Sunday, May 21, 2006

சிருங்காரம் - தேவதாசிகளும் பரதநாட்டியமும்!

"என்னுடய பாட்டி ஒரு தேவதாசி, பல தலைமுறைக்கு முன்னே, என்னுடய தேவதாசி முன்னோர்கள், அதை விடுத்து, திருமணம் செய்து கொண்டு, ஒரு சராசரி வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டதால், அவர்கள் வழி நடத்திய இந்த தேவதாசி அற்பணம் இன்று இல்லாமல் போய் விட்டது. ஆதலால், இன்று நான் அந்த தேவதாசி முறையை கடைபிடித்து, என்னுடய பொருளாதர மற்றும் பாலிய சுதந்திரத்துடன், என் தேவதாசி இனக்குலத்தலைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்", இப்படின்னு க்கூக்குரல் கொடுத்து கொண்டு தேவதாசி வாழ்க்கை வாழும் பெண்ணின் கதை தெரியணும்னா, அதான் அந்த 'Kama of Kingston'ங்கிற பெண்ணின் கதையை கொஞ்சம் படிச்சிட்டு வாங்க, நான் மேற்கொண்டு சம்சாரிக்க போற விஷயத்தை படிக்கிறதுக்கு முன்னே!(முக்கியமா, இந்தம்மா ஈகோங்கிற மேகஸின்னுக்கு குடுத்த பேட்டியை படிச்சிட்டு வாங்க!)

இந்த தேவதாசி முறை இப்ப அதிகமா இல்லாம போனாலும், அதிகமா 1920கள்ல நடைமுறையில இருந்த விஷயம். ஆங்கிலேயர்கள்ல ஆட்சியின் போது இது களையப்பட்டதுன்னு படிச்சிருப்போம்! ஆனா இன்னும் அந்த முறை இருக்கிறதா சொல்லிக்கிட்டு வந்த சினிமாக்கள் நிறைய! அது தமிழ்நாடுல எந்த அளவுக்கு இன்னும் இருக்குன்னு எனக்கு தெரியாது, ஆனா, ஆந்திரா, கர்நாடகா, ஒரிஸ்ஸா, மகராஷ்டிரான்னு இந்த எல்லா மாநிலத்திலேயும் இன்னும் இருந்துக்கிட்டிருக்குன்னு சொல்றாங்க.(அப்படி தேவதாசி இனத்திலருந்து வந்த நடிகை தான் இந்தியாவின் கிளாஸிக்கல் பியூட்டின்னு வர்ணிக்கப்பட்ட 'ஜெயப்ரதா'ன்னு சொல்ல கேள்வி!) இதில அதிகமா ஈடுபடுபவது தலித் இனத்தை சேர்ந்த பெண்கள் தான், இது ஒரு சமயசடங்குடன் கூடிய ஒரு விபச்சாரம்னு சொல்லி இந்த 'மனித குல கட்டுபாடு கழகம்' இதை, அடிமைத்தொழிலாளர்கள் எப்படி பாகுபடுத்தப்பட்டு, சுரண்டி வாழப்படுகிறார்கள்னு சொல்லி இருக்கு தன்னோட அறிக்கையிலே! மேற்கொண்டு தெஹல்கா டாட் காம்ங்கிற ஒரு துப்பறியும் பத்திரிக்கை இப்பொழுதும் நடைமுறையில் இருக்கும் இந்த தேவதாசி இனமக்களின் வாழ்க்கை கதையை எழுதி இருக்கிறாங்க! வேணும்னா இதோ சுட்டி, போய் படிங்க!

இப்படி தேவதாசிகள்னா, பருவ வயதடைவதற்கு முன் கடவுளுக்கு தன்னை அற்பணித்து கொண்டு கடவுளுக்கு வாழுபவர்கள் என்றிருந்தது.அதாவது , அந்த காலத்திலே எல்லா கோயில்களையும் இது போன்ற தேவதாசிகள் வாழ்ந்து கொண்டு இருந்ததாகவும், அதிகமா எந்த கோயில்ல தேவதாசிகள் இருக்கிறாங்களோ அது ரொம்பவும் பிரசித்து பெற்றதுன்னு சொல்லக் கேள்வி!அப்படி வாழ்ந்து வந்தவர்கள் ஆண்டவனை ஆடிப்பாடி மகிழ வைப்பதற்காக கற்றுக்கொண்ட கலை தான் இந்த பரதநாட்டியம்னு சொல்லக்கேள்வி. அப்படி கோயில்களில் வாழ்ந்த கலை, அதுவும் கீழின ஜாதியினரால் போற்றி வளர்க்கப்பட்ட கலை இன்னைக்கு அரங்குகளில் மேல் ஜாதியினத்தாரல் அதிகம் விரும்ப பட்டு போற்றி, அந்த கலையின் வடிவம் பெரிதும் பாராட்டபட்டு வர்துன்னா அதுக்கு முக்கிய காரணம் ருக்மணி தேவி அருண்டேல் ('Rukmini Devi Arundale')ங்கிற அம்மையாரால் தான். எப்படின்னு பார்ப்போம் வாங்க!

பல நூற்றாண்டுகளாக, இந்த கலையை தொன்று தொட்டு வளர்த்தது தஞ்சாவூரில் இருக்கும் சில குடும்பங்கள், அதாவது 'நட்டுவனர்' என்கிற அந்த குடிகள் தான் வளர்த்தது இந்த கலையை. பெரும்பாலும் இது கோயில்களில் ஆண்டவனுக்கு பூஜை பண்ணும் நேரங்களிலும், பிறகு விழாக்காலங்களிலும் கோயிலில் உள்ள கொலுமண்டபத்தில் ஆடினக்கலை, கொஞ்சம் கொஞ்சமா அரச சபைகளில் ஆடப்பெற்று, ராஜாக்களையும், இளங்குமரர்களையும் மகிழ்விச்சு, அந்த காலத்தில் பொழுது போக்கும் கலையாக மாற்றப்பட்டது. கொலுமண்டபத்தில் ஆடின ஆட்டம் அரண்மணையில் ஆடப்பெற்று, பிறகு ஆட்டத்தில் மயங்கி, அப்பெண்களிடம் மயங்கி, அப்புறம் அந்த மாதிரி போனக்கதை தான் இது! இதை ரொம்ப நல்லா சொல்லி இருந்த படம் நம்ம சிவாஜி நடிச்ச 'தில்லானா மோகனாம்பாள்' இந்த கதை நம்ம ஊர்ல மட்டுமில்லை, பக்கத்திலே இருக்கிற கேரளாவில ஆடுற அந்த மோகினி ஆட்டமும், தேவதாசிகள் ஆடுன ஒன்னு தான்!

ஆனா இந்த பரத நாட்டியக்கலை ஒன்னும் சும்மா கையை காலை அப்படி இப்படி ஆட்டிகிட்டு போற 'floor dance' இல்லை! இதற்கென உண்டான சட்டதிட்டங்களுடன், பரிபாஷைகளும், வழிமுறைகளும் கொண்ட ஒரு தனி விஞ்ஞானம்! 'பரதமுனி' ங்கிற முனிவர் தோற்றுவித்த கலை, கட்டுபாடுகளுடன்கூடிய ஒரு ஆட்டத்தொகுப்பு! அதாவது பரதத்தின் முக்கிய அங்கம் எனக்கருதப்படும் பாவம், ராகம், தாளம் தான் முக்கியம். இதன் செயல்முறை தத்துவம் 64 அடிப்படை கோட்பாடுகளை கொண்டு, கை, கால், முகம், உடம்பினை ஒருங்கினைத்து பாவங்களை ராகத்திற்கேற்பவும் தாள சுதி நயத்துடன் ஆட்ட அசைவுகளை வெளிபடுத்துவதே! இன்னைக்கு ஆடிக்கிட்டிருக்கிற கலைக்கு வடிவம் கொடுத்தவங்க 18ம் நூற்றண்டில் பாண்டநல்லூர்ல வாழ்ந்த நட்டுவனர், பொன்னையா, சின்னையா, வடிவேலு, சிவானந்தம்னு, அதற்கப்பறம் பாண்டநல்லூர் மீனாட்சி சுந்த்ரம் பிள்ளை இவங்க வழி வந்த பரத நாட்டிய வித்துவான்!

இப்படி வாழ்ந்த இந்த கலைக்கு மறுயுயிர் கொடுத்து, இன்னைக்கு எல்லாரும் இதை பழகி அரேங்கற்றம் செய்வைதை பெருமையா நினைக்கிறாங்கன்னா, அதுக்கு காரணம் நான் சொன்ன அந்த ருக்மணி தேவி அம்மையார், அவங்க ஆரம்பிச்ச அந்த 'கலாசேத்திரா', பழைய குருகுலக் கல்வி போல இதை கற்று தந்தது தான் காரனம். ஏன் இதெல்லாம் சொல்றேன்னா, இப்ப இங்க ஒரு பிலிம் பெஸ்டிவல்ல வந்த ஒரு படம் 'சிருங்காரம்', அதை டைரக்ட் பண்ணது, 'சாரதா ராமநாதன்'ங்கிற அம்மணி! இந்த படம் அந்த தேவதாசி முறையில் வந்த பரதக்கலை, பெண்ணியம், சமூக நிலைப்பாடுகள், எல்லாம் கலந்த கலவையாக வந்தது, ரசிச்சு பார்க்கக்கூடிய ஒரு படம்! சினிமான்னா என்னான்னு தெரியாத ஒரு பெண்மணி அழகா எடுத்து வந்த படம்! இந்த படத்திலே பணியாற்றியவர்கள் எல்லாருமே ஜாம்பாவான்கள், விவரம் வேணும்னா இந்த சுட்டி போய் பாருங்க!

இந்த படம் நான் சொன்ன அந்த தேவதாசிகளின் கலை நயத்தையும், அவர்களின் மீது கொண்ட தவறான அப்பிப்ராயத்தை மாற்றவும் அவர்களான சரியான இடமும், அவர்கள் போற்றிய இந்தக்கலையின் மேன்மையை தெரிவிக்க வந்த ஒரு படம். இந்த படத்தோட கதாநாயகி ஒரு தேர்ந்த பரதநாட்டிய கலைஞர், அந்த காலத்தில் கோயில்களில் ஆடிக்கொண்டு கலைக்காக உயிரையே விடக்கூடிய அம்மணி. அப்பொழுது உள்ள வழக்கப்படி, கதாநாயகி ஒரு பெரிய நிலச்சுவாந்தாருக்கு ஆசை நாயகியாவும் இருப்பாங்க. அப்ப, அந்த நிலச்சுவாந்தார் தன்னுடய அரசியல் லாபத்துக்காக, ஒரு விருந்துக்கு வந்த பிரிட்டீஷ் கலெக்டரை குஷிபடுத்த அவங்க முன்னாடி பரதம் ஆடுன்னு சொல்றப்ப, மறுத்து, செல்வசெழிப்பான வாழ்க்கைகையை துறந்து, அவளின் தாய் கூறியும் மறுத்து, கலைக்காகவும், பெண்ணிய கண்ணியத்தை காக்கவும் எல்லாத்தையும் இழந்த வாழும் வாழ்க்கை மேற்கொள்வதாக முடியும் படம்! இதிலே விஷேஷம் என்னான்னா, ஒரு சாதாரண பெண்மணி, நம்மல மாதிரி சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்தி வந்த ஒரு பெண்மணி துணிந்து இந்த பரதக்கலை மேம்பாட்டையும், அதன் மூல வழிதாரர்களான தேவதாசிகளின் உண்மை நிலை, கலைக்காக அவர்கள் எடுத்துக்கொண்ட அர்பணத்தை மேம்பாட்டை எப்படி சமூகம் அவர்களை சூரையாடி தவறான கண்ணேட்டம் ஏற்படுத்திச்சுன்னு காண்பிக்க ஒரு சினிமா படம் எடுத்து எல்லாருக்கும் காண்பிச்சது ஒரு பெரிய மகத்தான செயல்!

இதிலே ஒரு 'Irony' பார்த்தீங்களா, கீழ்மட்ட நிலையினர் கற்று வளர்த்த இந்த கலை, அதை கொண்டாடி வளர்த்தவர்களை கீழ்நிலையாக பார்த்த அன்றைய சமூகம், ஆனால், இன்று அந்த கலையின் பெருமைகளை உணர்ந்து, சமூக மேல்மட்டத்தோர் போற்றி பண்பாடும் கலையாக திகழ்வதை!இது தான் காலத்தின் கோலம் என்பதோ!

25 comments:

said...

//இந்த தேவதாசி முறை இப்ப அதிகமா இல்லாம போனாலும், அதிகமா 1920கள்ல நடைமுறையில இருந்த விஷயம். ஆங்கிலேயர்கள்ல ஆட்சியின் போது இது களையப்பட்டதுன்னு படிச்சிருப்போம்! //

தேவதாசி முறையை ஒழிக்க சட்டமன்றத்தில் வாக்குவாதம் நடந்தது. இது தெய்வத்திற்கு செய்யும் சேவை, எனவே இதை மாற்றக்கூடாது என முழங்கியவர் தீரர் சத்தியமூர்த்தி. டாக்டர் முத்துலட்சுமி சரியான பதிலடி கொடுத்தவுடன் எதிர்தவர் சுருண்டுகொண்டனர்.

//'பரதமுனி' ங்கிற முனிவர் தோற்றுவித்த கலை, கட்டுபாடுகளுடன்கூடிய ஒரு ஆட்டத்தொகுப்பு! அதாவது பரதத்தின் முக்கிய அங்கம் எனக்கருதப்படும் பாவம், ராகம், தாளம் தான் முக்கியம்.//

இதை பலமாக மறுப்போர் உண்டு. பரதம் பரதமுனியால் தோற்றுவிக்கப்பட்டதில்லை. தமிழ்நாட்டின் பழங்கலைகளில் ஒன்று என்று படித்தாக ஞாபகம். ஏதேனும் சுட்டி கிடைத்தால் பதிவிடுகிறேன்.

said...

// இதிலே ஒரு 'Irony' பார்த்தீங்களா //

மிக அருமை!!

நல்ல பதிவு!!

நன்றி!!

said...

ஸ்ரீரங்கத்தில் கடைசி தலைமுறை தாசி இப்பத்தான் இறந்தாங்களாம். கர்நாடகா, ஆந்திரா கிராமங்களில் நேர்சையாய் பெண் குழந்தை பிறந்தவுடன் அதை கோவிலுக்கு ( ஊருக்கு) நேர்ந்துவிடுவது இன்றும் உண்டு.

said...

வருகைக்கு நன்றி அருண்மொழி, பரதமுனி தான் பரதக்கலையை தோற்றுவிச்சதுன்னுனு பரவலா அறிஞ்ச ஒன்னு! ஆனா தமிழ்நாட்டின் பழங்கலைகளில் ஒன்றா இருக்கலாம். அந்த காலத்திலே சாதரணகுடி மகனுக்கு தெருக்கூத்து எப்படி ஒரு பொழுது போக்கு அம்சமா இருந்ததோ, அது போல இந்த ராஜாக்கள், மந்திரிகளை ஆடிப்பாடி மகிழ்விக்க, அந்தப்புர நடனங்கள் இந்தியா முழுக்கவே இருந்த ஒன்னு. அப்புறம் ஒன்னு, இந்த அந்தப்புர நடனம், கேளிக்கைகளை முகலாய சாம்ராஜ்ய மன்னர்கள் adopt பண்ணது இந்து ராஜாக்கள் கிட்ட் இருந்து தான், அதை 'மொஜிரா'ன்னு சொல்லி வடநாட்டில் இன்னும் ஆடி கொண்டிருக்கும் குடும்பங்கள் நிறைய உண்டு. அதுவும் நவாப்புகள் ராஜ்யமான லக்னோ, மற்றும் மத்திய பிரதேச ஊர்களில் இன்னைக்கும் பார்க்கலாம்!

said...

சிவபாலன், நன்றி!

said...

உஷா, தாசிகள் முறை அதிகம் இருந்தது இந்த திருச்சி, தஞ்சாவூர் ஜில்லா பக்கம் தான்! இதுக்குன்னு ஒரு பெரிய கிராமமே திருச்சி பக்கத்திலே இருந்தது! அங்கே, நீங்க சொன்ன மாதிரி பொறந்த பொம்பள புள்ளைங்களை சாமிக்கு நேர்ந்து விட்டுக்குவாங்கன்னு நானும் கேள்விபட்டிருக்கேன்!

said...

Nice one. Have linked this in Desipundit
http://www.desipundit.com/2006/05/22/devadasi/

said...

தங்களது சமீபத்திய பதிவுகள் அனைத்தும் கருத்துச்செறிவுடன் இருக்கின்றன. தொடருங்கள்.

said...

வருகைக்கு நன்றி டுபுக்கு! மற்றும் உங்கள் தேசி பண்டிட் தொடுப்பிற்கும் நன்றி!

said...

வெ. நா, தமிழ்நாட்டில் இன்னும் இந்த கொடிய பழக்கம் இருக்கிறது என்றா சொல்கிறீர்கள்? இப்பழக்கம் மற்ற மாநிலத்தில், முன்னேறாத கிராமங்களில், படிப்பறிவில்லாத சமூகங்களில் காணப்படுகிறது.

said...

விராலிமலைன்னு திருச்சியிலிருந்து மதுரை போறவழியில் ஒரு ஊர் இருக்கு அங்கேயும் இந்த மாதிரி ஆட்கள் நிறைய இருந்ததா கேள்விப்பட்டிருக்கேன். இப்போ அங்கே விபச்சாரம் தான் நடக்குது.

எங்க காலேஜ் பசங்க சாமன் சர்வீஸ்னு சொல்லிக்கிட்டு மாசத்துக்கு ஒருதடவை போய்வருவதாகவும் ஒரு வதந்தி எங்க காலேஜில் உண்டு.

said...

மேலே சொன்னது, நான் சிறு வயசில் கேள்விபட்ட செய்தி, இன்றைய நிலவரம் என்னான்னு தெரியல்லை

said...

மோகன் தாஸ், அப்ப இன்னும் விராலிமலை சமாச்சாரம் இருக்குன்னா, உஷா, இதோ நீங்க கேட்ட கேள்விக்கான பதில்!

ஆனா, விராலிமலைக்கிராமத்திலே அந்த இனத்தவர், சமூகத்தின் கீழ்மட்டநிலையில் உள்ளவர்கள் இத்தேவதாசிக்குல மக்கள், ஆனா பரதம் ஆடுனாங்களாங்கற சரித்திரம் எனக்கு தெரியாது!

said...

நாட்டியமாவது ஒண்ணாவது! சின்ன பொண்ணுங்க, ஊரு பெருசுங்க... என்னத்த சொல்ல? இதுல இன்சியல் இல்லாத குழந்தைகள் வேறு அந்த சிறுமிகளுக்கு. பிறகு வயிற்றை கழுவ, இந்த தொழில். கணிணியுகத்தில் இப்படியும் நடக்குது :-(

said...

//சின்ன பொண்ணுங்க, ஊரு பெருசுங்க... என்னத்த சொல்ல?// நல்லா எதுகை மோனையோட துயரத்தை சொல்லீட்டீங்க-:)

said...

நல்ல பதிவு.

இப்ப இந்த 'இனம்' ஒழிஞ்சுருச்சுன்னாலும்,

ரொம்ப மேல்மட்டத்துலே என்னென்னவோ நடக்குதாம்.

ஆகக்கூடி,ஊர்ப்பெருசுங்க மாறவே இல்லை போல இருக்கு.

said...

வாங்க அரையணா, நீங்க சொல்ற மாதிரி கடைசியிலே அதை கெட்ட வார்த்தையாக்கிட்டாங்க!
//அதனால் ஊர் பெருந்தலைகளுடன் உறவு வைத்து இருக்கபட்டனர்// இந்த பெருசுங்க பண்ற லோலாயாளதான் எல்லாமேன்னு சொல்லுங்க!

said...

துளசி, இப்ப தான் பெருசுங்களை பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன், நீங்களும் ஊர்ப்பெருசு தான்ட்டீங்க!

said...

//ஆனா இந்த பரத நாட்டியக்கலை ஒன்னும் சும்மா கையை காலை அப்படி இப்படி ஆட்டிகிட்டு போற 'floor dance' இல்லை! இதற்கென உண்டான சட்டதிட்டங்களுடன், பரிபாஷைகளும், வழிமுறைகளும் கொண்ட ஒரு தனி விஞ்ஞானம்! 'பரதமுனி' ங்கிற முனிவர் தோற்றுவித்த கலை, கட்டுபாடுகளுடன்கூடிய ஒரு ஆட்டத்தொகுப்பு! அதாவது பரதத்தின் முக்கிய அங்கம் எனக்கருதப்படும் பாவம், ராகம், தாளம் தான் முக்கியம். இதன் செயல்முறை தத்துவம் 64 அடிப்படை கோட்பாடுகளை கொண்டு, கை, கால், முகம், உடம்பினை ஒருங்கினைத்து பாவங்களை ராகத்திற்கேற்பவும் தாள சுதி நயத்துடன் ஆட்ட அசைவுகளை வெளிபடுத்துவதே!// இதுல நான் ஒன்னு சொல்ல விட்டு போச்சு, 'சலங்கை ஒலி' படம் பார்த்தீங்களா, அதில கமலஹாசன், எஸ்பி சைலஜா முதமுதல்ல ஆடின ஆட்டத்தை த்ப்புன்னு விமரிசிச்சு எழுதுவாரு, பிறகு வந்து சண்டை போடும் போது அந்த ராகம், தாள சுதிநயங்களுக்கு பரதத்திலே உள்ள அசைவுகள், கோட்பாடுகளை விளக்கி ஆடி காட்டுவாரில்லை, அது அப்ப எனக்கு ஏதோ காட்சி மோதலுக்கு சுவராசியமா இருந்ததே ஒழிய,இந்த கோட்பாடுகள் பத்தி அப்ப ஒண்ணும் தெரியாது! இப்ப அதை நினச்சு பார்த்தேன், அதான்..!

said...

சலங்கை ஒலியிலே கமலஹாசன் பண்ற டிமான்ஸ்ட்ரேஷன் பத்தி யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்களேன்!

said...

பாபா. இந்தத் தலைப்பைப் பற்றியும் இன்னும் நிறைய எழுதலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் ஆங்காங்கே தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். :-)

said...

குமரன், இதிலே உங்களுக்கு தெரிஞ்சதை எழுதுங்களேன்!

said...

இந்த தேவதாசி முறை இன்னும் மகாரஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் இருப்பதாக கேள்வி. எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால் லக்னோவில் இப்பொழுதும் இருக்கிறது. டெல்லியிலும் சில இடங்களில் இரகசியமாக நடத்தப்படுவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

said...

நல்ல பதிவு! தொடருங்கள்! ஆனால், சிருங்காரமும் தேவதாசிகளும் பரதமும் என்ற தலைப்புக்கு ஏற்றார்போல பதிவு இருக்கும் என்றுஎதிர்பார்த்தேன். பரதத்தில் சொல்லப்படும் சிருங்கார ரசம்என்பது பாலியல் இன்பத்தை முழுமையாக தூண்டவும், அடையவும் உதவும் என்று நண்பன் ஒருவன் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்காகத்தான் பொண்ணுகக்கு ஆடத்தெரியுமா? என்றெல்லாம் பெண்பார்க்கையில் கேட்கிறார்கள் போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. அது உண்மையா என்பது பற்றி யாரேனும் அராய்ந்தால் நன்றாக இருக்கும்.

said...

Hi,

Have you had a chance to read the famous novel "Things fall apart"?