Monday, April 17, 2006

இது எலெக்ஷன் டைம்!

இந்த தேர்தல் இருக்கே, இது தான் என்னுடய 'Extravert Character' ஐ முதன் முதல்ல வெளிக் கொண்டுவர காரணமா இருந்த ஒன்னு! அப்ப, நான் இரண்டாவதோ இல்ல மூணாவதோ படிச்சிக்கிட்டு இருந்த நேரம். அது பார்லிமெண்டுக்கும், சட்டசபைக்கும் சேர்ந்து நடை பெற்ற தேர்தல்னு நினைக்கிறேன். 1971ல நினைக்கிறேன். அப்ப காங்கிரஸ் பிரிஞ்சு, ஒன்னு இராட்டை சின்னத்தோடயும், இன்னொன்னு பசுகன்று சின்னத்தோடயும் தேர்தல்ல போட்டியிட்ட நேரம். நான் சும்மா எங்க கடைக்கு போயிருந்தப்ப, எங்க கடைக்கு எதிர்த்தாப்பல நல்ல சின்னதா காங்கிரஸ் கட்சி ஆபீஸ், கூரையிலனால மேஞ்ச ஒன்னு, அதில பேப்பர், நோட்டீஸ்னு, அப்புறம் மைக் போட்டு சிவாஜி பாட்டு எல்லாம் போட்டு, அப்ப அப்ப நிறுத்தி மைக்ல பேசி ஓட்டு சேகரிச்சாங்க, அம்மா அய்யா எல்லாரும் ஓட்டை ராட்டை சின்னத்துக்கு போடனும்னு. நான் கொஞ்சம் துறு துறுன்னு இருப்பேன். என்னையை அந்த கட்சி ஆபீஸ்ல கூட்டி வச்சு, மைக்கை கைல கொடுத்து, இந்த மாதிரி நடுவில நடுவில பேச சொல்லி சும்மா உட்காரவச்சுட்டு போய்ட்டாங்க. நானும் சும்மா வீரமா, வளைஞ்சு, நெளிஞ்சு பல குரல்கள்ல பேசி அந்த கடை வட்டாரத்தை ரொம்ப கவர்ந்திழுத்தேன் என் பேச்சால. எல்லா கடைக்காரங்களும், யாரு மைக்கில பேசிறதுன்னு கட்சி ஆபிஸு வரை ஒரு எட்டு வச்சு வந்து பார்த்துட்டு போனாங்க. நம்ம பேச்சுக்கும் நல்ல வரவேற்பு இருந்ததால எலெக்ஷன் முடியும் வரை தினம் வந்து பேச சொல்லி சும்மா சாக்லேட் எல்லாம் வாங்கி கொடுத்து என்னை உற்சாகப்படுத்தினாங்க!

எதுக்கு சொல்ல வரேன்னா, இது நமக்கு தைரியமா எப்படி மேடைகள்ல பேசனும்னு அச்சாரம் போட்டு கொடுத்த நிகழ்ச்சி. அதுக்கப்பறம், இந்த அரசியல், தேர்தல் எல்லாம் கொஞ்சம் ஆர்வத்தோட கவனிக்க காரணம், என்னோடய அண்ணன் ஒருத்தர் அரசியல் இருந்த தால. அதுவும் நான் எம்ஜிஆர் ரசிகன், அவரும் அந்த அதிமுக வில உறுப்பினரா இருந்து நல்ல வளர்ந்த நேரம். அப்புறம் எங்க பெரிய அண்ணன் நல்ல விமரிசகர், எல்லா கட்சிகளையும் நல்லா விமரிசனம் பண்ணக்கூடியவர். அவர் வருவாய் துறையில வேலை செஞ்சதாலே, அரசாங்க சட்ட திட்டங்கள், எப்படி ஏழை பாளையை போய் சேருது,இல்ல எந்த விதமா பாதிக்கிதுன்னு அழகா அப்ப அப்ப எங்க வீட்ல இருக்கிற பெருசுங்க, வர விருந்தாளிங்க கூட கதை அடிச்சிக்கிட்டு இருப்பார். அந்த கதைகளை அங்கன உட்கார்ந்து கேட்கிறதில நமக்கு ஒரு சுவாரசியம்!

அப்பதான் இந்த தேர்தல் சின்னங்கள் பத்தி பேச்சு வந்தப்ப, திமுகவின் புத்திசாலித்தனதை அழகா சொல்லிக்கிட்டிருந்தார், அதாவது தேர்தல் சின்னங்கிறது சரியா படிக்காத பாமரனையும் போய் சேரனும். அதை அவங்களே கட்சி உதவி இல்லாம் வரஞ்சு promote பண்ணனும். அப்படி பட்ட சின்னத்தை தேர்ந்தெடுப்பதில் அண்ணாதுரையின் புத்திசாலித்தனத்தை சொல்லுவாரு. இந்த உதயசூரியன் சின்னம் ரொம்ப ஈஸி, இரண்டு கோடு போட்டு மலையை போட்டுடலாம், பிறகு ஒரு அரை வட்டம் அதுக்கு மேலே ஒளி கோடுகள், எவ்வளவு ஈஸி பாருங்க. அதே மாதிரி எம்ஜிஆரும் தன் கட்சி சின்னத்தை தேர்ந்தெடுத்தப்ப இரட்டை இலை தேர்ந்தெடுத்தார். அதுவும் சுவத்தில வரையறுது ரொம்ப ஈஸி. அதுக்காக இவெங்க சண்டை போட்டு இந்து தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையத்துக்கிட்டருந்து வாங்கினாங்க. மத்தபடி பசுகன்று, பம்பரம், மாம்பழம் அப்படின்னு அதுங்களை வரஞ்சு அவ்வளவு ஈஸியா ஷேட் கொடுத்திட முடியாது எல்லாராலயும்! இன்னும் விஜயகாந்துக்கு சின்னமே கிடைக்கிலன்னு கெள்விபட்டேன். அவரு இதுல கொஞ்ச்ம் புத்திசாலித்தனத்தை கடைபிடிப்பாரன்னு தெரியல்லை! இன்னும் இந்த சின்னங்கள் எத்தனை காலம் இருக்கப்போதோ தெரியல்லை. எப்ப எல்லாருக்கும் படிப்பறிவு வந்து பேரை படிச்சி ஓட்டு போடும் நிலமை எப்போது நம் நாட்டுக்கு வரப்போகுதுன்னு தெரியல்லை!

இந்த எலெக்ஷன்ல சீட்டு வாங்கிறதும் ஒரு பெரிய அரசியல், இதை நான் நேரில இருந்து பார்த்தவன்ங்கிறதால சொல்றேன்! நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எங்க அண்ணன் அதிமுகவில சேர்ந்து அப்ப முசிறி புத்தன், சோமசுந்திரம் அகியோரோட செல்லப்பிள்ளை மாதிரி இருந்து, கொஞ்சம் வாய்ஸ் உள்ள ஆளா வளர்ந்திருந்த நேரம். அப்ப 1977ல வந்த எலக்ஷன்னு நினைக்கிறேன். திருச்சி ஒன்னு தொகுதில எல்லாரும் எதிர்பார்த்த வேட்பாளர் மதிவாணன் ஒருத்தர், அவருக்குத்தான் 100 சதவீதம் சீட்டுன்னு எல்லாரும் நினனச்சிருந்த நேரம். ஆனா வேட்பாளர் பட்டியல் வந்தப்ப பாத்திரக்கடை வச்சிருந்த மாணிக்கம் என்பவருக்கு எம்ஜிஆர் சீட்டு கொடுத்திட்டாரு! அதுக்கு ஒரே காரணம், மாணிக்கம் கொடுத்த பெரிய பணபொட்டி தான். அது தெரிஞ்சு மாணிக்கத்தை எங்க அண்ணன் அவங்க தோஸ்த்து எல்லாம் மாணிக்கத்தை அடிச்சு பெரிய ரகளையா போயி, கட்சி மேலிடிம் தலையிட்டு, மாணிக்கத்துக்கு வேலை செய்ய சொல்லி எங்க அண்ணனுக்கு உத்திரவு போட்டுட்டாங்க! அவரும் அப்படியே செஞ்சுக்கிட்டிருந்தாரு. ஒரு தடவை எம்ஜிஆர் திருச்சிக்கு பேச வந்தப்ப கூட்டத்தில ஆரம்பிக்க முன்ன சொன்னது, எங்க அண்ணன் பேரை கூப்பிட்டு, அவரை அவரு வண்டியில போயி உட்காரச் சொன்னது தான், அப்புறந்தான் பேச்சை ஆரம்பிச்சு முடிச்சுட்டு போனார். அவரு அடுத்து முசிறி போயி பேசனும், அதுக்குள்ள எங்க அண்ணனுக்கு காருக்குள்ள வச்சு நல்ல பூசை எம்ஜிஆருக்கிட்ட. சும்மா மொத்து மொத்தி அப்புறம் முசிறில இறக்கி விட்டுட்டு, ஒழுங்கா மாணிக்கத்துக்கு வேலை செய்யனும்னு சொல்லிட்டு போயிட்டார். இது நிறைய பேருக்கு தெரியாது ஆனா எங்களுக்கு தெரியும்!

ஆக வேட்பாளர்கள் தேர்வு எப்பவுமே இப்படிதான். பெரும்பாலும் ஓட்டு போடறவங்க, அரசாங்கம் எப்படி நடந்தது போன ஆட்சியிலே, இல்ல அதுக்கு முன்ன ஆட்சி செஞ்சவங்க என்னா செஞ்சாங்கன்னு தீர ஆராஞ்சு அதுக்கு தகுந்த மாதிரி ஓட்டு போடறதில்லை. எல்லாமே எதோ அந்த நேரத்தில கிடைச்ச ஆதாயம், பிறகு தன் கூட இருக்கிற சொந்தபந்தங்கள் ஏதோ ஒரு வகையில எந்த கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போட சொல்லி வற்புறுத்திவதால போடும் ஓட்டுகள் தான். ஒரு தடவை என் தந்தை ஓட்டு போட்டுட்டு வந்து சொன்னாரு, அந்த வேட்பாளர் படிச்சது B.E., அது நீ படிச்ச படிப்பு அதுனால நான் ஒட்டு போட்டேன்னு! இது போல கல்வியை பார்த்து போட எத்தனை பேரு முன்வருவாங்க. அவருக்கு படிச்சவங்க நல்லது செய்வாங்கன்னு மனசுல தோண்றமாதிரி எத்தனை பேருக்குத் தோணும்! அப்படியே இல்லனாலும் நம்மல மாதிரி படிச்சவங்க ஆராஞ்சு நல்ல வேட்பாளர்களை நம்ம வீடு பெரியவங்களுக்கு வழிகாட்டலாம். அப்படியே செய்யலாமுன்னு இந்த கட்சி அறிக்கைகள்(Manifesto) பார்த்து அப்படியே கொஞ்சம் மத்த விஷயங்களையும் பீராயலாமுன்னு பார்த்தா சோகந்தான் போங்க!

இந்தோ தமிழ்நாடு அரசாங்க web siteல தமிழக நிதி நிலமை அஞ்சு வருஷத்துக்கு முன்ன இருந்ததுக்கும்(White Paper on Tamil Nadu Government's Finances), இப்ப இடைக்கால வரவு செலவு திட்டத்தில அறிவிச்சிருக்கிற முன்னேற்றத்தையும்(இந்த அரசாங்கம் செஞ்சதா சொல்றதை)விமரிசச்சு, திமுக, அதிமுக கூட்டனிகளை தெளிவா சொல்ல நம்ம ப்ளாக்கருங்க யாரும் முன் வரல்லையே. நாமலும் சுட சுட கவர்ச்சி செய்திகளை தானே இந்த ஊடகத்திலை போட்டுக்கிட்டு இருக்கோம்! அழகா தேர்தல் 2006 ன்னு ஒரு தனி வகைப்பிரிவு தமிழ்மணத்தில வந்தாலும், இந்த மாதிரி இதை அழகா விமரிசனம் யாரும் இன்னும் பண்ணவே இல்லை! ஒரு கட்சியில சொலற மாதிரி 2 ரூவாக்கி அரிசி , இலவச டிவி, இலவச மின்சாரம் துணி நெய்றவங்களுக்கு(ஏற்கனவே விவசாயத்துக்கு கொடுக்கிறது எங்க போகுதுன்னு தெரியல்லை), இலவச கேஸ் அடுப்பு, இது எல்லாம் சாதரண படிக்காத மக்களை கவரும் எலெக்ஷன் அறிக்கைகள். இன்னும் எத்தனை காலத்துக்கு இதையே சொல்லிக்கிட்டு திரியப்போறாங்களோ! அப்புறம் இலவசமா 2 ஏக்கர் நிலம், இருக்கிற தமிழக பூமில விலைநிலங்கள் ஒரு 21 சதவீதம் தான் அரசாங்க கணக்குப்படி. எந்த நிலத்தை பட்டா போட்டு எங்க கொடுக்கப்போறங்கன்னு தெரியல்லை! மேற்கொண்டு தமிழக அரசு web siteல இருக்கிற எல்லா ரிப்போர்ட்டும் படிச்சி கொஞ்சம் ஆராயலாமுன்னு பார்த்தா, எல்லாம் அரதப்பழசு, அதுவும் 'Tamil Nadu - An Economic Appraisal 1999-2000' படிச்சா அஞ்சு வருஷ முன்னாடி கணக்கு. என்னத்தை மக்கள் படிச்சு, என்ன நிலைமையை தெரிஞ்சுக்க போறங்கன்னு ஒன்னும் தெரியல்லை!

கடைசியில இந்த எலெக்ஷன்ல என்னதான் நடக்கிதுன்னு பார்க்கப்போனா, கவர்ச்சியா சிம்ரன், விந்தியா, கோவை சரளா மேடையில பேசற படங்கள் போட்டு ஜாலியா வச்சிருக்காங்க! அவ்வளவுதான்! இன்னய தேதிக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்க இந்த மாதிரி ஏழைபாளைங்களை முன்னேத்த எங்கயோ போய்கிட்டிருக்கு. ஈத்தோப்பியாவில மக்களை நேரிடையா பேட்டி கண்டு, அங்க உள்ள கஷ்ட நஷ்டங்களை எடுத்தி சொல்லி up to date ஆ BBC website ல பதிவு பண்ணி, இந்த ஆப்பிரிக்க உதவி தொகைகள் ஒழுங்கா எப்படி போய் சேரணும்ங்கிறதுக்கு வழி வகை செய்றாங்க! அதையும் அழகா Blog பண்ணி விமரிசனம் செஞ்சு விழிப்பூட்டிகிட்டுருக்காங்க. வேணும்னா இந்த சுட்டியில போய் பாருங்க! நம்மலும் இந்த மாதிரி மக்களை நேரில் கண்டு ஆட்சி செஞ்சவங்க குறை நிறைகளை சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'Journalism' நம்மூர்லயும் வராதா????

7 comments:

said...

You may be right, Abiramam!
Thanks for the visit

said...

I can empathize with your views which are so touching!
Will GOD save us this time?

Please permit me to post my copy kavithai here!
Thanks.
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே!

சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்

உத்தமர் போலவே பகல் வேஷம் போட்டு
[இனிமேல் என் சொந்த சரக்கு!]
அப்பாவித் தமிழரை இருவரும் சேர்ந்து

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே!

இவ்வாண்டு அவர்களை அனுப்பி வைப்போம்
இனி எந்நாளும் அவர்களே ஆளாமல் செய்வோம்
திறனுள்ள ந்ல்லோரைத் தேர்ந்தெடுப்போம்-- நம்
தமிழ்நாட்டின் நலனென்றும் மனதில் கொள்வோம்

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே!

said...

வருகைக்கு நன்றி எஸ்கே அவர்களே!
மிகவும் வேண்டிய கவிதை!

said...

Unga annan enna anaaru? ippo avar entha katchyil irrukaar?

said...

// இந்த மாதிரி இதை அழகா விமரிசனம் யாரும் இன்னும் பண்ணவே இல்லை! //

True. This is what I am thinking about.

A good blog. Thanks.

//எம்ஜிஆர் சீட்டு கொடுத்திட்டாரு! அதுக்கு ஒரே காரணம், மாணிக்கம் கொடுத்த பெரிய பணபொட்டி தான். //

So, this kind of Politics were started long before!?!.

said...

தேவ், எங்க அண்ணன் இப்ப இறந்திட்டாரு! ஆனா, எம்ஜிஆர் போயி ஜெயலலிதாவோட அதிமுகவில இருந்தாரு, சும்மா கட்ட பஞ்சாயத்து, அது இதுன்னு ஒரு லோக்கல் அரசியல்வாதியா வாழ்ந்து, மாரடைப்பால மரணம் தழுவினார், ஒரு நாலு வருஷத்துக்கு முன்னே(:

said...

But Sivibalan, nobody has done it, that's sad(: Even, we educated community are not interested in doing such analysis, and only interested in publishing sparkling news, look at the catagory, தேர்தல்-2006, how do we expect lesser educated or un educated masses!

Yes, this kind of politics were in all time!