Sunday, December 11, 2005

எனை ஆண்ட அரிதாரம்- ஐந்தாம் பகுதி

நாடகம் போடறது ஒரு கூட்டு முயற்சி. இதில எனக்கு அதிகமா உதவனது என்னுடய குளோஸ் பிரண்டு மனோகர், அப்புறம் ஜெயக்குமார், பிறகு வந்த வருடங்கள்ள திருவேங்கடம். இதுல ஜெயக்குமார், நானும் முத வருஷத்திலருங்தே தோஸ்த்து. அதாவது மத்தியானம் சோத்தை தின்னுட்டு பெரும்பாலும் பஸ் புடிச்சு டவுண் ஹால்லு போயி, சினிமா பார்க்க நாங்க ரெண்டு பேரும் போயிடுவோம்.முக்காவாசி படங்கள் மலையாளப் படங்கள், அதில்லயும் ஜெயபாரதி நடிச்ச படங்கள் அதிகம். 'இதோ இவிட வர', அப்புறம் பரதன் இயக்கிய நிறைய படங்கள். சாம்ப்ளுக்கு ஒரு போஸ்டர் பாருங்க இங்கே, படம் பேரு ரதிநிர்வேதம்னு நினைக்கிறேன், அதில வர ஒரு பாட்டு இப்பவும் மனசுல இருக்கு, 'குஞ்சு மனசில் சஞ்சரமென்னும் சாயம் பூட்டி' அப்படின்னு தொடங்கற பாட்டு, இது அந்த படத்தோட போஸ்டர் தான்னு நினைக்கிறேன். இந்த படத்தில விடல பையன் எப்படி காமம் கொண்டு தன்னைவிட மூத்த பக்கத்து வீட்டு பெண்ணை அடைய முயற்சிக்கிறான்ங்கிறது ரொம்ப அழகா படத்தை பரதன் பண்ணியிருப்பாரு தெரியுமா? அப்புறம் ப்ரதாப் போத்தன் நடிச்ச 'தகர' ன்னு ஒரு படம், அதுக்கூட அப்புறம் தமிழ்ல கவுண்டமணி, ரோஜாரமணி பையன் நடிச்சு வந்துச்சுன்னு நினைக்கிறேன். அப்ப வந்த மலையாள படங்கள், கொஞ்சம் கிக்காவும் இருக்கும், கதைகளும் நல்லா இருக்கும். கேரளாவில்ல வர அத்தனை படமும் கோயம்புத்தூருக்கு வரும். விரும்பி அத்தனை படங்களையும் பார்க்கிறதுண்டு. அப்பதான் சீமா நடிச்சு வந்த 'அவளோட ராவுகள்' படம் தமிழ்நாடு முழுக்க பிச்சிக்கிட்டு போச்சு. அப்ப நம்மக்கு சீமாவை புடிக்கும், எது புடிக்குதோ இல்லையோ, அந்த உதடு புடிக்கும், அதோட அழகு ஒரு தனி அழகு தான்.

இப்படி ஜாலியா போயிட்டுருந்தப்ப தான் அந்த முதவருஷ நாடகம் போட்டோம். நாடகம்னு பாத்தா, எந்த பிரமாதமம் இல்ல, ஆனா கதை சொன்ன விதம், விறு விறுப்பு இது தான் மக்களை கட்டி போடவச்சுச்சு. அப்பெல்லாம் சீன்களுக்கு இடையில அடுத்த சீன் ஆரம்பிக்கிற வரை சபா நாடகங்கள்னா ஆர்மோனியம் வாசிப்பாங்க, ஏன்னா, சீன் செட்டிங் செஞ்சாவனுமே, அதுக்கு டைம் எடுக்கும். நாங்க என்ன பண்ணுனோம், இன்ட்ர்லுயூட் மியூசிக்குன்னு, பாடல்கள் வரது, அப்புறம் தீம் மியூசிக்னு ரெக்கார்டிங் பண்ணி அதப்போடுவோம். பின்னாடி வருடங்களில் தத்ரூபமாக sound effect வரணும்னு, நடு ஜாமத்தில ஹைவேஸ்ல போயி லாரிங்க ஒடிறப்ப தூரத்தில வர அந்த ரோட்ல டயர் உராயம் போது வெளிப்படும் சப்தம், பிறகு ஆறு மணிக்கு அந்த ஆகாஸ வாணில வர அந்த ஆரம்ப மியூசிக்னு, நிறைய கஷ்டபட்டுருக்கோம். எங்க ஹாஸ்டல்ல தனியா மியூசிக் பிளே பண்ற ரூம் இருக்கு, அப்புறம் அங்கிருந்து பி.ஏ. சிஸ்டத்தில காலேஜ் முழுக்க பிராட்காஸ்ட் பண்ணுவாங்க. நாங்க ரெக்கார்ட் ரூம்மு சாவியை வாங்கி வச்சுக்கிட்டு ராத்திரியிலே போயி ரெக்கார்ட் பண்ணுவோம். அப்ப டேப் ரெக்கார்டர் புதுசா வந்த நேரம். இப்ப மாதிரி டேப், சிடி எல்லாம் கிடயாது. எல்லாம் எல் பி ரெக்கார்ட்ஸ், கிராமபோன் தான். அதனால நிறைய ராத்திரிகள் இந்த ரெக்கார்டிங்ல கழிஞ்சிருக்கு. ராஜப்பார்வையில வர தீம் மியூசிக், அப்புறம் ஹிந்தி பட மியூசிக்னு எல்லாம் ரிக்கார்ட் பண்ணுவோம். அந்த தீம் மியூசிக்கதான் கேட்டு பாருங்களேன். பார்த்து பார்த்து சீன்களுக்கு தகுந்த மாதிரி Background music ரெக்கார்ட் பண்ணி வச்சுக்குவோம், அத sequence சா ரெக்கார்ட் பண்ணி எடுத்துக்குவோம். மனோகரன் அதில்ல கில்லாடி, எல்லா சீன்களுக்கும் தகுந்த மாதிரி, சோகமா இருக்கட்டும், சிரிப்பா இருக்கட்டும், காதல் காட்சிகளா இருக்கட்டும், பாட்டுகளை கரெக்கடா கண்டுபிடிச்சு, அதெல்ல இருந்த interludes ஐ, கரெக்டா எடுத்த ரெக்கார்ட் பண்ற தில கில்லாடி. அது மேடையில சீன்களை ரொம்ப effect வா காண்பிக்கும். அது போலதான் நாடகம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலேயே திரைப்படங்கள்ல வர title sequence ஐ போல அழகா நாடக ஆரம்ப sequenceல, வெறும் ஆர்க் லைட்ஸ் வச்சே நடிப்பவர்கள் பேரு, கதை, வசன்ம், டைரக்ஷன்னு கலர் ஜிகினா காட்டி இந்த் மியூசிக் interlude ட போட்டு காண்பிச்சோன, நாடகத்தோட டெம்போவையே அது தூக்கி நிறுத்திடும். எங்க சீனியர்ஸ்ம் என்னடா புதுசா இருக்கேன்னு ரொம்ப ஆர்வமா பார்த்தாங்க. அது தான் எங்க வெற்றி. இது மாதிரி நாடகத்தையே சினிமாத்தனமா காட்டினோம். அப்புறம் எங்க கடைசி வருஷம் வரை இந்த கூட்டணி விலகவே இல்லை. அடுத்த அடுத்த வருஷங்கள்ல வேற வேற ஆளுங்க கதை வசனம் எழுத ஆரம்பிச்சோம். ஆனா அதே உழைப்பு, ஆகையால நாடகங்களை வெளிக் காலேஜ்க்கு எடுத்துட்டு போனாலும் நல்ல மரியாதை, ஊக்கம், பாராட்டுக்கள். அப்ப எங்க காலேஜ் நாடகங்களுக்கு ஒரு தனிக்கூட்டமே இருந்தது. ஒவ்வொரு காலேஜ் நாடக செக்ரட்ரியும் அவங்க காலேஜ்ல நடக்கிற ஏதாவது போட்டியுல கட்டாயப்படுத்தி, எங்களை கலந்துக்க சொல்வாங்க. அதே மாதிரி சிஐடி நாடகம்னா அவங்க காலேஜ்ல போஸ்டர்லாம் அடிச்சி சும்மாவே எங்களுக்கு பப்ளிசிட்டி.

இப்படி போயிட்டுருந்தப்ப நடந்த காதல் கதையைக் கேளுங்க. எங்க கூட படிச்ச சினேகதன் நடராஜன்னு, ரொம்ப காலம் முன்னமே டெல்லியில போயி அவன் அப்பா, அம்மா செட்டிலாயிட்டாங்க. இஞ்சினியரிங் படிக்க எங்க காலேஜ்ல வந்து சேர்ந்தான். கொஞ்சம் கொஞ்சந்தான் தமிழ் பேசுவான், சின்ன குழந்தங்க மழலை பேசற மாதிரி. ஆனா ஆங்கிலம் நல்லா பேசுவான். சரி இன்கிலீஷ்ல announce பண்ண கொள்ள வைக்க, அப்புறம் பேக்ஸ்டேஜ் டைரக்ஷன் பண்ண வச்சிருந்தோம். இப்படி வெளிக்காலேஜ்ங்கள்ள நாடகம் போட்டப்ப, ஒரு தடவை women's ploytechnicல நாடகம் போட போனோம், அப்ப இவனையும் கூட்டிட்டு போயிருந்தோம்.அப்ப அந்த காலேஜ் dramatic secretary ஒருத்தி எங்கள விழுந்து விழுந்து கவனிச்சிக்கிட்டா. நாடகமும் நல்லா வந்துச்சு, பெண்கள் மத்தியில நல்ல வரவேற்பு, அந்த பிரின்ஸ்பல் மேடம், ரொம்பத்தான் இழஞ்சு, நல்லா நடிச்சீங்க தம்பின்னுட்டு போச்சு. அப்புறம் அது முடிஞ்சு, ஒரு இரண்டு மாசம் கழிச்சு, நம்ம நடராஜன் நம்ம திருவேங்கடத்துக்கிட்ட வந்து , மச்சி உன் வாட்டர் பாட்ல குடுறா, நானும், கீழ இருக்கிற பசங்களும் (நம்ம அம்பேத்கார் கோஷ்டி) ஊட்டி போறோம், போயிட்டு வந்து தரேன்னான். என்னாட, மவனே நீ அந்த பசங்களோட எல்லாம் சுத்தமாட்டியே, நிஜமாவா போறே அப்படின்னு கேட்டுட்டு அவனும் கொடுத்து அனுப்பிச்சிட்டான். அப்புறம் ஒரு நாலு அஞ்சு மாசம் ஓடி இருக்கும். ஒரு நாளு அவன் ரூம்ல உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கிறப்ப, அவன் என்னமோ எடுக்கிறேன்னு பெட்டிய தொறந்தப்ப, ஒரு அழுக்கு சட்டை அப்படியே பெட்டியில கிடந்துச்சு, என்னா மாமே துணி துவைக்க மாட்டியா, அப்படியே போட்டு வச்சுக்கிறீயே, என்னா விஷயம், அப்படின்னப்போ, பட்னு பொட்டிய மூடிட்டான். என்னடா, ரவுசு வுட்ற, பொட்டிய காமிடன்னு பாத்தப்ப, கதை கந்தலா இருந்துச்சி. அந்த சட்டையில குங்குமக் கரை ஒட்டிக்கிட்டு இருந்தது. என்னாடா கதைன்னு கேட்டப்ப தான் நம்ம நடராஜன் கொஞ்ச கொஞ்சமா எடுத்து விட்டான். 'ஆமாண்டா, அந்த செக்ரட்ரி மேல லவ்வு மாமே, அடிக்கடி நாங்க பாதுக்கிறோம். அன்னக்கி உன்கிட்ட தண்ணி பாட்டில்லு வாங்கிட்டு போனதுக்கூட நாங்க ரெண்டு பேரு ஊட்டி போவதான்னு, அப்படி போயிருந்தப்ப அது என் மேல தோள்பட்டையில சாய்ஞ்சு முகம் வச்சிகிட்டு இருந்துச்சு, அதான் இந்த குங்குமக்கரை, அத ஞாபகமா அப்படியே வச்சிருக்கேன்னு போட்டான்யா, ஒரு போடு! என்ன மாயம் பண்ணான்னு தெரில்ல அந்த பொண்ணு இவன் பின்னாடி அலஞ்சிகிட்டு இருந்தா. அப்புறம் பாத்தீங்கன்னா, அந்த சட்டையை அவன் நாங்க காலேஜ் வுட்டு படிச்சு முடிச்சு வர வரைக்கும் போடவே இல்லை, அப்படியே தான் பொட்டிக்குள்ளேயே வச்சிருந்தான். அப்புறம் அந்த டாவு continue பண்ணான்னான்னு நம்க்குத் தெரியாது. சும்மா எங்க நாடக கும்பலோட சுத்தன பயலுக்கு பாருடா மச்சத்தைன்னு அவனை காலேஜ்ல இருந்த வரைக்கும் சத்தாச்சுகிட்டுத்தான் இருந்தோம்.

இப்படி போயிகிட்டு இருந்தப்ப, அடுத்த வருஷத்துக்கான நாடகப்போட்டி வந்தப்ப, நம்ம முருகவேள் நல்ல ஒரு கதை எழுதி கொண்டு வந்தான். அதை ரொம்ப பிரமாதமா செய்யலாமுன்னு, ரொம்ப கஷ்டப் பட்டு செஞ்சு ரொம்ப நல்லாவே அரங்கேற்றினோம். அத ஜி சி டி யில நடந்த cofleuenceங்கிற அனத்து காலேஜ் நாடகப் போட்டில்ல போட்டு சிறந்த நாடகம்னு பரிசை தட்டிடு வந்தோம். அப்ப எங்க கூட சேர்ந்து போட்ட சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் கடைசியில ரகளை பண்ணி ஜட்ஜ்ங்களை எல்லாம் திட்டி ஒரே அமர்க்களமா போயிடுச்சு. அப்படி திட்டின அந்த சட்டக்கல்லூரி மாணவன் பிற்காலத்தில தமிழ் சினிமா துறையில ஒரு பெரிய நடிகராக வலம் வந்தார், 'தண்ணீர் தண்ணீர்'ங்கிற படத்தில அறிமுகமானாரு. இப்ப உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன் அப்படி தெரியலேன்னா யாருன்னு அடுத்த பதிவில சொல்றேன்!

5 comments:

said...

உதயகுமார்,

ம்யூஸிக் ஒரே அட்டகாசமா இருக்கே!

நகைச்சுவை நாடகம் எதாவது போட்டீங்களா? ஸ்கிட்ஸ் எதாவது?

அந்த நடிகர்தான் நாசரா?

said...

துளசி, நான்காம் பாகம் படிக்கலையா ? :(
பூரா கதை எழுதி இருந்தேனே, அந்த நடிகர் நாசர் இல்லை, ஒரு க்ளூ கொடுக்கிறேன் கண்டுப் பிடிக்கிறீங்களான்னு பார்க்கிறேன், அவரு ரத்தக் கண்ணீர் வாரிசு, இப்ப கண்டு பிடிங்க:-)

said...

நாலாம் பாகம் படிச்சுட்டுத்தானே இங்கே வந்தேன்.

'ரத்தக்கண்ணீருக்கு' தெரிஞ்சும் தெரியாமலும் ஏகப்பட்ட வாரிசுகள் இருக்காமே. நான் யாரைன்னு கண்டு பிடிப்பேன்?
ரவியா?

said...

பரவாயில்லை கண்டுப் பிடிச்சீட்டீங்க, சாட்சாத் ராதா ரவி தான்! அவரு மெட்ராஸ்ல லா காலேஜ் படிச்சப்ப கோயம்புத்தூருக்கு வந்து பண்ண அலம்பல அடுத்த பதிவில எழுதேறேன்!

said...

தீம் Music மிக அருமை.

படிக்க மிக ஆர்வமாக உள்ளது!

நல்ல பதிவு!!