பிரிட்டிஸ்காரான் அப்பவே பாம்பேயிலிருந்து மெட்ராஸுக்கு, ஊட்டியிலிருந்து பெங்களூருக்குன்னு லைன் போட்டு ஆரம்பிச்சி வச்சிட்டு போய்ட்டான். அதுக்கப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பெருகி இன்னைக்கு 17 கோடி தொலைபேசியாடுச்சி, அதாவது அதிலே 12 கோடி மொபைல் ஃபோன்னுங்க, மிச்சம் 5 கோடி தரை வழி தொடர்பு கொண்ட தொலைபேசிங்க. அதாவாது இந்த மொபைல் தொலைபேசி பெருக்கத்திலே நம்ம நாடு, சைனா(40 கோடி), அமெரிக்கா(17 கோடி), ரஷ்யா(13 கோடி)போன்ற நாடுகளுக்கு இணையாக இந்த தொலைப்பேசி பெருக்கத்திலே வளர்ந்துக்கிட்டு இருக்கோம்! இன்னும் இதோட அசுர வளர்ச்சி தொடர்ந்துக்கிட்டிருக்கு, ஆனா சராசரியா இந்த வசதி அநேக மக்களுக்கும் சென்றடஞ்சதான்னா அதான் இல்லை. அதாவது நம்ம இந்த தொலைப்பேசி பெருக்கத்திலே உலகத்திலேயே ஏழாவது இடத்திலே இருக்கோம், ஆனா மக்கள் தொகையிலே சராசரியா பார்த்தா, ஒரு நூறு பேருக்கு இது நாலு பேருக்கிட்ட தான் இன்னைக்கு இருக்கு! அதுவே அமெரிக்காவை எடுத்துக்கிட்டா நூத்துக்கு 68 பேருக்கிட்ட டெலிபோன் வசதி இருக்கு! சைனாவிலே நூரு பேருக்கு 15 பேருக்கிட்ட டெலிபோன் வசதி இருக்கு, ஆக நாம் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு! அது மாதிரி இன்னும் 20 ஆண்டுகள்ல இன்னைக்கு அமெரிக்காவிலே இருக்கும் அளவுக்கு தொலை தொடர்பு (network size) வளரனும்னா அது 23 சதவீத மடங்கு இன்னைக்கு நம் நாட்டில் இருக்கும் அளவைப் போன்று அதிகரித்தால் தான் உண்டு, அது மாதிரி இன்னைக்கு ஜப்பானில் இருக்கும் அளவைப் போல எட்டிப் பிடிக்கணும்னா, நாம் இன்னும் 17 சதவீத வளர்ச்சி அடைஞ்சாதான் உண்டு! இந்த கணக்கு நம் நாட்டின் இருக்கும் ஜனத்தொகை 20 வருஷம் கழிச்சி இன்னைக்கு இருக்கும் 100 கோடி அளவிலே இருந்தால் தான் நான் மேலே சொன்ன வளர்ச்சி சதவீதமா இருக்கும், இல்லைன்னா அதுவும் எகிறுடும்!

ஆனா இந்த 30 வருஷத்திலே பார்த்தீங்கன்னா, இந்த தொலை தொடர்பு தொழில் நுட்பம் வளர்ச்சி பிரமிக்க வைக்க கூடியது தான். நான் சொல்லும் அந்த ராங் நம்பர் காலத்திலே, அதாவது 30 இல்லை 40 வருஷத்துக்கு முன்னே, முக்கியமான பெரிய நகரங்கள்ல தான், அதுவும் சென்னை போன்ற பெரும் நகரங்கள்ல தான் தானியங்கி தொலை தொடர்பு நிலையம் உண்டு, அதாவது ஆட்டோமேட்டிக் எக்ஸேஞ்சின்னு! இந்த டெலிபோன் எக்ஸேஞ்சு மற்ற சிறு ஊர்கள்ல மேனுவல்(Manual) எக்ஸேஞ்சு, அதாவது கனெக்ஷ்ன் கொடுக்க ஆளு இருப்பாங்க இந்த தொலை தொடர்பு நிலையத்திலே! நீங்க எந்த நம்பருக்கு போன் பேசனுமோ, அதை சொன்னா, எக்ஸேஞ்சில இருக்கிற அம்மா டெலிபோன் ஜாக்குல மாத்தி உங்க நம்பருக்கும் அந்த நம்பருக்கும் தொடர்பு கொடுப்பாங்க, அப்பறம் நீங்க பேசலாம். ஆனா ஆட்டோமேட்டிக் எக்ஸேஞ்சிலே நீங்க நம்பரை சுலட்டி அதுவா தொடர்பாகி நீங்க பேசலாம்! அது மாதிரி அந்த காலத்தில தொலைதூர தொடர்புக்கு நீங்க 'ட்ரெங்கால்'(Trunk call) புக் பண்ணனும், அப்பறம் டெலிபோன் எக்ஸேஞ்சிலே அவங்க உங்களை கூப்பிட்டு கனெக்ஷன் கொடுத்தா நீங்க பேசலாம்! இது நான் சொல்றது திருச்சியிலிருந்து சென்னைக்கு தொலைபேசி பேச! அதுவும் நீங்க இன்னைக்கு சாய்ந்திரம் புக் பண்ணினிங்கனா நாளைக்கு காலையிலே உங்களுக்கு லைன்னு கிடைக்கும்.ஆக அப்ப இது தொலைபேசி இல்லை, தொல்லைபேசி!

இந்த தொலைதொடர்பு தொழில்நுட்பம்னு பார்த்தீங்கன்னா, இந்த எக்ஸேன்சு எல்லாம் அந்த காலத்திலே இயங்கினது க்ராஸ்பார் எக்சேஞ்சுன்னு (Crossbar exchange), அதாவது இதெல்லாம் எலெக்ட்ரோ மெக்கானிக்கல் எக்ஸேஞ்சுங்க! இது அப்பறம் எலக்ட்ரானிக் எக்ஸேஞ்சா மாறுச்சு! அப்பறம் வந்தது தான் டிஜிட்டல் எக்ஸேஞ்சு! இந்த தொழில்நுட்பத்தை மிகவும் விலை கொடுத்து அயல்நாட்டிலருந்து இறக்குமதி பண்ணுனா தான் உண்டு! அவ்வளவு வசதி நம்ம நாடல இல்லை, மேற்கொண்டு இந்த டெலிபோன் துறை அரசாங்கத்திடம் தான் இருந்தது! அப்ப தான் அமெரிக்கவிலே படிச்சி நிறைய தொழில்நுட்ப ஆராய்ச்சி எல்லாம் தன் பேரில் வச்சிருந்த 'சாம் பிட்ரோடா'(Sam Pitroda)என்பவரை ராஜீவ் காந்தி நம்ம நாட்டுக்கு கூட்டிட்டு வந்து இந்த தொழில்நுட்பத்தை நம்ம நாட்டுக்கு தேவைக்கு ஏற்ப வடிவமைச்சி மலிவான முறையிலே இந்த டெலிபோன் எக்ஸேஞ்சு உருவாக்க 'C-DOT' ங்கிற ஒரு நிறுவனத்தை உருவாக்கினாங்க! அவங்க கண்டுபிடிச்ச தொழில்நுட்பம் தான் இன்னைக்கு பட்டித்தொட்டி எல்லாம் 'PCO'ன்னு பார்க்கிறீங்களே அந்த பொது தொலைபேசி பூத் வர காரணமாச்சு, சாதாரண மனிதனுக்கும் மலிவா தொலை தொடர்பு சாதனம் கிடைக்க வழி செஞ்ச்சு! இவங்க கண்டுபிடிச்ச அந்த டிஜிட்டல் எக்ஸேஞ்சு தொழில்நுட்பம் தான் இன்னைக்கு பறந்து கிடக்கும் இந்த தொலை தொடர்பு வளர்ச்சிக்கு முக்கிய காரணம்! இந்த 'C-DOT' நிறுவனத்துக்கு எக்கசக்கமான தானியங்கும் அதிகாரம் கொடுத்திருந்தாங்க! இது ஒரு அரசு நிறுவனமா இருந்தாலும் எல்லா முடிவுகளையும் அவங்களே எடுக்கும் அதிக அதிகாரத்துடன் செயல்பட்டு, அந்த காலகட்டத்திலே, அதாவது 80களின் ஆரம்பத்திலே, இந்த நிறுவனம் ஆராய்ந்து வடிவைத்த தொலை தொடர்பு தொழில்நுட்பம் தான் இன்னக்கு வளர்ந்து நிற்கும் இந்த தொலை தொடர்புக்கு முன்னோடி! அந்த காலகட்டத்திலே பொறியியல் படித்து முடித்து வெளிவந்த என்னைப் போன்றோர் ராப்பகலா உழைச்சி உருவாக்கின தொழில்நுட்பம்னு சொல்றதிலே ரொம்ப பெருமைபடுகிறேன்! ஆனா அதுக்கப்பறம் அந்த நிறுவனம் மேற்கொண்டு வளரமா சில அரசியல் சாக்கடைங்க தடுத்திடுச்சி!

பிறகு 90களின் பிற்பகுதியில் வந்த மொபைல் ஃபோன் வளர்ச்சி, ஃபைபர் ஆப்டிக் என்ற ஒளி கடத்துவான் மூலம் தொலை தொடர்பு வளர்ச்சி, கணனி மற்றும் இணைய தொழில்நுட்ப வளர்ச்சி அப்படின்னு இன்னைக்கு தொலை தொடர்பு வசதிகளின் பயனை நம்ம எல்லாம் அனுபவச்சிக்கிட்டிருக்கோம்! ஆனாலும் இந்த வளர்ச்சி, நான் மேலே சொன்ன மாதிரி அடி மட்ட மக்கள் எல்லார்கிட்டையும் சென்றடய வில்லை, இந்த 'டிஜிட்டல் டிவைட்'ன்னு சொல்றாங்கள்ள, அது இன்னும் இருக்கு! ஆனாலும் அரசாங்கத்தின் இந்த தொலை தொடர்பு கொள்கை, மற்றும் சட்ட திட்டங்கள், அப்பறம் இந்த தொழில் துறை முன்னேற்றம் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் மூலம் மலிவான சேவையில் மக்களை சென்றடய நிறைய செய்றதா சொல்றாங்க! இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, சமமான போட்டிகளுடன் கொண்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவையுடன் இது மேலும் வளர்ந்து, இந்த செய்தி தொடர்பு பயன் அடிமட்ட மக்களை சென்றடயவும் பாகுபாடற்ற வணிகநிலை உருவாகவும் ஒரு தனிமக்குழு (TRAI) கண்காணிப்பில் செயல்பட்டு வருவதும், அதன் மூலமாய் இது நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை இருப்பதால் இந்த டிஜிட்டல் ஏற்றதாழ்வு மறைய வாய்ப்பு உள்ளது.

அப்பாடி, மன்மதலீலை படம் பார்த்துட்டு வெறுமன வீடியோ கிளிப்பு போடக்கூடாதா, அதுக்கு இவ்வளவு பெரிய பதிவான்னு நீங்க அரட்றது கேட்குது! சரி நம்ம சினிமாவுக்கு போவோம், இந்த மன்மதலீலை ஒரு குஜாலானப்படம், படத்துக்குன்னு ஒரு தனிப்பதிவு கட்டாயம் உண்டு! அதுவும் இந்த படம் எடுத்ததே நான் கமலை பார்த்து தான்னு பாலசந்தர் அப்ப சொல்லி அது பெரிய சர்ச்சை ஆனது பத்தி எல்லாம் அப்புறம் எழுதுறேன்! இந்த கிளிப்பிலே வரும் ஒய் விஜயாவோட அப்ப ஏகப்பட்ட புது பொண்ணுங்களை வச்சி எடுத்து வந்த படம் இது! அதுக்குள்ள இந்த படம் வீடியோ கிடைச்சா போட்டு பார்த்துடுங்க, அப்பதான் அடுத்த பதிவுல நான் சொல்றது சுவாரசியமா இருக்கும், இப்ப இந்த துண்டைப் பாருங்க!

Thursday, December 14, 2006

ஸ்ரீவித்யா, ரஜினி, கமல்-அபூர்வ ராகங்கள்!

என்ன இவெங்களை எல்லாம் அபூர்வராகங்கள்னு சொன்னா சரியா இருக்குமில்லை! ஆமா, இந்த டைட்டிலோட எடுத்தப் படம் 76ல வந்த அபூர்வ ராகங்கள்! நான் அப்ப விடலைப் பருவத்தின் மத்திமத்திலே இருந்த நேரம்! என்னமோ தெரியிலே, அந்த காலக் கட்டங்கள்ல இருந்த மத்த விடலைங்க மாதிரி இல்லாம, கொஞ்சம் கொஞ்சமா எம்ஜிஆர், சிவாஜி மோகம் எல்லாத்தையும் விட்டுட்டு அப்ப பாலசந்தர் படங்கள் மேலே அதிகமான ஈடுபாட்டோட காலம் கழிச்ச தினங்கள் அதெல்லாம்! இப்ப சமீபத்திலே ஸ்ரீவித்யா மறைந்த செய்தியை கேட்டு, அப்பறம் அதை நெட்டுல பார்த்தோன, எனக்கே தெரியாத ஒரு சோகம்! ஒரு நல்ல நடிகை! அதுவும் அந்த காலகட்டத்திலே என்னமோ மத்த நடிகைகள் கிட்ட இல்லாத ஒரு தெய்வீக அழகு இந்தம்மாக்கிட்ட இருந்ததாலேயோ என்னமோ, எனக்கு ரொம்ப புடிச்ச நடிகை அப்ப! அதுவும் இந்த படம் என்னை ரொம்பவும் மயக்கின ஒன்னு! என்னமோ சிக்கலா உறவுமுறைகள்ல வரும் பினக்கத்தை பத்தி சொன்ன கதை! இந்த மாதிரி இப்ப வேணும்னா சகஜமா கதை பண்ணி படம் பண்ணுனா எல்லாரும் ஒத்துக்கிட்டு, ட்டீகேன்னு போய்டுவாங்க! கொஞ்சம் 30 வருஷத்துக்கு முன்னே நினைச்சிப் பாருங்க, சான்ஸே இல்லை, அது மாதிரி கதை களம் எடுத்துக்கிட்டு, அதை ரசிக்கிறப்படி சொல்ல பாலசந்தராலே மட்டும் அப்ப முடிஞ்சது! அதுக்கப்பறம் வயசானவனை காதலிச்சு கதை சொல்லி மயக்க பாரதிராஜா வந்தது வேறே கதை!

இந்தப்படம் பலருக்கு வாழ்க்கை கொடுத்த ஒன்னு! வெறும் சின்னப்பையனா, மீசை அரும்பி, அதிகமா சொல்லிக்கிற மாதிரி எதுவும் படங்கள் வராம இருந்த நேரத்திலே, இந்தப்படம் கமலுக்கு, ஒரு அல்வா மாதிரி! அப்ப கமலும் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி எதுவும் நடிக்கலை! (கமலுக்கு நடிக்கவே தெரியாது அப்ப, அவரு அழுதா மூஞ்சியை பொத்திக்கிட்டு எம்ஜிஆர் ஸ்டல்ல அழுது நடிச்சி ஒப்பேத்தினார், இப்பவும் அவரை மகா நடிகர், அப்படி இப்படின்னு சொல்லி ஆடறவங்களுக்கு, ஒரு தனி பதிவு அப்புறமா போடறேன், கமல் எப்படி தன்னுடய குறைகளை சாமார்த்தியமா மறைச்சு நடிச்சாருன்னு!) சரி நீயும் கொஞ்சம் நடின்னு பார்த்து பாலசந்தர், வன்முறை தான் எல்லாத்துக்கும்னு நம்பிக்கிட்டிருக்கிற ஒரு இளைஞனை எப்படி ஒரு மத்திம வயசுக்காரி மாத்தி நல்ல கொண்டு வர்றான்னும், அப்பறம், அதுவே அவமேலே எப்படி காதல் கொள்ள தூண்டுதுங்கிறதை சொல்லியிருப்பார். ஆனா வழக்கம் போல அவரு ஸ்டைல்ல, முடிச்சுகளான பந்தகளிடையே ஏற்படும் சிக்கலான உறவை கதை சொல்லி மக்களை ஆச்சிரிய படுத்தின அந்த டெக்னிக்கை மக்கள் அப்ப நல்லாவே ரசிச்சாங்க!

இது மாதிரி ஸ்ரீவித்யா மகள் ஜெயசுதா கமலோட அப்பாவான மேஜர் சுந்தர்ராஜன் மேலே மையல் கொண்டு கல்யாணம் பண்ணிக்க ஆசைபட, அவரோ தனக்கு மக மாதிரி வச்சுக்க ஆசைப்பட இன்னொரு சிக்கலான உறவு முறை கோணங்கள் பார்க்க சுவராசியமா இருக்கும், அதுவும் "என்னோடய அப்பா யாருக்கு மாமனாரோ.." அப்படின்னு ஆரம்பிக்கிர புதிருக்கு விடை என்னான்னு சொல்லி முடிச்சி அவிழ்த்திருப்பாரு பாலசந்தர்! இந்த பாலசந்தர் படங்கள்ல வர்ற குறும்பு பொண்ணுங்க எல்லாம் பண்ற ஷேஷ்டைகள் இதிலேயும் உண்டு, அதை ரசிக்கலாம், அதாவது ஜெயசுதா நாக்கை சுழட்டறது ஒரு மேனரிசம்! இது மாதிரி மேனரிசத்தை அவரோட பல படங்கள்ல நீங்க பார்க்கலாம், உதாரணத்துக்கு, மன்மதலீலையிலே கமலோட செக்ரெக்ட்ரிக்கு அடிக்கடி கண்ணடிக்கிற வீக்னஸ், அவள் ஒரு தொடர்கதையிலே ஜெயலட்சுமி சொல்ற அந்த "ஃபடாபட்", அப்பறம் அரங்கேற்றத்திலே வர்ற "அச்சச்சோ", இதெல்லாம் அப்பறம் அந்த மாதிரி பேசி நடிச்ச நடிகைகளுக்கு அடைமொழியானது எல்லாருக்கும் தெரிஞ்சது!

அப்புறம் பைரவி ராகத்திலேயே வந்த "அதிசய ராகம்" பாட்டு, பாட்டாலே தன் காதலை சொல்லி, ஸ்ரீவித்யாக்கிட்ட அரை வாங்கிக்கட்டிக்கிட்டு,அப்பறம் அதுலேயே போகும் மெலோடிராமா, பார்க்க சுவராசியமா இருக்கும்! பாலசந்தர் அதிகமா கலை நயம் வேணும்னு பொம்மைகள், சிலைகள் எல்லாத்தையும் ஃபோக்கஸ் பண்ணி கதை சொல்ல ஆரம்பிச்சது இந்த படத்திலேருந்து தான், கையொடிஞ்ச மேலாக்கு போடாத பொம்பளை சிலையை வச்சு அழகா கமலோட காதல் மனம் எப்படி மாறுதுன்னு சொல்லுவாரு, டைரக்டோரியல் சிம்பாலிஸம்! இதெல்லாம் தமிழ் படங்கள்ல அப்ப புதுசு, அதுவும் வெறும் கேரக்டர்களையே சுத்தி சுத்தி ஓடர கேமராக்கள், இது மாதிரி நடிகர் நடிகை இல்லாம காட்சியின் வீரியத்தை இந்த மாதிரி சில ஆப்ஜக்ட்ஸ், மற்றும் வேற மாதிரி காட்சிகளை காமிக்க ஆரம்பிச்சது இந்த கால கட்டத்திலே தான், அதுக்கு முன்னே கற்பழிப்பு சீனை காமிக்க புலி மானை துரத்திற போஸ்டரை ஃபோக்ஸ் செய்றதோட முடிஞ்சது! (இந்த மாதிரி காட்சி அமைப்புகளை பத்தி தனியாவே ஒரு பதிவு அப்பறம் போடறேன்!)

அப்புறம் இன்னொன்னு தெரியுமா பாலசந்தர், மகேந்திரன் போன்ற இயக்குநர்கள் வசனங்களை விட காட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்கன்னு நான் சொல்லி இருக்கேன், வித்தியாசமான கதைகளின் ஆக்கம் கொண்டதா இருந்தது இவங்க படங்கள்! ஆனா இவெங்க எல்லாத்துக்கும் சினிமாவிலே முதன் முதலா அடி எடுத்து வச்சது எம்ஜிஆர் படத்துக்கு வேலை செய்யன்னா நீங்க எல்லாரும் ஆச்சிரியப்படுவீங்க! அவரு படத்துக்கு கதை வசனம் எழுத வந்தவுங்க இவங்கே, ஆமா "அன்பே வா" படத்துக்கு வசனமமெழுதுனது பாலசந்தர்!

அடுத்தது நம்ம தலைவர் ரஜினி பத்தி சொல்லனும்! இந்த படத்திலே அறிமுகமானவர்னு உங்களுக்கெல்லாம் தெரியும்! ஆன நடிக்க வந்த கதையை பத்தி தெரிஞ்சிக்கணும்னா சரித்திரம் படிக்க இங்கே போங்க! இந்த படம் வெளியானப்ப ரஜினிக்கு ஒரு அடையாளம் எதுவும் கிடைக்கவில்லை! அந்த அடையாளத்தை கொடுத்தது மூன்று முடிச்சு! ஆனா இந்த படத்திலே அவரு எந்த வேகத்தையும் காட்டல, அமைதியா நடிச்சு, ஆனா அசத்தியிருந்தார். அவ்ருக்கு தெரிஞ்சோ தெரியாமலேயோ முதகாட்சியே பெரிய கதவை திறந்துக்கிட்டு வர்ற மாதிரி, அந்த ஆரம்பமே ஒரு நல்ல ஆரம்ப காட்சி, இது போல பெரிய ஆளான எந்த நடிகருக்கும் கிடைக்காத ஒரு காட்சின்னு நான் சொல்லுவேன்! ஆனா நான் என் ஃபிரண்ட்ஸ் பார்த்திட்டு இந்த புதுசா நடிச்சவருக்கு என்னமோ காந்த சக்தி இருக்குன்னு அந்த படத்திலேருந்தே நாங்க அவரோட ரசிகரானது என்னவோ உண்மை, அதுக்கு சாட்சி வாரி வழிச்சி சிவகுமார் மாதிரி பஃப் வச்சி சீவிக்கிட்டிருந்த நான் முடியை முன்னால அவரு ஸ்டைல்ல வச்சிக்க ஆரம்பிச்சேன், இதை பத்தி நான் எனை ஆண்ட அரிதாரத்திலேயே சொல்லி இருந்தேன்!

அவரு சரித்திரதை இங்கே படிச்சிருந்தீங்கன்னா, ஒன்னு தெரியும், நீ தமிழ் கத்துக்கிட்டு வா, உன்னை எங்கெயோ கொண்டி விடுறேன் பாலசந்தர் சொன்ன சொல்படி எங்கயோ போனது உண்மை தான்! அப்ப வந்த எந்த ஆர்டிஸ்டும் தமிழ் ஒழுங்கா கத்து பேச தெரிஞ்சா தான் வெற்றி நிச்சயம்! அது பாடுனாலும் சரி, ஆடுனாலும் சரி, அதுக்கு எவ்வளவோ பேர் உதாரணம், சாவித்திரி, சரோஜாதேவி, பி சுசீலா, எஸ் பி பாலசுப்ரமணியம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம், இவங்க எல்லாம் தாய்மொழி வேறயா இருந்தாலும் உண்மையிலே ரொம்ப ஆர்வமா சிரமம் எடுத்து கத்து ஜெயிச்சாங்க, இப்ப வர்ற ஆளுங்க மாதிரி இல்லாம! இந்த தொழில்நுட்பம், மல்டிபிள் டிராக ரெக்கார்டிங், டப்பிங்னு வந்ததிலேருந்து மொழி தெரியலேன்னாலும் பெரியாளாயிடுறாங்க! இது அதிகமா வந்தது 80துக்கப்பறம் தான், அதுவும் பாரதிராஜா கோஷ்டி ஆரம்பிச்ச வச்ச ஒன்னு! ஒரு வார்த்தை சுட்டு போட்டாலும் வர்றாத பஞ்சாபி குலாபி, ரத்தியை வச்சி படமெடுத்து வெற்றி படமாக்கி, அப்பறம் தமிழ்ன்னு ஒன்னு தேவையில்லை தமிழ் படங்கள்ல நடிக்கன்னு ஆரம்பிச்சு வச்சது இந்த கும்பலுதான், அப்படி டப்பிங் பேசி ரஜினி ஆட்டம் போட்டிருந்தா இன்னைக்கு மோகன் மாதிரி பெங்களூருக்கே போயிருப்பாரு! இதை பத்தி எஸ்பிபி ஒரு பேட்டியிலே சொல்ல கேள்வி, அதுவும் உதித் நாரயண் மாதிரி ஆளுங்க கடிச்சி துப்பி 'ப்ர்வாயில்லை'ன்னு பாட்டு படிக்க, அதையும் நம்ம ரசிச்சு, தேவுடா, அதான் இன்னைக்கு இந்த நமீதா வரை ஓடிக்கிட்டு இருக்கு! இது பத்தாதுன்னு டிவியிலே கேம்பயிரிங் பண்ற ஆளுங்க தமிழை போட்டு கொல்றது இன்னும் உச்சம்! (இதை பத்தி தனியா இன்னொரு பதிவு உண்டு!)

ஆக இந்த படம் அபூர்வமா இருந்தது என்னமோ உண்மை! ஒரு மீடியமான வெற்றி, வழக்கம் போல பி,சி செண்டர்ங்கள்ல அதிகம் ஓடலை,ஆனா எல்லோருக்கும் பேரு வாங்கி கொடுத்த ஒன்னு! அந்த படக்காட்சிகள் சில உங்கள் பார்வைக்கு, அப்பறம் 'A Tribute to Srividya'!

Friday, December 08, 2006

இன்பமே உந்தன் பேர் வள்ளலோ!

சிற்றின்ப சந்தோஷம் என்பது விளக்குகள் அனைந்தப் பின்னால் ஒளிந்துக் கொண்டிருக்கும் மறைவினிலேயா வாழ்ந்துக் கொண்டிருக்கிறது? இல்லை! இல்லை! அதனை நுண்ணர்வுகளுடன் கலந்து வெளிக் கொணற ஆயிரம் வழிகள் உள்ளன!

காலையில் படுக்கையை விட்டு எழுந்து, சற்றே நீண்ட மூச்சை உள்ளிழுத்து திரைச்சீலை விலக்கி, ஜன்னலின் வழியே, ஆகாயத்தைப் பார்க்கும் பொழுது, தெரியும் நீலவானம், அழகிய ஓசை எழுப்பி சிறகை விரித்து பறந்து செல்லும் ஆயிரம் பறவைகளை பார்க்கும் பொழுது உள்ளம் சிலிர்க்கும் அந்த சிற்றின்பத்தை கண்டுணர்ந்ததுண்டா பெண்ணே! அதுவும் காலை வேளையிலே தட்டு தழுவிச்செல்லும், சருமைத்தை வருடிச் செல்லும் தென்றல் தரும் சுகம் நேற்றிரவு நீ கண்ட சுகத்தை விடப் பெரிதா அது?

இளங்காலையின் இன்பச்சுகமறியா உன் கணவன், மூக்குத் துவாரமின்றி உணவுக்குழல் மூலம் மூச்சு காற்றை உள்வாங்கி வெளியிடுவதால் எழுப்பும் குறட்டைச் சத்தத்தையும், அவன் சரும உராய்வில் அந்த மூச்சுக் காற்றின் இளஞ்சூட்டு வெப்பத்தினையும், அவன் தேகம் தரும் கஸ்தூரி மணத்தை முகர்ந்து பார்ப்பதையும் கொண்டாடி மகிழ்ந்துணரும் உணர்வுகள் தான் நீ விரும்பும் சிற்றின்பமா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை!

அன்றாட பணிகளை செய்து முடித்திட உனது பாதி மன வலிமையும் உடல் வலிமையும் செலுத்துவதில் முனைப்பாய்கிறாய்! உனக்கான கடமைகளும், அதனை தொடர்ந்து வாழ பயணிக்கும் மணித்துளிகளும், எங்கே உன்னுள் கொண்டிருக்கும் நுண்ணர்வுகளால் உந்தப்படும் சிற்றின்பத்தை முழுமையாக அநுபவிக்க வழி வகுக்கிறது? உனக்கான சிற்றின்ப சந்தோஷங்களை எப்படி பேணி வளர்த்து அபிவிருத்தி செய்ய நீ முற்பட வேண்டும் என நான் எடுத்துரைத்தால் முட்டாளாகிவிடுவேன்! ஆனால், இந்த பாழய்போகும் அன்றாட வாழ்க்கைப் பளுவின் ஆளுமையிலே எங்கே நீ சிற்றின்பம் காண்பது!

நான் ஒரு உண்மையைச் சொன்னால் நீ ஆச்சிரியப் படுவாய்! சிற்றின்பம் காண வழி சொல்ல மூயலும் இந்த ஜென்மம் என்ன ஜென்மமிது என எனை பார்த்து கேலிப் பேசுவது தெரிகிறது! ஆனால் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வதிலும் துணி மணிகளை மடித்து வைப்பதிலும், கணவனுக்கு பொங்கிப் போடுவதிலும், குழந்தை பராமரிப்பதிலும், அலுவகத்தில் கொடுத்த பணிகளை திறம்படச் செய்வதிலும் மட்டுமே நீ உன் சிற்றின்பத்தை பெறுவாய் என நான் கூறினால் அதைவிட நகைப்புக்குறியது வேறொன்றுமில்லை!

சிற்றன்பமென்றால் என்ன என்பதற்கு விளக்கம் அளிக்க முற்படும்பொழுது இவ்வாறு ஒரு விடைத் தெரிகிறது! நம் ஐம்புலன்களால் என்ன என்ன உணர்கின்றோமோ, அவை அனைத்தும் சிற்றின்பமே! ஆனால் பெரும்பாலோரால் வகுக்கப்பட்ட பொருள்விளக்கம் என்னவென்றால், இச்சிற்றின்பம் இப்பூவுலகிலிருந்து விலகியது அல்ல என்பதே! எனக்கு இதில் சிறுதும் உடன்பாடில்லை! அதாவது இது மனம் சம்பந்தப்பட்டது அல்ல எனக்கூறுவது முற்றிலும் தவறு! வெறும் உணர்வுகளால் உந்தப்பட்டு புலன்களால் அறியப்படுவது அல்ல இந்த சிற்றின்பம் என்பது. ஏனென்றால் இது பொதுவான வாழ்க்கை அம்சத்திலிருந்து மாறுபட்ட கண்ணோட்டத்தின் கருத்து! ஆனால் அதுவே உண்மை! பொதுவாக உடலின் எந்தப் பகுதி பாழ்படுகிறதோ அந்தப் பகுதிக்கு மட்டும் மருத்துவம் பார்த்து உறுப்புகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லை என்றெண்ணி, பாதிக்கப்பட்ட பகுதியை சரி செய்யும் லாவகம் போல் வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும் அதற்குண்டான எல்லைகுள்ளாகவே அதை அனுசரித்து ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வாழுவதால் உணரப்போவதில்லை இந்த சிற்றின்பத்தினை! ஒன்றுக்கொன்று தொடர்பு உண்டு, ஆக எல்லாவற்றிற்குமே தொடர்புண்டு! அப்படி ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வகுக்கப்படும் கண்ணேட்டங்கள் சமநிலைப்பாடற்ற கருத்தாகவே ஏற்று கொள்ளவேண்டும்!

ஆற்றுபடுகையிலே இரைந்துக் கிடக்கும் கூழாங்கற்களை பார்த்தால் என்ன தோன்றுகிறது, நீரோடு உருண்டோடி வரும் பாறைகளின் வடிவத்தை பார்க்கும் பொழுது என்னத்தோன்றுகிறது! வாதமின்றி பிரதிவாதமில்லை, காரணமின்றி காரியமில்லை, அசைவின்றி விளைவில்லை! ஆக நான் மேலே கூறிய பொருள் விளக்கம் எதை தெளிவுபடுத்துகிறது என்றால் சிற்றின்பத்திற்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமுண்டு என்பதைத்தான்!

எல்லை வகுக்கப்பட்ட, தொடர்பின்றி நிர்ணயிக்கும் எண்ணங்களே நம்முள் உண்டாகும் துன்பங்களுக்கும் தீங்குகளுக்கும் மூலக்கராணம், அதுவே தொடர்பற்ற அர்த்தம் காணுவதில் உண்டாகும் கஷ்டங்களை பிரதிபலிக்கும் சமூகம் உருவாகவும் காரணமாகிறது! புரியவில்லையா? இதோ ஒவ்வொரு சிற்றின்ப மனிதனையும் வெளிகொணர்ந்து அதனைச் சுற்றிய மற்ற அம்சங்களும் எப்படி ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்புடயது என்பதை விளக்குகிறேன்!

நம் உணர்வுகளே கொழுந்து விட்டு எரியும் உணர்ச்சிகளை தூண்ட காரணம்! திறந்த புல்வெளியில் பாதம் பதித்து நடக்கும் போது, இந்த வாழும் வாழ்க்கையின் உயிர் துடிப்பும், அந்த புல்பரப்பில் நடந்து வரும் மென்மையை கண்டு பெருமிதம் அடையக்கூடும்! ஒன்று தெரிய வருகிறதா இந்த புல்வெளி சமபரப்பினை கொண்ட இந்த உலகம் எவ்வளவு அற்பதமானது, அதனுடன் கொண்டிருக்கும் நம் தொடர்பு எத்தனை சுகமானது! இன்னும் சொல்லப்போனால், பனித்துளி கொண்டிருக்கும் அந்த ஈரமான புல்வெளி சமபரப்பு நம்முடன் உறவாடும் உணர்ச்சிகள் எத்தனை ஏகாந்தமானவை! இது போன்ற உணர்வுகளின் மேல் கொண்ட அபரிதமான தொடர்பு அதிகமாக விரிவுபடுத்தி உன்னை நீயே ஏன் நேசிக்கக் கூடாது! இது போன்ற சிற்றினபங்களை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நீ ஏன் கண்டுணரக்கூடாது! அப்படி கண்டுணர்ந்து நீ கொள்ளும் சமநிலைப்பாட்டுடன் வாழும் வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது! அப்படி கொண்டுணரும் இன்பத்தினால் அடையும் சிறு சந்தோசங்களும், அழகை ஆராதிக்கும் உன்னத நிலையையும் நீ இந்த பரபரப்பான வாழ்க்கை தொடரிலே எங்கணம் இழக்கிறாய் என்பதை நீ அறிவாயா?

உனது சிறிய பிஞ்சுகுழந்தையின் மிருதுவான கேசத்தை உனது அன்போடு வருடும் சுகத்தில் அடையும் இன்பம், மகிழ்ச்சி மட்டற்றதாயிற்றே! அந்த மட்டற்ற மகிழ்ச்சியானது, சூரிய ஒளியினால் அடையும் இளஞ்சூட்டு வெப்பத்தினை உணரும் உன் தோட்டத்து மல்லிகை கொண்ட உணர்வினை போன்று உனது பிஞ்சு உள்ளத்தின் சந்தோஷ சங்கேதத்தை கண்ட மகிழ்ச்சியினை நீ அனுபவித்துப்பார் அது என்ன இன்பமென்று! சற்றே நேரமெடுத்து அழ்கடலிலோ, இல்லை ஆற்று முகத்துவாரத்திலோ மூழ்கி கொண்டாடி பூமித்தாயின் நீர்பிள்ளைகளோட விளையாடுவதில் இன்பம் கண்டுணர்ந்து கொள், அப்பொழுது தெரியும் அவ்வின்பம் எத்தகையது என்பது! அதிரும் வாழ்க்கையின் விசைகளோடு ஆடிப்பாடி அது அனைக்க ஆர்ப்பரிக்கும் துடிப்புகளை கண்டுணர்ந்து இன்பம் கொள்! அடைப்பட்டுக் கொண்டிருக்கும் உன்னை நீயே வெளியேற்று, உனது உணர்வுகள் உன் உணர்ச்சியினை எழுப்பட்டும்! அந்த உணர்வின் உணர்ச்சிகள் முழு வாழ்க்கையின் அனைத்து இன்பத்தையும் ஆட்பரிக்க துணைக் கொள்ளட்டும்!

Wednesday, December 06, 2006

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஜோடி!

நம்ம டோண்டு தமிழ் சினிமாவிலே தவிர்க்க முடியாத ஜோடிகள்னு ஒரு பதிவு போட்டார், அதிலே பியூ சின்னப்பா, தியகராஜ பாகவதர் ஜோடி, அப்பறம் சிவாஜி கணேசன் எம்ஜிஆர் ஜோடி, கடைசியிலே கமல் ரஜினி ஜோடின்னு எல்லா கதாநாயகர்கள் எதிர்மறை ஜோடிகளை பத்தி எழுதி யாருக்கு நடிப்பு, அப்பறம் யாருக்கு கரிஷ்மான்னு எழுதி போட்டதை எல்லாரும் படிச்சிருப்பீங்க! ஆனா நான் இங்கே எழுதப் போற தவிர்க்கமுடியாத ஜோடி யாருன்னா 80க்கு அப்பறம் காமிடி பண்ணிக்கிட்டு இருந்த கவுண்டமணி, செந்திலைப்பத்தி தான்!

இவங்கதான் அந்த 80, 90களில் காமிடி கலக்கல் பண்ணிக்கிட்டு திரிஞ்சவங்க!அதுவும் ஆரம்பகாலத்திலே கவுண்டமணி தனிஆவர்த்தனமா நுழைஞ்சது பாரதிராஜாவோட முதப்படமான 16 வயதினிலே தான்! அதிலே ரஜினிக் கூட வர்ற வெட்டி கிராமத்தான் கேரக்டர்! ரஜினிக்கு "இது எப்படி இருக்கு" டைலாக் அவரு பேசினதை எவ்வளவு ரசிச்சு பேமஸா மக்கள் பேசி காட்டினங்களே, அதே மாதிரி கவுண்டமணி பேசின "பத்த வச்சிட்டியே பரட்டை" டைலாக்கும் அப்ப ரொம்ப பேமஸா பேசி மக்கள் ரசிச்ச ஒன்னு! அப்பறம் அந்த டாக்டர் கிராமத்திலே பேசிறப்ப கவுண்டமணி இங்கிலீஷ்ல பேசினதை ரஜினிக்கு தமிழ்ல மொழி பெயர்த்து சொல்லும் அந்த அழகு டைலாக்கு, 'இப்ப என்ன சொல்றாருன்னு' ரஜினி கேட்க 'ம்..உச்சி வெயில் மண்டையை பொளக்குது'ன்னு சொல்ற காமடி கலக்கலா இருக்கும்! அதே மாதிரி 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்புரோஜாக்கள்'னு தொடர்ந்து அவரு காமடி பண்ணி நடிச்சது ரொம்ப பாப்புலர் அப்ப! அதிகமா நான் அதை மிமிக்கிரி பண்ணி நடிச்சு காலேஜ் காட்டினப்ப ஏகத்தும் கைத்தட்டல் வாங்கினேன், அதை நான் என்னோட எனை ஆண்ட அரிதாரத் தொடர்ல சொல்லி இருக்கேன்!

அது மாதிரி செந்தில் முதல்ல நடிக்க ஆரம்பிச்சப் படம் பாக்யராஜோட 'தூறல் நின்னுப் போச்சு'ன்னு நினைக்கிறேன்! அதிலே சும்மா சோப்பளாங்கியா நம்பியார் குஸ்தி போடற பள்ளிக்கூடத்திலே வந்து பண்ண காமிடி கலக்கலா இருக்கும். அப்பறம் கவுண்டமணி, செந்தில் ஜோடி மெள்ள மெள்ள வந்து, அப்புறம் அவங்களுக்கு காமடி டிராக்கு எழுத தனியாவே ஒரு ஆளு இருந்தாரு, அவரு பேரு வீரப்பன்! அப்படி அவங்க பண்ணுன காமடி ரொம்ப தூக்கலா இருக்கும்! சமயத்திலே அவங்க பண்ற காமிடி காம நெடியாவும் இருக்கும்! கவுண்டமணி ஸ்பெஷலா செந்திலை கூப்பிடற பாஷையே தனி, 'ஆப்பத்தலையா', 'சட்டித்தலையா', 'கடல்பன்னி'ன்னு ஆரம்பிச்சு அவரு கூப்பிடாத வசுவு வார்த்தையே இல்லைங்களாம்! அத்தனையையும் ஜனங்க ரசிச்சாங்க! அதே மாதிரி அவரோட இன்னொரு ஸ்டைல் என்னான்னா, தகப்பன், மகன், அம்மா, மகள், அண்ணன், தம்பி, அரசியல்வாதின்னு யாரா இருந்தாலும் போடா, வாடான்னுட்டு ஏதாவது ஒரு ஸ்பெஷல் வார்த்தையிலே திட்டி பண்ற காமடி அசத்தலா இருக்கும், அதை தமிழ்நாட்டு ஜனமே சிரிச்சு ரசிச்சு!

அதிலேயும் இந்த கவுண்டமணி, செந்தில் ஜோடியின் மிகச்சிறப்பான காமடி காட்சிகள் வந்தப்படம் 'வைதேகி காத்திருந்தாள்', பிறகு 'கரகாட்டக்காரன்' அதுவும் அந்த வாழப்பழம் ஜோக்கு, அப்புறம் அப்பாவியா அவரை கேள்விக்கேட்டு கொள்றது, அதுவும் அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டு லாந்தரு புசுக்குன்னு புடிச்சி, 'இது என்னாண்ணே'ன்னு க் கேட்டு நசுக்கி போடும் காட்சிகள், அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்! எப்படி இளையராஜா பாட்டுக்காக படங்கள் ஓடிச்சோ, அது மாதிரி இவங்க காமடிக்காவே ஓடுன படங்கள் நிறைய! அதுவும் பெரிய சிட்டியிலேன்னு இல்லாம, பட்டி தொட்டிகள்ளே எல்லாம் பட்டையை கிளிப்பிக்கிட்டு ஓடுனிச்சு!

டோண்டு பதிவு பார்த்தோன இந்த தவிர்க்க முடியாத ஜோடியை பத்தி எழுதனும்னு தோணுச்சு, அதான்! அதோட கரகாட்டக்காரன் படத்திலேருந்து கவுண்டமணி, செந்தில் நடிச்ச காட்சிகளை இங்கே நீங்கள் கண்டு களிக்கனும்னு போட்டு இருக்கேன், பாருங்களேன், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமிடி ஜோடிகளை!

Monday, December 04, 2006

"உதிரிப்பூக்கள்" பதிவுப் பற்றி ஓர் அறிவிப்பு!

இன்று காலையில் தான் உதிரிப்பூக்கள்-மகேந்திரனின் மகுடம்! என்ற பதிவை வலை ஏற்றினேன்! உங்களின் ஏகோபித்த ஆதரவால் அது பெருவாரியாக அனைத்து தமிழ்மண மக்களிடமும் சென்றடைந்தது! அந்த வீடியோ கிளிப்பினை பெருவாரியான மக்கள் கண்டு ரசித்தனர்! இருந்தும் இன்று மதியம் 3:30 மணி PST க்கு மேல் அந்த வீடியோ சேவை உங்களை வந்தடையவில்லை! காரணம் அதை கண்டு மகிழ அனைவரும் விருப்ப பட்டதால், ஹிட் அதிகம் காரணமாகவோ ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரால் அதை தொடர்ந்து ஒளிபரப்ப முடியததால், மாற்று வழியாக இந்த பதிவினில் அது "Youtube" சேவையில் உங்களை வந்தடைகிறது! எனினும் முதல் டைட்டில் சாங்கும், அழகிய கண்ணே பாடலும் மட்டும் இங்கு இரண்டு கிளிப்புகாளாக வழங்கப்படுகிறது! கடைசி காட்சியை, இன்னும் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த காட்சியை ஒளிபரப்ப சற்று நேரம் எடுத்துக் கொண்டு விரைவில் உங்களை வந்தடையும்! தடங்கலுக்கு வருந்துகிறேன்!

இது போன்ற காலாத்தால் அழியாத திரை ஓவியங்களுக்கு என்றுமே வரவேற்பு உண்டு என்பது இப்பொழுது கண்கூடாகத் தெரிகிறது, வீடியோ காட்சிகளை கண்டு மகிழுங்கள்!

என்றும் உங்கள் வெளிகண்ட நாதர்!

முதல் வீடியோ கிளிப்


இரண்டாம் வீடியோ கிளிப் :


நன்றி: பிரகாஷ் பதிவு

உதிரிப்பூக்கள்-மகேந்திரனின் மகுடம்!

இந்தப்படத்தை பத்தி ஏற்கனவே நம்ம பிரகாஷ் அவரோட ஒரு பதிவிலே எழுதி இருந்தார்! அதை எத்தனைப் பேரு படிச்சிங்கிளோ எனக்குத் தெரியாது! அதை கொஞ்சம் கடன் வாங்கி இப்ப நான் எழுதப்போற இந்த பதிவிலே உபயோகப் படுத்த போகிறேன். அதாவது எண்பதுகளின் துவக்கம், எங்கள் இளமை எல்லாம் நல்ல சினிமாக்களில் கழிந்த காலக்கட்டம்! அதுவும் மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜான்னு, நடிகர்கள் கோலச்சிய காலகட்டத்திலேருந்து, இயக்குநர்களை பத்தி சிலாகிச்சி ரசிகர் கூட்டங்கள் பெரிசா பேசிக்கிட்டிருந்த நேரம்! இந்தப் படம் வந்தப்ப நான் இஞ்சினியரிங் முதலாம் ஆண்டின் முடிவை முடிச்சிருந்த நேரம்! அப்படியே இந்தப் படத்தை ஒரு பத்து தடவைக்கு மேலே கோயம்புத்தூரு, திருச்சி, தஞ்சாவூருன்னு எங்கெல்லாம் அப்ப போனேன்னோ அங்கெல்லாம் தியேட்டரில்ல பார்த்துருக்கேன்! அப்படி என்னை கட்டிப் போட்ட படம், நேத்து திரும்ப பார்க்கும் வாய்ப்பு கிடைச்சிது! அதை பார்த்திலிருந்து அப்படியே நான் என்னமோ ஒரு இருபத்தஞ்சு வருஷம் பின்னாடி போய்ட்டது என்னவோ உண்மை தான்! அதான் உங்களுக்கு சொன்னப் புரியாதுன்னு அதிலேருந்து கொஞ்சம் வீடியோ கிளிப்போட இந்த படம் இன்னைக்கானப் பதிவு!

அதுக்கு முன்னே கொஞ்சம் பிரகாஷ் எழுதினதை அப்படியே ஒட்டி இருக்கேன் இங்கே! அந்த பக்கத்துக்கு லிங்க்கு கொடுத்திருக்கலாம், ஆனா டெம்போ போயிடுமே, அதான், கீழே படிச்சிட்டு படத்தைப் பாருங்க!

மீண்டும் மீண்டும் பார்க்க சலிக்காத படங்களின் பட்டியலில் உதிரிப்பூக்களுக்கு இடம் உண்டு. சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், போன்ற நடிகர்கள் ஒளிவட்டத்தில் இருந்து விலகத் துவங்கிய எழுபதுகளின் இறுதியிலிருந்து, எண்பதுகளின் துவக்கம் வரையிலான காலகட்டத்தை, தமிழ்ச் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லலாம். கதாநாயகனை மையப்படுத்தி, அதீதமான உணர்ச்சிக் குவியலாக இருந்த திரைப்படங்களை, மீட்டுக் கொண்டு வந்த படைப்பாளிகள் அனைவரும், அந்த காலகட்டத்தில் அறிமுகமானவர்கள் தான். பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், மகேந்திரனின் உதிரிப்பூக்கள், பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே ஆகிய மூன்று முக்கியமான படைப்புக்கள் அப்போதுதான் வெளிவந்து, தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றி அமைக்க முற்பட்டன. ஆனால், அந்த முயற்சி முழுதாக வெற்றி பெறவில்லை!

இயல்பான கிராமம் அது. ஊர்ப் பெரிய மனிதர் சுந்தரவடிவேலு ( விஜயன் ) அத்தனை நல்லவரில்லை. அவரது தம்பியே ( பூபதி ) அண்ணனுக்கு எதிரானவன். சுந்தரவடிவேலுவின் மனைவி, அஸ்வினி, அமைதியே உருவானவர், கணவன் செய்யும் அக்கிரமங்களை எதிர்க்கத் திராணியில்லாதவர். அவருடைய உலகம், தன் குழந்தைகள் ( அஞ்சு, ஹாஜா ஷெரீ·ப் ) தங்கை செம்பகம், அப்பா ( சாருஹாசன்) ஆகியோருடம் முடிந்து விடுகின்றது. அஸ்வினி நோய்வாய்ப்பட்டு இறந்து விட, மைத்துனியைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார் சுந்தரவடிவேலு. மாமனார் மறுத்துவிட, வேறொருத்தியைத் திருமணம் செய்து கொள்கிறார். இதற்கிடையில் சுந்தரவடிவேலு நடத்தி வரும் பள்ளியின் ஆசிரியர் செம்பகம் மீது காதல் வசப்பட, சாருஹாசன், மகிழ்ச்சியுடன் திருமண ஏற்பாடுகள் செய்கிறார். திருமணத்துக்குப் பின்பு, அக்காவின் குழந்தைகளை தன்னுடனே வைத்துக் கொள்ள அனுமதி வேண்டி, திருமணத்துக்கு முந்தைய தினம், சுந்தர வடிவேலுவைப் பார்க்க வரும் போது, சுந்தரவடிவேலு, அவளை மானபங்கப்படுத்தி விடுகிறார். பொறுத்த வரை போதும், கொதித்து எழுந்த ஊர்மக்கள், துரத்தி வந்து, தற்கொலை செய்து கொள்ள வைத்து விடுகின்றனர.

வசனங்களுக்குப் பெயர் போன மகேந்திரன் ( ரிஷிமூலம், தங்கப்பதக்கம், வாழ்ந்து காட்டுகிறேன்.....) தன்னுடைய இரண்டாவது படத்திலே, வசனங்களுக்குப் பதில் காட்சியமைப்புக்களை நம்பியது முதல் ஆச்சர்யம். படத்தின் மொத்த வசனங்களையும் , இரண்டு A 4 காகிதத்தில் எழுதி விடலாம். அந்த ஊரில் டாக்டராக வரும் சரத்பாபுக்கும் அஸ்வினிக்கும் முன்பே பழக்கம் உண்டு என்று தெரிந்து கொண்ட சுந்தரவடிவேலு, டாக்டர் மீது காட்டும் வெறுப்பும், அதன் தொடர்ச்சியாக வரும் கைகலப்புக் காட்சியும், முதல் தரமானவை. சுந்தர.வடிவேலு மாதிரியான கணவனுக்கு வாழ்க்கைப் பட்ட அஸ்வினிக்கு, குழந்தைகள் தான் எல்லாம் என்பதை, ஒரே பாடலின் மூலமாக சொல்ல முடிகிற மகேந்திரனின் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. இளையராஜாவின் இசையும், அஷோக்குமாரின் ஒளிப்பதிவும், மகேந்திரனின் கற்பனையும் ஒன்றாக சேர்ந்த அபூர்வமான கலவை அது.

பொதுவாக, திரைப்படங்களில் வில்லன்கள் திருந்தும் காட்சிகளை, எத்தனைக்கு எத்தனை சீரியஸாக எடுத்தாலும் சிரிப்பைத்தான் வரவழைக்கும். இதிலும் சுந்தரவடிவேலு, இறுதிக் காட்சியில் திருந்துகிறார். ஊர்மக்கள் அனைவரும், அவரை, கடற்கரைக்குக் தள்ளிக் கொண்டு வந்து, " குதித்து செத்துப் போ " என்று மிரட்டும் போது, அவரது முகபாவமே, அவரது மனமாற்றத்தைச் சொல்கிறது. ஊர் மக்கள் அனைவரையும், அமைதியாகத் திரும்பிப்பார்க்கிறார். அவர் ஏதோ நீளமான வசனம் பேசப் போகிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, அவர் " நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க... உங்க எல்லாரையும் நான் என்னைப் போல மாத்திட்டேன்..நான் செஞ்சதுலேயே பெரிய தப்பு அது தான் " என்று சொல்லும் காட்சி, மகேந்திரனின் கூர்மைக்கு உதாரணம்.

சாகும் தருவாயில், அங்கே வரும் தன் குழந்தைகளை, அணைத்து முத்தமிட்டு, " ஒழுங்கா படிக்கணும் , நல்ல பிள்ளைங்களா இருக்கணும், அப்பா குளிக்கப் போறேன் " என்று சொல்லி விட்டு கடலில் இறங்கிறார். ஆனால், அவர் கடலில் மூழ்குவதை காமிரா காண்பிப்பதில்லை, மாறாக, அங்கே கூடியிருக்கும் மக்களைத்தான், அவர்களது முகபாவங்களைத்தான் பார்க்கிறோம். குழந்தைகள் இருவரும், கடலில் குளிக்கப் போன அப்பா வருவாரா என்று காத்துக் கொண்டிருக்கும் போது படம் நிறைவடைகிறது.

அதிரடியான இசை இல்லாமல், ஆர்பாட்டமான காட்சிகள் இல்லாமல், இயல்பான ஒளியில், யதார்த்தமான நடிப்பில், மகேந்திரன் உருவாக்கிய இப்படம், பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைப் பற்றி பேசுவதைக் காட்டிலும், விவரித்து எழுதுவதைக் காட்டிலும், படத்தை நேரடியாகப் பார்ப்பதுதான் முழுமையான அனுபவத்தைத் தரும்!

முழுப்படமில்லைனாலும், ஆரம்ப டைட்டில் சாங், எனக்கு பிடிச்ச ஒன்னு, அப்பறம் அழகிய கண்ணே பாட்டும், அந்த வில்லன் திருந்தும் கடைசி காட்சியும் பருங்களேன்!


நன்றி: "Icarus Prakash"

கூகுளாண்டவர் சேவை கிடைக்கவில்லை என்பதால், வீடியோ கிளிப்பை கண்டு மகிழ இந்த,"உதிரிப்பூக்கள்" பதிவுப் பற்றி ஓர் அறிவிப்பு!" பதிவுக்கு செல்லுங்கள்

Friday, December 01, 2006

Lady Boy God Father-வரலாறு காண்போமா??

"ஆடத் தெரியலைன்னா ஆடிக்காட்டலாம், பாடத் தெரியலைன்னா பாடிக்காட்டலாம் ஒரு வேலையை செய்யத் தெரியலைன்னா செஞ்சு காட்டலாம். ஆனா, ஆம்பிளையான்னு கேட்டா? அதான்..." என்று கனிகாவை கற்பழித்துவிட்டு திரும்பும்போது, அந்த வார்த்தையை முடிக்காமல் அங்க அசைவுகளால் நடந்த காரியத்தை விளக்கும்போது பாரபட்சம் பாரமல் ரசிகர்களிடமிருந்து பறக்கிறது 'பிளையிங் கிஸ்.' இடதும் வலதுமாக விழிகளை அசைத்து அபிநயம் பிடிப்பது, கைதேர்ந்த பரத நாட்டிய கலைஞர் போல் நடந்துவரும் தோரணை, கழுத்தை ஒரு வெட்டு வெட்டி 'வணக்கம்' சொல்லும் பாவனை என அஜித்தின் புதிய பரிமாணம் புல்லரிக்க வைக்கிறது. இப்படி இந்த வரலாறு திரைப்படத்துக்கு எங்கேயோ எழுதின விமர்சனத்தை படிச்சிட்டு, சரி அப்படி என்னதான் இருக்குன்னு பார்க்கிறதுக்கு நேத்து கேசட்டை வாங்கிப் போட்டு இந்த படத்தை பார்த்தேன்! மேற்கொண்டு ரஜினியும், இந்த மாதிரி படத்தை லேட்டாக்காம சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க, ரொம்ப அருமையா இருக்கு அப்படின்னு நடிச்ச அஜீத்துக்கு, அப்பறம் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு பாராட்டு தெரிவிச்சாருன்னும் எங்கேயோ படிச்சதிலிருந்து சரி இந்த படத்திலே என்னதான் இருக்குன்னு பார்க்க சரியான ஆவலை தூண்டினது என்னமோ வாஸ்த்தவம் தான்! ஆனா, பார்த்த பின்னாடில்ல தெரிஞ்சது கதை எப்படி கந்தல்ன்னு!

அதான், இந்தப்படத்தோட முக்கியாம்சமாக இருக்கக்கூடிய தீம் ஒன்னை எப்படி சராசரி சினிமா லாஜிக்கோட எடுத்து ஒரு தப்பான மெஸேஜை மக்களுக்கு சொல்லுதுங்கிறதை பத்தி கொஞ்சம் விரிவா பார்க்கலாமேன்னு தான் இந்த பதிவு! அதாவது, சின்ன வயசிலேருந்து பெண்ணின் இயல்புடன் வளர்க்கப்பட்ட இளைஞனின் செக்ஸ்வல் கண்ணோட்டம், திடீர்ன்னு நடந்த சம்பவங்களின் அதிர்ச்சியாலே மாறி எப்படி ஒரு சராசரி ஆண்மகனின் மனக்குமறலாக மாறி எந்த பெண்ணால பாதிக்கப்பட்டானோ அதே பெண்ணை கற்பழிச்சு பழி தீத்துக்கிட்டது சரின்னு சினிமாத்தனமான லாஜிக்கை மக்களுக்கு கொடுத்து எப்படி கெடுத்துருக்காங்கன்னு பார்க்கலாம் வாங்க! அதுவும், சமீபத்திலே தமிழ் மணத்திலே அதிகமா பேசப்பட்டுக்கிட்டு இருக்கிற பெண்ணடிமை பற்றியும், பெண்களை ஏன் இப்படி பாவிக்குது நம்ம சமூகம் அப்படின்னு காட்டஞ்சாட்டமா, "பாட்டன், முப்பாட்டன் சேர்த்துவைத்த மானம் மரியாதை மற்றும் இன்னபிற குல சொத்துக்களெல்லாம் பெண்ணின் தொடையிடுக்கில் பொத்தி பொத்தி காப்பாற்றி வருவதாக இச்சமுதாயம் கட்டமைக்கப்பட்டுள்ளது"ன்னு, மறுமொழி, பின்னோட்டம், பதிவுகள்னு பட்டையை கிளப்பிக்கிட்டிருக்கும் தமிழ்ஜனங்களே இந்த மாதிரி படங்கள் எப்படி சமுதாய சீரழிவுக்கு வழிவகுக்குதுங்கிற உண்மையை கொஞ்சம் ஆராஞ்சு இல்லை யோசிச்சி, அதை பத்தி என்னான்னு பார்ப்போம், வாங்க!

சர்வ ஜாக்கிரதையா இந்த மூன்றாம் இனத்தவரோட எதிர்ப்பு வரக்கூடும்னு, அவங்களை காமிக்காமா, ஆனா அதன் பிரதிபலிப்பா, நாட்டியகாரி மகனை நாட்டியம் கத்துக் கொடுத்ததாலே, அப்படி இப்படி பெண்மை கலந்த ஆண்மகனா ஆயிட்டாங்கிற லாஜிக்கு சினிமாவுக்கு வேணா ஒத்து போகலாம், ஆனா உண்மையிலே இந்த மாதிரி மூன்றாம் இனத்தவர் எப்படி உருவாகிறார்கள் என்பதை பத்தி நீங்க தெரிஞ்சிக்குனும்னா, இணையத்திலே இந்த "TransGender" பத்தி நிறைய விஷயங்கள் இருக்கு! அதுவும் நம்மூர்ல கூப்பிடுகிற அரவாணிகள், திருநங்கைகள், மற்றும் வடக்கே கூப்பிடும் "hijra", "kothi" பற்றிய கதைகள் மிகவும் சுவராசியமானவை! பத்திரிக்கைகளில் நீங்க படிச்ச கூவகத் திருவிழா போன்று! அதே சமயத்தில் மிகவும் பரிதாபமானது அவர்களது வாழ்க்கை! (வேணும்னா, இந்த வீடியோ கிளிப்பை, Harsh Beauty, கொஞ்சம் பாருங்க!) சமூகத்திலே இன்றைக்கு அவங்களுக்குன்னு சரியான அந்தஸ்த்தோ இல்லை மனிதநேயமோ இன்னும் சரியா கிடைக்கில்லை! ஆரம்பத்திலேருந்து அவங்களை கீழ்தரமா தான் நடத்தி வந்திருக்காங்க! ஆனா கொஞ்சம் அந்த இனத்தின் சரித்திரம் படிச்சீங்கன்னா, பெரிய பெரிய ரோம சாம்ராஜயத்தையே முக்காவாசி கவிழ்த்து ஆளுமை செய்யக்கூடிய வித்தை கற்றவர்களாகவும், ஏன் முகலாய சாம்ராஜ்யத்திலே அவங்களுக்குன்னு ஒரு தனி இடம் இருந்திருக்கு!

அப்பறம் நம்ம புராண இதிகாசங்கள்ளேயும் அவங்களுக்கு தனி இடம் பெற்றவர்களாகவும் இருந்திருக்காஙக! ஆனா அவங்களை எந்த பக்கம் சேர்க்கிறதுன்னு, அதாவது ஆண்பாலிலா, இல்லை பெண்பாலிலாங்கிறது அந்த ராமர் காலத்திலேருந்து(ராமர் காட்டுக்கு போகும் போது ஆண்கள், பெண்கள் வீட்டுக்கு போங்கண்ணு சொன்னப்ப, இவங்க எதிலே சேத்தின்னு தெரியாமா, நின்ன இடத்திலே பதினாலு வருஷம் அப்படியே நின்னு கழிச்சாங்களாம்) இருந்து வந்த ஒன்னு! அப்படி பட்ட போராட்டத்திலே இன்னைக்கும் நின்னு ஜெயிச்சிக்கிட்டிருக்கிற கம்லா ஜான், சபனம் மெளஸி பத்தி தமிழ் நாட்டு ஜனங்களான உங்களுக்கு நிறைய தெரிஞ்சிருக்கிற வாய்ப்பில்லை! இவெங்கெல்லாம் வட இந்திய மாநிலங்கள்ல எம்பி ஆகவும், மேயராகவும் இருக்காங்க! அதே மாதிரி, வடக்கே இவங்கே கிட்ட ஒரு அதீத சக்தி இருக்குன்னு நல்ல காரியங்கள், இல்லை நல்ல நிகழ்ச்சிகள், அதாவது குழந்தை பிறக்கும் போது இல்லை கல்யாணம் காட்சின்னு நடக்கிறப்ப, அவங்களுக்கு தர்மம் பண்ணுவதை உத்தமமா நினைப்பார்கள்!

சரி நான் சொல்ல வந்த சங்கதி என்னான்னா, இது போன்ற திரைப்படங்களின் ஆளுமை எப்படி நம் இளஞர் கூட்டத்தை தடுமாற செய்து, நம் கொண்டுள்ள பிற்போக்கான சமுதாய எண்ணங்களை மாற்ற வழி செய்ய முடியாமல் போகிறது என்பதை பற்றிய ஒரு ஆராய்ச்சி தான்! சமூகத்துக்கு பெண்களின் மீது எப்படிப்பட்ட கண்ணோட்டம் இருக்கிறதுங்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச ஒன்னு தான்! ஆனா, சிறு வயசிலேருந்தே ஆண்மகன் எப்படி வளர்க்கபட்டு வருகிறான் என்றும், அவர்களுக்கு இந்த பாலியல் சம்பந்தமான மனப்போக்கு மற்றும் பிறப்புச்சுகாதாரத்தின் மீதான மாறுபட்ட கண்ணேட்டமும், வேறு மாதிரியான நடைமுறை ஒழுக்கங்களும் (The Formation of Sexual and Reproductive Health Behaviour Among young Men) எப்படி அவர்களை சீரழிக்கிறதுன்னு, இந்த "HIV/AIDS" தடுப்புன்னு பேசிக்கிட்டு "World AIDS Day" கொண்டாடிக் கிட்டிருக்கிற இவ்வேளையிலே அதைப் பத்தி என்னா பார்ப்போம் வாங்க!

பொதுவா வாலிப வயது இல்லை பதின்ம வயதுன்னு சொல்ற அந்த பருவத்திலே, ஒவ்வொரு ஆண்மகனின் பாலியல் மற்றும் பிறப்புச்சுகாதாரத்தின் மீது கொண்டிருக்கும் கண்ணோட்டங்கள், மனநிலை, அதன் ஈடுபாடு, இது எல்லாத்துக்கும் காரணமாக அமைவது என்னான்னு பார்த்தீங்கன்னா, சக்தியுள்ள வலிமையான, போட்டியினை சந்தித்து வெற்றி கொள்ளும் ஆண்பிள்ளைத்தனமா இருக்குணும்ங்கிர தாக்கம், அதாவது 'ஆம்பளையா ஜெயிச்சுக்காட்டுன்னு', சொல்லுகிற இந்த சமூக உருவாக்கமும் அதன் தாக்கங்களும் தான்!(Socialisation Process and Societal Pressure) அதன் விளைவாய் 'கல்லைத் திண்ண்ணாலும் கரையிற வயசுன்னு', 'இந்த வயசிலே நமக்கு எந்த நோயும் பாதிக்காது'ன்னு, ஒரு குருட்டு தைரியத்திலே அவர்கள் தேடிப்போகும் தவறானப் பாதை, சீக்கிரமே ஆம்பள்ளைன்னு நிரூபிச்சிக் காட்டணும்ங்கிற ஒரு வெறி! அது எங்க கொண்டி விடுதுனா, ஆபத்தான பாலியல் நடத்தை(Risky Sexual Behaviour), பருவ வயது வருமுன்னே அடையத்துடிக்கும் பாலியல் இன்பம், பலருடன் உறவு வைத்து கொள்ளும் கோட்பாடு, இது எல்லாமே! இதனால் அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை பாழ்படுவது வெகு சுலபம்! நாளைக்கு இந்த உலகை ஆளப்போகிற பாதி இளைஞர் கூட்டம் நம் நாட்ல தான் இருக்காங்க,'Vibrant Young Generation'! அவங்களை இந்த மாதிரி சூழ்நிலைகளிலே அவர்களை மாற்றி நல்வழி கொண்டுவரணும் பாடுபடும் பல AIDS/HIV கட்டுப்பாடு இயக்கங்கள், எப்படி இந்த இளைஞர் கூட்டத்துக்கு சரியான பாலியல் பாடம், பாதுகாப்பான உடலறவு, சரியான பாலியல் பற்றிய மனநிலை, கண்ணேட்டங்களை கற்பித்தல், இளம் வயதிலே பாலியல் உறவு வைத்துக் கொள்வதை தாமதமாக்குதல், பல பேருடன் உறவு வைத்து கொள்வதை எப்படி குறைத்து கொள்வது, பாலியல் தாக்கங்களை மாற்றுவழியில் போக்கி கொள்வது, ஆணுறை உபயோகிப்பது, முக்கியமாக பெண்களின் நுண்ணிய உணர்வுகளை மதித்து, அவர்களுக்குரிய மரியதையை எப்படி செலுத்த வேண்டுமென்பது வரை அவர்களை தயார்படுத்தி நல்வழியில் எடுத்து சென்று இந்த பாலியல் மற்றும் பிறப்புச்சுகாதாரம் மற்றும் குடும்ப கட்டுப்பாடு முறைகளை சரியாக வாழ்வில் கடைப்பிடித்து வெற்றி கொள்ள வேண்டுமென்பது வரை முயன்று கொண்டிருக்கின்றன. ஆனா, நான் மேலே சொன்ன "ஆம்பளைன்னு காட்ட...." டயலாக் பேசி, அதுக்கு 'பிளையிங் கிஸ்' கொடுத்து ரசிக்க வைக்கும் தப்பான கூட்டம் வளர்க்கத் துடிக்கும் இந்த மாதிரி சினிமாக்களை எடுக்கும் மகாபாவிகளை என்ன செய்யனும் சொல்லுங்க!

ஆம்பள்ளையா இருக்குனும்னா இந்த இந்த மாதிரி இருக்கணும்னு ஒரு இலக்கணம் தெரிய அதிகம் வயசு எடுத்துக்கிறதில்லை நாமே! அஞ்சு வயசுக்கப்பறம் உடை, நடை, பேச்சு, ஆடை இது எல்லாத்திலேயும் வித்தியாசம் காண ஆரம்பிச்சுடுவோம்! அஞ்சு வயசுக்கு முன்னே பொம்பளைபுள்ளைங்க போடர ஃபிராக்கு போட்டு, மையி, பொட்டு வச்சு ஆண் பெண் பேதமில்லாம பார்க்கும் அழகு பொசுக்குன்னு மாறி போயிடும்! நீ ஆம்பளைச் சிங்கம்டா ன்னு சொல்லி சொல்லியே சின்ன வயசிலேருந்து துடிப்பா, உறுதியா, எதையும் ஆக்கிரமிக்கும் தன்மையோட வலிமையா வரணும்னு சொல்லி இலக்கணம் வகுத்துடுவாங்க! பொண்ணுன்னா, கீழ்படிஞ்சு, வீட்டோட, பணிவோட, தங்குதக்காணு குதிக்காம, வாழ்க்கையிலே முதலில் தென்படுகிற ஆண்மக்களான தந்தை அண்ணன் மற்றும் கணவணுக்கு அடங்கி போகும் தன்மைகளோட அச்சம், நாணம், மடம், பயிர்ப்புன்னு சொல்லி இலக்கணம் வகுத்து விட்டு விடும் நம்ம சமூகம். இந்த இலக்கணத்திலே எது மாறுனாலும், நீ உன்னோட ஆசைகள் அதிதமா இருந்து ஒத்து போகலைன்னா நீ தேடி போக வேண்டியது மூணாவது இனத்தை நோக்கி!

அது மாதிரி 12 வயசுக்கு மேலே போனா உனது பாலியல் பங்கு என்னான்னு தெரிய ஆரம்பிக்கும்! அதுவும் யாரும் பக்கத்திலே வந்து சொல்லி கொடுக்கிறதில்லை, எட்டி நின்னு சுத்தி நடக்கிரதை வேடிக்கை பார்த்து! அப்ப தான் சமூகம் வடித்த கட்டுப்பாடு,அமைப்பு, இது இப்படித்தான்னு சொல்லி சொல்லி மனசுலே ஆழமா பதிஞ்சு போயி, அப்புறம் பெரியாரு வந்து சொல்லியும் ஒன்னும் சுகப்படமா போயிடும்! அப்புறம் பொண்களை தெய்வமாவும் மதிக்க சொல்லும், அதே சமயத்திலே கொலையும் செய்வாள் பத்தினின்னும் சொல்லும்! அது மாதிரி ஆண்பிள்ளையை கட்டிப்போடும் வசியம் அவங்கக்கிட்ட இருக்கிறதாலே, அதை அடக்கி கட்டுப்பாட்டுக்குள்ள வச்சி ஆளணும்னு சொல்லும்! ஆக அவங்களை பத்தி தெளிவான கருத்துகளை உருவாக்காம மாறு பட்ட கண்ணோட்டத்தை(Conflict attitude)உருவாக்கி கொடுத்திடும்! அப்பறம் ஆண்பிள்ளை என்ன செய்வான்! இதில்லாம நீ ஜெயிச்சுக்காட்ட்ணும்னு சொன்ன ஆம்பள்ளைத்தனம் தலை எடுத்தோன, எதிர்பால் கூட்டதை எப்படி அடக்கி ஆளணம்னு யோசிக்க ஆரம்பிச்சு பெண்பிள்ளை சிநேகம் கடைசியிலே கருமமே கண்ணாயினார்ங்கிற ரேஞ்சுக்குத்தான் வளர்க்க பார்க்கும்! பெரும்பாலும் உண்மையான சிநேகம் வர சான்ஸ் ரொம்ப கம்மி! அப்பறம் பாலியல் வித்தையை நண்பர்கள் கிட்டதான் பேசிக் கத்துக்கணும், இல்லை சரோஜாதேவி புத்தகமே துணை! அதிகம் போன உன்னதை விட என்னுது பெரிசுன்னு போட்டி போட்டு, அப்பறம் நடை, உடை, பாவனை, பாடி-பில்டிங், பேச்சுத்திறமை, அப்படின்னு ஆரம்பிச்சு, கடைசியிலே பாலியல் கலையின் உச்சம்னா "Penetrative power" தான் தோண வைக்கும்!

இப்படி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம் எப்படி நம்ம இளைஞர் கூட்டம் சீரழிஞ்சு போகுதுன்னு, அதெல்லம் மாத்தி, நான் மேலே சொன்ன மாதிரி பாடுபட்டுக் கொண்டிருக்கும் பல இயக்கங்கள் இளைஞர்களை நல் வழியில் கொண்டு வந்து அவர்களின் பாலியல் மனநிலை, கட்டுப்பாடு ஒழுக்க நிலைகளை மாற்றி நோய்யில்லா வாழ்க்கையோட இந்த வளரும் நம் இளைஞர் சக்தியை கொண்டு வரணும்னு நினைக்கிற வேளையிலே இந்த மாதிரி ஒரு திரைப்படம் தமிழ் சமுதாயத்துக்கு தேவையான்னு யோசிச்சுப் பாருங்க, இது வெறும் 'பிளையிங் கிஸ்', விசில்களோடு தியோட்டரில் முடிந்து விடுவதில்லை, அதையும் மீறி சில தவறுகள் நிகழ்த்தவும் வழி வகுக்கும்! அதுக்குத்தான் இந்த பதிவு!

(மேலே சொன்ன அத்தனை தாக்கங்களோடு தான் நானும் என் இளமைப்பருவத்தை கழித்தேன், அதில் நல்ல வேளையாக தவறான வழிக்கு போகவில்லை, இருந்தாலும் என்னுடய சில மனநிலைப்பாடுகள் சில சமயங்களில் பெண்ணினத்தினை சரியான முறைகளில் அணுகாமல் போனாலும் வயது முதிர்ச்சி அந்த பக்குவத்தை எனக்கு கொடுத்தது!)

இதை எழுத தூண்டிய பதிவு "பெண் ஏன் அடிமையானாள்?"

Monday, November 27, 2006

கனவுத் தொழிற்சாலை-கசங்கும் கன்னிகள்!

என்ன சுஜாதா மாதிரி வில்லங்கமான ஒரு தலைப்பு வச்சுட்டு ஏதும் கிசுகிசுப் பதிவு எழுதியிருக்கேன் நினைச்சிட்டீங்களா? சமீபத்திலே 'தெட்ஸ் தமிழ்'ங்கிற இணைய 'போர்ட்டல்', அதாவது செய்தி தொகுப்பு பக்கத்திலே, தமிழ் சினிமோவோட 'Tamil Cinema Gossip Detail'ங்கிற பகுதியிலே வந்த ஒரு முக்கியமான செய்தி என்னான்னா, "இயக்குநரை 'குமுறிய'ஷ்ரேயா"ன்னு, 'திமிறு' படத்திலே நடிச்ச நடிகையை பத்தி வந்தது தான்! அப்புறம் BBC எடுத்த ஒரு ஆவணப் படத்தையும் பார்க்க நேர்ந்தது! அது என்னான்னா, எப்படி திரை உலகில் நுழையும் பெண்கள், அதாவது கன்னிகள் எப்படி கசக்கப்படுகிறார்கள் என்பதே அது! அதாவது "Bollywood:The Casting Couch" என்ற அந்த ஆவணப்படம். கீழே, நான் பார்த்து பிரமித்ததை உங்களுக்கு தொகுத்து வழங்கி இருக்கிறேன், அதை பார்த்து மகிழவும், அதுக்கு முன்னாடி சில விஷயங்களை கீழே படிச்சிட்டு வாங்க!

இந்த சினிமாவிலே சான்ஸ் கேட்டு அலையறதுங்கிறது நம்மிடையே உள்ள பெரும்பாலான இளைஞர், இளைஞிகளுக்கு ரொம்ப சர்வ சாதார்ணமான விஷயம்! அதுவும் சினிமாங்கிற கனவுத் தெழிற்சாலையிலே சாதிக்கணுங்கிற வெறியோட இன்னைக்கு முகம் தெரியாத எத்தனையோ பேருங்க அலைஞ்சிக்கிட்டிருக்காங்க! அதிலே வெற்றிகண்ட நிறைய பேரோட கதையை எல்லாம் படிச்சிருக்கோம், அவங்க எப்படி எல்லாம் கஷ்டபட்டு முன்னுக்கு வந்தாங்கன்னு! இதிலே ஆண்கள் நிலைமை வேறு, அதை பத்தி என்னோட சொந்த அனுபவத்தை எழுதுறேன்! அது மாதிரி நம்ம சகபதிவர், இளவஞ்சி மாதிரி ஆளுங்க எழுதின இடுகைகளையும் படிச்சிருப்பீங்க! ஆனா கன்னிப்பெண்களுக்கு திரை மறைவில் நடந்த பல சம்பவங்கள் நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை, அப்படியே தொடர்ந்து பதிவா வந்த "சுக்குகாப்பி சூடானதும் சுவையானதும்" பதிவுகளை ரொமப பேரு தொடர்ந்து ரசிச்சு படிச்சிருப்பீங்க! ஆனா உண்மையிலே இந்த ஆவணப்படத்திலே அதை கிழி கிழின்னு கிழிச்சு போட்டுட்டாங்க!

அதாவது கொஞ்ச நாளைக்கு முன்னே 'தெஹல்கா.காம்'ன்னு ஒரு பத்திரிக்கை இந்த 'under cover'ல போயி பிஜேபி தலைவரு ஒருத்தரு, அதான் பங்காரு லஷ்மண் ஒருத்தரு கத்தை கத்தையா நோட்டுகளை லஞ்சம் வாங்கினதை எப்படி படம் புடிச்சிங்காங்களோ அப்படி ஹிந்தி நடிகர் சக்திகபூர் ஒரு பெண்ணை சினிமா சான்ஸ் வாங்கி தரேன்னு படுக்கைக்கு அழைத்ததை இப்படி 'under cover'ல படம் புடிச்சி கொஞ்ச நாள் முன்னே டிவியிலே போட்டு நாறடிச்சதை நம்ம தமிழ்ஜனங்க எத்தனை பேரு பார்த்தீங்களோ எனக்குத் தெரியாது, அதை வச்சி BBC நிறுவனம் நம்ம நாட்டு மானத்தை வாங்கற மாதிரி ஒரு ஆவணப் படம் எடுத்து விட்டு, இங்கே பெண்கள் நடிக்கணும்னா செக்ஸை டிரேட் பண்ணனும்னு காட்டி கிழி கிழின்னு கிழிச்சாட்டாங்க, அது கொஞ்சம் சுவாரசியமா இருக்குமேன்னு தான் இந்த பதிவு! (மத்தபடி ஊர்ல தண்ணி இல்லை, சுடுகாடனதுக்கு காரணம் என்னான்னு எழுதுனா படிக்கவா போறீங்க!)

சினிமாவிற்கு நடிக்க வரும் பெண்கள் எப்படி பட்ட சூழ்நிலையை சந்திச்சு பெரிய ஆளா வருவாங்கங்கிறது பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்ச ஒன்னு தான், அதிலே சில நல்ல நடிகைகள், நான் சொல்ல வர்றது நடிப்பிலே கோலோச்சிய நடிகைகள் இந்த சூழ்நிலையிலே இருந்த வந்தவங்கன்னு அரசல் புரசலா நமக்கு தெரியும்! ஏன், அந்த காலத்திலே நல்லா நடிச்ச ஷோபா, படாபட் ஜெயலஷ்மி மாதிரி நடிகைங்க இந்த தொழிற்சாலையின் ஏமாற்றத்தை தாங்காம இறந்து போனது தெரிஞ்ச ஒன்னு தான், அதே மாதிரி பெரும்பாலான வளர்ந்த நடிகைகளும் ஒரு காலகட்டத்துக்கப்பறம் இந்த சூழ்நிலைகளை பொறுக்க முடியாம தற்கொலை செஞ்சு செத்து போனது உங்களுக்கு எல்லாம் தெரிஞ்ச ஒன்னு தான், முக்கியமா சொல்லணும்னா 'சில்க் ஸ்மிதா'வை சொல்லியே ஆகனும்! இந்த ஆவணப்படத்திலே அதை ஒரு நடிகையே சொல்லி இருக்காங்க! நடிக்க சான்ஸ் கேட்டு ரோல் கிடைச்சு நடிச்சு முடிச்ச பிறகுக் கூட அவங்க அணைப்பிலேயே இருந்தாகணும், ஏன்னா கிடைப்பதற்கரிய ஒரு சந்தர்ப்பத்தை அவர்கள் வாழ்விலே ஏற்படுத்தி கொடுத்தாலாலே அவங்க பிடியில்ல கொஞ்ச நாள் இருந்திட்டு அப்பறம் அதுவே ரொட்டீனாயி, சில நடிகை அதை சரின்னு ஏத்துக்கிட்டு அப்படி இப்படி இருந்துட்டு கடைசியிலே சினிஃபீல்டை விட்டு போயிடுவாங்க, சில பேரு தாங்காமா உயிரை மாச்சுக்குவாங்க!

ஆனா இப்ப இவங்க சொல்றது என்னான்னு, இது ஒண்ணும் இந்த சினிமா தொழில்ல நடக்காத ஒண்ணு இல்லை, இது பாலிவோட்ன்னு இல்லை, ஹாலிவோட், ஏன் நம்ம தென்னிந்திய சினிமாவிலே இதை விட அதிகம் நடக்குது, இதுக்குப்போய் பெரிசா பேச வந்துட்டேங்கிறாங்க! இப்ப சான்ஸ் தேடி வரும் பெண்கள் "என்னவேணும்னாலும்" செய்யத் தயார்ங்கிற முடிவிலே வர்றாங்கணு! அதாவது அவங்க இண்டெஸ்ட்ரீயிலே இதுக்குப்பேரு "கோஆப்ரேட்" பண்றதாம், அதாவது உங்களுக்கு நான் எல்லாவிதத்திலேயும் "ஒத்துழைப்பு" தருகிறேன் என்பது!(இந்த தெட்ஸ் தமிழ் 'போர்ட்டல்' படிச்சிங்கன்னா, இந்த மாதிரி நக்கலா எழுதி தள்ளுவாங்க, எல்லா நடிகை கதையையும் இப்படி தான்! முதல்ல நான் கூட படிக்க சுவாரசியமா இருக்கேன்னு நினைப்பேன், அவங்க எழுதறது வாஸ்த்தவம் தான்னு இப்பல்ல தெரியுது!) அதாவது இன்னுன்னும் சொல்றாங்கப்ப, இந்த மாதிரி சும்மா வந்து விழுந்திட்டீங்கன்னா, அப்பறம் நீங்க ரொம்ப சீப்பா போய்டுவீங்க, அப்பறம் படத்திலே நடிக்க வைக்க புரடியூசர்ஸ், டைரக்டர்ஸ் தயங்குவாங்க, அந்த பெண்ணேட தரம் அவ்வளவில்லை, அதையெல்லாம் எப்படி போட்டு படம் எடுக்கறதுன்னு, ஒதுக்கி தள்ளிடுவாங்களாம், ஆனா "கோஆப்ரேட்" பண்ணலேன்னா ரோல் கிடைக்காதாம்! என்னப்பா இது புதுக் கதையா இருக்கு!

அது மாதிரி நடிக்க வந்த சில பெண்களையும் சந்திச்சு பேட்டி எடுத்து இந்த ஆவணப் படத்திலே ஒட்டி இருக்காங்க! அதிலே ஒரு நடிகை சொல்லுவது என்னான்னா, ஒரு டைரக்டர் சொன்னாராம் உன்னை போட்டு படம் எடுக்கறப்ப, நம்ம உடலும் மனமும் (Body&Soul) ஒத்து நடிச்சாதான் கேரக்டர் தெம்பா எழுந்து நிக்கும்னாராம்! அதாவாது லாங்சஷாட்ல உன்னோட உடைகளை களைஞ்சு எடுக்கறப்ப உன்னோட நடிப்புத்திறமை வெளிப்படமா போயிடும், அதனால இப்ப கழட்டி பார்த்தாதான் அதை எப்படி கேமிராவிலே கொண்டுவரமுடியும்னு தெரியும்னாராம், அந்த நடிகை வேற யாரமில்லை, நம்ம கேப்டன், அர்ஜீன் கூட நடிச்ச 'சாக்ஷி சிவானந்தா'ங்கிற நடிகை தான்! அப்பறம் இன்னொரு பொண்ணு, 'ப்ரீத்தி ஜெயின்' இந்த பொண்ணு கொஞ்ச நாளைக்கு முன்னே ஒரு ஹிந்தி டைரக்டரை பத்தி என்னை படம் எடுக்கிறேன்னு உப்யோகிச்சுட்டு அம்போன்னு விட்டுட்டான்னு ப்ராது கொடுத்த பொண்ணு! அந்த மாதிரி போனதை நான் ரேப்புன்னு சொல்லமாட்டேன், ஆனா நான் கொடுத்த சம்மதத்தை தவறா பயன்படுத்தி என்னை உபயோகிச்சிட்டு எனக்கு சான்ஸ் கொடுக்கலைன்னு ரொம்ப வருத்தப்பட்டுக்குது! ம்.. கதை எப்படி இருக்கு பாருங்க!

மொத்தத்திலே, 'இதெல்லாம் சினிமாவிலே சகஜமப்பான்னு' கவுண்டமணி மாதிரி எல்லாரும் ஒத்துக்கிறாங்க! நம்ம என்னடான்னா பெண்ணியம், கற்பு, கத்திரிக்கா, புடலங்கான்னு ஏகப்பட்ட சவுண்டு விட்டுக்கிட்டு அதையும் வீணா இந்த இணையத்திலே சென்ஷேஸ்னலா எழுதி தள்ளிக்கிட்டிருக்கோம்! கொஞ்ச நாள் முன்னே நடந்த குஷ்பு, சுஹாசினி விவகாரத்திலே எழுதின ஆதரவு, எதிர்ப்பு பதிவுகளை தான் சொல்றேன்!அது மட்டுமில்லாமே, நடிகருக்கு கட்டவுட் வச்சது போக, இப்ப பொம்பளை புள்ளைங்களே திரிஷா, நமீதா வுக்கு கட்டவுட்டு, பாலாபிஷேகம் எல்லாம் செஞ்சு, கூத்தடிக்கிறாங்க! அதுல உள்ள கவர்ச்சி இன்னும் எத்தனையோ பேரை வீணாக்கிப் போடுது!அப்பறம் இந்த மீடியா இண்டெஸ்ட்ரிங்கிறது இப்படிதான் சனியன்னு எல்லாருக்கும் தெரியும், ஆனாலும் போய் விழ எவ்வளோப் பேரு தயாரா இருக்காங்க!

இருப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னே, என் கண்ணு முன்னாடி படிச்ச இஞ்சினியருக்கு நடந்த அவமானத்தை நேரிலே பார்த்து அதை விட்டு எட்டு காத தூரம் ஓடி வந்தவன் நான்! நானும் பாரதிராஜாகிட்ட சான்ஸ் தேடி அபீஸு, ஸ்டியோன்னு ஏறி அலைஞ்சவன் தான், அங்க பார்த்த இந்த சம்பவம் தான், ஒரு இளம் சிவில் இஞ்சினியர், தம் போட்டாவை கையிலே வச்சிக்கிட்டு , சான்ஸ்க்கு அலைஞ்சப்ப, எவ்வளவு கிழ்த்தரமா நடத்தமுடியுமோ, அவ்வளவு கீழ்த்தரமா, அசிங்கமா நடத்தி வெளியே துரத்தினது இன்னைக்கும் என் கண்முன்னாடி ஆடுது! ஆனா, இப்ப இதெல்லாம் சகஜம், ஒரு தடவை படுத்து எந்திரிச்சா உண்டு ஹீரோயினி சான்ஸ், அதுல ஒரு தப்புமில்லை, இந்தோ, நான் இணைச்ச வீடியோ கிளிப்பிலே, வர்ற இந்திப் படத்திலே, சினிமாவிலே பாட்டு பாட சான்ஸ் தேடி போகும் பொண்னுக்கிட்டே அந்த ம்யூசிக் டைரக்டர் சொல்ற மாதிரி, 'ஒன்னை அடையனும்னா, இன்னொன்னை துறந்து தான் ஆகணும்'ங்கிறது எழுதப்படாத விதி! இது ரொம்பகாலமா இந்த சினிமா துறையில இருந்தாலும், இதை இப்ப வெகுவா ஒத்துக் கொண்டு உள்ளே நுழையும் பெண்கள் படிக்காத, விஷயம் தெரியாத பெண்கள் இல்லை, எம்பிஏ வரை படிச்ச பெண்கள் இதில் அடக்கம்னு தெரியறப்ப நம்ம எங்க போறோம்னு தெரியலை!

அதுக்காக இந்த எண்டர்டெயின்மெண்ட் இண்டஸ்ட்ரீங்கிற இந்த தொழில் துறையை விட்டுட முடியாது, ஏன்னா எந்த ஒரு கேளிக்கையும், பாமரன்லருந்து, செழிப்பா வசதி வாய்ப்புகளோட இருக்கிற நம்ம அத்தனை பேருக்கும் இந்த சினிமா கேளிக்கைப் போல ஈடு செய்ய முடியாத ஒன்னு! இதெக்கெல்லாம் காரணம் இந்த கனவுத்தொழிற்சாலை, இதோ இந்த ஹோலிவோட்ல நடக்கிற ஒழுங்குப் படுத்தப்பட்ட தொழிலா நம்ம நாட்ல நடக்கலை! அதாவது மத்த தொழில் மாதிரி, இதுல இருக்கிற அத்தனை துறைகளும், முறையான தொழிலா கருதப்பட்டு, ஒழுங்குபடுத்தி நடக்காத வரை, நடிகையாக படுக்கை விரிச்சாகணும், கல்யாணமான தொழிலை விட்டுடணும், சமூகத்துரோகிங்க கூட நட்பு வச்சக்கணும், பெரிய படத்தயாரிப்பாளரானுலும் கந்து வட்டியிலேயிருந்து விடு பட தூக்கு மாட்டிக்கிணும்! மத்த விஞ்ஞானத் துறையிலே இருக்கிற மாதிரி இதுக்கும் நிறைய கிரியேட்டிவிட்டி, அறிவாளித்தனம் எல்லாம் வேணும், ஆனா அதுக்கு உண்டான உண்மையான அங்கீகாரம் இருக்கான்னா, இப்போதைக்கை இல்லை நம்ம நாட்ல, அதான் நிதர்ஷண உண்மை!

இதோ நான் கண்டு களிச்ச வீடியோ கிளிப்பு உங்களுக்கு! இதுல சில ஹிந்தி பட கிளிப் வரும், ஒன்னு நடிக்க சான்ஸ் கேட்டு போற ஒரு பொண்ணுக்கிட்டே ஒரு டைரக்டர் எப்படி பிகேவ் பண்ணுரான்னு, அடுத்தது ஒரு ம்யூசிக் டைரக்டர் எப்படி சான்ஸ் கேட்டு வர்ற பொண்ணுக்கிட்ட நடந்துக்கிறாருன்னு வரும்! மொழித்தெரியனாலும் நான் சொல்ல வந்த கதைப்புரியும், அப்புறம் சொல்ல வந்த கதைக்கு கொஞ்சம் கிளுகிளுப்பு வேணும்னு திமிறு படத்தோட ஒரு முக்கியமான 'Footage'!

Thursday, November 23, 2006

தண்ணீர்... தண்ணீர்....!

என்ன திடீர்னு பாலசந்தர், 1980ல எடுத்த படத்தோட டைட்டிலை போட்டு சினிமா கதை சொல்லப்போறேன்னு நினனக்கிறீங்களா! ஆமா உலகம் எதிர் நோக்கி நிக்கும் தண்ணிப் பஞ்சத்தை பத்திதான் சொல்லபோறேன்! அந்த படத்திலே அத்திப்பட்டு கிராமத்திலே தண்ணி இல்லாம வறண்ட கதையை அழகா அப்ப நாடகம் போட்டு கோமல் சுவாமி நாதன் சொன்னதை, கவர்ச்சியா, சொன்னபடி ஆடி பாடி, தரையிலே உருண்டு புரண்டு நடிப்பாற்றலை வெளிப்படுத்திய சரிதாவை வச்சு 'மரோச்சரித்திரா' தெலுங்குப்படம் எடுத்து முடிச்சு அது அசத்தலா ஓடி ஆடி ஓஞ்சப்பின்னே, இந்தப்படத்தை அழகா எடுத்து வறண்ட பூமி கதை சொன்ன இந்த படத்தை நீங்க எத்தனைப் பேரு பார்த்தீங்களோ எனக்குத் தெரியாது! ஆனா இப்ப நான் சொல்லப்போற இந்த தண்ணிப்பிரச்சனை, வளர்ந்த நாடுகளை விட நம்மைப் போல வளரும் நாடுகளுக்கு எப்படி சாவு மணி அடிக்கப்போகுதுன்னு உங்களுக்கு அதிகம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை!

அப்படியே தெரிஞ்சாருந்தாலும், கொஞ்ச நாளைக்கு முன்னே நடந்த தண்ணிபிரச்சனையை விட, பாரதிராஜா தலமையிலே நெய்வேலிக்கு போன நடிகர் நடிகையர் கூட்டம் அதிகமா, இல்லை ரஜினிகாந்த் தலமையிலே சென்னையிலே பீச்சிலே உண்ணாவிரதம் பண்ண வந்த நடிகர் நடிகையர் கூட்டம் அதிகமான்னு கணக்கு ஆராஞ்சு போட்டு அதை அப்படியே விட்டுட்டு வேறே கதை பார்க்கப் போய்ட்டீங்கன்னா நான் என்னத்தை சொல்றது. இல்லை, நம் நாட்டு நதிகளை இணைக்க 'தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு', நான் ஒரு கோடி தரேன்ன்னு ரஜினி அறிக்கை விட்டதை படிச்சிட்டு, அடடா நம்ம தலைவருக்கு எப்படி ஒரு முற்போக்கு எண்ணம், நம்மை காப்பாத்த என்னன்ன வழிமுறைகளை நாட்டுக்கு எடுத்து சொல்றாருன்னு சிலாகிச்சு அப்படியே கதையை அம்போன்னு விட்டிருந்தீங்கன்னா, ஐயா, கொஞ்சம் எந்திருச்சி வாங்க, நான் மேற்கொண்டு சொல்லப்போற விஷயத்தைப் படிக்க, அதுவும் எப்படிப் பட்ட பூதகரப் பிரச்சனையிலே நாம் இருக்கோங்கிறதை பார்க்க வாங்க! (சிவாஜி படத்திலே திரும்பவும் இந்த நதி இணைப்பு திட்டம் பத்தி தலைவரு ஏதோ சொல்லப்போறாராம், பொறுத்திருந்து பார்ப்போம், ஆனா ஒன்னு சொல்றேன், இந்த நதி இணைப்பு சாத்தியக்கூறுகளைப் பத்தி நம்ம தொழில்நுட்ப வல்லுநர்கள், அதான் ஹைட்ராலஜிஸ்ட்டுங்க, வேறே கதை சொல்றாங்க, அது தெரியுமா, உங்களுக்கு, என்ன பண்றது, கலை உலகமே கதின்னும், அவங்கே சொல்றது தான் வேதமுன்னு கிடந்தா எங்கிட்டுப்போய் சொல்ல! ம்.. அது எதுக்கு இப்ப வாங்க கீழே போய் பார்போம் மேற்கொண்டு!)

ஒரு ஆறு மாசத்துக்கு முன்னே தான் 'ச்சோ'ன்னு சென்னையிலே மழை பேஞ்சு, எல்லாரும் வருண பகவானைத்திட்டி தீர்த்து, வெள்ளக்காடாகி, இப்ப தண்ணிப்பிரச்சனை ஏதுமில்லாம இருக்கிற
நேரத்திலே இது என்ன புதுக்கதையா ஒரு பதிவுன்னு நீங்க கேட்கிறதுப் புரியது, ஆனா தண்ணி இல்லாம இருந்த கஷ்ட காலத்தை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க கொஞ்சம்! அதுவும் தண்ணி வண்டி எப்பவரும்னு காத்துக் கிடந்து குடத்திலே குடிக்க தண்ணிப்புடிச்ச கதையை மறந்துடாதீங்க! இது சென்னையின்னு இல்லை, இந்தியாவில இருக்கிற பெரும்பாலான மாநகரங்கள், நகரங்களுக்கே உண்டானக் கதை! நான் டில்லியிலே இருந்த காலத்திலே இந்த தண்ணி கஷ்டத்தை ரொம்பவே அனுபவிச்சவன், அதை விட மோசமா வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் சேரி பகுதி மக்களை நேரிலே பார்த்துருக்கேன், அதுவும் காலையிலே நாலு மணிக்கே எழுந்து கைக்குடத்தோட தண்ணி லாரிக்கு காத்து நிற்கும் கூட்டத்தை பார்த்தவன், அதுவும் நல்ல காலங்கள்ல! கெட்ட காலங்கள்ல, தண்ணி லாரி வந்தா உண்டு, இல்லைன்னா, அவ்வளவு தான், அதுவும் பாலுக்கு குடுக்கிற காசைவிட அதிகமா காசுக்கொடுத்து தண்ணி வாங்கி குடிச்ச கதை இருக்கு! சில சேரி வாழ்மக்கள், பக்கத்திலே, தேங்கி நிக்கும் கழிவு நீர் குளத்திலேயே குண்டி கழுவி, குளிச்சு, துணி துவைச்சு, 'அந்த தண்ணியை குடிச்சா அடுத்த நிமிஷம் உயர் வாழ்றது சத்தியமில்லைன்னு', தெரிஞ்சும் அதை புழங்கும் கூட்டத்தை பார்த்ததுண்டு!

சரி தண்ணி ஒரு நாளைக்கு எவ்வளவு ஒரு மனுசனுக்குத் தேவை? அதுக்கு ஏதும் வரை முறை இருக்கா? இதை பத்தி நீர்வள மேம்பாட்டு வல்லுநர்கள் என்ன சொல்றாங்க, ஒரு 50 லிட்டர் தேவை இருக்குமா ஒரு நாளைக்கு, அரசாங்கம் என்ன சொல்லுதுன்னா நம்ம இந்திய தரப்படி 40லிட்டர் ஒரு மனுஷனுக்கு தேவை ஒரு நாளைக்குன்னு சொல்லுது! இரண்டு மூணு லிட்டர் குடிக்க, மிச்சம் சமைக்க, குளிக்க, குண்டி கழுவ! ஆனா இதையே ஒரு அமெரிக்க குடிமகன் எவ்வளவு செலவு பண்றான் தெரியுமா, குறைஞ்சது 400 லிட்டர்லருந்து 600 லிட்டர் வரை, ஐரோப்பிய நாடுகள்ல இதுல பாதி! ஆனா நான் மேலே சொன்ன சராசரி சேரி ஜனங்க உபயோகிக்கிறது இரண்டு இல்லை மூணு வாளி தண்ணியா இருந்தா எதேஷ்டம்! அதுவும் 7 பேரு கொண்ட ஒரு பெரிய குடும்பத்துக்கு, அதுவும் டில்லியிலே 45 டிகிரி கொளுத்திற மத்தியான வெய்யிலுல, கொட்டாங்குச்சி தண்ணியை மட்டும் குடிச்சு, அதுக்காக, பாதி சம்பாதிக்கிற வருமானத்தை போக்கி வாழும் மக்கள் கூட்டம் தான் நம்ம நாட்ல பாதிக்கு மேலே!

தண்ணீர்ங்கிறது வாழ்வோட அடிப்படை அம்சமில்லையா? அதுதான் வேணுங்கிற அளவுக்கு இருக்கே உலகத்தில, இப்ப என்னா அதுக்குங்கிறீங்க! அதுவும் ஓவ்வொரு லிட்டர் தண்ணின்னு, எங்கெல்லாம் 'நீர் நிலைகள்', 'ஆறுகள்', 'குளங்கள்', 'ஏரிகள்' ன்னு கண்ணுக்கு தெண்படுதோ, அதுபோல இன்னும் அம்பது பங்கு தண்ணி நிலத்தடிக்கு கீழே பூமிமாதாக் கிட்ட இருக்கு, அப்படி இருக்க, இதுக்கு போய் எதுக்கு இவ்வளவு அளட்டிக்கனும்னு நீங்க கேட்கிறீங்க! ஆனா ஒன்னு சொல்லிப்புடறேன், இந்த தண்ணிக்குன்னு நம்ம மட்டும் கர்நாடகாக்காரக்கிட்டேன் சண்டை போடல, ஆதியிலேயிருந்து இந்த தண்ணிக்காக சண்டைப் போட்ட கதைகள் நிறைய இருக்கு! அதுவும் மிகப்பழமையானயான சுமேரிய நாகரீகம் தோன்றின மெசபடோமியாவியிலேயும் சரி, பழங்காலபைபிள்ல வந்த செங்கடலைப்பிரிக்கும் கதையும் சரி, எல்லாமே இந்த தண்ணிச் சண்டைக்காகத்தான்!

இன்னும் ஒரு 50 வருஷம் கழிச்சு, அதாவது 2050ம் ஆண்டுல இருக்கப்போற 900 கோடி ஜனங்க எல்லாத்தும் தண்ணி கிடைக்கணும்! அதுவும் இதில பாதிக்கு மேலே நம்மைப்போல வளரும் நாடுகளோட ஜனங்கள், இவர்கள் எல்லாத்துக்கும் தண்ணிக் கிடைக்கணும்! உலகத்திலே இருக்கிற அத்தனை நீர் வளமும் சமமா பிரிஞ்சிருந்தா, இல்லை மழை வேனுங்கிறப்ப, வேணுங்கிற இடத்திலே பேஞ்சு போனா எல்லாருக்கும் தண்ணிக் கிடைக்கும், அதுல ஒரு சந்தேகமும் இல்லை, ஆனா வருணபகவான் அவ்வளவு தயாநிதி இல்லை! அங்க தான் கதை கந்தலாகப்போகுது! டெல்லி மாதிரி ஊர்ல வருஷத்துக்கு 40 நாளு, அதுவும் நாலு மாசத்துக்குள்ள பேஞ்சு முடிஞ்சா நீங்களும் நானும் செஞ்ச அதிர்ஷ்டம், இன்னும் சில ஊர்கள்ல இது ரொம்ப மோசம்! உலக ஜனத்தொகையிலே 20 சதவீதம் நம்மோடது,ஆனா நம்மக்கிட்ட இருக்கிற நீர் வளம் வெறும் நாலு சதம்! அது மாதிரி சைனா கனடா நாட்டை விட நீர் வளம் ரொம்ப கம்மி, ஆனா அங்கே ஜனத்தொகை கனடா நாட்டைவிட நாப்பது பங்கு அதிகம், அதனாலே நிலத்தடி நீர்தான் பஞ்சம் தீக்கனும், ஆனா நிலத்தடி நீரை அதுவா மழை பேஞ்சு புதுபிச்சக்கிறதுக்குள்ளே நாம உறிஞ்சு தீர்த்துப்புட்டதாலே கிணத்தை 200 அடிக்கு மேலே தோண்டுனாலும் தண்ணிக் கிடைக்கிறதில்லை! இது தான் பிரச்சனைக்கு ஆரம்பம், இப்ப புரிஞ்சுதா!

உலகத்திலே இருக்கிற அத்தனை நாகரீகங்களும் தோன்றியது எல்லாம் நதிகளை சார்ந்த பகுதிகள்ல தான், அதுவும் சிந்து சமவெளி நாகரீகத்திலே இருந்து! அதுனாலதான் நாம நதிகளை எல்லாம் கன்னியா வச்சிருந்து பெருமை பேசி வந்தோம்! நதிகள் தான் ஒரு நாட்டின், ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு முதக்காரணமா இருந்தது, அதுவும் 2000 வருஷத்துக்கு முன்னே நிர்மானிச்ச ரோம் நகரமா இருந்தாலும் சரி, இல்லை நியுயார்க், லண்டன் போன்ற பெரும் நகரங்களானாலும் சரி, அது ஏன் நம்ம நாட்டு எல்லா பெரு நகரங்களும், நதிகளை ஒட்டிப்பிறந்தது தான்! தேம்ஸ், ஹட்சன் நதிகளும், அதுவும் அதில் ஏற்படுத்திய நீர் நிலை தேக்கங்களால் தான் மனித குல வளர்ச்சி உண்டானது! மதுரையைப் பத்தி பெருமை பேச வைகை இல்லாட்டி அவ்வளவு தான், அது மாதிரி திருச்சி, தஞ்சைக்கு காவரி இல்லேன்னா மதிப்பில்லை! டில்லியிலே ஷாஜஹான் ஆட்சி புரிஞ்சி சரித்திரம் பேச யமுனை இல்லையின்னா ஒன்னுமில்லை (என்னா ஒன்னு எழவு, சென்னை ஒன்னு தான் கொஞ்ச நஞ்சம் ஏரியை வச்சி வசிச்ச அந்த காலப்பகுதி,ஆங்கிலேயன் வந்து சும்மா ஒண்டிக்க தோதுவா இருக்கட்டுமுன்னு கடலோரப் பகுதியிலே, அடிச்சி விரட்டினா ஓடிட தோதுவா இருக்குமுன்னு நிர்மானிச்ச நகரம், இப்ப அது வளர்ந்து தலைநகராகி, நம்ம எல்லாரும் அந்த ஊரை பாக்க போயி செம்பரைபாக்கம் தண்ணி குடிச்சு வளர வேண்டியதா போச்சு, தாமிரபரணி, சிறுவானி தண்ணிக்குடிச்சு வளர்ந்த கதையை பெருமை பேசினாலும் கடைசியிலே எழவு கூவத்திலே குப்பைக் கொட்ட வேண்டியதா இருக்கு! ஆக சிங்காரச் சென்னை வளர்ந்த நாகரீக கதை இந்த கோணாலா இருக்கு, அதனால தான் இந்த தண்ணி கஷ்டத்திலே முதலிடம் வகிக்குது!)

ஆனா இந்த 21ம் நூற்றாண்டிலே எந்த ஒரு நதி மட்டும் இது போன்ற பெரும் நகர தண்ணீர் பிரச்சனையை தீர்க்கப்போறதில்லை! ஒன்னரை கோடி மக்கள் கொண்ட டில்லிக்கு தேவை 350 கோடி லிட்டர் தண்ணிர், ஆனா அதில டில்லி ஜல்போர்ட் சப்ளே பண்றது வெறும் 250 கோடி லிட்டர் தண்ணி தான், அதிலே மூணுல ஒரு பங்கு வர்ற வழியிலேயே கசிஞ்சி காணம போயிடும், அங்கங்க பொத்துக்கிட்டிருக்க பைப்பில்லேயும், சரியா மெயிண்டனென்ஸ் இல்லாம இருக்கும் பம்பிங் ஸ்டேஷன்ல பீச்சிக்கிட்டிருக்கிற தண்ணியிலே போய் சேர்ந்திடும், அப்பறம் மிச்ச சொச்சம் வர்ற தண்ணியை உறிஞ்சி கொள்ளை அடிக்கிற கும்பலு, அதை எடுத்து வித்து காசாக்கும், அதுவும் பைப்பு போடாத சேரியிலே இருக்கிற மக்களுக்கு வித்து, கடைசியிலே அதைத்தான் இந்த சேரி ஜனங்க வாங்கி குடிக்கணும்! (இந்த சேரிங்கிறது, அனுமதி பெறாத வரிகட்டாத குடியிருப்பு, அதனால பைப்புல தண்ணி அவங்களுக்கு போகாது, லாரியில தான் போகும்!) இந்த கணக்கு வெறும் டில்லிக்கு மட்டுமில்லை, அநேகமா எல்லா பெரிய இந்திய நகரங்களுக்கும் தான்!

சரி வேண்டிய தண்ணி நதிகள்ல இருந்து வர்றலேன்னு நிலத்தில தோண்டத்தான் வேணும்! அப்படி தோண்டி தோண்டி இப்ப கதை கந்தலாகிற நிலமைக்கு வந்திடுச்சி! அதுவும் விவசாயத்துக்குன்னு நாம தோண்டி தோண்டி பண்ணிய பசுமை புரட்சி நிலமை இப்ப எப்படி இருக்குன்னா, எலி வருத்து திங்க வேண்டிய நிலமையிலேயும், பசி பட்டினியால விவசாய குடும்பங்கள் சாகவும் காரணமா இருக்கு, ஏன்னா தண்ணி இல்லை! 20 லட்ச கிணறுங்க இந்தியாவிலே ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னே இருந்தது, அதுவே இப்ப 23 கோடிக்கிணறுகள் இருக்கிறதா ஒரு கணக்கு சொல்லுது! இப்படியே வளரும் ஜனத்தொகைக்கு, தோண்ட தோண்ட கடைசியிலே உப்புத் தண்ணியும், கல்லுக்கிடையிலே இருக்கிற விஷத்தண்ணியும் வந்து ரொம்ப நாளாகுது! கடைசியிலே அந்த எல்லாகிணறும் உபயோகமில்லாம போயி குட்டிச்சுவராயி, விவாசியிங்க, 'எங்கிணத்து தண்ணியை நீ எடுத்தே உங்கிணத்து தண்ணியை நான் எடுத்தேனு' சண்டைப்போட்டு, கடைசியிலே வரப்புக்கு வரப்பு ஆரம்பிச்ச சண்டை, கிராமத்துக்கு கிராமமாகி, ஊருக்கு ஊருக்காகி, இப்ப மாநிலத்துக்கு மாநிலம் தண்ணிக்கு சண்டைப்போட்டு, நம்ம பத்திரிக்கைங்க அதை சென்ஷேசனலாக்கி கதை பண்ணி விவசாயி பட்டினிச்சாவு தான் பெரிசா வந்துக்கிட்டிருக்கு!

சரி இந்த கதை நமக்கெதுக்குன்னு இருக்க முடியுமா! அதான் நாமதான் நம்ம ஐடியிலேயும் மத்த தொழில் புரட்சியிலேயும் பெருமை பேசி, நாடு வளரும் கதை சொல்லிக்கிட்டிருக்குமே, இதிலே இந்த கதை என்னத்துக்கு, எப்ப நம்ம சந்திரமண்டலத்துக்கு போப்போறமுன்னு சொல்லு கேட்கிறோம் அதை விட்டுட்டு தண்ணிக்கதை பேச வந்திட்டன்னு நீங்க கோபப்படரது தெரியுது, இந்த அசுர வளர்ச்சி தான்யா இந்த கிளி கொடுக்குது! ஏன்ன, இந்த விஞ்ஞான வளர்ச்சிக்கொண்ட இந்த 21ம் நூற்றாண்டிலே, எந்த விஞ்ஞானமும் மனித குல மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் தூய்மையான தண்ணீர் கிடைக்க வழிபண்ணிக்கொடுக்கிலேங்கிறது தான் இங்கே நிதர்ஷன உண்மை! வளர்ந்த நாடுகள்ல, இந்த தண்ணியிலே வர்ற வியாதியான காலரா, டைஃபாய்ட், மலேரியாங்கிற வார்த்தையே கிடையாது! எல்லாம் மறைஞ்சு ரொம்ப நாளாச்சு! ஏன்னா ஒழுங்கா அமைக்கப்பட்ட சாக்கடை, கழிவு சுத்தப்படுத்தும் வசதிகளும், சுத்தமான தண்ணீர் கிடைக்க பெற்று வாழும் மக்களின் நிலை செஞ்சுகாட்டாத ஒன்னை எந்த மருத்தவ முன்னேற்றமும் கண்டுபிடிக்கலங்கிறது தான் உண்மை! அது நமக்கு வர இன்னும் எத்தனை காலம் காத்து இருக்க போகிறோங்கிறது தான் இப்ப கேள்வி!

ஆக சுத்தமான தண்ணீர் மனித குல வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அங்கம்! இந்த அசுர விஞ்ஞான வளர்ச்சியால உண்டான நீர்பாசன வளர்ச்சி, மற்றும் நீர் தேக்கங்கள், நீர்பங்கீட்டு விநியோகத்தாலே விவசாய வளர்ச்சியும் பசுமை புரட்சியும் அடைஞ்சு அதனால வளர்ந்த பயிர்கள் இன்னனக்கு பூமியிலே இருக்கிற மொத்த மனித ஜாதிக்கும் சோறு போடுது! ஆனா இவ்வளவு இருந்தும், சுத்தமான தண்ணீர் மற்றும் சாக்கடை, கழிவு அகற்றி சுத்தமான சுகாதார முறையிலே இரண்டாயிர வருஷத்துக்கு முன்னே வாழ்ந்த மனிதகுலத்துக்கு கிடைச்ச வசதி, நாகரீக வாழ்க்கை, பஞ்சம், நோய் நொடி இல்லாம வாழ்ந்த வாழ்க்கை, இப்ப நமக்கு கிடைக்கிலேங்கிறது தான் மறுக்க முடியாத உண்மை, நூறு கோடிக்கும் மேலே சுத்தமான குடி தண்ணீருக்கு வழி இல்லை! இன்னைக்கு பாதிக்கு மேலே ஆஸ்பத்திரி படுக்கையிலே படுத்து கிடப்பது இந்த அசுத்த தண்ணீர் வழி வரும் வியாதியால! கடந்த பத்து வருஷமா வயித்து கடுப்பால செத்து போன குழந்தைங்க, இரண்டாம் உலகப்போரினால் அழிந்தவர்களை விட அதிகம் தெரியுமா! சுத்தமான தண்ணீர் கிடைக்க பெறுவதால் இன்னனக்கு 20 லட்சம் பேரை சாவின்பிடியிலருந்து மீட்கலாம் அது தெரியுமா உங்களுக்கு? யமுனையிலே கலக்கும் கழிவாலே உண்டாகும் பாக்டீரியாவின் அளவு ஆயிரமடங்காயிருக்கு இந்த பத்து வருஷத்திலே, அது தெரியுமா உங்களுக்கு, அது மாதிரி பங்களாதேஷ் நாட்ல, ஒரு பள்ளிகூடத்திலே பிரத்தியோகம ஒரு டாயலட் கட்டி போட்டா, அதுக்காக வந்து சேரும் பெண்பிள்ளைகளின் பதிவு பதினைஞ்சு சதவீதமா உயர்ந்த கதைத் தெரியுமா உங்களுக்கு! இந்த சுத்தமான தண்ணீர், சுகாதரா சூழ்நிலை உருவாக்கி மக்கள் நல்லா வாழணும்னு ஐக்கிய நாடுகள் கொண்டு வந்த திட்டம் தான் "Water for Life", ஆக இன்னைக்கு உலகத்தை ஆட்டுவிக்கும் முக்கியப்பிரச்சனை இந்த தண்ணீர் தான், அதுக்கு தான் இத்தனை கதையும் இப்ப புரிஞ்சுதா, நான் ஏன் இந்த கதை பேச வந்தேன்னு!

இதுக்கு எல்லாம் காரணம் நாம தண்ணியை "taken for granted"ன்னு எடுத்துக்கிட்டது தான், அது விலை மதிக்க முடியாத பொருள்னு நமக்கு தெரியாதாலே! எப்படின்னு கேளுங்க! பூமியிலே இருக்கும் நீர்நிலையிலே 97 சதவீதம் நமக்கு பிரயோசனமில்லை! எப்படின்னு கேளுங்க! எல்லாம் உப்புத்தண்ணீர்! குடிக்கக்கூடிய சுத்தமான தண்ணீர் 3 சதவீதம், அதுவும் பனிமலைகள்ல 2 சதவீதம் போக மீதம் தான் நமக்கு! இதை இப்படி கற்பனை பண்ணி பாருங்க, ஒரு பக்கெட்டு தண்ணி கடல் தண்ணின்னா, ஒரு காப்பி கப்பு அளவிலே தான் நல்லத்தண்ணி, அதுவும் நான் சொன்ன பனி மலைகள்ல தான் அதுவும் இருக்கு! நமக்கு குடிக்க, உபயோகிக்கன்னு இருக்கிறது ஒரு ட்யூஸ்பூன் தண்ணி தான், அதனால தான் தண்ணிர்ங்கிறது விலைமதிக்க முடியாத ஒன்னு! ஆனா நமக்கு தெரிஞ்சதெல்லாம் வேறகதை!

சரி பல நூறு கோடி வருஷத்துக்கு முன்னே டைனோஷர்கள் எல்லாம் குடிச்சி வாழ்ந்த தண்ணியைத்தானே நாம குடிக்கிறோம், இது என்னா அழியப்போறா ஒன்னான்னு நீங்க கேட்பீங்க. சரி தான், பூமிக்கு அடியிலே கிடைக்கிற கருப்பு தங்கம் மாதிரியா இது எடுத்து உபயோகிச்சு முடிஞ்சு போறதுக்கு! ஆக இந்த பிரச்சனை நாமலே உருவாகிக்கிட்டது தான்! ஏன்னா தண்ணியை தண்ணியா செலவளிச்சதாலே, அதுக்கு மதிப்பு கொடுக்காததாலே! நான் எதுக்கு தண்ணிக்கு வரி கட்டனும், இல்ல நிலத்தடி நீரை இறைக்க தேவையான மின்சாரத்துக்கு பணம் கட்டனும்னு யோசிச்சதாலதான்! மேற்கொண்டு தண்ணியை வீனா செலவு பண்றதாலே, அது தெரியுமா! இன்னைக்கு சைனாக்காரன் நாப்பாதாயிரம் கிலே அரிசி தானியம் விளையவைக்கும் நிலத்திலே எடுத்துக்கிற தண்ணிக்கு, நாம அதே அளவு நிலத்திலே விளையவைக்கும் தானியம் வெறும் பதினாராயிரம் கிலே தான், ஆனா அதுக்கு பாச்சும் தண்ணீர் இரண்டு பங்கு! மேற்கொண்டு நம்மளோட விவசாய கொள்கையும் அதிகம் தண்ணி குடிக்கும் தானியங்களை விளைவிக்க துரிதபடுத்துவதாலே, ஏன்னா அதுக்கு கொள்விலை அதிகம்ங்கிறதாலே அதிலே போய் எல்லா விவசாயிகளும் விழுறாங்க, இது மாதிரி நாம் சொல்லிக்கிட்டே போகலாம்! எல்லாத்துக்குமே காரணம் நாம தான்!

அதுவுமில்லாம தண்ணீர் செலவளிவது அதிகம் விவசாயத்துக்கு தான்! ஆனா அதுக்கு உண்டான வருமானம் அரசாங்கத்துக்கு கிடைக்குதான்னு அதான் இல்லை நீங்க நினைக்கிற மாதிரி தொழில் துறை நிறுவனங்கள் அதிகம் செலவளிப்பதில்லை! ஆனா ஒழுங்கா வரி வட்டி வாங்க அங்க தான் போவாங்க நம்ம அரசாங்கம், ஏன்னா தண்ணியும் மின்சாரமும் இலவசமா கொடுத்தாகனும்னு ஒரு எழுதப்படா சட்டமிருக்கு! அதுக்கு காசு வாங்க ஆசைப்பட்டா அடுத்த ஆட்சி உங்களுதில்லை! இதனாலே எந்த வருமானமில்லை அரசாங்கத்து, கடைசியிலே கஷ்டபடறது ஏழை தான்!

நீங்க எத்தனை பேரு இந்தியிலே வந்த 'சுவதேஷ்'ங்கிற படம் பாத்தீங்கன்னு எனக்கு தெரியாது! அதிலே ஷாருக்கான், நாஸாவிலே செஞ்ச வேலையை விட்டுட்டு இந்தியாவிலே டில்லிக்கு பக்கத்திலே இருக்கிற கிராமத்துக்கு போய் அந்த கிராம மக்களோட சேர்ந்து பம்பு செட்டு போட்டு தண்ணீர் கொண்டு வந்து சுபிட்சமாக்குவாரு! அதிலே சில கிராமாத்தாங்க கேள்வி கேட்பாங்க, அமெரிக்கா எப்படி இப்படி பணக்கார நாடா இருக்குன்னு, அதுக்கு அந்த நாட்டின் வளங்கள் பத்தி சொல்லுவாரு, ஆனா அதுமட்டுமில்லை, இங்கே இருக்கும் மற்ற தொழில் முன்னேற்றங்கள், விஞ்ஞான வசதிகள், டிரிப் இரிகேஷன்னுட்டு அவங்க திராட்சை தோட்டத்துல விளச்சல் அமோகம் மூணுபங்காகி இருக்கு, அவங்க பண்ணுன நாப்பது வருஷ விவசாயத்துக்கு முன்னே, அதுக்கு செலவளிக்கும் தண்ணீர் நாப்பது வருஷத்துக்கு முன்னே செலவளிச்ச பங்குல ஒரு கால் பகுதி தான், தண்ணியை விரயம் பண்ணாம, அழகா சாகுபடி செஞ்சு அவங்க அடைஞ்ச முன்னேற்றம் தான்! இந்த ஊர்ல இருக்கும் அத்தனை வளங்களும் நம்மக்கிட்டையும் இருக்கு, ஆனா அதை நாம முறைப்படி ஒழுங்கா உபயோகிச்சு அபிவிருத்தி வழிகள்ல ஈடுபடுகிறோமான்னா, அதான் இல்லை!

நம்ம நாட்ல நல்ல பல திட்டங்கள் போடுறோம், அதை எப்படி நிறைவேற்றுகிறோம் என்பதை பொறுத்து இருக்கு! சுனிதா நாரயன்னு ஒரு அம்மனி, உங்களுக்கு எத்தனை பேருக்குத் தெரியுமோ! 'Center for Sceince and Environment'ங்கிற நிறுவனத்தின் இயக்குநர், அவங்க இந்த நீர் சேகரிப்பு திட்டங்களை சரியாக செயல் படுத்தி வருவதற்காக போன வருஷம் சுவீடன் நாட்ல 'water Prize' வாங்கினவங்க! அவங்க சொல்றாங்க, நாம கொஞ்சம் கொஞ்சமா அமெரிக்கா மாதிரி ஆயிக்கிட்டிருக்கோம்,ஃபாஸ்ட் புட்ன்னு அது இதுன்னு போயிக்கிட்டிருக்கோம், வழி வழியா நம் உண்டு களித்த தானிய வகை உணவுகளை விட்டுட்டு பர்கர், பிஸான்னு இறங்கி இறச்சி சாப்பிட ஆரம்பிச்சிட்டோம். ஏற்கனவே மனுஷங்களுக்கு உணவாகும் தானிய வகைகளை விளைவிக்க தண்ணீர் விரயம் செஞ்சுக்கிட்டிருக்கோம், இப்ப இந்த அமெரிக்கா மாதிரி உணவு வகைகளை சாப்பிட தொடங்கி, அதுக்கு தேவையான ஆடு மாடுகளுக்கு தேவையான தானியங்களுக்கும் தண்ணி இரச்சு ஊத்தி விரயம் பண்ணி தண்ணி பஞ்சத்தை இன்னும் அதிகம் தான் ஆக்க போகிறோமுன்னு!

அது மாதிரி அலுவாலியான்னு நம்ம பிளானிங் கமிஷன் சேர்மென், அவருக்கு இருக்கு ஆதங்கம் தண்ணிக்கு விலை கொடுக்காத வரை, இந்த கஷ்டம் தீர போறதில்லைன்னு! ஆனா இதுக்கு மணி அடிக்க எந்த அரசியல் வதியும் வரப்போறதில்லை, ஆனா தண்ணிக்கு விலை கொடுக்காம விரயமா விவசாயிகள் விவசாயம் செய்யும் வரை ஒன்னும் பண்ண முடியாது!

அடுத்த நீர்பாசனத்திட்டம், நீர் தேக்க திட்டங்கள், இது எல்லாம் அரசியல் புகுந்து விளையாடி குட்டிச்சுவராக்கிக்கிட்டு இருக்கு! பெரிய பெரிய அணைத் திட்டங்கள் அம்பேல்! அதுனால வரக்கூடிய விளைவுகள் ஒருபக்கம் இருந்தாலும், அதுக்கு இடம் பெயரும் ஏழைபாளைகள் அநீதின்னு இன்னொரு பக்கமிருந்தாலும் (எல்லாமே அரசியல், ஏமாற்று வேலை தான்!), இந்த அணைத்திட்டங்கள், நீர் விநியோகம் மனித வளர்ச்சிக்கு ரொம்பவும் முக்கியமானது,ஆனா எல்லாத்திலேயும் அரசியல், போராட்டம், இதுக்கு விளம்பரம் தேடும் கூட்டமுன்னு இருக்கிற வரை அடிப்படை ஏழைகள் தண்ணீரால கஷ்டப்பட வேண்டியதுதான்!

விவசாய திட்டங்கள், பாலிஸி எல்லாம் புது கண்ணோட்டத்திலே நாம அனுகி வளர்ந்தா உண்டு, இல்லை இந்த தண்ணிப்பிரச்சனை ஒரு பூதகரமான ஒன்னா வரப்போறதில்லை எந்த சந்தேகமும் இல்லை. அடுத்து நமக்கு நாமே தண்ணீர் சேகரிப்பு திட்டங்களை உண்டாக்கி, அதற்கான முயற்சியிலே ஈடுபடணும்! கொஞ்ச நாள் முன்னே சென்னையிலே கட்டிட பில்டிங் எல்லாம், நீர் சேகரிப்பு ('Water Harvesting facility') வசதி இல்லாம கட்டிட அனுமதி இல்லேன்னு வந்த சட்ட திட்டம் நல்லது தான்! இல்லேன்னா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன், பக்கத்திலே இருக்கிற காஞ்சிபுரத்திலேருந்து சுத்துப்பட்டு ஊர்ங்க பக்கத்திலே இருக்கிற விவசாயிங்க விவசாயத்தை விட்டுட்டு, விவசாயத்திலே காசு சம்பாரிச்சதை விட தங்களோட கிணத்திலே தண்ணீயை இறைச்சு லாரியிலே அனுப்பி சென்னையிலே விநியோகம் பண்ணி காச சம்பாரிச்சதுதான் அதிகம்! அப்புறம் அவங்க கிணறு வறண்டு எலியை புடிச்சு தான் திங்க வேண்டியிருக்கும்!

எதுக்கு இவ்வளவு பெரிய பதிவுன்னு கேட்கிறீங்களா, போன தடவை ஊருக்கு போயிருந்தப்ப லாரியிலே, ஆட்டோவிலே பின்னாடி எழுதி இருந்த வாசகம் என்னை ரொம்ப கவர்ந்தது, அதான் 'மழை நீர் சேகரிப்போம்'ன்னு, சரி இந்த தண்ணீர் பிரச்சனை என்னதான்னு ஆராயப்போக, கடைசியிலே இதுல இவ்வளவு வில்லங்கம் இருக்கிறது தெரிஞ்சது, சரி இனிமே தண்ணியை தண்ணியா செலவு பண்ணாதீங்க, வர்றட்டா...!

Sunday, November 19, 2006

ராஜாவின் ராஜாங்கம்!

நேத்து இளையராஜா பாட்டுக்கச்சேரி கேசட் ஒன்னு கிடைச்சது, போட்டு வீடியோ பார்த்தப்ப, ஒரே மலைப்பு! அவரு ஆரம்பத்திலே வந்தப்ப, போட்ட பாடல்கள்ல இருந்த குதுகூலம் மாதிரி, இன்னைக்கும் மேடையிலே ஏறி ஒரே பாடலுக்கு பல ராகங்களை பாடி காட்டறப்ப அதே குதுகூலம் அவரிடம் தென்பட்டது. நம்முடைய இளவயது ஞாபகங்கள், நிகழ்ச்சிகள் எப்படி மனசிலே மறக்க முடியாம இருக்கோ, அதே மாதிரி இந்த ராஜாவோட அந்த காலப் பாடல்கள் கேட்ட மாத்திரத்திலே அதோட ஒட்டி நிகழ்ந்த நிகழ்வுகளை மனக்கண் முன்னே அப்படியே சட்டுன்னு கொண்டு வந்து நிறுத்தும்! அவருடய பாடல்கள்ல அப்படி ஒரு தாக்கம் இருந்தது.

அதாவது 74 இல்லை 75ன்னு நினைக்கிறேன், இளையராஜா அறிமுகமாகி, முதப்படமான அன்னக்கிளி பாட்டுகள் வந்து பட்டையை கிளப்பிக்கிட்டிருந்த நேரம் அது! அதுவரை ஒரு மூணு, நாளு வருஷம் இந்தி பாடல்கள் தமிழ் நாடு முழுக்க சக்கை போடு போட்டுக்கிட்டிருந்த நேரம், எம் எஸ்வி அண்ணே, மெல்லிசையை கொஞ்ச மறந்துருந்த நேரம், அதே ஸ்டைலுல, ஒரே மாதிரி ஸ்டிரியோ டைப்பிலே பாட்டு போட்டுக்கிட்டு, பின்னாடி டாங்கோ பீட்டுலயே எல்லா தமிழ் பாட்டுகளும் வந்து போரடிச்சிக்கிட்டிருந்த நேரம்(அப்புறம் இளையராஜா பாட்டை கேட்டு கொஞ்சம் துள்ளலோட நிறைய ம்யூசிக் போட்டாரு எம் எஸ் வி அண்ணே, பிறகு வந்த நினைத்தாலே இனிக்கும், சிம்லா ஸ்பெஷல் மாதிரி சில படங்களுக்கு, சும்மா நச்சின்னு அடிச்சி பட்டையை கிளப்புனாறு, அது வேறே விஷயம், சம்போ.. சிவசம்போ!), கொஞ்சம் இனிமையா ஹிந்தி பாடல்கள், பாபி, கபி கபி, ரோட்டி கபடா ஒவுர் மக்கான், ஷோலே, டான், அமர் அக்பர் ஆண்டோனி, அப்படின்னு ஆக்ஷன் பட்ங்களும் காதல் படங்களுமா வந்து படங்களும் தாக்கத்தை உண்டு பண்ணுச்சி, பாடல்களும் தான். அதுக்கு முன்னே, ஒரு பத்து வருஷ முன்னே தான் ஹிந்தியே இந்த பக்கம் மூச்சுக் காட்டக் கூடாதுன்னு ரொம்ப ஆக்ரோஷமா தினா, முனா, கானா ஆளுங்க போட்ட சத்தம் கொஞ்சம் ஓஞ்ச நேரத்திலே, சத்தம் போடமா இப்படி ஹிந்திப் பாடல்கள் தமிழ் நாட்டு மக்கள்கள் கிட்டே வந்து சந்து பாடிகிட்டு இருந்த நேரம்! அப்படியே உட்டுருந்த, இப்பவும் தமிழ்நாட்ல பாதி தியேட்டருக்கு மேலே ஹிந்தி படம் தான் ஓடிக்கிட்டிருக்கும், பெங்களூர், ஹைதராபாத் மாதிரி, ஆனா, அதை அப்படி வராம தடுத்து தனிமனுஷனா தன்னுடய இசையாலே எல்லாத்தையும் வடக்கு பக்கம் ஓட வச்சது அப்ப நம்ம ராஜா தான்!

நான் ஏற்கனவே எனை ஆண்ட அரிதாரம்-ஆறாம் பகுதியிலே எழுதின மாதிரி, அந்த காலகட்டங்கள், அதாவது, அந்த காலக்கட்டங்கள்னு நான் சொல்றது 1978, 79 கள், அப்பதான் ரஜினிங்கிற காந்தம் கொஞ்ச கொஞ்சமா புயலாயிகிட்டு இருந்த நேரம். வில்லன்லருந்து புரமோஷன் ஆயி பைரவியில ஹீரோவாயிருந்த நேரம். பாரதிராஜா, எங்க கிராமத்து படம் தான் இவனுக்கு எடுக்கத்தெரியும்னு முத்திரை குத்திருவாங்களோன்னு பயந்து சிகப்பு ரோஜக்களை எடுத்து விட்டருந்த நேரம். பிறகு அதிலேயும் கிராம உபக்கதையை தான் நல்லா காட்டிருந்தாரு, அதுலாதான் அவரு டச் இருக்கு, மத்ததெல்லாம் இங்கிலீஷ் பட காப்பி அப்படின்னு சரியா ஒத்துக்காததால திரும்ப கிராமம் போயி புதிய வார்ப்புகள் எடுத்திருந்த நேரம். பாலசந்தர் பெண்களை மையமா வச்சி வரிசையா அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், நிழல் நிஜமாகிறதுன்னு அரங்கேற்ற தொடக்கத்தை தொடர்ந்த நேரம் அப்பறம் எல்லாரும் வெளி நாடு போய் படம் பிடிக்க போட்டி போட்டு, நினைத்தாலே இனிக்கும், ப்ரியான்னு வந்திருந்த நேரம். ஸ்ரீதர் மாதிரி ஆளுங்க புதுசா ஆடிக்கிட்டு இருந்த ரஜினி கமல் ஆடுபுலி ஆட்டத்தை பார்த்துட்டு இளமை சொட்ட இளமை உஞ்சலாடுகிறதுன்னு எடுத்திட்டு, பிறகு அவர் பானியிலே அழகை ஆராதிக்க போயிருந்த நேரம். இளையராஜா தான் அந்த காலக்கட்டத்தில வந்த படங்கள் அத்தனைக்கும் ம்யூசிக் போட்டு அசத்திக்கிட்டு இருந்தப்ப, சிவாஜி படங்களூம் அவரு ம்யூசிக்ல பழைய டிஎம்ஸ்ச பாடவச்சி அற்புதம்மா நான் வாழவப்பேன், தீபம், தியாகம், கவரிமான், பூந்தளிர்ன்னு பாட்டுகள் பட்டைய கிளப்பிக் கொண்டிருந்த நேரம் அது!

இந்த காலகட்டங்கள்ல அவரு அமைச்ச ராகங்கள் தாளங்கள் அப்படியே ஒரு சுகம் கேட்கறதுக்கு, அதிலேயும் சில ம்யீசிக்கல் இன்ஸ்ட்ருமெண்டு இந்த மாதிரி காட்சிகளுக்குத்தான்னு சட்டமா இருந்த நேரம் அப்ப, ஆனா ராஜாதான் அதை வேறே மாதிரி கையாண்டு அதிலே ராகம் காட்டி கிராமங்கள்ன்னா, நகர வாழ்க்கை வாழ்ந்தவங்களுக்கு, அந்த பேக்ரவுண்டு ம்யூசிக்ல பச்சை வரப்பு, புல்வெளி, நீர் நிலை, ஓடைகளை பார்த்தா தான் கிராமமா தோணும், அதாவது அந்த இசை சப்தம் ஆட்டோமேட்டிக்கா காதிலே ரீங்காரமிடும்!

முக்கியமா நான் சொல்ல வேண்டிய இன்ஸ்ட்ரூமெண்ட், ஷெனாய், இது வடக்கத்திய வாத்தியம், ஆனா தமிழ் பாடல்கள்ல ஒரு புது வடிவம் கொடுத்து, அதை திரையிலே வரவைக்கும் பொழுது ஸ்லோமேஷன்ல காமிச்சு, நம்மலை கிளு கிளுப்பாக்கி விட்டதுல பெரும் பங்கு இளையராஜாவுக்கும், பாரதிராஜாவுக்கும் உண்டு. அதே மாதிரி காதலை எப்படி இந்த வாத்தியத்தாலே இசைமைச்சு சொன்னாரோ, அப்படி காமிடி பண்ணவும், கிண்டல் பண்ணவும் இந்த வாத்தியத்தை அதிகம் உபயோகிச்சிருப்பாரு, நம்ம ராஜா! மத்த எல்லா இசையமைப்பாளர்களும் சோகத்துக்குன்னு அங்கொன்னு, இங்கொன்னுன்னு உபயோகிப்பாங்க, ஆனா அந்த சோகத்தையும் அழகா சொல்ல இந்த ஷெனாய் தான் உபயோகிச்சாரு நம்ம ராஜா எல்லா படங்கள்லயும்! கொஞ்சம் உத்து கவனிச்சி பார்த்தீங்கன்னா தெரியும், அதுவும் 16 வயதினிலே, ரோசாப்பூ ரவிக்கைக்காரி மாதிரி படங்களை கொஞ்சம் மனசை செலுத்தி பாருங்கப் புரியும், இந்த ஷெனாயோட மகிமை!

அடுத்து, புல்லாங்குழல், இதை வச்சி அவரு பண்ணாத அட்டகாசமே இல்லை,அத்தனை ராகத்தையும் கொண்டு வந்தாரு! கிராமத்து சப்த சங்கதி இப்படிதான்னு சொன்னது புல்லாங்குழல் தான்! ஆக புது புது மெலேடி பாட்டுகளுக்கு அவருடைய தனி முத்திரையை குத்தினாரு. கண்ட கருமாந்திரங்க நடிச்சிருந்தாலும், இவரு பாட்டுக்குன்னே அதிக நாட்கள் ஓடிய படங்கள் எத்தனையோ! ஏன் நம்ம ராமராஜன் ஒரு வெற்றி ஹீரோவா வலம் வந்ததுக்கு முக்காவாசி காரணம் இளையராஜா தான், அதே மாதிரி என்ன மந்திரம் பண்ணுவாரோ தெரியாது, ராஜ்கிரண் படத்துக்குன்னு தனி அம்சமா இவரு ம்யூசிக்கு வரும்!

அது மட்டுமில்லை அத்தனை ராகங்களும் அவருடய பாட்டிலே பேஸ் பண்ணி இருக்கும், இது பத்தி நிறைய இசை விற்பண்ணர்கள் நிறைய எழுதி இருக்காங்க, வேணும்னா இணயத்திலே தேடி படிச்சி பாருங்க! ஏன் சிந்து பைரவி படத்திலே 'மரி மரி நின்னே' பாட்டை 'பாடறியேன் படிப்பறியேனா'க்கி எப்படி கர்நாடகத்தையும் நம்ம தெம்மாங்கோட கலந்தடிச்சாரு! அப்புறம் அவருக்கே உண்டானக் குரல், ஆரமபத்திலே வெறும் டைட்டில் சாங்ன்னு ஆரம்பச்சி(இவரு டைட்டில் சாங் பாடுனா, படம் நூறு நாள்ங்கிற ஹோஸ்யம் சினிமாக்காரங்க மத்தியிலே உண்டு, அதை அருமையா பாடி காட்டியிருப்பாரு ஆண்பாவம் படத்திலே!), பின்னே சோகம் மட்டும் பாடி, அப்பறம் காதல், ஜனனின்னு பக்தி பரவசப்படுத்தி, மற்றும் வாடி எங்கப்பங்கிழங்கேன்னு ரவுசு பண்ணி, நிலாவை கையிலே புடிச்சியும் ஓடத்து மேலே பாத்தும், இருக்கிற அனைத்து காட்சிக்கும் பாடி, இன்னைக்கு அவருடய தனிப்பாடல்களை கேட்டுக்கிட்டே இருக்கலாம், அத்தனையும் தேன்!

இப்படி தனி மனிதனா ஒன்மேன் ஷோ நடத்தின இந்த கச்சேரியை கேசட்ல பார்க்க நேர்ந்து, அதிலே எப்படி எல்லாம் ட்யூன் போடுவாருன்னு விவரமா சொல்லி, அதுவும் அவசரம் அவசரமா அப்ப அவரு போட்ட ட்யூன்ங்கள் எல்லாம் அந்த காலத்திலே சூப்பர் டூப்பர் ஹிட், அந்த வீடியோ கிளிப்பை பாருங்க, உங்களுக்கே தெரியும்!



அபஸ்வரம் ராம்ஜி கேட்ட கேள்விக்கு, 'எப்படி வேறு மாதிரி ஒரே பாட்டுக்கு ட்யூன் போடுவீங்கன்னு' கேட்டப்ப, அதை வேற வேற ட்யூன்ல அசத்திக்காட்டி, கடைசியிலே இந்த காலகட்டத்துக்கு தகுந்த மாதிரி அவரு புள்ள யுவன் ஷங்கர் ராஜா அவரு இசை அமைச்ச ஒரு பழைய பாடலுக்கு இப்ப ட்யூன் போட்டா எப்படின்னு பாடிக்காட்டி, ஒரே வேடிக்கை தான் போங்க! என்ன இருந்தாலும் ராஜாவின் ராஜாங்கம் இன்னைக்கும் நடந்துக்கிட்டு இருக்கு, வெறும் சினிமான்னு இல்லாம தேவாரம், திருவாசகம்னு நிறைய தமிழை பாட்டாலே தமிழர்களுக்கு சொல்லி காமிக்கிறாரு! அவரு ராஜாப் பாட்டை தான் போங்க, இருந்தாலும் இப்ப என்னமோ பெரியர் படத்துக்கு ம்யூசிக் போட மறுத்துட்டாருன்னு ஒரே அரசியல் சாக்கடையா இருந்துக்கிட்டிருக்கு! நம்ம நல்ல இசைகளை ரசிக்கிறதோட சரி, போட்டா கேட்கிறதோட சரி, இந்த படத்துக்கு ஏன் போடலை, அந்த படத்துக்கு ம்யூசிக் ஏன் போடலைங்கிற விஷயங்கள்ல அவ்வளவு ஆர்வமில்லை, இதோ நான் ரசிச்ச அந்த விடியோ கிளிப்புகளை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

Friday, November 03, 2006

ரா..ரா...சரசுக்கு ரா..ரா- தமிழ் பாடும் சந்திரமுகி??

'ரா..ரா.. சரசுக்கு..ரா..ரா..' அப்படின்னு கண்ணு மையை மேலே கீழே அப்பிக்கிட்டு, சலங்கையை கட்டிக்கிட்டு தையதக்கான்னு பரதம் ஆடி முண்டைகண்ணி முழியை உருட்டி ஆடிஅமர்க்களப்படுத்தி, அப்பறம் நம்ம தலைவரு வேறே 'லக்க..லக்க..லக்க..லக்க..லக்க'ன்னு ஒரே சவுண்டு விட்டுக்கிட்டு, இது பத்தாதுன்னு 'என்ன கொடுமை இது சரவணன்' அப்படின்னு நம்ம இளையத்திலகம் லந்து பண்ணிக்கிட்டு, அதுக்கும் மேலே ஒரு படி போய், நம்ம ஊரு ஜனங்க இந்த படத்தை ஒரு ஐந்நூறு நாளைக்கு மேலே ஓட்டி, ஒரே கொடுமைப்போங்க! (இதுக்கு மேலே ஏதாவது
சொன்னா ரஜினி ரசிகர் கும்பலு அடிக்க வந்துடுவாங்க! ஏன்ன அவங்க பூஜிக்கிறதே இந்த படத்தை தான், இதோ சுட்டி, போய் பாருங்க! ஏன்னா 'சிவாஜி' வர இன்னும் எத்தனை நாளு ஆகுமோ, அது வரை வண்டியியை ஓட்டனுமே!) சரி வந்த விஷயத்துக்கு வருவோம்! இந்த 'Split personality', 'Multiple Personality' பத்தி எதாவது எழுதலாமுன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்ப தான் இரண்டு சம்பவம் நடந்துச்சு, ஒன்னு நம்ம கான பிரபா எழுதுன ஒரு பதிவு படிக்க நேர்ந்தது, இன்னொன்னு ஒரு மலையாளப்படம் பார்க்க நேர்ந்தது, என்னான்னு கதையை பார்ப்போம் வாங்க!

கான பிரபா எழுதுனாலும் எழுதுனார், ஒரு மலையாளப்படம் விமர்சனம் பத்தி, 'வடக்கும் நாதன்' என்ற படத்தை படத்தை பத்தி, அதுக்கு பின்னோட்டம் போட்ட மக்கள் இந்த மனபிராந்தியை, அதான் மனவியாதியை, உலகத்திலே உள்ள ஒட்டு மொத்த மனவியாதியையும் ஒரு லிஸ்ட் போட்டு, கேட்டா, Bipolar Disorder, ன்னும், இல்லை லிம்ஃபோசர்கோமா (lymphosarcoma) ன்னும் விவரிச்சு சொன்னோன்ன, அடடா, நம்ம சந்திரமுகியையும், அந்நியன் அம்பியையும் சொல்ல மறந்துட்டாங்களேன்னு நினைச்சப்ப, இந்த பதிவு உதயமாச்சு! இன்னொன்னு போனவாரம் ஃபாசில் டைரக்ட் பண்ண 'மணிசித்திரதாழ்'ன்னு ஒரு மலையாளப்படம், மோகன்லால், ஷோபனா நடிச்சப்படம் ஒன்னு பார்தேன், நம்ம தமிழ் சந்திரமுகியின் மூலம்! இங்கே நம்ம தெலுங்குக்காரி சந்திரமுகின்னா, அங்கே தமிழச்சி நாகவல்லி! கதையை உல்ட்டா பண்ண நம்ம வாசு மாதிரி ஆளுங்களுக்கு சொல்லியா கொடுக்கணும்! இந்த படத்தோட 'Core Theme' என்னான்னா 'Split Personality Syndrome'! சரி அதை விவரமா என்னான்னு பார்க்கலாமுன்னு தான் இந்த பதிவு!

சரி இந்த 'Split personality' இல்லை 'Multiple Personality' பத்தி என்னான்னு விளக்கம் கொடுக்கிறாங்கத் தெரியுமா? மொத்தித்திலே இது ஒரு மனவியாதி, அதாவது இதை 'Dissociative Identity Disorder'(DID) ன்னு சொல்லி, அதாவது மனசு தன் கட்டுபாட்டில் இல்லாமல், தான் யார் என்று தெரியாமல், தன்னையே மறந்து வேறு ஒரு நிலைக்குச்சென்று, தன்னுடய உணர்ச்சிகள், மனநினைவுகள், மற்றும் மனவெழுச்சி, உணர்ச்சி உத்வேகத்தால், தன்னுடய நிலை இழந்து, மற்றொரு தனிதன்மையை வந்தடையும் நிலை வருவது போன்ற ஒரு நோய்! (“A relatively rare dissociative disorder in which the usual integrity of the personality breaks down and two or more independent personalities emerge”.) சரி இது ஒரு விளக்கமுன்னா, இந்த மறை கழண்டு போய், குணசீலம், ஏர்வாடியிலே கொண்டி விடுவாங்களே, குணமாகட்டுமுன்னு, அதான் 'சேது' படக்கதையிலே வர்ற மாதிரியான நோயயை, என்னான்னு கூப்பிடறது! அதுக்கு ஆங்கிலத்திலே 'schizophrenia'ன்னுப் பேரு! அதாவது அதுவும் ஒரு வகையான 'Split personality' வகையை சேர்ந்த நோய் தான்! அதாவது 'Split personality', 'Multiple Personality' வந்த நோய்வாளர்களை விட இவங்க நிலமை மோசம், தன்னைத் தானே கட்டு கோப்பான மனநிலையில் வைத்துக்கொள்ள முடியாதவர்கள்! (Schizophrenic individuals, far from having split or multiple personalities, actually have a great struggle maintaining the coherence and integrity of even a single self.)

ஆக இந்த மாதிரி இந்த இரண்டு வகை நோய்யும் ஓன்னுக்கொன்னு சம்பந்தபட்டதுன்னு சொல்றாங்க, ஆனா சில பேர், இதுக்கும் அதுக்கும் ஒன்னும் சம்பந்தமில்லைன்னு சொல்லி, நிறைய எடுத்துக்காட்டுகளை சொல்றாங்க! அப்பறம் சில பேர் சொல்றாங்க, ஏன் நம்ம எல்லாருக்குமே இந்த ஒரு வியாதி உண்டு, அப்ப அப்ப நமக்குள்ள எட்டி பார்ப்பதுண்டுன்னு சொல்லி சில விளக்கம் கொடுக்கிறாங்க! இதை பத்தி சுஜாதாக்கூட அந்நியன் படம் வந்த புதுசுல எழுதி இருந்தாரு, அதாவது சாமி வந்து ஆடுறவங்க, குடிச்சிட்டு உலருறவன், எல்லாம் இந்த மாதிரி நோயின் வகையிலே உட்படுத்தபட்டவங்கதான்னு! இதை பத்தி என்னான்னு பீராயப்போயி நிறைய விளக்கங்கள் கிடைத்தது! (சும்மா, இந்த மாதிரி சினிமாவை பொழுது போக்கா பார்த்துட்டு போவேண்டியதுதானே, இதை பத்தி வேலை இல்லாம என்ன ஆராய்ச்சின்னு கேட்கிறவங்க, கீழே போய் வீடியோ கிளிப்ல தமிழ் சந்திரமுகி, தெலுங்கு சந்திரமுகி ஆட்டம் பார்த்துட்டு போயிடுங்க!)

நான் சின்னவயசிலே இந்த 'schizophrenia'ஆளை எங்க சொந்தத்தில்லேயே பார்த்திருக்கேன். எங்க பெரியம்மா வீட்ல இருந்த ஒரு அக்காவுக்கு இந்த மாதிரி ஏதோ செய்வினை செஞ்சு வச்சுட்டாங்கன்னு சொல்லி ஒரு ரூம்ல வச்சு, எப்பவுமே பூட்டி வச்சிருப்பாங்க, அதுவும் ரொம்ப 'wild'ஆ behave பண்ணும். எங்களை கண்டா எதையாவது தூக்கி அடிக்கும், எங்க அம்மா, இல்ல யாராவது புதுசா வந்தா கண்டபடி திட்டும், கேட்டா புத்தி சுவாதீனம் இல்லாம இருக்கு, அது அப்படிதாம்பாங்க! அப்ப ஒன்னும் புரியலை, இப்ப இந்த சப்ஜெக்ட்டை விளக்காமா பார்க்கும்போது பல உண்மைகள் புரிபடுது!(அப்புறம் அந்த அக்கா குணமாகி கல்யாணம் எல்லாம் ஆகி நல்லா இருக்காங்க அது வேறே விஷயம்!)

இந்த புத்த சுவாதீனத்தை இரண்டு வகையா பிரிக்கிறாங்க, ஒன்னு தீவிரமா இருக்கிற கேஸீ இன்னொன்னு சாத்வீகமான கேஸீ, அதாவது தீவிரமான்னா, 'Postive/Active Symptom' த்தோட புத்தி பேதழிச்சு போய் இருக்கிறவங்க. இவங்ககுள்ள பேய்யோ, பிசாசோ பூந்து செயல் படுதுன்னும், மத்தவங்களால உணரமுடியாத, கண்ணுக்கு புலப்படாத ஒன்னு அவங்களை ஆட்டுவிப்பதாவும், அவர்கள் செய்யும் செய்கைகளுக்கு விளக்கும், வியாக்கானம் அவங்களுக்கு யாரோ ஓதிக்கிட்டு இருக்கிறமாதிரியும், அவங்க கட்டுப்பாட்டு, சரியான முறையில் தன்னை இயக்க முடியாமல் தன்னை சீர்குழைக்கும் தன்மையுடன் செயல்படுவர்கள், உதாரணத்துக்கு சட்டை வேட்டியை கிழிச்சிக்கிட்டு, இல்லை போட்டுக்கிட்டு இருக்கிற உடுப்புகளை தாறுமாற அணிந்து, இல்லை பொது இடங்கள்ல கத்தி ரகளை பண்ணி, அதாவது இதெல்லாம் நாகரீகமில்லைன்னு அவங்களுக்கு புத்தி உறைக்காம போயி தாறுமாறா, நான் மேலே சொன்ன அந்த அக்கா மாதிரி!

இன்னொரு கேஸீ சாத்வீகம்னு சொன்னது, 'negative/passive Symptom' த்தோட உடையவங்க, அதாவது தன்னை சுத்தி என்னா நடக்குதுன்னு தெரியாம, உணர்ச்சிகளை இழந்து, சுத்தமா தங்களையே மறந்து, அதிகம் பேசாம, இல்லை பேசினா, சொன்னதையே திருப்பி சொல்லி, உலறிகொட்டிக்கிட்டு, முக உணர்ச்சியோ, இல்லை பாடி லாங்வேஜோ இல்லாம, செவ்வனேன்னு உட்கார்ந்து கிடக்கிறவங்க! ஆக இவெங்களுக்கு எல்லாம் வந்தது 'Split Personality Syndrome' கொண்ட நோயான்னா, அது தான் இல்லைன்னு சொல்றாங்க! சரி அப்படின்னா இந்த 'Split Personality' நோய் தான் என்னா?? ஒரு விதமான மனக்கோளாறு, இதுக்கு காரணம் அவர்களுக்கு சின்ன வயசிலே ஏற்பட்ட ஒரு வித மான விநோத அனுபவங்களால, பின்னாடி இப்படி ஆகி போறாங்கன்னு சொல்றாங்க. முக்காவாசி, சந்திரமுகி, அந்நியன் படங்கள்ல கூறப்பட்ட காரணம் போல!

ஆரம்பத்திலே இருந்த இந்த புத்தி சுவாதீனம் இல்லாத நோய்யைத்தான் பிற்பாடு புதுசா வேற மாதிரி கூப்பிட ஆரம்பிச்சு, இந்த 'Split personality', 'Multiple Personality' யா ஆன கதையாச்சுன்னு சொல்றாங்க! உண்மையிலே அப்படி ஒரு நோய் ஒன்னு இருக்கிறதா இல்லன்னு ஒரு சந்தேகத்தை கிளப்பிவிட்டுட்டாங்க, அதுவும் இப்ப லேட்டஸ்ட் சைக்கியாட்ரிஸ்ட் சிகிச்சையிலே, அதுமாதிரி ஒரு வியாதியே இல்லன்னு சொல்லி கண்டுபிடிச்சிருக்காங்கலாம். நம்ம சினிமாக்காரங்கதான் இந்த மாதிரி கதை பண்ணி, அதுவும் அமெரிக்காவிலேருந்து நம்ம சரவணன் டாக்டர் வந்து சந்திரமுகியை காப்பாத்துன்னும்னு சொல்லி படமெடுக்கிறாங்க! (நம்ம சினிமான்னு இல்லை, இங்கே ஹோலிவோட்லயும் இதே கூத்து தான், இதைவிட இன்னும் நிறைய, இது சம்பந்த பட்ட படங்கள், அதுவும் பாதிரியார், வந்து ஓதி பேய் விரட்டி, என்னவெல்லாம் கதை பண்ணுவாங்க, இப்ப சமீபத்திலே ஒரு படம், 'The Exorcism of Emily Rose' வந்தது, நீங்க எத்தனை பேரு பார்த்தீங்களோ, அதிலேயும் இந்த கூத்து தான்!)

சில இடங்கள்ல இந்த 'Split personality'வச்சி சுவாரசியமா கதை பண்ணி திரியறாங்கலாம், இந்த வெளியூர் போறப்ப, நம்ம மெளனக்கீதங்கள் பாக்கியராஜ் மாதிரி தப்பு பண்ணிட்டு வர்ற ஆம்பளைங்க, கேட்டா எனக்கு 'Split personality' வியாதி இருக்குன்னு சொல்லி தப்பிச்சிக்கிறாங்களாம், அதாவது வீட்ல இருக்கிறவரைக்கும் நல்ல புள்ளையா இருப்பாங்க, ஆனா வெளியீருன்னு போனா, அங்க வேற ஒரு ஆளா மாறி, 'புதுசா பொண்ணுங்களை அனுபவிப்போம், அது எங்களை அறியாம செஞ்சுது, உண்மையிலே பொண்டாட்டிக்கு துரோகம் செய்னுங்கிறது எங்க எண்ணமில்லை, ஏன்னா எனக்கு 'Split personality' வியாதி வந்துடுது, என்ன பண்ணறது'ன்னு கேட்கிறாங்களாம், இந்த கதை எங்க போய் சொல்றது? (விவரமா அந்தக் கதை படிக்க இதோ சுட்டி) கடைசியிலே இது சுஜாதா சொன்ன சாமி ஆடுற விளக்கத்தை மாதிரி இருக்கு, இதை எங்க போய் சொல்றது?

சரி, கடைசியா நான் சொல்ல வந்தது இந்த தெலுங்கு, தமிழ் சந்திரமுகிகளை பத்தி! மூலம் கொஞ்சம் டல்லு தான், என்னதான் இருந்தாலும் ரஜினி ரஜினிதான், அவரு தான் அந்த கடைசி காட்சியை தூக்கி நிறுத்திறாரு. என்னா ஸ்டைல், வேகம் (என்ன தான் ஹீரோத்தனமா நடிச்சாலும், அவரு ஆரம்பத்திலே நடிச்ச வில்லத்தனம் தான் இன்னைக்கும், இத்தனை வயசுக்கப்பறமும் அப்படியே இருக்கு, அதான் அவரோட கவர்ச்சியின் ரகசியம்!), அதனாலேயே தமிழ் சந்திரமுகி, சாரி தெலுங்கச்சி சந்திரமுகி வந்து போற சீனு அமர்க்கள படுது, நம்ம ஜோவும் நல்லாவே நடிச்சிருக்குமா, அந்த ஷோபனா நடிச்சதை விட! சரி வீடியோ கிளிப்பை பாருங்க, நான் சொல்றது உங்களுக்குப் புரியும்!

வீடியோ கிளிப்பின் முதல் பகுதி



வீடியோ கிளிப்பின் இரண்டாம் பகுதி

Friday, October 27, 2006

நாளை உலகம் நமது கையிலா??

'நாளை உலகை ஆள வேண்டும், உழைக்கும் கரங்களே' அப்படின்னு எம்ஜிஆர் பாடி ஆடனது ஞாபகம் இருக்கா உங்களுக்கு, அது நடந்தேறும் காலம் நெருங்கிவிட்டதுன்னு சொல்லுவேன் இப்போ! போன வாரம் இந்த வியாபார உலகில் நடந்த ஒரு மிகப்பெரிய தன்னுடமையாக்கல்(Acquisition) என்னான்னு தெரியுமா, அதான் நம் நாட்ல இருக்கிற டாட்டா ஸ்டீல் கம்பெனி இங்கிலாந்து மற்றும் டச்சுக் கம்பெனியன கோரஸ்(Corus)என்ற இரும்புஆலை கம்பெனியை சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்ல வாங்கி தன்னுடமையாக்கிக்கிட்டது தான்! இதுல என்னா விஷேஷம்னு கேட்கிறீங்களா, இனிவரும் நாட்களில் நம்ம குப்பனும் சுப்பனும் உலகத்திலே பீறுநடைப் போடும் பெரிய பெரிய கம்பெனிகளை வாங்கிப்போட்டு பெரியாளாகப் போறாங்கங்கிறது தான், அது எப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம் வாங்க!

நீங்க வெறும் சாஃப்ட்வேர் எழுதியோ, இல்லா கூலிக்கு மாரடிச்சு மாசம் ஒன்னாம் தேதி ஆனா சம்பளம் வாங்கி பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்திர ஆசாமியா இருந்தீங்கன்ன்னா ஒரு மண்ணும் புரியாது. கொஞ்சம் வியாபரம், பங்கு சந்தைன்னு அலைஞ்சு திரிஞ்சிருந்தாலோ, இல்லை கடை கண்ணின்னு வியாபரம் செய்ற குடும்ப சூழ்நிலையிலே இருந்து வந்திருந்தாலோ, இல்லை உண்மையிலே திராவிடம், இந்து, பிராமணன், அப்படின்னு வெட்டி சண்டை தமிழ்மணத்திலே போடாமா, அப்புறம் ஆரஞ்சு ஜீஸ் எப்படி குடிக்கலாமுன்னு நகைச்சுவைப் பண்ணிக்கிட்டு திரியாம இப்படி சீரியஸா இந்த பிஸினஸ் விஷயங்கள்ல ஆர்வம் இருந்து தெரிஞ்சுக்கிறவங்களா இருந்தா இந்த Mergers and Acquisitions (M&A) பத்தி தெரிஞ்சிருக்கிற வாய்ப்புண்டு!

இந்த 'M&A' ங்கிறது நம்ம வெத்திலை பாக்கு கடை நடத்தி வர்றவங்களுக்குக்கூட தெரிஞ்ச ஒன்னு தான், அதாவது, 'அந்த மூணாவது கடை ஒன்னு வருது அதை எப்படியாவது வாங்கி போட்டுட்டா இன்னும் கொஞ்சம் பெரிசா வியாபரம் பண்ணலாமுன்னு' நம்மூர் சின்ன வியாபாரிங்கள்ல இருந்து பெரிய பெரிய கார்ப்ரேட் வரை சிந்திக்கிற மற்றும் செய்யக்கூடிய விஷயம் தான்! என்ன நம்மூரு வெத்திலைப்பாக்கு கடைவியாபரி மொத்தமா காசை சேர்த்து, இல்லை அங்கே இங்கே கடனை வாங்கி அந்த வர்ற கடையை வாங்கிப் போட்டுடுவாரு, ஆனா கார்ப்ரேட் உலகத்தில அதுவே 'Share Purchase'ன்ன்னு ஒன்னு போகும் இல்லை 'Asset Purchase'ன்னு போகும்! இங்கேயும் கம்பெனிங்க சொந்த காசு போட்டும் வாங்கும், இல்லை இதுக்குன்னு கடன் கொடுக்கிற பேங்க்குங்க உண்டு, அங்கிருந்தும் வாங்கும். சிலசமயம் அந்த பேங்குங்களே எல்லா வேலையும் செஞ்சு கொடுத்து இந்த தன்மயமாக்குதலை நடத்தி வைக்கும், அவங்க தான் இடை தரகர் வேலை பார்ப்பாங்க, அதனாலே அவங்களை 'intermediaries', 'business brokers', இல்லை 'investment bankers' ன்னு அழைப்பாங்க! இந்த M&A யோட நோக்கம் என்னான்னா, முதல்ல 'Economies of scale', அதாவது இணைக்கப்பட்ட கம்பெனிகள் பிரம்மாண்டமா செயல்படும் போது அவசியமில்லா, இல்லை டூப்ளிகேட்டா இருக்கக்கூடிய சில துறைகளை வெட்டி, கம்பெனி உற்பத்தி செலவுகளை குறைச்சி அதிகம் லாபம் ஈட்டுவது, சந்தையிலே தன்னுடய பொருட்களின் விற்பனை சதவீதத்தை பெருக்க, வரி வட்டிகளை குறைக்க, புதுசான இடங்கள்ல பொருளை வித்து அங்க தன்னுடய சந்தையை பிடிக்க, தன்னிடம் இல்லாத வாங்கப்படும் கம்பெனிகளின் வேறு திறன்களால் அதிகம் லாபம் ஈட்ட, அப்பறம் 'Vertical Integration' ன்னு சொல்லிட்டு இந்த கருப்பொருள்ல இருந்து உற்பத்தி, விற்பனை, சந்தைக்கு எடுத்து செல்லல் என்று அனைத்து துறைகளையும் உள்ளடக்குவது, மொத்தத்திலே 'Supply Chain Management'ன்னு சொல்லக்கூடிய அத்தனை துறைகளிலும், வாங்கும் கம்பெனியால் உள்ளடக்கி தனிபெரும் நிறுவனமாக திகழ்ந்து பெரும் லாபம் ஈட்டுவது தான்!

சரி இதிலே என்ன விஷேஷமுன்னு கேட்கிறீங்களா, இந்த மாதிரி கம்பனிங்களை வாங்கி தன்னுடமையாக்கி ஒரு பெரிய நிறுவனமாகிறது எல்லாம் கொஞ்ச காலத்துக்கு முன்னால நம்ம நாட்ல நினைச்சுப் பார்க்க முடியாது ஒன்னு. ரொம்ப காலமா வழி வழியா பெரிய வியாபர கம்பெனிகள் தலைமுறை தலைமுறையா குடும்பங்கம்பெனிகளா தான் இருந்து வந்தது, அதுவும் நமக்கு ஆரம்பத்திலே இருந்து தெரிஞ்ச டாட்டா, பிர்லா குடும்பங்கள் கட்டி காத்த பெரும் நிறுவனங்கள் தான்! அப்புறம் சாதரண மக்களுக்கும் பங்கு சந்தைன்னா என்னான்னு வழி காமிச்சு பெரி முதலாளியா உருவான திருபாய் அம்பானி ஆரம்பிச்ச அந்த மிகப்பெரிய ரிலெயன்ஸ் நிறுவனம் பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா நம்ம ஊர்ல இந்த மாதிரி பெரிசா வாங்கி ராஜ்யம் அமைக்கிறதுங்கிறது அவ்வளவா நடக்காத ஒன்னு, எல்லாமே இந்த ஊரு பக்கம் தான், அதாவது, இந்த பெரிய பெரிய M&A எல்லாம் அமெரிக்கா, ஐரோப்பிய நடுகள்ல இருக்கிற கம்பெனிகள்குள்ள நடக்கிற விஷயம் மட்டுமா இருந்த ஒன்னு! எப்பவாச்சும், நம்ம நாட்டுக்குள்ளேயே கம்பெனிகளை வாங்கி பெரிய வியாபர சாம்ராஜ்யம் அமையணும்னு, அங்கொன்னும் இங்கொன்னுமா நடந்துக்கிட்டிருந்துச்சு, ஆனா இப்ப நம்ம நாட்டை விட்டுட்டு உலகத்திலே இருக்கிற பெரிய பெரிய கம்பெனியை வளைச்சிபோட்டு நம்மலும் இன்னைக்கு பெரிய ஆளா வந்துக்கிட்டிருக்கோங்கறதுதான் அங்க விஷேஷமே!

இந்த Multi-National கம்பனிங்கங்கிறது உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச ஒன்னு, இதுவரைக்கும் நம்ம ஆளுங்க போய் அங்க உட்கார்ந்துக்கிட்டு நமக்கு படிஅளந்தா போதும்னுட்டு இருந்தோம், ஆனா இப்ப நம்ம அவங்க ஆளுங்களுக்கு படி அளக்கப்போறோம்! எப்படின்னு கேளுங்க! இந்த அயல் நாட்டு கம்பெனியை வாங்குறதுங்கிறது அவ்வளவு சுலபமான காரியம் இல்ல முன்னே எல்லாம், அதுவும் 1990க்கு முன்னே, ஏன்னா அந்நிய நாட்டு செலவானி அதுக்கு நமக்குத் தேவை. அது நம்மகிட்ட இல்ல, நம்ம கஜானா காலியாயிடுச்சின்னு, 90ல சந்திரசேகரு பிரதமாரா இருந்தப்ப நம்ம நாட்டு தங்கத்தை கொண்டி அடகு வச்ச கதை உங்கள்ல எத்தனை பேருக்கு தெரியும்னு எனக்குத் தெரியாது, ஆனா அதுக்கப்பறம் நரசிம்மராவு ஆட்சிக்கு வந்து நம்மலோட இப்பைய பிரதமர் நிதி அமைச்சரா இருந்தப்ப போட்டு வச்ச பாதை தான், இப்ப நம்ம நாட்ல அன்னிய செலவானி பொங்கி வழியுது! இப்ப கம்ப்யூட்டர் யுகம் வந்துட்டோன, சின்ன பசங்க நீங்க எல்லாம், இங்க வந்து போற நீங்க, சுலுவா நம்ம ஊர்ல எங்க வேணும்னாலும் மாத்தி, பச்சை டாலர் நோட்டை பச்சக்குன்னு பாக்கெட்ல சொருவிட்டு சும்மா ஜாலியா ஃபைளைட் புடிச்சு, இங்க வந்து கொண்டு வந்த காசை டேபிள் டான்ஸ், லேப் டான்ஸுன்னு வேட்டு விட்டுக்கிட்டு இருக்கீங்க! ஆனா அந்த 90ல பறந்து வந்த எங்களை கேளுங்க, இதை கொண்டு வர்றதுக்குள்ள நாங்க பட்ட சிரமம் என்னான்னு எங்களுக்குத் தெரியும்! அதுக்கு முன்னே அமெரிக்கா படிக்க வந்த நம்ம அண்ணமாருங்க வெறும் பத்து டாலர் எடுத்து வர்ற பட்ட பாடு இருக்கே, அப்படி கையிலே எந்த காசும் இல்லாம இங்க வந்து முன்னேறினவங்க கதை கேட்டுப்பாருங்க தெரியும்!

எதுக்கு சொல்றேன்னா, அப்ப இந்த கம்பெனிங்களும் அன்னியசெலவானியை தண்ணி மாதிரி இஷ்டம் போல போட்டு கரைச்சிட முடியாது அதுக்கு அப்ப இருந்த Foreign Exchange Regulation Act (FERA)சட்டம் அப்படி, நம்ம நாடல இருந்து அவ்வளவு சீக்கிரம் இந்த அன்னியச்செலவானியை(Foreign Exchange), அதான் நம்ம ரூவாயை டாலரை மாத்தி எதுவும் வாங்கிட முடியாது! 90ல ஆரம்பிச்ச இந்த மாற்றம், நம்ம சிதம்பரம், மன்மோகன், மிஸ்ரா மாதிரி ஆளுங்களால கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்தோம், அந்நியச்செலவானியும் பெருகுச்சு ( இந்த அந்நியச்செலவானி பெருகிறது எப்படின்னு தெரிஞ்சுக்குனும்னா, கொஞ்சம் ஏற்றுமதி, இறக்குமதி சாமாச்சாரங்கள் எல்லாம் தெரிஞ்சிருக்கினும், அதை பத்தி பதிவுகளை பொங்குதமிழில் படிக்குனும்னா நம்ம தமிழ் சசி எழுதுறதை அப்ப அப்ப பாருங்க) , இந்த சட்டத்தை ஒரு ஏழு வருஷத்துக்கு முன்னே Foreign Exchange Management Act (FEMA)வா மாத்தி இன்னும் சுலுவாக்கிட்டாங்க இப்ப, அதான் காசு இருந்த நம்ம கம்பெனிங்க எல்லாம் உலக கம்பெனிங்களை வாங்கி போட்டுடலாம்!

இப்ப அப்படி தான் சுமார் இந்த வருஷத்திலே இது வரைக்கும் 115 Acquisitions நடந்திருக்கு அதுவும் மொத்தம் 18 பில்லியன் டாலர்கள் மதிப்புல, அதே மாதிரி 8 பில்லியன் டாலர்கள் நம்ம நாட்க்கு முதலீடு செய்ய வந்திருக்கு! இந்த தன்னுடமையாக்கல்(Acquisition)இந்த வருஷம் 130க்கு மேலே போகும்னு சொல்றாங்க, அது என்னான்னு தெரிஞ்சுக்கும்னா இதோ சுட்டி. ஆக இனி வரும் நாட்கள்ல இது மாதிரி பெரிய பெரிய கம்பெனிகளை வளைச்சிப்போட்டு எல்லாம் நம்ம கையிலே வர வாய்ப்பிருக்கு! அதுக்கு இங்கே அமெரிக்கா, இங்கிலாந்தில் எதிர்ப்புகள் இருந்தாலும், காலத்தின் கட்டாயம்னு விட்டுத்தான் போகுனும்னும், அதுனால எல்லா நாடுகளுமே வளர்ச்சி அடையும்னு இங்க இருக்கிற பெரிய பெரிய பொருளாதார நிபுணர்கள் எல்லாம் சொல்றாங்க. முதல்ல கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பனிகள் தான் வாங்கி போட்டுக்கிட்டிருந்தாங்க, அதுன்னு இல்லாம இப்ப மத்த துறைகளில் உள்ள தொழில் நிறுவனங்களும் இந்த Acquisitionsல இறங்கிடுச்சிங்க.

அதுவும் இந்தியாவும் சைனாவும் இது மாதிரி போட்டி போட்டு கம்பெனிகளை வாங்கி தள்ள ஆரம்பிச்சிட்டாங்க! கொஞ்ச நாளைக்கு முன்னே சைனா நாட்டுக்காரன், அமெரிக்க எண்ணை கம்பனியான 'Unocal' என்கிற கம்பெனியை வாங்க வந்து, அது அரசியல் காரணங்களால முறியடிக்கப்பட்டது! இருந்தாலும் இது எத்தனை நாளைக்கு தடுக்க முடியும்னு தெரியாது! இதுக்கு என்ன காரணம்னா, இது போன்ற பெரிய கம்பெனிகள் அதாவது சக்தி (Energy), இரும்பு(Steel) போன்ற துறைகளில் கை ஒங்கி இருந்தா அது தன் வல்லரசு தன்மையை நிலை நிறுத்த வழின்னு உலக அரசியல் முட்டுகட்டைகள் நிறைய இருக்கு! ( இரும்பு உற்பத்தின்னு பார்த்த்கீங்கன்னா, உலக உற்பத்தியிலே 30% நம்ம கையிலே இருக்குத் தெரியுமா, நம்ம மித்தல் ஸ்டீல், டாட்டா ஸ்டீல் இரண்டும் சேர்ந்தே இது, ஆக எப்ப வேணும்னாலும் உலகத்தை மிரட்ட இது போதாதான்னு ஒரு கேள்வி எழத்தான் செய்யுது) ஆனா பொருளாதார வல்லமை முன்பு இது எல்லாம் எடுபடாது! அதுவும் இந்த அசுரத்தனமான இந்த பொருளாதார வளர்ச்சி முன்னே ஒன்னும் நிக்காது!

ஆனா வாங்கி போடறது பெருசில்ல, அதை சரியா ஆளுமை செஞ்சு இன்னும் பெரிய நிலைமைக்கு வரணும்ங்கிறது பெரிய குதிரைக்கொம்பு தான்! அதுவும் பல நாடுகளில் வியாபிச்சிருக்கிற இந்த ராஜாங்கத்துக்கு, அந்த அந்த நாட்டு கலாச்சாரம், அரசியில் ஆளுமை, அந்த நாடுகளில் வியாபாரம் செய்யும் திறமை எல்லாம் நம்ம நிறைய வளர்த்துக்கணும், அதே மாதிரி நம்ம அரசியல் வாதிங்களும் முழு கண்ணையும் திறக்கணும், நம்ம எப்படி உலகை ஆளா நாலா பக்கமும் படை எடுக்க துடிக்கிறமோ, அதே மாதிரி வெளி நாட்டு முதலீடுகளையும் வரவேற்கணும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியாவை வாங்கி பெரிசா ஆக்க முட்டு கட்டை போடக்கூடாது, அதே மாதிரி வால்-மார்ட் மாதிரி பெரிய ராட்சத தொழில் நிறுவனங்கள் இந்தியாவில தொழில் செய்ய அனுமதிக்கணும், அப்ப தான் நம்ம நாலா பக்கமும் போயி உலகை ஆளமுடியும்! சும்மா பம்மாத்து அரசியல் செஞ்சுக்கிட்டு முட்டுக்கட்டை போடாம இருந்தா போதும், நான் சும்மானாலும் விளையாட்டுக்கு சொல்லிக்கிட்டிருக்கிற மாதிரி ''Microsoft', 'General Motors', 'GE' எல்லாத்தையும் வளைச்சு போட்டுடுவோம், என்ன நான் சொல்லுறது?'ங்கிர பேச்சு உண்மையாகி 'நாளைய உலகம் நமது கையில்'ன்னு ஆகப்போகும் நாட்கள் அதிக தூரமில்லை!