Saturday, March 18, 2006

சீனாவில் ப்ளாக்கர்களின் சாம்ராஜ்யம்

கொஞ்ச நாட்களுக்கு முன் நான் போட்ட பதிவு உன்னால் முடியும் தம்பி! - ப்ளாக்கர்களின் சாம்ராஜ்யம் இதில் நான் வளர்ந்து வரும் ப்ளாக்கர்களின் சக்தியை பற்றி எழுதி இருந்தேன். முடிந்தால் அரசங்கத்தையே கவுக்கும் சக்தி இந்த ப்ளாக்கர்களுக்கு உண்டு என்பதை பற்றி எழுதி இருந்தேன். எப்படி இந்த ப்ளாக்கர்களின் குழுமம் (Blogosphere') இன்றய இணயம் தந்த வசதியால் எப்படி ஒரு விசுவரூபமான சக்தியாக அமெரிக்காவில் விளங்கி வருகிறது என்பதை பற்றியும் எழுதி இருந்தேன். அதேபோல் இந்த வாரம் ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது, சீனாவில் இந்த ப்ளாக்கர்கள் குழுமம் எப்படி விசுவரூபம் எடுத்து வருகிறது என்பதைப் பற்றி வந்துள்ளது. அதன் பிரசுரம் இங்கே!!


ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே அடிவயிற்றில் புளியைக் கரைக்கக்கூடிய ஒரு நாடு உண்டென்றால், அது சீனா. இன்றைக்கு, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவுக்கு வந்து, நம்முடைய பிரதமர் மன்மோகன்சிங்கோடு நட்புறவு பாராட்டுவதும்கூட, சீன பயத்தால்தான் என்று சொல்பவர்களும் உண்டு. எந்த நேரமும் தன் சக்தியால் எதுவும் செய்துவிடக்கூடிய அபாயம் சீனாவின் குணத்தில் உண்டு.

கட்டுக்கோப்பான அரசாங்கம், கொஞ்சமே கதவு திறந்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க அனுமதிக்கும் கட்டுப்பாடான நடைமுறை, வலுவான படைகள், அதைவிட முக்கியமாக ஒற்றர்கள் என்று ஒரு அரசாங்கம் ஒருவிதமான கலவைத் தன்மையோடு இருக்கிறது என்றால் அது சீனா. குடியரசு, கருத்துச் சுதந்திரம், தனிமனித உரிமை போன்ற சொற்கக்கெல்லாம் அவர்கள் அகராதியில் இடமே இல்லை. மேற்கு என்பது அவர்களுக்குப் பீதி. புஷ், மாபெரும் வில்லன்.

இதெல்லாம் இனி பூர்வக்கதையானால் ஆச்சர்யப் படுவதற்கில்ல. சுதந்திரத்த, அதன் செயல்பாட்டில் வேண்டுமானால், உங்களால் மறுத்துவிட முடியும், தடுத்துவிட முடியும். ஆனால், நீறுபூத்த நெருப்பாக மனதளவில் இருக்கும் அந்த உணர்வக் கிள்ளி எறிந்துவிட முடியுமா? சான்ஸே இல்ல. இளம் சீனர்கள் தங்கள் சுதந்திர உணர்வயும் போராட்ட உணர்வயும் வெளிப்படுத்த வேறுவேறு வழிகளக் கையாண்டு பார்த்தும், காலகாலமாகத் தோல்விதான். ஆனால், சீன நெடுஞ்சுவர் போன்ற வலிமயான அதிகாரத்தை இன்று கண்ணில் விரலைவிட்டு ஆட்டத் தொடங்கிவிட்டார்கள். பிளாக்ஸ் (Blogs) என்று சொல்லப்படும் வலைப் பதிவுகள்தான் அவர்களுக்குக் கைகொடுக்கிறது. 'பிளாக்ஸ்' எப்படி சீனாவுக்கு ஆப்பு வக்க முற்பட்டிருக்கிற என்று தெரிந்து கொள்ளப் புகும்முன், கொஞ்சம் இந்தப் பிளாக்ஸப் பற்றியும் பார்த்துவிடுவோம்.

இன்று உலகெங்கும் இருக்கும் எவரையும் இணைக்கும் இன்டர்நெட் வழங்கியிருக்கும் கொடைகளில் ஒன்று... பிளாக்ஸ். இது இணையத்தில் நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் சின்னக் குடில். உங்களுக்குப் பிடித்த நடிகை, நீங்கள் போய்வந்த ஊர், நீங்கள் ரசித்துப் பார்த்த கட்டழகி, படித்த புத்தகம், பிடிக்காத அரசியல்வாதி, ஒருகாலத்தில் முழங்கை வரை நெய்வழிந்த பார்த்தசாரதி கோயில் சர்க்கரைப் பொங்கல், காதல், கவிதை, இன்னும் என்ன வேண்டுமானாலும் எழுதி உங்கள் குடிலில் வலையேற்றலாம். மொத்தத்தில் அது உங்களுக்கான தனிப்பட்ட இடம். இணையத்தில் கட்டிக்கொண்டிருக்கும் சொந்த வீடு.

சொந்த வீடு என்றால், சுதந்திரம் அவசியம் தானே? அது இல்லையென்றால், சொந்த வீட்டுக்கு அர்த்தமே இல்லையல்லவா? கம்ப்யூட்டர் துறையில் கோலோச்சும் இளம் சீனர்கள் தங்கள் வாய்ப்பூட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய வடிகாலாக பிளாக்ஸைக் கண்டார்கள். இது நாள் வரை இல்லாத கருத்துச் சுதந்திரத்தை இணையத்தில் அவர்கள் கண்டார்கள். இன்று சீனாவில் கிட்டத்ததட்ட 111 மில்லியன் இணையப் பயனாளிகள் இருக்கிறார்கள்.

அப்படி என்னதான் எழுதுகிறார்கள்? ஒரு குடும்பப் பெண்மணி தான் அன்று என்ன வீட்டில் சமைத்தேன் என்று ஒவ்வொரு நாம் தன் பிளாக்கில் எழுதினார். மற்றொரு பெண் லிலி, தன் பணியிடத்தில் தான் எப்படி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டேன் என்று எழுதினார். திருமணமானவர்கள் எல்லாம் எப்படித் தன்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று அவர் எழுதிய பதிவுகள் பயங்கர பாப்புலர். இதையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப சாதாரணமாகத் தெரிகிறதா? கரெக்ட். நாம் உட்கார்ந்து கொண்டிருப்பது இந்தியா என்ற சர்வசுதந்திர நாட்டில். முதல்வரிலிருந்து நாட்டின் முதல் குடிமகன் வரை எவரையும் கேள்வி கேட்பதும் விமர்சிப்பதும் நமக்குக் கைவந்த கலை. ஆனால், சீனா அப்படிப்பட்ட நாடு அல்ல.

அங்கே கம்யூனிஸ்ட் கட்சிதான் தலை, அதுவேதான் வால்... சர்வமும் அதுவே. அங்கேயும் எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் என்ன எழுதவேண்டும், என்ன எழுதக்கூடாது என்று கட்சி சொல்லும். அதைத்தான் எழுதவேண்டும். இன்றைக்கு நேற்றைக்கல்ல... ஆண்டாண்டுகாலமாக இதுதான் சீனாவின் நிலை. பத்து ஆண்டுகக்கு முன்புதான், சீனாவில் முதன்முதலாக இன்டர்நெட் நுழைய அனுமதிக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதெல்லாம் என்னவிதமான மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று யூகித்துப் பாருங்கள். மக்களின் அடிமனதில் தேங்கிக் கிடக்கும் எண்ணங்கள், கருத்துகள், வலிகள், வேதனைகள் என்று எழுத எழுத மாளாமல் போகக்கூடிய பெரும் எதிர்ப்பு உணர்வுதான் மிஞ்சியிருக்கிறது.

உதாரணமாக, 'ஃபலூன் காங்க்' என்ற ஆன்மிக இயக்கம் அங்கே இருக்கிறது. சீன அரசுக்கு இது அரசுக்கெதிரான இயக்கமாகத் தோன்றிவிட்டது. கிட்டத்தட்ட 70 மில்லியன் பேர்கள் இந்த இயக்கத்தில் இணைந்திருப்பதைக் கண்டவுடன், அரசு தடைசெய்துவிட்டது. இது நடந்தது ஏழாண்டுகக்கு முன், இன்று பலூன் காங்க் இயக்கத்தவர்கள்தான் இணையத்தை அசால்டாகப் பயன்படுத்துபவர்கள் என்றால் நம்ப முடிகிறதா? மொத்த இயக்கத்தையும் அதன் கருத்துகள், செயல்பாடுகள், போதனைகள் என்று இன்டர்நெட்டின் அத்தனை சாத்தி யங்களையும் பயன்படுத்தி, அந்த நம்பிக்கையை சீன மக்களிடம் பரப்பி வருகிறார்கள்.

உதாரணமாக, பலூன் காங்க் என்ற ஆன்மிக இயக்கம் அங்கே இருக்கிறது. சீன நம்பிக்கை என்றில்லை... சீன அரசு நினைத்தால் எதையும் தடைசெய்துவிட முடியும். சீனாவில் இருந்துகொண்டு கூகுள் (Google) எனப்படும் இணையதள தேடுபொறியைப் (Search Engine) பயன்படுத்துபவர்கக்கு அந்த அரசின் கெடுபிடிகள் தெரியும். கூகுள் இணைய பக்கத்தில் போய், சீனாவின் புகழ்பெற்ற டியனன்மென் சதுக்கம்... மாணவர் படுகொலைகள் நடந்த ஜூன் 4 போன்ற சொற்களைக் கொடுத்துத் தேடச் சொன்னால், உங்கக்கு வெள்ளையான பக்கம் ஒன்றுதான் வரும். அச்சொற்கள் தடைசெய்யப்பட்ட சொற்கள்.

மற்றொரு முக்கியமான வலைதளம், விக்கிபீடியா என்பது. எப்படி என்சைக்ளோபீடியா அனைவராலும் பயன்படுத்தப்படுகிறதோ, அதுபோல், இது இணையத் தில் ஆர்வலர்கள் மூலம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு நாம் விக்கிபீடியாவில் எண்ணற்ற செய்திகள், கட்டுரைகள், தகவல்கள் சேர்க்கப்பட்டுக்கொண்டே வருகின்றன. அதில் டியனன்மென் சதுக்கப் படுகொலைகள் பற்றி, 12 பக்கத்தில் ஒரு கட்டுரை இருக்கிறது. சீனா அந்த வலைதளத்தையே சீனர்கள் பார்க்க முடியாமல் செய்துவிட்டது. இதேபோல், தலாய் லாமா, லாமா, திபெத், திபெத்தின் சுதந்திரம் போன்ற சொற்கம் அது சம்பந்தப்பட்ட வலைதளங்களும்கூட அவர்களுக்கு அந்நியம்தான்.

மீடியாவைத் தணிக்கை செய்வதற்கென்றே பெரிய துறை வைத்திருக்கிறது சீன அரசு. பத்திரிகை, தொலைக்காட்சி என்று கட்டுப்படுத்த முடிந்த அத்தனையையும் கட்டுப்படுத்தி வைத்திருக் கும் சீனா, இன்டர்நெட் என்று வந்தவுடன் அதிலும் தன் கெடுபிடியைக் காட்டத்தான் செய்கிறது. கிட்டத்தட்ட 40,000 வெப் போலீஸ்கள் இதே வேலையாக, ஒவ்வொரு சைபர் கபேவாகப் போய், இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வரின் தோள்மேலும் நின்றுகொண்டு வேவு பார்க்கிறார்கள். இது இல்லா மல், இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்களை, குறிப்பிட்ட சொற்களைத் தடைசெய்யச் சொல்லி கட்டளை இடுகிறார்கள். ரொம்பவும் குதித்தால், தூக்கி உள்ளே வைத்துவிடுகிறார்கள்.

அப்படிச் சென்ற ஆண்டு, பத்தாண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் ஷி தாவோ. பத்திரிகையாளரான இவர் செய்த ஒரே குற்றம், அரசின் ஒரு கட்டுப்பாட்டைப் பற்றி வெளிநாட்டு வெப்சைட்டுகக்கு செய்தி கொடுத்ததுதான். டியனன்மென் சதுக்க படுகொலையின் பதினைந்தாவது நினைவு தினத்தை எப்படிச் சீன பத்திரிகையாளர்கள் தங்கள் பத்திரிகைகளில் கவர் செய்ய வேண்டும் என்று அரசு ஒரு கட்டுப்பாட்டை வெளியிட்டிருந்தது. அதை, ஷி தாவோ வெளிநாட்டு வெப்சைட்டுகக்கு இ&மெயில் மூலம் அனுப்பிவிட்டார். அது கண்டுபிடிக்கப்பட்டு விட்டது... விளைவுதான், பத்தாண்டுகள் சிறைத் தண்டனை.

இதெல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல் நடந்த சம்பவம்தான், இப்போது சர்வதேச மீடியாக்களின் கவனத்தைத் திருப்பியிருக்கிறது. டிசம்பர் 31, 2005 அன்று, ஜாவோ ஜிங் என்பவர் வைத்திருந்த பிளாக்கை மைக்ரோசாப்ட் நிறுவனம் மூடிவிட்டது. 2004 டிசம்பரில், பெரும் கனவுகளோடு அவர் தனது பிளாக்கை ஆரம்பித்தார். பெரும்பாலான பிளாக்குகள் டைரிகள் போலவோ, விளையாட்டாகவோ இருக்கிறது. நான் வித்தியாசமாகச் செய்யப் போகிறேன். அரசியல் பற்றி, உயர்தரமான ஒரு பிளாக் நடத்தப் போகிறேன். ஒரு தினசரியிலோ, பத்திரிகையிலோ வெளிவரத் தகுதியான அளவு தரமான அரசியல் கட்டுரைகளாக அவை இருக்கும் என்றார்.


ஈராக் போர், தாய்வானில் நடைபெறும் சுதந்திரத்துக்கான போராட்டம், சீன இதழியலின் இன்றைய நிலை என்று அவர் சென்சிட்டிவான விஷயங்களைச் செதுக்கிச் செதுக்கி எழுதினார். ஜூலை 2005&க்குள் அவரது பிளாக்குக்குப் பயங்கர பாப்புலாரிட்டி வந்துவிட்டது. ஒரு நாளைக்கு ஏழாயிரம் பேர் அவர் வலைப்பதிவைப் படிக்கத் தொடங்கிவிட்டனர்.

கடந்த ஆகஸ்டில்தான சனி பிடித்தது. சைனா யூத் டெய்லி என்ற பத்திரிகையின் ஆசிரியர், தன்னுடைய செய்தியாளர்கள் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்று எழுதிய ஒரு கடிதத்தை தனது பிளாக்கில், ஜாவோ வெளியிட்டுவிட்டார். அடுத்த சில மணிநேரங்களில், அவரது பிளாக்கை அரசு தடைசெய்துவிட்டது. யாரும் படிக்க முடியாதபடி, அடைத்தும் விட்டது. மைக்ரோ சாப்டின் தளத்தில் தனது புது பிளாக்கை ஜாவோ தொடங் கவும் செய்தார். இங்கும் அவரது டிரேட் மார்க் விமர்சனங்கள் அனைவரையும் கவரத் தொடங்கிவிட்டது.

2005 டிசம்பரில், பீஜிங் நியூஸ் என்ற பத்திரிகையின் மூத்த ஆசிரியர்களை சீன அரசு தூக்கிப் போட்டுவிட்டு, வேறு ஆசிரியர்களைக் கொண்டு வந்தது. ஜாவோவுக்குப் பிடித்த பத்திரிகை இது. அதில் நல்ல வேகமான ரிப்போர்ட்டிங் உண்டு என்பது அவர் கருத்து. ஆசிரியர்களை அரசு மாற்றியவுடன் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. தனது பிளாக்கில், இந்த மாற்றம் பற்றி எதிர்ப்புத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அந்தப் பத்திரிகையின் சந்தாக்களைக் கேன்சல் செய்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும்படி வாசகர்களைத் தூண்டவும் செய்தார்.

மறுநாள்... ஷாங்காய் முனிசிபல் இன்பர்மேஷன் ஆபீஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஜாவோ பிளாக்கை தூக்கச் சொல்லிவிட்டது. அவ்வளவுதான். பிளாக்கர் உலகமே குலுங்கத் தொடங்கிவிட்டது. மைக்ரோசாப்ட்டுக்கு எதிராகக் கண்டனம், சுதந்திரப் பத்திரிகையாளர்களின் கண்டனம் என்று எல்லா இடங்களிலும் ஜாவோவுக்கான ஆதரவு பெருகத் தொடங்கிவிட்டது. சர்வதேச பத்திரிகைகளான நியூஸ் வீக்கும் போர்ப்ஸு-ம் கூட இதைப்பற்றி கவர் ஸ்டோரிகள் செய்துவிட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படி என்னதான் சீன அரசு கட்டுப்பாடுகளை கொண்டுவந்து, போலீஸ்களாகப் போட்டுத் தள்ளினாலும், வலைப்பதிவாளர்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகமாகிக்கொண்டே போகிறது. கூடவே, இதுபோன்ற ஜனநாயகக் குரல்கம் அதிகமாகிக்கொண்டே போகிறது.

இனி, சீனா பற்றி அமெரிக்கா கவலைப்படவேண்டாம். பிளாக்கர்களே பார்த்துக்கொள்வார்கள் போலிருக்கிறது!

ஆக நான் எழுதியது போல், இது "உன்னால் முடியும் தம்பி-ப்ளாக்கர்களின் சாம்ராஜ்யம்" தான்!!

நன்றி: ஆனந்த விகடன்