Wednesday, November 30, 2005

எனை ஆண்ட அரிதாரம்- மூன்றாம் பகுதி

ஒரே நிசப்தம்! டிங்,டிங் என்ற மணிஓசை.... மயான அமைதி..


"எதையோ எதிர் நோக்கி நிற்கும் இந்த இளம் விழிகள்! இந்த இளங்குயிலின் ஆரம்பகாலம் நோக்கி சற்று பார்ப்போமா!...."

நான் சிவாஜி கணேசன் வசனத்தையோ, இல்ல வேற எந்த நடிகனின் வசனத்தையோ பேசலை, பாரதிராஜா 'பதினாறு வயதினிலே' படத்தில பேசற அந்த ஆரம்ப காட்சியோட வசனம், பாடல்கள் தான், இதோ!...

"சோளம் விதைக்கையிலே!
சொல்லிப்புட்டு போன புள்ள!
சோளம் விளஞ்சு காத்துகிடக்கு!
சோடிக் கிளி எங்க இருக்கு....!

சொன்ன சொல்லு என்னா ஆச்சு
தங்கமே! தங்க ரத்தனமே..
நீ சொன்ன சொல்லு என்ன ஆச்சு
தங்கமே! தங்க ரத்தனமே.....

ஆத்தா.. நான் பத்தாங்கிளாஸு பாசாயிட்டேன்...
ஆத்தா... நான் பத்தாங்கிளாஸு பாசாயிட்டேன்....

ஹ...ஹா....
வா.. மயிலு.. அ...ஆ...
இதப் பார்டா, இது எப்படி இருக்கு?...

ஏன் மைலு உங்காத்தாக் கிட்ட போயி சொல்லி கில்லி போடாதே...

ஏண்ணே...

பொம்பளையா அவ, தஞ்சாவூரு தவுலு....

அட மானங்கெட்டவளே, சூடு கெட்டவளே....."

ஆக இப்படி போனது நம்ம வசனம், பிறகு, 'அந்த ஆத்தா ஆடு வளர்த்தா.. கோழி வளர்த்தா ஆனா நாயி வளக்கலேயே, என்னத்தானே வளர்த்தா..' 'ஏண்ணே.. என்னாச்சு, இல்ல இவ ஆத்தாளுக்கு தாவணிப் போட்டாலும் நல்லா தாண்டா இருக்கு, இது எப்படி இருக்கு?..', இது போன்ற வசனங்கள்.

பிறகு, கிழக்கே போகும் ரயில் படத்திலிருந்து, கவுண்டமணி வசனங்கள், 'பாஞ்சாலி, நான் உனக்கு அளவு எடுக்கவா, பாவாடை கெண்ட காலு வர வக்கணுமா, முழுசா வக்கணுமா' போன்ற வசனங்கள். இது போன்ற வசனங்கள் மிகவும் பிரபலமாயிருந்த நேரம். பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, மற்றும் கிழக்கே போகும் ரயில் போன்ற படங்கள் வந்து கலக்கி கொண்டிருந்த நேரம் அது. எப்படி திரைப்படத்துறையிலே ஒரு பெரியதோரு தாக்கத்தையும், மாற்றங்களையும் அப்படங்கள், அக்காலகட்டத்தில் கொண்டு வந்ததோ, அது போன்று, கல்லூரிகளில் அவரின் பட வசனங்களை மிமிக்கிரி செய்தது ஒரு பெரிய வரவேற்பை பெற்று தந்தது. எல்லோருமே எதிர்பாக்காத ஒன்னு. எனக்கு முன்னாடி வசன்ம் பேசிட்டு போனவனெல்லாம், நான் முதல்லேயே சொன்ன மாதிரி, பராசக்தி, மனோகரான்னு பேசி, எல்லாரும் கத்தி ரவுசுவிட்டு ஓட வச்சவுடேன, ஆஹா.. அடுத்த கோழி வருது, அதையும் கத்தி, ரவுசுவிட்டு அனுப்போவோமுன்னு நினிச்ச என் சீனியர் கூட்டத்துக்கு, நான் பேசன அந்த வசனங்கள், மிமிக்கிரி பண்ண விதம் எல்லாம் ரொம்ப பிடிச்சு போயி ஒரே பாரட்டுக்கள்!

பிறவு, முத வருசத்தில நான் தான் ஹீரோ நம்ம காலேஜ்ல. சீனியர்ஸ் எல்லாம் ஊக்கம் கொடுத்து என்னோட காலேஜ்ல மட்டுமில்லாம, வேற காலேஜ்களுக்கும் காம்பிட்டிஷனுக்கு அனுப்புனாங்க. பலகுரல்ல பேசி சின்ன சின்னதா ஸ்கிட்டு, மிமிக்கிரி எல்லாம் பேசி, போன இடத்தில எல்லாம் எதாவது ஒரு பரிசு வாங்கிட்டு வரதுதான் வேலை நமக்கு. அப்பத்தான் எங்க காலேஜ்ல ஒரு நாடகப் போட்டி வச்சாங்க. அது ஃபர்ஸ்ட் யியர்லருந்து ஃபனைல் யியர்ஸ் ஸ்டுடன்ஸ் வர ஒவ்வொரு யியர்ஸ்ஸும் நாடகம் போடனும். அப்ப சீனியர்ஸ் என்கிட்டதான் வந்து ஃப்ர்ஸ்ட் ய்யர்ஸ்க்கு நான் தான் ரெப்ரஸன்ட் பண்ண சொல்லி நாடகம் போட சொன்னாங்க, அப்பவும் சரியான கூத்து போங்க, ஹீரோயினோட பாட்டு பாடி டான்ஸ் ஆடறதுல ஒரே போட்டி, அதாவது எனக்கு சமமா நடிச்ச கதிரேசன், அதாவது சப்போர்டிங் ஆக்டர் ரோல் பண்ணவன், எனக்கும் ரெண்டு பாட்டு வேணும்னு கேட்டு போராடி, ஒரே காமிடியா நாடகம் போட்ட கதை உண்டு.

இப்படி ஆரம்பிச்சது தான் என்னோட நடிப்பு படலம். பிறகு கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து, அதுவே ஒரு நாளு நான் சிறந்த நடிகன் போட்டியில இப்ப சினிமால்ல நடிச்சிகிட்டு இருக்கிற நாசரோட போட்டி போட்டேங்கிறது இப்ப நினைச்சலும் ஒரா திகப்பா இருக்கு, அதப்பத்தி அடுத்த வர பதிவுகள்ள பார்க்கலாம் என்ன?

4 comments:

said...

அட, நம்ம நாசரோடவே போட்டி போட்டீங்களா?

இது என்ன கூத்து??? :))))

said...

நாசரோட போட்டியா?

எடுத்து விடுங்க அதையும்:-)))

said...

கூத்து தான் இராமநாதன்!

அடுத்த் பதிவில எடுத்து விடறேன் துளசி!

said...

//நாசரோட போட்டி போட்டேங்கிறது இப்ப நினைச்சலும் ஒரா திகப்பா இருக்கு//


ஒரே கலக்கலா இருக்குது சார்!!

நன்றி!!