Saturday, March 25, 2006

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் - ஓர் ஆராய்வு

இந்தியா எப்பொழுதும் இல்லாத வகையில் இப்பொழுது மிக வேகமாக மாறி வருகிறது இந்த உலக அரங்கில். இந்த அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம், மார்ச்சு 2ம் தேதி கையெழுத்திடப்பட்ட, இரு சாரார் ஒப்பந்ததை சற்றே நீங்கள் கூர்ந்து கவனித்தால், பல உண்மைகள் விளங்கும். இந்த பன்னாட்டு அரசியலில், யாரும் யாருக்கும் அனுகூலம் செய்துவிடுவதில்லை, இந்தியாவிற்கும் இதனால் மிகப்பெரிய அரசியல் அனுகூலம் ஏற்பட்டுவிடவில்லை, இந்த ஒப்பந்தத்தால். உண்மையில் பார்த்தால், இந்த ஒப்பந்தத்தினால், அமெரிக்காவிற்கு தான் இலாபம் ஏற்பட்டுள்ளது, ஆச்சிரியப்படவேண்டாம், இதைப் பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.!

இந்த ஒப்பந்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள், அமெரிக்காவிற்கு, அதன் பொருளாதாரத்திற்கும், மற்றும் அதன் வெளியுறவு கொள்கைக்கும் மிக அதிகம். அமெரிக்க அதிபர், ஜார்ஜ் புஷ் அவர்களின் இந்திய விஜயம், அதுவும் இந்திய வர்த்தக கல்லூரிகளுக்கு சென்றதையும், மற்றும், அவர் நடத்திய சம்பாஷனைகள் இந்திய விவாசயத்துறை விஞ்ஞானிகளோடு, மற்றும் விவசாயிகளுடன் நடத்திய பரிபாஷையின் அர்த்தம், உங்களுக்கு ஏதோ, வல்லரசின் அதிபர், நம் கடைகுடிமகனுடன் காட்டிய ஆர்வத்தினை பார்த்து, நீங்கள் புளகாங்கிதம் அடைந்தால், அதன் பின்னனி என்ன என்பதை சற்றே உள்நேக்கிப்பார்த்தால், மிகப்பெரிய உண்மை விளங்கும்.

நம்முடய 'மிடில் கிளாஸ்' என்று அழைக்கப்படும் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? National Council of Applied Economic Researc (NCAER) என்றழைக்கப்படும் நிறுவனக் கணக்குப்படி, அது 5.7 கோடி, 2001-02ம் ஆண்டுகளில், அதுவே 9.2 கோடியாக உயர்ந்துள்ளது இந்த 2005-06 களில், மேற்கொண்டு, அது 15.3 கோடிகளை வரும் 2009-10களில் தொட்டுவிடும். இதன் அர்த்தம் என்னவென்று தெரியுமா, இந்த குடும்பங்கள் தான் நாம் கொண்டாட போகிற பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணகர்த்தா. புரியவில்லை?

உங்கள் அனைவருக்குமே தெரிந்த ஒன்னு கொடுத்தல், வாங்கல், அதாவது பணம் புழக்கம், என்பது, வருமானம், செலவீனத்தை பொறுத்ததே, இது தான் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை. அதை செய்யப் போகிற அந்த கர்த்தாக்கள் தான் நான் மேலே கூறிய அந்த நடுத்தரக் குடும்பங்கள். அதாவது 'Consumer Goods Sector' என்ற துறையின் வளர்ச்சி 3.4 சதவீதத்திலிருந்து, 2004களின் கணக்குப்படி, 5-6 சதவீத வளர்ச்சி, இந்த 2004-05 களில் உயர்ந்துள்ளது. அதே போல் தொழில் துறை, இந்த வருட கால் ஆண்டின் வளர்ச்சி அதற்குள்ளாக 8.4 சதவீதம் ஏற்பட்டுள்ளது, இது போன பத்தாண்டுகளுக்கு முன்னே அடைந்த ஒன்று. அதே போல, வெளி நாட்டு மூலதனம் நமது பங்கு சந்தையில், 10m பில்லியன் அமெரிக்க டாலர்களில் உயர்ந்துள்ளது. இதெல்லாம் நமது அதிவேக பொருளாதார வளர்ச்சியை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த அசுர வளர்ச்சியினால், வெளிநாட்டு மூலதனம், விவசாயம், மருத்துவம், உணவு தயாரிப்பு என்று பல்வேறு துறைகளிலும் வந்தவண்ணம் இருக்கிறது. அதுவும் அமெரிக்க கம்பெனிகள், இந்திய பொருளாதார வளர்ச்சியைக் கண்டு, முதலீட்டை செய்தவண்ணம் இருக்கின்றனர். அவர்களை பொருத்தவரை எந்த நாட்டிலே அதிக லாபம் ஈட்ட முடியுமோ அதிலே காசுக் கொட்ட தயாராக இருக்கிறார்கள். அதுவும் பாதுகாப்பான மூலதனத்துக்கு, இந்திய சட்டங்கள் வழிவகுப்பதால், இங்கே காசை கொட்ட அவர்கள் தயாராக உள்ளார்கள். இது தான் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட முதல் பொறி.

இந்த அசுர வளர்ச்சி, இந்தியாவை எங்கு கொண்டுவிடும் என்று எண்ணுகிறீர்கள்? முதலில் அமெரிக்காவின் கச்சா எண்ணைய் மற்றும் எரிவாயுவில் அவர்கள் கொண்டுள்ள உலக ஆளுமைக்கு முதலில் ஆப்பு வைக்கும். புரியவில்லையா?. நாம் அவர்களை இச்சக்திகளுக்கு எதிர்கொள்ளப் போகும் மிகப்பெரிய சக்தி! எப்படி. இந்த கச்சா எண்ணைய் மற்றும் எரிவாயுவின் தேவை, வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான, அமெரிக்கா, சைனா, இந்தியாவால் பலமடங்காக அதிகரிக்கும் போக்கும், ஸ்திரதன்மை இழந்த மத்திய ஆசிய நாடுகளின் போக்கும், தங்கு தடையின்றி கிடைத்த இந்த சக்தி, அமெரிக்காவின் ஆளுமை, மற்றும் அவர்களின் ஆடம்பர வாழ்க்கையை, கொஞ்சம் ஆட்டம் காண வைக்கப் போவதால், உள்நாட்டு கொள்கையாக, 'Advance Energy Initiative' என்று மாற்று வழி சக்தி ஆராய ஏகப்பட்ட பணத்தை கொட்டி ஆராய்ச்சியை முடிக்கிவிட்டுள்ளது.(இதைப் பற்றி, நான் ஏற்கனவே ,'வேண்டும் ஒரு புதிய ஷக்தி' என்ற பதிவு இட்டுருந்தேன், சற்றே அதை பார்க்கவும், விவரம் புரியும்!)

அவர்களின் வெளிநாட்டுக் கொள்கையாக, இந்த எண்ணைய் சக்தியை நாடும் இந்தியாவிற்கு மாற்று சக்தியான அணு சக்தி தொழில்நுட்பங்களை தங்கு தடையின்றி தருவதின் மூலம், நமது எண்ணைய் சக்தியின் தேவைகளை கொஞ்சம் இதன் மூலம் தணிப்பதால், நாம் அவ்வளவு வீரியம் கொண்டு எண்ணய் சக்திகளுக்குகாக பன்னாட்டு சந்தையில் அவர்களுடன் போடப் போகும் போட்டியை கொஞ்சம் இது தணிக்கும். அதுவே இரண்டாம் பொறி. அப்படி என்றால், அவர்களுக்கு யாரெல்லாம் பொருளாதார எதிரியாக வர இருக்கிறார்களோ, அவர்களை இப்ப்டி எதிர் கொண்டால் என்ன? ஆங்.. இங்கு தான் இருக்கிறதைய்யா அவர்களின் மிகப்பெரிய புத்திசாலித்தனம். அதுமட்டுமில்லை, இந்த அணு ஒப்பந்தம் அவர்களின் உலக அரசியலுக்கும் எப்படி துணைப் போகும் என்று ச்ற்று பார்ப்போமா?

இது வரை அமெரிக்காவின் தன்சார்ந்த கொள்கையினால், பெரிதாக எந்த லாபமும் ஏற்பட்டுவிடவில்லை. அந்த கொள்கையால் எடுத்த முடிவுகள், ஆப்கானிஸ்தானிலோ, இல்லை பாக்கிஸ்தானிலோ (அதாவது, அதன் நியூக்ளியர் விஞ்ஞானி, ஏ கூயு கான் சம்பந்தபட்ட அணு தொழில் நுட்பம் விற்பனை கொண்ட அத்தியாயத்தில்) இராக், மற்றும் இப்பொழுது இரான், என அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளின் வெளிப்பாட்டால் அமெரிக்கா பெரிதாக எந்த பயனும் பெறவில்லை. ஆகையால் அவர்கள் தன்சார்ந்த கொள்கையை விட்டு விட்டு கூட்டு கொள்கை கடைபிடிக்க ஆயுத்தமாகிவிட்டனர். அதன் முதல் அத்தியாயமே இந்த அமெரிக்க-இந்திய நட்பு, ஒப்பந்தம். அதாவது சிறந்து விளங்கும், இந்திய மக்களாட்சிமுறை, உலக ஜனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்கை அடக்கிய இந்தியாவுடன் கரம் கோர்ப்பது சாலச் சிறந்தது, என்பதே அவர்களின் வெளியுறவு கொள்கையின் முக்கிய அம்சம். இந்தியாவும் உலக அரங்கில் பீறு நடைப் போட ஆய்த்தமாகிவிட்ட வேளையிலே, அதாவது 'Regional Power' என்ற தன்மையிலைருந்து விலகி 'Global power'என்ற வளர்ச்சியினை எதிர்நோக்கி நிற்கும் இந்த வேளையிலே, இந்த நட்பு, உறவு, ஒப்பந்தம், இந்தியாவிற்கு பெரிதும் கைக்கொடுக்காவிட்டாலும் (அல்லது, எப்படி என்பதை இனி வரும் ஆண்டுகளில் தான் அறியமுடியும்), அமெரிக்காவிற்கு இது ஒரு திருப்பமான கட்டம். அதாவது காலத்தின் கட்டாயம். எப்படி என்று கேளுங்கள்!

ஆப்கானத்தில், சட்டப்படியான அரசாங்கம் அமைப்பதில் மிகப்பெரிய வெற்றி ஏதும் அமெரிக்காவிற்கு கிட்டவில்லை. பாக்கிஸ்தான் இன்றும் அதற்கு இடைஞ்சலாக, தலைபானையும், அல்கெய்தாவையும் ஒரு பக்கம் வளர்த்துக்கொண்டே அமெரிக்காவிற்கு நட்புக் கரம் அடுத்த பக்கத்தில் நீட்டுகிறது. மற்றும், வளர்ந்து வரும் பாக்கிஸ்தான், சைனா உறவு அமெரிக்காவிற்கு பெரும் தலைவலி. இந்த அமெரிக்க அதிபரின் ஆப்கான் விஜயத்தில், அந்நாட்டின் அதிபர் 'ஹமீத் கர்ஷாய்' யுடன் நடந்த பேச்சு வார்த்தையில் இந்த தலைபான் மற்றும் அல்கெய்தாவின் ஆதிக்கம், பாக்கிஸ்தான் - ஆப்கான் எல்லையிலே இருந்து வருவதை பற்றி தான் பேச்சே! ஆனால் இந்தியாவின் ஈடுபாடு இதற்கு நேர் எதிர்மாறாக, குடியாட்சி அமைத்த ஆப்கானிய அரசாங்கத்திற்கு அதிக மானியம் கொடுத்து அந்த அரசாங்கம் நல்ல முறையில் நடைபெற நமது பிரதமர் வழிவகுத்து கொடுத்துவிட்டு வந்தார், சென்றமுறை அங்கு சென்றிருந்த போது.
ஆனால் பாக்கிஸ்தானோ, தான் செய்து கொடுத்த எந்த சத்தியத்தையும் நடத்திக்காட்ட வில்லை, முக்கியமாக, 9/11 சம்பவங்களுக்கும், லண்டன் பாம் சம்பவங்களுக்கு பிறகு, மதர்ஸா பள்ளிகளை மூடச்சொல்லி அமெரிக்கா வைத்த வேண்டுகோளை இன்னும் நிறைவேற்றவில்லை. அதே போல் சொல்லிக் கொள்ளும் படியாக தலைபான், மற்றும் அல்கெய்தாவின் முக்கிய தலைவர்கள் யாரையும் கைதும் செய்யவில்லை. மேற்கொண்டு மேலே கூறியது போல சைனா-பாக்கிஸ்தான் ரகசிய உறவுகள் அமெரிக்காவிற்கு பெரிதும் எரிச்சலூட்டும் ஒன்று.

இதற்கெல்லாம் பதிலடி, இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டுவதுதான் என்ற அவர்களின் மாறிய வெளிஉறவு கொள்கை. அதாவது பெரும் அசுர வளர்ச்சி கண்டு வரும் சைனாவை எதிர்கொள்ள பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆளுமை கண்டு வரும் இந்தியாவுடன் கைக் கோர்ப்பதே சாலச் சிறந்தது என்பதே, அதன் இப்போதய தாரகை மந்திரம். வளர்ந்து வரும் இந்த சக்தியை இனம் கண்டு, அதனுடன் நட்புகான என்ன ஆயுத்தம் செய்யவேண்டுமென்பதை அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து விட்டனர். அதன் செயலாக்கமே இந்த ஒப்பந்தம். அதாவது 'நிகோலஸ் பர்ன்ஸ்' அரசியல் பிரிவு இணை செயலர் அவர்கள் கூறியது, ஆசியாவை தவிர, உலகத்தின் எந்த பகுதியும் முக்கியமில்லை, அதாவது அமெரிக்காவின் தொலை நேக்கு இராணுவம், பொருளாதாரம், மற்றும் அரசியல் வளர்ச்சியில் பங்கு ஏற்க. ஆக இப்படி அவர்களுக்கு பயன் தரும் இந்த ஒப்பந்தம், மற்றும் அமெரிக்க அதிபரின் இந்த சரித்திரத்தில் முக்கியம் வாய்ந்த இந்த இந்திய விஜயம், பல ஆண்டுகளாகவே திட்டமிடப்பட்டு, இப்பொழுது தான் நிறைவெறி முடிக்கப்பட்டுள்ளது. ஆக அணு உலைகளின் ஒப்பந்தம் அமெரிக்காவிற்கே அனுகூலமே!!

3 comments:

said...

What a brilliant analysis. Great work.

One more thing, Rice has put forward her views in US congress yesterday 5th Apr 06. Though some critics spell out by Democrats, this deal will go thro successfully in US congress.

We desperately need electricity for our growth. So we do not have many options other than USA.

said...

You are right Sivabalan, the deal will be through. But many analyst says it is a bad deal. You can refer to the article in Rediff here

said...

நமக்கும் இந்த உறவாலும் ஒப்பந்ததாலும் நன்மைகள் விளைந்தால் நன்றாக இருக்கும். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல் அமெரிக்கர்கள் அவர்களுக்கு நன்மை இல்லாத விஷயத்தில் இறங்கவே மாட்டார்கள். அதனால் அவர்களுக்குத் தான் நன்மைகள் அதிகம் என்று பார்ப்பதை விட நமக்கு இந்த உறவாலும் நட்பாலும் ஒப்பந்ததாலும் என்ன நன்மைகள் என்று ஆராயவேண்டும்.